Thursday 27 December 2012

நம்பிக்கைப் போராட்டம்


மழை மேகத்துக்கும் மனதில்லை
கோடையின் வெப்பமும் குறையவில்லை
தோட்டம் காக்க பூக்கள்தான் உதிர்கின்றன

மேகத்தின் தாகம் தீர்ந்திடும்
கோடையின் வெப்பமும் ஓய்ந்திடும்
உதிர்ந்த மலர்கள் மட்டும் உரமாகும்
நாளையேனும் ஒரு மலர் நல்விதையாக!

Monday 24 December 2012

தட்சணை

தேர்ந்தெடுக்கப்பட்ட வன்பொருளாகவே
ஆண்கள்...அவரவர் செயல்திறன்..பொருள்திறன்
கொண்டு சந்தையில் விற்க்கப்படுகின்றனர்  
வடிவமைக்கப்பட்ட மென்பொருளாகவே
பெண்கள்...வன்பொருள்களுக்கு பிடிக்கப்பட்ட விதத்தில்
மாறிக்கொண்டே இருக்க வேண்டும்!

மாற்றம் இல்லையெனில் ஏற்றம் இல்லை
மென்பொருளுக்கும் அதை சார்ந்த வன்பொருளுக்கும்!

Monday 17 December 2012

விவாகரத்து


யாரோ ஒருத்தியும் யாரோ ஒருவனும்
நேசம் கொள்கிறார்கள்
அந்த யாரோ இருவர்கள் திருமணம்
செய்து கொள்கிறார்கள்
ஏதோ ஒரு வேற்றுமையில் இருவரும் 
யாரோ ஒருத்தியாய், யாரோ ஒருவனாய் 
பிரிந்து போகிறார்கள்!
யாரின் ஒருவராய் மாறுவது என்று
பிஞ்சுகளுக்குதான் குழப்பம்!

Sunday 16 December 2012

இன்னாச் சொற்கள்


 நல்வார்த்தைகளை  சேர்த்து வைக்கிறாய்
நேரமில்லை என்னும் திரைக்கு பின்னே
சேமித்த வார்த்தைகளை மலர்களாய்
தூவு, நேரமெடுத்து என் கல்லறையில்!
 
நெருப்பு கங்குகளாய் உன் வார்த்தைகள்
சிதற விட வேண்டாம் - சேர்த்து வைத்துக்
கொள் - என் இறுதி தகனத்திற்கு
நெருப்பு வேண்டும்!

விட்டில் பூச்சி

Photo: Lightning bug or firefly
விடிவதற்குள்
வெளிச்சம் தூவ வேண்டும்
விடிவெள்ளி வந்து
மலர் தூவும் முன்
நான் விட்டில் பூச்சி!

அன்பே சிவம்!

 
போதி மரத்துப் புத்தனோ 
கொல்லிமலைச் சித்தனோ 
எல்லாம் துறந்து நீ போக
பொம்மை ஒன்று சுழலுதடா
பம்பரமாய் உழலுதடா
நீ விட்டுச் சென்ற கடமைதனை 
தட்டி முட்டிச் செய்யுதடா

விந்து தரும் செயல் தவிர்த்து
முக்தி காண வேண்டுமென்று
பக்தி மார்க்கம் செல்கின்றாய்
கைப்பற்றி வந்த வாழ்க்கைதனை
சூழ்ந்து நிற்கும் கடமைதனை
எளிதாய் உதறிச் செல்கின்றாய்
சுருங்கி விட்டது உன் மனம்
எதைச் சுருக்க இந்த ஓட்டம்

ஓடி ஒளிபவனுக்கு சிவன் எதற்கு - கடமை
தவிர்த்து வாழ சக்தி எதற்கு
செயல்கள் தானடா சிவனும் சக்தியும்
பெண்மைக்குள் வாழ்கின்றனர் அம்மையும் அப்பனும்!
பொம்மைகளால் இயங்குதடா உலகம்!

காரணம் தேடு...காரியம் தவிர்
புத்தனாய் சித்தனாய் நீ வாழ
பொம்மைகள் படைத்திடும்
காடும் வீடும்!

Saturday 15 December 2012

பெண்கள்


 நிலவென்று ஒப்பிட்டு
தேய்ந்து போகிறோம்
நீரென்று ஒப்பிட்டு
கரைந்து போகிறோம்
நிலமென்று ஒப்பிட்டு
பகுக்கப் படுகிறோம்
மலரென்று ஒப்பிட்டு
கசக்கப் படுகிறோம்
எப்போதும்
சக உயிராய்
மறுக்கப்படுகிறோம்
ஆகையால்
எளிதாய் பலியாடாகிறோம்!

போதும் இது போதும்
தேவதையாய் தேய்ந்தது போதும்
அன்பால் கரைந்தது போதும்
நெருப்பிற்கு இரையானது போதும்

பொய் முகம் புறந்தள்ளி
நிஜ முகம் அறிவோம்!
மென்மை எரித்திட்டு
வன்மை பழகுவோம்!

Thursday 13 December 2012

இன்றே நன்று


தினம் பிறக்கும்,
மணம் பரப்பும் - மலர்கள்
வாடி உதிரும்வரை!

ஒரே நாள் வாழும்,
மகரந்தம் பரப்பும் - பட்டாம்பூச்சிகள்
உயிர் பிரியும்வரை!

நூறு ஆண்டுகள் வாழும்,
வன்முறை பரப்பும் - மனிதர்கள்
வாழ்வதேயில்லை கூடு பிரியும்வரை!

Tuesday 11 December 2012

மேன்மக்கள்



மலர்ந்ததில் உள்ள நளினம்
விழுவதிலும் தொடர்கிறது!
ஒவ்வொரு இதழ்களாய்
உதிர்ந்தாலும் - கடைசித்
துளி வாசம் கூட காற்றில்!

மலர்ந்தாலும், விழுந்தாலும்
மலர் முல்லாவதில்லை
மகரந்தம் நஞ்சாவதில்லை!

Gist

Hatred and enmity would disappear mostly in two events, one is birth and the other one is death! In between these two events, we neither have time to think about what he or she wants nor have that heart to dedicate that time and effort to care or even pretend to care!

The love, the care, the wish, the desire...all will clog a person's memory only in the absence of his or her beloved!

Learn to live and make others live when we are alive!

மாயத் திரை!


வாராத உறவெல்லாம் வந்துவிடும்
தீராத பகையெல்லாம் தீர்ந்துவிடும்
மரணத்திலும்.....பிறிதொரு
ஜனனத்திலும்!

Monday 10 December 2012

விலங்கு வாழ்க்கை

முயல் போல் மென்மை சில வேளைகளில்
மான் போல் ஓட்டம் பல நேரங்களில்
நாய் போல் நன்றி உணர்வு பல காலங்களில்
நரி போல் சாமர்த்தியம் ஒன்றிரண்டு பொழுதுகளில் 
கழுதை போல் சுமை தாங்கி பெருங் காலங்களில்!

பிறக்கையில் தோன்றும் மனிதன் - மீண்டும்
தோன்றி மறைவது இறக்கும் வேளைகளில்,

வெறும் வார்த்தைக்கு கூட யாரும் இல்லை
நம்முடன் வாழும் காலங்களில்!

Sunday 9 December 2012

அட போங்கடா!

மரம் வெட்டி மழை இல்லை என்று யாகம்
நீர் வேண்டி நெருப்பு ஏற்றுகின்றனர்

குடி வளர்த்து குடி கெடுக்கும் நோக்கம்
பணம் கொடுத்து குணம் தொலைக்கின்றனர் 

வேரில் விஷம் ஊற்றி விளைச்சல் போராட்டம்
மண் மாற வளம் குலைக்கின்றனர்

வார்த்தையில் கடுமை கொட்டி அன்பு ஊட்டம்
கொன்றபின் நின்று அழுகின்றனர்!

அட போங்கடா!

Monday 3 December 2012

பணம்

எல்லாம் தாழ்ந்துவிடுகிறது
எல்லாம் தொலைந்துவிடுகிறது
எல்லா மனமும் காயப்படுகிறது
நீ இருக்குமிடம் மாறி இருந்தால்!

இருப்பவன் புலிவால் பிடித்தவன்
இல்லாதவன் கழுகாய் மாறியவன்
இருவருக்குமே இரை நீதான் -
இரையே புசிப்பவரை கொல்வதும்
ஒரு மாய வித்தைதான்!

அடிப்படை வேண்டி நின்றாலும்
அன்பு வேண்டி சென்றாலும் - யாசித்து
நிற்பவருக்கு வாய்க்கருசியேனும் போட
இரத்தல் வேண்டும் இறத்தலாயினும்!

அன்பு இடம் மாறிச் செல்லும் 
நட்பு வலம் இடம் மாறிக் கொல்லும்  
தீர்ப்பு மாறி நீதி சாகக் கூடும்
எழுவதும் விழுவதும் யாராயினும்
வெல்வது என்றுமே நீதான்!

எல்லாம் போனபின் உன் பயனென்ன?
நிரப்பவே முடியாத மனக்கிணறுகளை
கட்டிக் காக்கும் வேதாளமாய் வாழுவதென்ன?
தனியே நீ விசித்து அழுவது மரங்களுக்கு
மட்டும் கேட்கும் - எப்போதும்
மனிதர்களுக்கு அல்ல!
பணமே!
 






Friday 30 November 2012

இறுதியில் தொடங்கும் முதல்!


 ஒருமுறை.........................
அம்மாவின் மடியில் தலை சாய்த்திருக்கலாம்
அப்பாவின் தோழமையில் கரைந்திருக்கலாம்
தங்கையின் பாசத்தில் வாழ்ந்திருக்கலாம்
மனைவியின் நேசத்தில் மகிழ்ந்திருக்கலாம்
கணவனின் நெருக்கத்தில் கலந்திருக்கலாம்
குழந்தையின் அரவணைப்பில் மலர்ந்திருக்கலாம்
தோழமையின் நிழலில் நின்றிருக்கலாம்
காதலின் கனவை விதைத்திருக்கலாம்
கனிவாய் அவன் / அவள் கரம் பற்றியிருக்கலாம்

தன்னுயிர் போகும்முன்னே
பிற உயிர் போனபின்னே
ஒருமுறை ஒருமுறை - என
பலமுறை  நினைத்து - மனம்
ஒன்று மாய்ந்து போகிறது

சாகும் வரை வாழாத வாழ்க்கையை
சாகையில், பிணமாய் போகையில்
வாழ்ந்து பார்க்கத் துடிக்கிறது
வாழ வைக்கத் தவிக்கிறது
உணராத அன்பையெல்லாம் உணர்ந்து
கண்ணீர் இங்கே வடிக்கிறது

அன்பில்லாமல் கடந்த வாழ்க்கையை,
மரத்து போய் மறித்து போன உயிரை,
தாராத அன்பு கொண்டு, தந்து விட முடியுமா?
வாராத அழுகை கூட்டி, வரச் செய்ய இயலுமா?

பூக்கள் காயும்முன் கண்ணீர் காய்ந்து விடும்
நாட்கள் போகும் முன் ஞாபகம் போய் விடும்

வாழும்போது வாழ்க்கையை வாழ்ந்து விட்டே சாகட்டும்..
நல்ல நினைவுகளால் உயிர் ஒன்று கூடு விட்டு போகட்டும்! 

Monday 26 November 2012

இல்லை - இருக்கிறது!

கண்கள் இல்லையென்ற
குறையில்லை - அழகை
வியப்பதற்கு!

இதயம் பழுதென்ற
நினைப்பில்லை - அன்பை
பொழிவதற்கு!

கைகள் இல்லையென்ற
கவலையில்லை - உதவி
புரிவதற்கு!

கால்கள் இல்லையென்ற
காலமில்லை - நட்பு
வேண்டியவர்க்கு!

மொழி இல்லையென்ற
வலியில்லை - பரிவை
காட்டுவதற்கு!

செல்வம் இல்லையென்ற
புலம்பலில்லை - உணவை
பகிர்வதற்கு!

உன்னுடல் உறுப்புகள் ஒழுங்காய்
அமைந்திட்ட பின்னரும் - ஏதுமில்லை
என்ற வருத்தமென்ன
படைத்திட்ட கடவுளிடம் கோபமென்ன
உறுப்புகள் அற்ற என்னை
ஊனமானவள் / வன் என்னும்
விந்தைதான் என்ன?

Saturday 24 November 2012

கானல் வரி


ஒன்றின் இயக்கத்தில்
இன்னொன்று ஊமையாகுது!

பதுமை ஒன்று தனை மறந்து
பொம்மையானது!

பொதுவுடைமை என்பது
பொய்யானது
தனிவுடமை என்பதே
மெய்யானது!

ஒன்றின் விருப்பம்
இன்னொன்றின் துயரமானது
கொன்றபின் வருவதே
ஞானம் என்றானது! 

இந்த வேடிக்கை விளையாட்டில்
மனம் ஒன்று சிக்கி சிதையுது!

Wednesday 21 November 2012

மனம்



மனம்...இதுதான் எல்லா உணர்வுக்கும் ஆன சாளரம்!

இந்த மனம் மிக விசித்திரமானது, உணர்ந்தவர்களுக்கு சக்தி தரும், கடந்தவர்களுக்கு முக்தி தரும், அதன் போக்கில் போகும்போது ஒன்று தெளிவு வரும் இல்லை குழப்பம் வரும்.... ... இதற்கான சக்தியை உணர்ந்தவர்கள் மட்டுமே அறிந்தவர்கள்!

எனக்கு ஒரு ஆறேழு வயது இருக்கும் போது, நான் வசித்த தெருவில் வசித்த ஒருவர், எப்போதும் என்னை பார்க்கும் போது மறக்காமல் ஒரு உளப்பூர்வமான புன்னகையை வீசிச் செல்வார்...அந்த புன்னகையை தவிர அவருக்கும் எனக்குமான பந்தம் எதுவும் இருந்ததில்லை, நான் பள்ளி இறுதியாண்டு படிக்கையில், அவர் போலவே அவர் மகனும் அதே புன்னகையோடு! எந்த உறவுமில்லாமல், எந்த வார்த்தையையும் இல்லாமால் பார்க்கும் போதெல்லாம் கொண்ட அந்த மலர்ச்சியையும், புன்னகையையும் வேறு ஒருவரிடம் இதுவரை நான் கண்டதில்லை! 
அவர்களை பற்றி நான் ஏதும் அறிந்ததில்லை, ஆனால் அந்த புன்னகையின் பின்னே இருக்கும் மனம் மிகவும் அழகாய் தெரிந்தது! இப்போது முகங்கள் நிழலுருவாய்த்தான் தெரிகின்றன, ஆனால் அந்த புன்னகை மட்டும் பசுமரத்தாணி போல் பதிந்து விட்டது!

உயிரூட்டும் புன்னகை தரும் அழகான மனது!
-----------------------------------------------------------------------------------------------
அழகான மனம் கொண்டவர்கள் அழகாய் புன்னகைக்கிறார்கள், மனம் முழுக்க புழுக்கம் இருக்கையில் எந்த புன்னகையும் வருவதில்லை, புன்னகை இல்லாத உதடுகள் இறுக்கம் அடைகின்றன, இறுக்கம் அடைந்த உதடுகள், மனம் கொண்ட இறுக்கத்தை வெளியே வெறுப்பாக, மனம் நோகும் வார்த்தைகளாக, சில சமயம் ஒரு உயிர் போக்கும் கொலை கருவியாகவும் உமிழ்கிறது!
பிடிக்கும் என்று நாம் நினைக்கும் ஒன்று ஒருநாள் பிடிக்காமல் போகிறது, நமக்கு அதையோ, அவர்களையோ, அல்லது அவர்களுக்கு இதையோ, அல்லது நம்மையோ.....இது ஏன் நிகழ்கிறது?

கண்ணை மூடிக் கொண்டு நாம் பொருட்களை வாங்கி இருக்கலாம், பிறர் கண்டு நாமும் அதை கொண்டிருக்கலாம், நம்முடைய தேவை இப்போது மாறி இருக்கலாம், அது நமக்கு பரிசாய் வந்திருக்கலாம், பெரியவர்கள் நமக்கு அதை தந்திருக்கலாம், அல்லது அதை விட சிறந்தது ஒன்று வந்திருக்கலாம்...எதுவாய் இருந்தாலும் முதலில் ஏற்று கொண்ட மனது பிறகு மாறி விடுகிறது, பொருளை தூக்கி எறிகிறது, எறிகின்றது பொருளாய் இருக்கையில், பணம் மட்டுமே விரயம், அதுவே மனமாய் இருந்துவிட்டால்?

யாரோ ஒருவரின் மனம் காயப்படும், அந்த மனம் காட்டிய வழியில் அந்த ஒருவரின் வாழ்க்கை பயணமோ, அல்லது முடிவோ மாற்றி எழுதப்படுகிறது!

பாதை அமைக்கும், பயணம் மாற்றும் மனது!
----------------------------------------------------------------------------------------------------------
தூக்கி எறியும் எல்லா பொருட்களும் உடைவதில்லை, கண்ணாடி உடையும், உருத்தெரியாமல் அழியும், இரும்பிலும் துருபிடிக்கும்...சில நாணல்கள் வளைந்து வாழ்கையை தொடரும்! அதுபோலவே மனிதர்கள், உடலளவில் எக்கு போன்றவரும் ஒரு வார்த்தை தாங்காமல் உருகி வீணாவார், சில கண்ணாடி இதயங்கள் தங்காமால் நொறுங்கி போகும், காலத்தின் கட்டயத்தால் சில மனங்கள், தன்னை வளைத்து, சுயத்தை தொலைத்து இயந்திரமாய் மாறிப்போகும்!

ஆக்கவும் அழிக்கவும் வல்லது மனது!
----------------------------------------------------------------------------------------------------------

உங்களின் ஐந்து, அல்லது பத்து வயது பெண் குழந்தையை, யாரோ ஒருவர் கடத்திச் சென்றால், அவரிடம் சென்று, பணத்தையும் தந்து, என் குழந்தையையும் பார்த்து கொள்ளுங்கள், பாப்பா, கடத்தியவரின் மனம் நோகாமல் பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லும் தந்தையோ தாயோ இங்குண்டா? என்னை பொறுத்தவரையில் "உண்டு"....நீ என்ன பைத்தியமா, என்று நீங்கள் நினைப்பது எனக்கு கேட்கிறது!

இந்த நிகழ்வில் உங்கள் மனம் குழந்தை என்றே பதறும்...சற்றே முன்னோக்கி வாருங்கள்...இப்போது உங்கள் பெண் குழந்தைக்கு இருபது வயது கடந்துவிட்டது, அந்த குழந்தைக்கு எப்படியாவது திருமணம் செய்து விட வேண்டும் என்று நினைக்கிறீர்கள், மாப்பிள்ளை தேடும் போது, எல்லாவற்றையும் ஆராயும் நீங்கள், முன்னே பின்னே ஆனால் என்ன, கொஞ்சம் கூட்டியோ குறைத்தோ, வரதட்சணை கொடுத்து திருமணம் முடிந்தால் போதும் என்று ஆசுவாசப்படுகிறீர்கள்...பிறகு கேட்கும் போதெல்லாம் தருகிறீர்கள், எத்தனை கொடுமை கண்டாலும், பொறுத்து போம்மா என்று சொல்கிறீர்கள், ஒருநாள் அந்த பெண் எதுவும் தாங்காமல், இறந்து போகிறாள், அப்போது ஓலமிட்டு, ஒப்பாரி வைக்கும் பெற்றோர் நீங்கள் என்றால், ஒரு ஐந்து வயது பெண் குழந்தையை பணத்தோடு கொள்ளைகாரனிடம் கொடுக்கும் பெற்றோரும் நீங்கள்தான்....

சமூகத்தால் கட்டமைக்கப்பட்டது மனது!   
------------------------------------------------------------------------------------
திருமணம் ஒன்றே வாழ்க்கை என்று பெண்ணின் மனம் நினைப்பதற்கும், கொடுமைகளை சகிக்க வேண்டும் என்று பதப்பட்டதற்கும் யார் காரணம்? வரதட்சணையாய் தரும் பணத்தை அந்த பெண் தன் முன்னேற்றத்திற்காய் பயன்படாமால் தடுத்தது எது?  

அது மனம்......., யாரோ ஒருவரின் மனம்! தான் நம்பியதை பிறர் நம்ப செய்கிறது, சமுக நம்பிக்கையாய் வளர்க்கிறது, நம்ப மறுக்கும் மனதைக் கொல்கிறது, பிறகு அங்கே வேறு புரட்சி வெடிக்கிறது...புதிதாய் ஒரு நம்பிக்கை....புதிதாய் ஒரு சமூகம்...இது ஒரு சக்கரம், முடிவேயில்லாதது!  

சமூக மாற்றம் கொண்டுவருவதும் மனதுதான்!
----------------------------------------------------------------------------------
மனித வாழ்க்கை நிச்சயமற்றது, நீங்கள் தேக்கி வைக்கும் செல்வம் நாளை தலைமுறைக்கு உதவலாம், ஆனால் தேக்காமல் நீங்கள் காட்டும் அன்பு, அதற்கான மனது இந்த தலைமுறையை வாழ வைக்கும், அது வீட்டிலோ, வெளியிலோ!

நம்பிக்கை கொண்ட மனது, நல்ல வார்த்தைகளை சொல்கிறது, நல்ல வார்த்தைகளை கேட்கும் மனது நம்பிக்கை கொள்கிறது!
ஏதோ ஒரு அவசரத்தில், ஏதோ ஒரு கோபத்தில், தன்வசம் இழக்கும் மனது, நொடியில் இறுக்கமான வார்த்தைகளை உமிழ்கிறது, அதை கேட்கவோ, கடக்கவோ நேர்கையில் ஒரு மனது நம்பிக்கை இழக்கிறது, ஏதோ ஒன்று முறிந்து போகிறது!

இந்த அளப்பரிய சக்தி கொண்ட மனம், நமக்காக மட்டுமில்லை அது பிறருக்காகவும்தான்!

நல்ல எண்ணங்கள் சூழ்ந்தது நல்ல மனம், நல்ல மனம் சூழ்ந்தது நல்ல குடும்பம், நல்ல குடும்பம் சூழ்ந்தது நல்ல சமுதாயம்.....அந்த சமுதாயம் வளர்த்தெடுக்கும் நல்ல மனங்களை!

நம் மனம் நல்ல மனமாய் அமைந்து மணம் வீசட்டும்!

வெள்ளத்தனையது மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிருப்ப காய்கவர்ந்தற்று! 
-------------------------

போர்க்களம்


ஒரு வலியில் பிறந்தோம் 
ஒரு வலியில் எழுந்தோம்
ஒரு வலியில் விழுந்தோம்
வலி தாங்கினால் வழி ஒரு பாடம்
வலி தாக்கினால் நாம் ஒரு பாடம்
எப்படியோ ஒரு பாடம்
யாருக்கு வலித்தால் என்ன?

வழிமுழுதும் அந்த வலியோ,
வலிகடக்கவும் எந்த வழியோ?

உன் வலி கடந்து வழி அமைத்துத் தா
நாளை அவர்கள் நிம்மதியாய் கடக்கட்டும்
தானாய் ஒரு பூ உன் கல்லறையில் பூக்கட்டும்!

Monday 19 November 2012

Gist

When you are ill treated, belittled and taken for granted, then better remain in silence and move away, bcoz true love and care will understand the pain of silence rather than words! If there is no realisation, then realise that you are blind folded all these while! :-)

பிறாக்காதவர்களும், இறந்துவிட்டவர்களும் மட்டுமே நிம்மதி கொண்டவர்கள்! அடுத்து பிறப்பதற்கோ, அல்லது வாழ்ந்து முடிப்பதற்கோ போராடுபவர்களே இடையில் வாழ்பவர்கள்!

If you are cursed to be alone and to fail, don't expect any savior to enlighten and show the glory, rather learn to struggle, endure until you die! Whether you win or lose, ensure you give a tough fight!

Life is all the more speculative and calculative now a days! You can be in solace only when ur heart sans expectations!

Every moment gone, every word expressed, every heart that was stabbed would never come again and never you could gain and never you could fill those bruises with anything but to leave them and see them as scars for ever! Prevention is better than cure, love is better than hatred!    

பெண் கல்வி

பெரும்பாலான பெண்கள், பள்ளி வந்து ஆசிரியரை பார்க்கும் போது, அவர் ஏதேனும் குறை சொன்னால், அங்கேயே குழந்தையை துணி துவைப்பது போல் அடிப்பதும், ஏதோ செய்ய கூடாத குற்றத்தை, தானும் தன் குழந்தையும் செய்து விட்டது போல பயப்படுவதும் வேதனை தருகின்றன!

பள்ளி கல்வி முறை பெற்றோருக்கும் ஒரு சுமையாகி விட்டதா, இல்லை இந்த பெண்களுக்கு வெறும் ஏட்டு கல்வி மட்டும் பழகி போனதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை!
 
சாலை கடப்பது முதல், குழந்தை வளர்ப்பது வரை, சரியான வழிகாட்டுதலை எந்த அரைகுறை கல்வியும், சமூகமும் பெண்களுக்கு தந்துவிடுவதில்லை.....பல பெண்கள் இன்றும் பட்டுப்புடவையும், தங்க நகைகளும், வரிசையாய் பிள்ளை பெறுவதுமே வாழ்க்கை என்று வாழ்கின்றனர், இதை விட குழந்தை கல்வி மந்திரத்தால் மாங்காய் பறிப்பது போன்று, தடியேடுத்தால் தானாய் நடந்து விடும் என்று நினைப்பதும் மாற வேண்டும்!

அடித்து அடித்து ஒரு ஏழு வயது குழந்தையை மனநிலை சிதைத்து, இருபது ஐந்து வயதில் அவன் காணாமால் போக செய்தார்கள், தினம் தினம் மனம் புழுங்கி அவனை இன்றும் தேடுகிறார்கள்!

என் மாமனையே நான் கட்டிக்கிட்டேன், குழந்தை மனவளர்ச்சி சரியில்லை, இதோட மல்லு கட்டுறேதே எனக்கு தலைவேதனையா போச்சு என்று அழும் பெண்கள் கூட அடுத்தடுத்து பிள்ளை பெறுவதிலும் சளைக்கவில்லை..........

ஆண்களை விட குழந்தையின் வளர்ப்பில் ஒரு பெண்ணின் பங்கு மிக பெரிது, அதற்கான சரியான கல்வி முறையும், மனப்பாங்கும் எல்லா பெண்களுக்கும் வேண்டும்!

உணவு படைப்பதை விட என்பது வேலை; சரியான ஊட்டம் நிறைந்த உணவு படைப்பது என்பது அக்கறை! குழந்தை உருவாகுதல் காதலோ, காமமோ; ஆனால் சுமப்பதும், பெறுவதும் ஒரு வரம், வளர்ப்பது ஒரு முக்கிய பொறுப்பு!.................எதுவாயினும் ஒரு பெண் எல்லாவற்றையும் விரும்பி செய்தால்தான் வாழ்க்கையில் சுவை இருக்கும்! அந்த சுவை வேண்டும் என்றால் இங்கே மாற்றம் வேண்டும்!

மாற்றமென்பது, ஒரு பெண்ணிற்கு சிறந்த கல்வியும், எதையும் தானே சிந்தித்து முடிவெடுக்கும் ஆற்றலும், சரிக்கு சரியாக தோழமையுடன் பார்க்கும் மனப்பாங்கும், அவள் துவள்கையில் தாங்கும் கரமுமாக எப்போது ஒரு வீடும், சமுதாயமும் மாறுமோ அப்போது இங்கே எல்லா குழந்தைகளும் நல்ல குழந்தைகளாக உருவெடுப்பார், புதியதாய் ஒரு சமுதாயமும் உருவாகும்!

Wednesday 14 November 2012

வேடம்

தங்கம் தேய்ந்து துரும்பாகும்
இரும்பும் கூட துருவாகும்
பழகா கருத்தும் பாழாகும்
படிக்கா எழுத்தும் வீணாகும்
பகிரா காதல் பிணமாகும்
தாங்கா நட்பு தள்ளாடும்
அன்பிலா உறவும் அனலாகும்

இருப்பதை மறைப்பதால்
இயல்பினை மறுப்பதால்
இழப்பது பலவாகும்

தொலைப்பதை தவிர்
இழக்கும் முன் பகிர்
வாழ்க்கை வளமாகும்!

எண்ணங்கள்


இலகுவாய் ஒரு இறகை
உதிர்த்து சென்றது பறவை
பயணத்தை தொடர்ந்தபடி! 

உதிர்க்கத் தெரியாமல்
சேர்த்து கொண்டிருக்கிறது மனது
எண்ணங்களை வளர்த்தபடி!

Tuesday 13 November 2012

பணம்

கடமை ஆற்றவும் பணம்
கடமை மீறவும் பணம்
எத்தனை வரி கட்டினாலும்
எத்தனை ஊழல் செய்தாலும்
இவர்கள் வறுமை மட்டும்
மாறுவதேயில்லை இந்த
இந்திய திருநாட்டில்!

Saturday 10 November 2012

நிமிட நேர வாழ்க்கை


ஆசையுடன் வரும் பிள்ளைகளுக்கு
நாளைக்கென எதுவும் சேர்க்கவில்லை
இன்று வேண்டிய அன்பைத்
தவறாமால் தந்துவிடுகிறேன்!

தேடி வந்த காகங்களை
போவேனச் சொல்லவில்லை 
இன்று வேண்டிய உணவைத் 
தயங்காமல் தந்துவிடுகிறேன்!

காசுக்காக கை நீட்டியவர்களிடம்
நியாய தர்மம் பேசவில்லை
அவருக்கு வேண்டிய ஒரு ஒற்றைத்தாள் 
மறைக்காமல் தந்துவிடுகிறேன்!

துயரம் கொட்டியத் தோழமைகளிடம் 
தோளில் வலி என்று சொல்லவில்லை
அவருக்கு வேண்டிய நட்பை 
நட்போடு தந்துவிடுகிறேன்!

நாளைக்கென என்னிடம் எதுவுமில்லை
நாளை வரும் என்ற நம்பிக்கையை தவிர!

இன்று மட்டும் காண்கிறேன்
இயன்றவரை வாழ்கிறேன்!


Saturday 3 November 2012

தோழன்/ தோழி


புத்தக வாசிப்பு 
கற்றுத் தந்தது நேசிப்பு 
நேசிப்பு கொண்ட நெஞ்சம்
புத்தகத்திடமே தஞ்சம்!


மன வழிச் சாலை!

http://2.bp.blogspot.com/-Arkn9L4jlOc/T5eGUvQKSAI/AAAAAAAAAGo/Yl5lg5nNlDw/s1600/dark,fog,girl,lonely,mist,photography,rain,sadness,water,woman-0e8de59231e9fcd92e1f73f50856ac17_m.jpg
சாரல் அடித்த தூறல்
ஏன் நின்று போனது?
பெருமழையாய்
நிலம் சேருமோ? - இல்லை
காற்று வழிச் சென்று - பின்
காணாமால் நின்று
பாறை ஏகி ஒழுகுமோ
நிலம் பாலை ஆகுமோ?
ஆற்றுபடுத்தும் ஆற்றல்
நிலத்துக்கு இல்லை
காற்று வழி மாற்ற
மழைக்கும் மனதில்லை!

Thursday 1 November 2012

ஏன் கண்ணீர்?

Heartbreaking sad eyes tears photography7 Heartbreaking sad eyes & tears photography
எனக்கான கஞ்சி
நான் அழுதால் கிடைத்திடுமோ?
சொல் அழுகிறேன்....

எனக்கான நேசம்
நான் அழுதால் வந்திடுமோ?
சொல் அழுகிறேன்...

எனக்கான கனவு
நான் அழுதால் பலித்திடுமோ?
சொல் அழுகிறேன்

கண் வலிப்பதால் அல்ல
கண்ணீர்
மனம் வலிப்பதால் - அது
புரியாதவரிடம்
ஒருபோதும் அழுவதேயில்லை!

அழுதழுது கரைய நான் உப்பில்லை 
ஆழ உறைந்து
வைரமாய் தணன்று
கொண்டிருக்கும்
ஒரு கரித்துண்டு! 

ஒற்றைச் சொல், ஒரு செயல் வாழ்க்கை



ஒரு வரியில் முடிந்து விட்டது
ஒரு வாழ்க்கை
ஒரு வார்த்தையில் முடிந்துவிட்டது
ஒரு நட்பு
ஒரு கேலி பேச்சில் சுருங்கி விட்டது
ஒரு மனம்
ஒரு அலைக் கழிப்பில் விழுந்து விட்டது
ஒரு கனவு
ஒரு கோபத்தில் தொலைந்து விட்டது
ஒரு உயிர்
ஒரு வன்கொடுமையில் கரைந்து விட்டது
ஒரு கற்பு

இருவர் ஒருவராகி - பிறப்பெடுக்கும் 
ஒரு உயிர்....
ஒருவரின் சிறுமைப்பட்ட
ஒரு செயலால்
ஒடுங்கி விடுகிறது...
.... 
வீழ்வதற்குப் பல சொற்கள்
வாழ்வதற்கு இல்லையோ,
ஒரு சொல்????

வீழ்த்துவற்குப் பல காரணம்
வாழ வைப்பதற்கு இல்லையோ,
ஒரு காரணம்????

   



 

நம்பிக்கை




 
இந்த புயலில்
நிகழ்ந்திருக்கின்றன
சில மரணங்கள்
சாலை முழுதும்
நேற்றைய மரங்களின்
சுவடுகள்....

நாளை புதிதாய்
துளிர்க்கும் - மீண்டும்
கிளைப் பரப்பும்!   









Wednesday 31 October 2012

Anger!



This is not a research paper on Anger, only my thought process on this topic, which kept lingering in my mind for a very long time.

What is Anger?
Anger is an emotion due to antagonism towards a person or sometimes towards an object (?), when you feel that the person has done an injustice or the object doesn’t meet your expectation or sometimes objects and animals are ill treated as a vent out of anger that was caused by somebody else.

Where it surge?
The irony is mostly we don’t get an opportunity to express anger due to the following reasons;
1.       1.The person is superior to you, in terms of “Money”, “Muscle” , “Matter” & “Position”
2.       2.The person is not in near vicinity and not reachable
3.       3.The fear of relationship being severed

It’s so easy to express anger if all the above situations goes vice versa, ie.
1.      1. The person is inferior to you, in terms of “Money”, “Muscle”, “Matter” & “Position”
2.       2.The person in the vicinity or reachable
3.       3.You don’t value the relationship 

“Valuing the relationship” doesn’t mean hatred all the time, it is more on psychological view point of the person or the relationship is bound to you and you have every right to express or abuse.
The so called ‘Anger’ mostly surge into the weaker sex or on whom we have an edge, in terms of dependency, relationship and family bonding. The victims are mostly “kids” and “women” (sometimes men), for the fact that they can’t defend but to put up with our aggression.

Is it normal?
Anger is a normal and healthy emotion, everyone will experience when it is completely in control. You are a human when you have all emotions; especially anger is in your control. You turn into a beast when anger engulfs you and you in turn engulf all those who come across your way!
Research says nearly 125 million people in India have mental illness problem, one of the cause is “Anger”.
Anger is caused due to societal pressure, upbringing style, physical abuse, male dominance society, cultural factors, economical factors, growing violence and corruption.

The very common formation:
When you are deprived of your basics, your emotions bloats up, when your emotions are suppressed, your mind is filled with anger, when there is no vent out for anger, that leads to violence, an abusive mentality against a particular caste, creed, gender, sex and sometimes objects and animals too.

The stardom makes the followers crazy and they get easily instigated and we see the wars over the virtual industry stardom and so with the political parties’ followers, every conspiracy leads to personal attacks. Be it anything, you will witness the loss only for the followers and mediators and never for the parties who got confronted.

Can Anger be positive?
Anger directed in the proper stream, will keep you healthy, and leads to several revolution in family and in the world.  Anger by the soldiers during the British regime, triggered the fire for freedom fight, an insult due to racism, the strong jolt felt, made Gandhi to start his freedom fight, constant suppression and denial, made Anna Hazare to start his next freedom struggle for the country from corruption.
Many emerged as strong personalities by stimulating their anger constructively even though they were victimized by suppression. Michael Jackson, Abraham Lincoln, Gandhi, and many political leaders in our current era and many more including the common men and women in our day to day life can be named as those who learnt to convert the anger as a stimulator to their success instead of getting succumbed to anger.

How we can make it constructive?
We need to know how to stimulate our anger, how to control and how to vent out. Direct confrontation mostly helps, clarifying the preconceived notion about each other instead of feeding to the vengeance due to constant perception building. Words play a key role in anger, if you hold your tongue for a moment you will save a relationship for life. Abusive words, disrespectful language leads to commotion.
In today’s world, everybody is overwhelmed with pressure and in constant comparison of people above them in terms of money, fame, position, education and beauty. The constant comparison makes them crazy and instigates them to work hard, gain more. You are on the right track, if you know where to go and where to stop and if you have the mental ability to accept failure and success as two sides of the coin.

Anger, the trap
The day you fail, and when your mind stop thinking about possible actions for your success, you get into a feeling of neglect, slowly emerges into depression and results in extreme outlet of anger to all unknown!
Finally, when you are angry, hold on to your breath, give a pause and shift  your mind to think different, from the other person’s point of view, ease down with words, do express your dissatisfaction and anger in  a more constructive way rather than destructive.
At the end, we are all social animals and we can’t stand alone by destroying every single relationship!

Get angry against all social injustice, but never get trapped with words!  To lose or to gain, is all in your hand!










வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!