Wednesday 30 April 2014

கீச்சுக்கள்!

பெண்ணை எதிர்த்து உரையாட முடியவில்லை என்றால், வீழ்த்தி விட முடியவில்லை என்றால், சில ஆண்களுக்கு அவளைப் பற்றி அவதூறுப் பேசி, தனிப்பட்ட வாழ்க்கையை அவர்கள் கற்பனைக்கேற்ப புனைந்துத் தாக்குவதுதான் வாடிக்கையாய் இருக்கிறது....சில பெண்களுக்கும் கூட!

ஆணோ பெண்ணோ ஒருவரை ஒருவர் மதித்து வாழ சொல்லிக் கொடுப்பதுதான் இன்றைய பெற்றோரின் தலையாயக் கடமை, இனி வரும் சந்ததியேனும் மதிப்புடனும் உள்ளார்ந்த அமைதியுடனும் வாழட்டும்!


---------------------------------------------------------------------------------------------------------------
அம்மாவின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் காத்திருந்த வேளையில், என்னருகே இருந்த ஓர் அம்மா, அவர்களின் கணவரின் ஆபரேஷன் நடந்துகொண்டு இருப்பதாகவும், அவர்களுக்கு இரண்டு பெண்கள், ஒருவர் கல்லூரியில், ஒருவர் பள்ளியில், அவர் அரசாங்கப் பள்ளியில் ஆசிரியை எனவும்....இப்படியாக எல்லாவற்றையும் சொல்லி கொண்டு இருந்தார், நடு நடுவே என்னைப் பற்றி, பணியைப் பற்றி, அம்மாவைப் பற்றி, படிப்பைப் பற்றி விசாரித்ததோடு இல்லாமல், நான் ஒரு நல்ல மாணவி என்றும், அம்மாவிற்குக் குணமாகிவிடும் என்றும் என் கைப்பிடித்து ஆறுதல் சொன்னதோடு மட்டுமல்லாமல், எனக்காகப் போய் மருத்துவரிடம் போய் விசாரிக்கவும் செய்தார்..................சரி இதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்....

அவர்கள் பேசியது அஸ்ஸாம் மாநில மொழியில், நான் பேசியது ஹிந்தியில்............சின்ன வயதில் பார்த்த அஸ்ஸாம் ஒரியா படங்களின் மொழியின் தாக்கம் இத்தனை நாள் இருந்ததா, அல்லது என்னிடம் ஹிந்தியிலேயே பேசி கொல்லும் நண்பர்களின் தாக்கமா? தெரியவில்லை.....

இப்படிதான் தோன்றியது.....

"உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் மனிதர்களுக்கு,
மௌனம் கூட ஒரு மொழிதான்!
உணர்வற்ற மனிதர்களுக்கு,
எந்த மொழியும், காற்றில் வரும், வெறும் ஓசைதான்!"

------------------------------------------------------------------------------------------------------

அவமானங்கள் நேரும்வரை தன்மானம் சுடுவதில்லை!
தன் சுயமும் தெரிவதில்லை!

  

விழிகளின் நீரோடும்!

Photo: விடியலில் எழுந்து,
சில யோகங்கள் புரிந்து, 
நெஞ்சில் காற்றை நிரப்பி,   
சமையல் தொடங்கி, 
பிள்ளைகள் எழுப்பி, 
பெரியவர்கள் பணிந்து 
கணவன் குறிப்பறிந்து,
வீடு சீர்படுத்தி,
பணிக்கு விரைந்து, 
அலுவல் முடித்து,
சக்கரமாய்ச் சுழன்று,
மகனின் அக்கரையில்,
மகளின் முத்தத்தின் ஈரத்தில், 
அம்மாவின் உறக்கமும்
தொடங்கியது!

தன் நித்திரையில் 
உலாப்போகிறாள் அம்மா, 
குற்றேவலில், 
பெருகும், 
தேவன்களின், 
தேவதைகளின்,  
விழிநீர் துடைத்தப்படி
இருமருங்கிலும்!

எனினும்,
விடியலில், 
அம்மா
விழித்தெழுவாள் மீண்டு(ம்),
மாறாத, 
அந்தப் புன்னகையுடனும்,
கசிந்து உறைந்த 
தன்னிரு விழிகளின் நீரோடும்!
விடியலில் எழுந்து,
சில யோகங்கள் புரிந்து,
நெஞ்சில் காற்றை நிரப்பி,
சமையல் தொடங்கி,
பிள்ளைகள் எழுப்பி,
பெரியவர்கள் பணிந்து
கணவன் குறிப்பறிந்து,
வீடு சீர்படுத்தி,
பணிக்கு விரைந்து,
அலுவல் முடித்து,
சக்கரமாய்ச் சுழன்று,
மகனின் அக்கரையில்,
மகளின் முத்தத்தின் ஈரத்தில்,
அம்மாவின் உறக்கமும்
தொடங்கியது!

தன் நித்திரையில்
உலாப்போகிறாள் அம்மா,
குற்றேவலில்,
பெருகும்,
தேவன்களின்,
தேவதைகளின்,
விழிநீர் துடைத்தப்படி
இருமருங்கிலும்!

எனினும்,
விடியலில்,
அம்மா
விழித்தெழுவாள் மீண்டு(ம்),
மாறாத,
அந்தப் புன்னகையுடனும்,
கசிந்து உறைந்த
தன்னிரு விழிகளின் நீரோடும்!

பாண்டி ஆட்டம்

Photo: கட்டம் போட்டு 
சில்லு வீசி 
தாண்டி குதிக்கும் 
பாண்டி ஆட்டம் தான் 
வாழ்க்கை!
படைத்தவன் கட்டம் போட,
அடுத்தவர் சில்லு வீச, 
தாண்டி குதிக்கிறேன் நான் 
தனியே!
 கட்டம் போட்டு
சில்லு வீசி
தாண்டி குதிக்கும்
பாண்டி ஆட்டம் தான்
வாழ்க்கை!
படைத்தவன் கட்டம் போட,
அடுத்தவர் சில்லு வீச,
தாண்டி குதிக்கிறேன் நான்
தனியே!

சில வார்த்தைகளால்

வலிகளில் மரத்துப்போன
இதயத்தில் கூட,
அவ்வப்போது குருதி
வழியத்தான் செய்கிறது,
உற்றவர் உதிர்க்கும்
சில வார்த்தைகளால்!

கைகூடுவதில்லை


Photo: ஒரு குருவி 
கூட்டை கலைப்பவனுக்கு 
அதைச் செய்யும் 
இலாவகம் கைகூடுவதில்லை!

ஒரு குருவி
கூட்டை கலைப்பவனுக்கு
அதைச் செய்யும்
இலாவகம் கைகூடுவதில்லை!

கீச்சுக்கள்!

மனதில் ஆழமான அன்பிருந்தால், எந்த அசூயையும்/அசிரத்தையும் எதனாலும் வந்திடாது, அன்பு கொண்டவரிடத்தில்!
---------------------------------------------------------------------------------------------------------- 
உடலும், மனமும் சோர்ந்துப் போகும்
இக்கட்டான தருணங்களில் / துயரங்களில் எல்லாம்,
நம்மை நோக்கி நீண்டிருக்கும் கரங்களில்,
தேடும் மனங்களில், நோக்கும் விழிகளில்,
தெரிந்து விடும்,
உண்மையில் நம்மை நேசிப்பவர்களும்,
ஆதரிப்பவர்களும் யார் என!
# ஞானம்


-----------------------------------------------------------------------------------------------------------
தலையில் சூடிக்கொண்டதால்
காகிதப்பூ மணம் வீசிடாது
குப்பையில் வீசி எறிந்ததால்
பாரிஜாதம் தன் மணம் துறந்திடாது!
அதுபோலவே
மனிதர்கள் தத்தம் மனத்தைக் கொண்டு
அவர்தம் நட்பும், உறவும்!


-----------------------------------------------------------------------------------------------------------
அட்சயப் பாத்திரமே என்றாலும்
அதன் மதிப்பறியா
ஓர் ஆண்டியின் கையில்
அது
மற்றுமொரு பிச்சைப் பாத்திரமே!

----------------------------------------------------------------------------------------------------
இரண்டு கனரக ஊர்திகளுக்கு இடையே உரசிக்கொண்டு, சிகப்பு சிக்னலை மீறி, தலைக்கவசம் அணியாமல், கழைக்கூத்துப் பல செய்து, சட்டென்று வாகனத்தில் அடிபட்டுச் சாகும் \ மற்றவர்களின் சாவிற்குக் காரணமாய் அமையும் இளைஞர்கள் \ வாகன ஓட்டிகள், எல்லையோரக் காவற்படையில் சேர்ந்து நாட்டிற்காக எதிரிகளை வீழ்த்தி வீர மரணம் எய்தலாம்!

#பிறரை வாழ வைக்க வேண்டும் மரணம் கூட!

------------------------------------------------------------------------------------------------------------
மாநிலத்தின் பாரத வங்கி என்று பறைசாற்றிக் கொள்ளும் வங்கியில், அதன் கிளைகளில், கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யும் பெண்ணிடம் கண்ட பணிவையும், தன்மையையும் கூட, அங்கே படித்துப் பணியில் இருந்த மேதாவிகளிடம் காண முடியவில்லை.

ஓட்டுக் கிடைத்த பின் மந்திரிகளும், உத்தியோகம் கிடைத்தபின் அரசாங்க ஊழியர்களும், மக்களைக் கண்டுகொள்வதேயில்லை, எனினும் ஊதியம் கொடுப்பதென்னவோ நாம்தான்!

#சொந்த செலவில் சூனியம்!

----------------------------------------------------------------------------------------------------------------
வெள்ளித் திரையில்
கண்டவர்களை,
முன்போ பிறகோ
பதவியேற்றவர்களை
ஓட்ட வைத்த ஓர்
அரைசாண் புன்னகையுடன்
நீங்கள் கண்கொண்டு பார்க்கும்
ஒரே திருவிழா
தேர்தல்!

(எங்கே இனிமே மனு கொடுத்துப் பாருங்க, பார்ப்போம்?!)

-------------------------------------------------------------------------------------------------------------

உண்மை அறியாமல், யாரோ சொன்ன வார்த்தைகளுக்காக, நாம் நேசிக்கும் ஏதோ ஓர் உறவு/நட்பு நம்மைக் கடிந்துகொள்ளும் நேரமும், நம்மைத் தூக்கி எறியும் நேரமும் மனதில் வருவதுதான்..............
#கையறு நிலை

-----------------------------------------------------------------------------------------------------------------

பெரும் வில்லத்தனமான காரியங்களைச் செய்து கொண்டு சுற்றிகொண்டிருக்கும் பெண்களும், அவற்றால் அழுது புரளும் பெண்களும், அந்தச் சதிகளை முறியடித்துப் போராடிக் கொண்டிருக்கும் பெண்களும் என.......

ஏம்பா டைரக்டர்ஸ் உங்களுக்கு உங்க வீட்டு பொம்பளைக மேல காட்ட முடியாத கோபத்தை, இப்படிப் பெண்களை வில்லிகளா, அழுமுஞ்சிகளா, சோம்பேறிகளா, சில இடத்தில் உள்ளுக்குள்ள நடக்குற சதிகளை முறியடிக்குறத் தாரகைகளாகவும் காட்டுறிங்களா?????

இந்த background noise தவிர்க்க முடியலை.........எப்படி எல்லாம் பொம்பளைகளை அடிமையாக்கி வெச்சு இருக்கீங்க?!

#முடியல
feeling tired.
-------------------------------------------------------------------------------------------------------------------
 
  
    

வரம்!









Photo: கேட்காமல் கிடைக்கும் 
வரம், மரணம் மட்டுமே! 
அந்த ஒன்றை விரும்பத் 
தொடங்கி விட்டால் 
எல்லாம் கடந்து போய்விடும் 
இந்த மனம்!
 கேட்காமல் கிடைக்கும்
வரம், மரணம் மட்டுமே!
அந்த ஒன்றை விரும்பத்
தொடங்கி விட்டால்
எல்லாம் கடந்து போய்விடும்
இந்த மனம்!

விந்தை மனிதர்தாம் நீவிர்!


பசிக்கும் போது உணவை,
தாகத்திற்கு நீரை,
பரிதவிப்பில் அரவணைப்பை,
இருக்கும் வரை
கொடுத்துவிட்டுப் போகும்
இயற்கையும், அன்பும்!

அதன் மரணத்தை
மட்டும் நீங்கள் வேகமாய்
செதுக்குகிறீர்கள்

மரக்கட்டையில் லாபமும்,
இலைகளில் குப்பையும்,
கணக்கிடும் மனதிற்கு 
உதிர்ந்த விட்ட பிறகே
வெயில் உறைக்கும்
வெட்டி வீழ்த்திய பின்பே
தாகம் எடுக்கும்!

மரம் கனி தரும்,
நிழல் தரும்,
வீடு தரும், படகு தரும்
பாடங்களில் கூட அதுதான்
தரும் - நீங்கள் தருவதற்கு
ஏதுமில்லை!

மரணத்தை விரும்பாத
உங்கள் குலம் -
மரணித்தபின்தான் 
இயற்கையை யாசிக்கும்,
பரிதவித்து மாண்ட 
உயிர்களையும் நேசிக்கும்! 

விந்தை மனிதர்தாம்
நீவிர்!

Saturday 19 April 2014

இலையுதிர் காலம்!

 
பெருத்த சுயநலங்களை
கடந்து - சலிப்புற்று
அந்த ஒற்றை மரத்தினடியில்
அவள் அமர்கையில்
இலையுதிர் காலம்
தொடங்கி இருந்தது!
 

Indeed a tiresome Journey,
Passing the selfish alleyway,
She rested under a tree
And oh, it is autumn!

பெண்ணே பொறுப்பு


 
எவனுடனோ சென்று,
இரவில் தனியே நின்று,
தவறி காதல் வளர்த்து,
ஆதரவின்றிச் சாய்ந்து,
உடைகள் சிறிது விலகி,
அன்று கொஞ்சம் குடித்து,
நடத்தைச் சற்று சரிந்து,
அவனைத் முன்பு அவமதித்து,
மனநிலை முற்றும் பிறழ்ந்து,
சம்பாதிக்கும் தினவெடுத்து,
விலைமகளாய் இருந்து,
பேரிளம் பெண்ணாய் தனித்து,
சிறுமியாய், சிறுவுடை அணிந்து,
சாதி மீறிய திமிர் பிடித்து,
மதத்தில் பற்று வைத்து,
பிறக்கும் போது ஆடை அற்று.........

வன்புணர்ச்சி நடப்பினென்ன?
வன்கொடுமை நிகழ்வினென்ன?
இத்தனையும்
செய்யும் பெண்ணே
அத்தனைக்கும் பொறுப்பு,
பெண்மையில் பதுங்கும்
இப்புண்ணியப் பூமியில்!

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!