Thursday, 16 May 2019

நகைமுரண்



சாமியார்களுக்கு
காடழிக்க உரிமைத்தந்து
கார்ப்பரேட்டுகளுக்கு
உயிரழிக்க மானியம் தந்து
சுங்கக்கொள்ளைகளுக்கு
மரங்கள் அழிக்க பாதுகாப்பு தந்து
மணல் கொள்ளைகளுக்கு
நீர்நிலைகள் அழிக்க
ஆவணம் செய்து
ஊழல்வாதிகள்
காடழித்து
நாடழித்து
நீர்நிலைகள் அழித்து
வளங்களை கொள்ளையடித்து
விளையாடிய பின்னர்
சட்டென்று இயற்கைச்
செய்த
கோரதண்டவத்திற்கு
நிவாரணம்
வழங்கி
ஒரே இரவில்
நீதியரசர்கள்
ஆனார்கள்
அதே அரசியல்வாதிகள்!
விடிவேயில்லை
இந்த
அறியாமைகளுக்கு!

#நகைமுரண்


No photo description available.

No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...