Thursday, 16 May 2019

மரமாக உனக்காக நான்

“எல்லாம் தருகிறது
எதையும் கேட்கவில்லை
அல்லது
எதையோ கேட்டு
இலைகள் ஓயாமல்
சலசலத்தும்
ஒன்றும் புரியவில்லை”
இந்த மரம் போலவே
நானிருக்க பணிக்கிறாய்
உன்னுடன் பயணிக்கிறேன்
ஓயாமல் சலசலக்கிறேன்
உணர்ந்துக்கொள்ளும்
கருணையில்லா
அந்தச் சுயநலப்படகுக்கு
மரமாகி மரித்தாலும்
துடுப்புத்தந்துவிடும்
அவசியத்தில்
ஒவ்வொரு வெட்டிலும்
துளிர்த்து கிளர்ந்தெழும்
மரமாக
சில கிளைகளுடன்
வாழ்ந்திருக்கிறேன்
உனக்காக நான்!


No photo description available.

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...