Thursday, 16 May 2019

அன்பென்பது

#அன்பென்பது❤️

எப்போதும் நினைக்கிறாய்
எப்போதாவதுதான் அழைக்கிறாய்

அப்போதெல்லாம் பேசுகிறாய்
அவ்வப்போதுதான் கேட்கிறாய்

கேட்கும்பொழுதெல்லாம்
காதுகளை தருகிறாய்
அரிதாக மட்டுமே மனதை தருகிறாய்

மனமுழுக்க நினைவுகள் சுமக்கிறாய்
சுயநலம் கருதி நினைவுகள் மறைக்கிறாய்

நினைவுகள் மறைத்து
வார்த்தைகளில் கடிகிறாய்
கடிந்தபின் ஆறுதலளிக்கும்
தன்மை மறந்து
காயத்தில்
கத்தியேற்றி நகர்கிறாய்

நகர்ந்தபின்னும் உன் நினைவுகளில்
உழல்கிறேன்
என்றோ பார்த்த உண்மை முகமெண்ணி
உன் பொய்முகம் மறக்கிறேன்
மௌனத்தின் சூட்டில்
நான் நேசத்தை அடைக்காக்க

நீ எப்போதும் நினைக்கிறாய்
எப்போதாவதுதான் அழைக்கிறாய்!



Image may contain: 1 person, outdoor

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...