Thursday 17 April 2014

மெய்யெனத் தெரிந்த பொய்!

தாயின் அன்பு, 
ஊற்றாய் கிடக்க,
தந்தையின் பரிவு, 
எப்போதும் தலைக்கோத,
செல்ல நாயின் நன்றி, 
ஒட்டி உறவாட,
உறவுகள் அனைத்தும் 
உன்னில் கண்டு
உன் காதலில் தொலைந்திட்டேன்!

கண்ணில் பொய் வைத்து
நெஞ்சில் தீ வைத்தாய் -
பொய்களில் திளைத்து
உறவுகளை முறித்து 
சத்தமில்லாமல் எனை 
சாய்த்து விட்டு சென்றாலும்,
பெரும் சத்தத்துடனே முறிகிறது,
மனமெனும் மரம்
ஆழிப் பெருங்கடலாய்
கண்களில் மழைப் பொழிந்து!


No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!