Thursday, 16 May 2019

கைபேசி_உலகம்


சந்தித்துப் பேச
அழைத்துவிட்டு
கைபேசியில் யாருடனோ
நீண்ட நேரமாய்
கதைக்கிறார்கள்

மனமுருகி பாடும்
வேளையில்
வேறு எதிலோ லயித்துவிட்டு
மீண்டும் பாடச்சொல்லி
கேட்கிறார்கள்

அக்கறையாய்
கேட்பது போல்
எதையோ கேட்டுவிட்டு
பதில் தருமுன்
அவசர வேலையென
பறக்கிறார்கள்

புகைப்படங்களின்
நினைவூட்டல்களில்
ஆர்வமாய் பார்வையை
தந்துவிட்டு
வேறு ஏதோ நினைவில்
அத்தனையும் பொய்யென
மெய்பித்து நகர்கிறார்கள்

உருக்கமாய்
கேள்விகள் கேட்டு
காதுகளை இரவலாய்
நிறுத்தி
மனதை எதிலோ
மூழ்கடித்து
ம்ம் மென்று
அவமதித்து
மறந்துபோகிறார்கள்

அழகாய்
வரைந்த ஓவியங்களின் மேல்
ஆயிரம் கருத்து நிறத்தெளிப்புகள்
கொட்டிவிட்டு
நிறச்சேர்க்கை கோளாறென
பூதக்கண்ணாடி
அணிகிறார்கள்

தன்னை மதிக்கவேண்டும்
என்று விரிவுரை
நிகழ்த்திவிட்டு
இன்னொருவரின்
உணர்வுகளை மிதித்து
முடிவுரை எழுதுகிறார்கள்

நேசிக்கும்
மனித உறவுகளுக்கு
இரத்தமும்
சதையுமுமாய்
நாம் இருப்பது தெரிய
கைபேசியாய்
இருத்தல் வேண்டுமோ
இல்லை
கடன் தரும் வங்கியாய்
மாற வேண்டுமோ?
யோசித்து நிற்கையில்
“நலமா?” என்று கேட்டு
நகர்கிறான் ஒருவன்
அவன் முதுகுக்கு
புன்னகையை பரிசளித்து
மௌனமாய்
பயணம் தொடர்கிறேன்!

#கைபேசி_உலகம்!


Image may contain: one or more people and people sitting

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...