Wednesday, 18 January 2017

வெறுமை

அழகாய் மின்னுகிறது வானம்
மெல்லியதாய் வீசும் காற்று
சலனத்தில் சிணுங்கும் இலைகள்
வெறிச்சென்று கிடக்கும் வீதி
வாசிக்கக் கிடைத்திருக்கும் நேரம்
அத்தனையும் வீண்தான்
பிள்ளைகள் அருகில் இல்லா
இந்தவோர் இரவில்!
#வெறுமை

அரிதாரம்

அந்தக் கசாப்புக் கடை வியாபாரி
நாடக நடிகராக மறுமுகம் காட்டி
மேடையில் மேய்ப்பராக
அரிதாரம் பூசுவதைப் போலவே
இந்திய, தமிழக அரசியல்வாதிகள்
தேர்தலில்!

நம்பிக்கையோடு
ஆடுகள்
மேய்ப்பரின் உருவத்தில்,
உணர்ச்சியில்,
மொழியில் கவரப்பட்டு,
கல்லறைக்கே செல்கின்றன
ஒவ்வொரு முறையும்
மேய்ப்பர்களோ
நாடகம் முடிந்ததும்
பிரியாணி சாப்பிட
சட்டமன்றத்துக்கும்
பாராளுமன்றத்திற்கும்
திசை திரும்புகிறார்கள்!

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...