Thursday, 16 May 2019

மெல்லிய மனங்கள்!


இறைந்துக்கிடந்த
பூக்களை மிதித்துவிடாதபடி
தோளில் சுமைக்கொண்ட
ஒருவன்
தள்ளி நடக்கின்றான்
அழுத்தும் சுமையில்
முதுகு வளைந்தாலும்
இயன்ற அளவில்
பாதையோர பூக்களை
ஓரம் குவித்து
மெதுவே நகர்கிறான்
கைவீசி கொழுப்பைக்
கரைக்க
எதிரே நடந்துவந்தவன்
வானம் நோக்கிய
கர்வப் பார்வையில்
காலில் மிதிப்பட்ட
பூக்களின் வலியை
உணரவில்லை
“சார் ஓரம் வாங்க!”
என்ற சுமைத்தாங்கியின்
பரிதவிப்பின் குரலுக்கு
“நான்சென்ஸ்
இந்தக் குப்பைக்காக
நான் ஓரம் வரணுமா?”
என்று பூக்களை
ஓங்கி உதைத்துச்
சிதைக்கிறான்
இருவேறு துருவங்களை
கண்டு சலித்தப் பூக்கள்
“எப்போதும் அவரவர்களுக்கு
அவரவர் நியாயம்
சிதைவதென்னவோ
பூக்களை போல
மெல்லிய மனங்கள்தானேயென்று”
சிரித்துக்கொண்டே
பூமியில் சிதைந்து மடிந்தன!❤️

#மெல்லிய_மனங்கள்!



Image may contain: plant, tree, flower, outdoor and nature

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...