Friday 20 December 2019

காலம்

Image may contain: text

புறக்கணித்தல்

Image may contain: text

வாழ்த்துதலை விட

Image may contain: text

எனக்கென்று உள்ளது
என்னைச்சேரும்
விலகியதும்
சேராததும்
அவர் விதியென்றால்
இச்சிறிய வாழ்க்கையில்
நானென்ன செய்துவிட முடியும்
வாழ்த்துதலை விட !
 

காலம்

Image may contain: text

ஆண்ட்டி_இந்தியன்

#அணுக்கதை

“இங்கே பாரு 300, 350, 40 க்கு 400, 1000 எத்தனை விதமான செய்திகள், அதிலும் ஒருவர் 300 ல் 275 பேர் தீவிரவாதிகள், 25 பேர் பயிற்சியாளர்கள்ன்னு சொல்லியிருக்கார், வீடியோ கேமை வேற வார் வீடியோன்னு பரப்பி, அதுக்குள்ள இன்னொருத்தர் எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை, டாடிதான் மீண்டும் பிரதமரா வரணும்ன்னு சொல்லியிருக்கார், இதுக்கும் போருக்கும் என்னடா சம்பந்தம்? பாரு இப்பக்கூட விமானிய பிடிச்சதக்கூட முதல்ல இல்லன்னு சொல்லிட்டு அப்புறம் அவங்க ஆதாரம் காட்டியதும் ஒத்துக்கிட்டாங்க, என்ன மாதிரி அரசியல்வாதிங்க, ச்சை!”
“ஹா ஹா, இதை விட கிந்தியாவை யாரும் கேவலப்படுத்த முடியாது!”
“டேய் நான் உங்க ஆளுங்க சொன்னதைத்தான் சொன்னேன், எப்போ கிந்தியாவை கேவலப்படுத்தினேன்?!”
“இல்லை யூ ஆர் ஆண்ட்டி இந்தியன்!”
“டேய் அவனா நீ?!” 😥

#ஆண்ட்டி_இந்தியன்

மந்தையாட்டு_வரலாறும்_தேர்தலும்

#மந்தையாட்டு_வரலாறும்_தேர்தலும்

வரலாற்றில் இறந்த இராணுவ வீரர்களின் படங்களை வைத்துக்கொண்டு, “எனக்கு ஓட்டுப்போடுங்கள்” என்று தேசத்தின் மீதான பற்றை வாக்குகளாக எந்தப்பிரதமரும் சேகரித்துக்கொண்டிருந்திருக்க மாட்டார்கள், அத்தனைப் பாதுகாப்பு நிறைந்தப்பகுதியில் மொத்தமாய் இராணுவ வாகனங்கள் வர, சர்வ சாதரணமாய் ஒரு தாக்குதலும், தாக்குதல் நடந்த அன்றே தமிழகத்தின் 40 இடங்களும் 40 வீரர்களின் “தியாகத்துக்கு” என்று கட்சிப்பிரச்சாரம் செய்வதும், போர் வரும் பதட்டம் இருப்பதால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று குஜராத் முதல்வர் சொல்வதும், பதில் தாக்குதல் நடத்தியதையும் உடனே பிரதமரின் தேர்தல் பிராச்சார உத்தியாய் பயன்படுத்துவதும், அதை பாகிஸ்தான், “இந்தியாவில் தேர்தல் காலம் என்று தெரிகிறது!” என்று சொல்வதும் வரலாற்றில் நிகழ்ந்தக் கறைகள்!

அவசர பணமதிப்பிழப்பையும் அதைத்தொடர்ந்த உயிர்ப்பலிகளையும், ஜிஎஸ்டி அழித்தது, 49000 தொழில்கள் நலிவடைந்ததும், 5 லட்சம் பேர் வேலை இழந்ததும், அடுத்து தூத்துக்குடியால் மறக்கடிக்கப்பட்டது, 12 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது அடுத்து கேரள மழையால் மறக்கக்கடிக்கப்பட்டது, கேரள மழையின் மீட்புப்பணிக்கு பில் அனுப்பியதும் அடுத்து சபரிமலை விவகாரத்தால் அமுக்கப்பட்டது, சபரிமலையின் சங்கிகளின் போராட்ட வேடிக்கையெல்லாம், அடுத்து வந்த அம்பானிகளின் செய்தியில் மக்கிப்போனது, நடுநடுவே மானே தேனே என்று சீனா எல்லைக்கு ரோடு போட்டு அருணாசலத்தில் அத்து மீறி வேடிக்கைக்காட்டியது, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பெட்ரோல் டீசல் விலையேற்றம் தொடர்ந்தது, பலப்பல முற்போக்குவாதிகள், எழுத்தாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர், அதெல்லாம் காலத்தின் மறதி வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது,

நாடெங்கும் பெண்களும் குழந்தைகளும் பாலியல் வன்புணர்ச்சியில் உயிரிழந்தனர், பெண்கள் கெடுக்கப்படும்போது எதிரப்புக்காட்டமல் இருந்தால் உயிருடன் இருக்கும் வாய்ப்புக்கிடைக்கும் என்றும் ஒரு சாதாரண வன்புணர்ச்சிக்கொலையை ஊதிப்பெரிதாக்கியதில் டெல்லியின் சுற்றுலா வருமானம் பாதிக்கப்பட்டது என்ற அரிய கருத்துக்கள் அமைச்சர்களால் மொழியப்பட்டது, தேர்தல் மேடைகளைத்தவிர வேறு எதிலும் பிரதமர் வாய் திறக்கவில்லை!

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் 75 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எந்தத்தகவலும் மக்களுக்குத்தெரியாமல் இரகசியாமாய் மறைந்துப்போனார், அவசர அவசரமாய் எம்எல்ஏக்கள் மக்களை மறந்து கூவத்தூரில் ஒளிந்துக்கொண்டார்கள், இவரா அவரா என்று தவழ்ந்து உருண்ட நாடகங்கள் ஒருவழியாய் நிறைவுற, உதய் மின்திட்டம் தொடங்கி, நீட் வரை எதையெல்லாம் முன்னாள் முதல்வர் எதிர்த்தாரோ அதையெல்லாம் மத்திய அரசு தங்குத்தடையின்றி புது அரசின் மூலம் நிறைவேற்றிக்கொண்டதும், எட்டுவழிச்சாலை என்ற அத்துமீறல்களும், தெர்மாக்கோல் விட்டு அதற்கும் பல லட்சம் கணக்குக்காட்டிய கொடுமைகளும், ஜல்லிக்கட்டு வன்முறைகளும் , கடவுள் தேவையில்லை எங்கள் சாமிதான் முருகர் என்ற சுயவிளம்பர தம்பட்டங்களும், பொதுநல வழக்கின் வழி வந்த ப்ளாஸ்டிக் தடையால் மக்கள் மனதில் இருந்து மழுங்கடிக்கப்பட்டது!

எப்போதும் நாட்டிலேயே தங்காதவரும், வரலாற்றில் சிலமணிநேரமே பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் என்ற பெருமையும் ராபேலின் கூச்சலில் அடிப்பட்டுப்போனது, விதர்பாவின் வழக்கில் சாட்சிகள் தொடர்ந்து மர்மமாய் சாகடிக்கப்பட்டதும் பெட்டிச்செய்தியாய் சுருங்கிப்போனது, இதற்கு நடுவே அமைச்சர் முன்னிலையில் இல்லாத கைபேசி தொழிற்சாலையில் இருந்து மலிவுவிலையில் கைபேசி கிடைக்கும் என்று அறிவித்துச் சுருட்டிய கொள்ளைக் கிடப்பில் போடப்பட்டது!
அரசு தொலைத்தொடர்பு நிறுவனம் பாதளாத்துக்கு தள்ளப்பட்டு தனியார் நிறுவனத்துக்கு ஒரு நாட்டின் பிரதமர் விளம்பரத்தூதர் ஆனதும், குஜராத்தின் தனியார் நிறுவனத்திற்கு பசுமைத்தீர்ப்பாயம் விதித்த சில நூறு கோடிகளை தள்ளுபடி செய்ய வைத்ததும், அதே நிறுவனம் தன் சுய லாபத்துக்காக ஆஸ்திரேலியாவில் வியாபாரம் தொடங்க பொதுத்துறை வங்கியை நிர்பந்தித்துக் கொடுக்க வைத்த அபரிமிதமான கடன் தொகையும் இந்த ஆட்சி செய்த சாதனைத்துளிகள், அத்தனை சாதனைத்துளிகளுக்கும் சிகரம், பொருளாதாரம் சாராத ஒருவரை ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமித்து, வைப்புத்தொகையில் கைவைத்து தள்ளாட்டத்திற்கு வழிச்செய்த நடைமுறை!

இதெல்லாம் மழுங்கடிக்க, கால் கழுவும் நாடகம், ராபேலின் கூச்சல் எல்லைத்தாக்குதலில் அமைதியானது, எல்லைத்தாக்குதல் பதில் தாக்குதல் என்ற பரபரப்பில் சத்தமின்றி விமான நிலையங்களின் பரமாரிப்பின் வியாபார உரிமை அதானிக்கு தாரை வார்க்கப்பட்டிருக்கிறது, பழங்குடிகளை காட்டை விட்டு வெளியேற்றும் தீர்ப்பு வந்திருக்கிறது, படிப்புப் பற்றிய கேள்வி எழுந்ததும் மாயமாய் எரிந்தக்கோப்புகளைப் போல, எதுவும் அடுத்தடுத்த நிகழ்வுகளால் மறக்கடிக்கப்பட்டுவிடும், மொத்த அழிவுத்திட்டங்களின் கொள்கலனாய் தமிழகத்தை மாற்றி விட்டு பல உயிர்களைப்பறித்துவிட்டு, துணிச்சலாய் இந்த மண்ணில் ஓட்டுக்கேட்டு நிற்பதற்கு மக்களின் இந்த மறதியும், பணம் என்ற ஆயுதத்தின் பலமும், சாதிமதத்தின் பேரில் தேசப்பக்தியின் போர்வைகளின் பெயரில் எளிதில் தூண்டப்படும் உணர்ச்சியும் தானே காரணம்?

எது எப்படி இருந்தால் என்ன, செத்தது யாராய் இருந்தாலும், சாகடித்தது அரசியல், இராணுவ நடவடிக்கையை தேர்தல் பிரச்சாரமாக்கிய இந்த மோசமான அரசியல் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்துக்கொண்டிருக்கிறது, அதனால் என்ன வாழ்க பாரதம்!!!
#Saynotowar

மானங்கெட்ட அரசியலா

ஏதேதோ எண்ணி வந்தேன்
சட்டென்று நீ துப்பிய
வார்த்தைகளின் வெம்மையில்
பொசுங்கிப்போனேன்
இனி உன் கடிகாரத்திற்கு
என் நேரச்சுமையில்லை
கொள்கை வேறு
கூட்டணி வேறென்று
வந்து நிற்க
இது என்ன மானங்கெட்ட
அரசியலா
காயப்பட்ட மனமன்றொ?!
😉😉😉

வாழ்க்கை

ஒருமுறை அன்புக்காட்டினாலே
தன் வாழ்நாள் முழுமைக்கும்
அன்புக்காட்டும் நாயைப்போல
சுமந்து பெற்று வளர்த்ததால்
எத்தனை இகழ்ந்தாலும்
பிள்ளைகளிடம்
பரிவுகாட்டும் தாயைப்போல
எந்த நேசம் இருந்தாலும்
அதை இழக்கும்வரை
மனிதர்கள்
அதன் மதிப்புணர்வதில்லை
மதிக்கப்படாத இடத்தில்
காட்டும் நேசமும்
கொஞ்சமும்
தன் நிலையுணர்வதில்லை
#வேடிக்கை_விநோதமே
இந்த வாழ்க்கை!

பயம்

காட்டின்
விடியாத இருளில்
கவிழ்ந்துக்கிடந்தன
இலைகள்
தனியே சலம்பிக்கிடந்தன
மலர்கள்
பயமேயில்லையோ
உங்களுக்கென்றேன்
யானைகள் மிதித்தாலும்
ஏற்றுக்கொள்வோம்
மீண்டும் தழைப்போம்
மனிதர்கள் முகாமிடும் போதே
தலைமுறை சாய்ந்துவிடும்
அச்சம் கொள்வோம்
பாரேன் இப்போது
நீயும் கூட
இக்காட்டில் தனியே
நின்று கண்ணீர் உகுப்பதும்
மனிதராலன்றோ
என்று சலசலத்துச் சிரித்தன
மரங்கள்!

#பயம்

அன்பு


Image may contain: one or more people and text

நவீன_மன்னராட்சி

மொத்த தமிழகத்திலும் சாராயம் ஓடும்
விவசாயம் அழித்து சாலைகள் போடும்
சாலைகள் முழுக்க சுங்கச்சாவடிகள் அமைக்கும்
குண்டும் குழியுமான சாலைகளுக்கும் காசு பறிக்கும்
பள்ளிகள் மூடி கல்விக்கனவு குலைத்துவிடும்
நீட் நுழைத்து ஏழைகளை ஏட்டுச்சுரைக்காயுடன்
தள்ளி வைக்கும்
மீத்தேன் உறிஞ்ச நீர் வற்றும்
காப்பர் உருவாக்கி உயிர் உறிஞ்சும்
நீயூட்ரினோ என்று மலைகள் சுரண்டும்
சாமியார்கள் வளத்தில் காடுகள் அழியும்
காடுகள் அழிந்து யானைகள் களவுப்போகும்
யானைகள் துரத்தி சிலைகள் எழும்
புகையிலையிலும் ஊழல் செய்யும்
தெர்மாக்கோலிலும் அணைகள் கட்டும்
ஆட்சியைப்பிடிக்க பேரம் பேசும்
பணமதிப்பிழப்பென்று சில்லறைகள் தேடும்
கேள்வியென்று வந்துவிட்டால் ஊரைச்சுற்றும்
தேர்தல் மேடைகளில் கண்ணீர் விடும்
ஊழல்வாதிகள் ஒன்றுசேர உளவுத்துறை உதவும்
அவ்வப்போது மிரட்டி வைக்க வருமானவரித்துறை வரும்
துறைகளுக்கொரு அமைச்சர்கள் பெயருக்கு மட்டும்
கரன்சி வரும் வழித்தவிர வேறில்லை நாட்டம்
வீதிக்கொரு சாதிக்கூட்டம் சமூகநீதி பேசும்
எதிர்ப்பவன் சாதியறிந்து அரிவாளில் வெட்டும்
சாமியார்கள் தயவில் கோடிகள் புழங்கும்
கேடிகளின் வன்முறையில் குரல்வளை நசுங்கும்
சில்லறைக்கடன்களுக்கு கோவணம் பறிபோகும்
வரைமுறையற்ற கடன் கொள்ளைகளுக்கு தள்ளுபடி கருணையாகும்
திரையில் நடித்தவர்கள் மேடையில் நடிப்பது எதார்த்தம்
ரசிகர்கள் தொண்டர்கள் என்று விழும் விட்டில்பூச்சிகளும் அதிகம்
போராளிகள் மாயமாவது மறந்துவிடும் நாடகம்
வாக்குறுதிகளை மறந்துவிடுவது அரசியலுக்கான நரித்தந்திரம்
திருடர்களின் வகைக்கொரு கூட்டணி கொண்டாட்டம்,
மக்கள் மட்டுமே எதிரிகள் என்பது வேடிக்கைவிநோதம்
வேடிக்கைப்பார்ப்பது மக்களின இயலாமைச்சோகம
இதில் தேர்தலெல்லாம் மீளமுடியா உரிமைகளின் ஏலம்!

#நவீன_மன்னராட்சி

கீச்சுக்கள்

பெரும்பாலான தமிழக கட்சிகளுக்கு கொள்கை என்பது வெங்காயம் போல, உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது, கேட்கும் நமக்குத்தான் கண்ணீர் வரும், அவர்கள் கரன்சியில் கண்ணை மறைத்துக்கொள்வார்கள்!
-------------------
இந்தியர்களின் கையாலாகாத இயலாமையில்
தமிழர்களின் கொஞ்சமும் சுரணையற்ற மறதியில்
கூட்டணி கேலிக்கூத்துக்கள்!
தேர்தலென்ற நடைமுறை தவிர்த்துவிட்டால்
இது மன்னர்கள் ஆட்சிக்காலமே!

நான்கைந்து_கட்சிகளும்_நலிந்துப்போன_நாடும்

#அணுக்கதை
பத்திரிக்கையாளர்களும் ஒரு பிரதமரும்!
“சார், நீங்கள் ஏற்கனவே போன ஆட்சியில் கொண்டுவந்த ஜிஎஸ்டி யையும், பெட்ரோல் விலையேற்றத்தையும் எதிர்த்துவிட்டு, அதையெல்லாம் மாற்றுவதாக கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு அதையே திரும்ப செய்வது பற்றி?”
பிரதமர் ஏதோ ஒரு கேமராவை பார்த்து கண்ணசைக்கிறார், பின்பு வாயசைக்கிறார்
“சார் என்ன சொல்கிறீர்கள், கேட்கவில்லை”
“நான் ஏழைத்தாயின் மகன்...”
“பணமதிப்பிழப்பில் நூற்றுக்கணக்கான பேர் இறந்தது பற்றி?”
“நான் ஏழைத்தாயின் மகன்...”
“இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளதைப்பற்றி?”
“அடுத்த மாதம் நான் டிரம்பை சந்திக்க அமெரிக்க பயணம் செல்கிறேன்....”
“தொடர்ந்து உங்கள் அமைச்சர்கள் சர்ச்சையான முறையில் கருத்துகள் கூறினாலும் நீங்கள் மௌனமாய் இருப்பதன் காரணம்”
“காங்கிரஸின் மோசமான ஆட்சியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பேன்”
“பட் சார் இப்ப ஆட்சியில் இருக்கிறது நீங்கள்தான்?”
“நான் ஒரு ஏழைத்தாயின் மகன்...”
“49000 தொழிற்சாலைகள் நலிவடைந்தும் மூடப்பட்டும், 5 லட்சத்துக்கு அதிகமான பேர்கள் வேலை இழந்திருக்கிறார்களே?”
“மன் கீ பாத்தில் பதில் சொல்கிறேன்”
“ஆட்சி முடியும் நேரத்தில் நீங்கள் இதுவரைக்கும்
இல்லாத அளவில் சலுகைகளை வாரியிரைத்திருப்பதும், சில மாதங்களுக்கு வேண்டிய பட்ஜெட்டை ஆண்டு முழுமைக்கும் போட்டிருப்பதை பற்றி...?”
செக்யூரிட்டி ஒருவர் வந்து அந்த நிருபரை தள்ளிக்கொண்டு போகிறார்
சுதாரித்துக்கொண்ட பத்திரிக்கையாளர்கள், ராபேலை ஒதுக்கி, ஏற்கனவே அரசு கொடுத்திருந்த கேள்வித்தாளை எடுத்து கேள்விகள் கேட்க,தொடர்ந்த எல்லா கேள்விகளுக்கும் “ஏழைத்தாயின் மகன், தான் ஒரு ஏழைத்தாயின் மகனென்று அழுத்தியும் அழுதும் சொல்கிறார்”, கலங்கிப்போன பத்திரிக்கையாளர்கள்,
இறுதியாக,
“சார் நீட் போன்ற தேர்வுக்கெல்லாம் கடுமையான சோதனைகளை செய்யும் போது, இராணுவ வீரர்கள் வாகனங்களை மோத எப்படி சர்வசாதரணமாய் 250-350 கிலோ வெடி மருந்துகள் நிரம்பிய வாகனத்தை எடுத்துக்கொண்டு வர முடிந்தது??”
“இது மோசமான தாக்குதல், இராணுவ வீரர்களின் “தியாகம்” வீண்போகாது..”
உடன் தமிழ்நாட்டு கட்சி பிரதிநிதி, “ஆமாம் 40 வீரர்கள் இறந்திருக்கிறார்கள், தமிழ்நாட்டில் 40 திலும் வெற்றிப்பெற செய்ய வேண்டும், இந்தக்கொடுமைகள் நிகழாமல் இருக்க பிரதமரே பிரதமராக இருக்க வேண்டும்!”
கூட்டம் முடிந்ததும் பல நிருபர்கள் தாங்கள் ராஜினாமா கடிதங்களை அனுப்பியும், சிலர்
ஏர்வாடியில் அனுமதிக்கப்பட்டதாகவும் கேள்வி! 😱

#நான்கைந்து_கட்சிகளும்_நலிந்துப்போன_நாடும்

நதியென்பது


No photo description available.

காலக்கெடு

Image may contain: one or more people and text

அரசியல்

Image may contain: text

அக்கறை

No photo description available.

காதல்

Image may contain: one or more people and text

மழை



No photo description available.

காற்றுக்கும் மரத்துக்குமான
புரிதலின் கூடலில்
காதல் கனியும் போது
மேகம் பிரசவிக்கிறது!

அதீத நேசம்

Image may contain: sky, cloud and text

இந்தச்சமூகம் என்பது நாம்தான்

அறுந்து விழுந்த மின்கம்பியை பிடித்த ஆறுவயது சிறுவன் மரணம், இதில் அறுந்த விழுந்த மின்கம்பியின் மின்வாரிய அலட்சியம் இந்தியாவுக்கே பொதுவானது, மழைக்காலங்களில் மட்டுமல்ல எல்லாக் காலங்களிலும் நீங்கள் சென்னை மாநகரில் பல்வேறு கம்பிகள் இப்படி சாலையை, நடைபாதையை அடைத்துக்கொண்டிருப்பதை பார்க்கலாம்!
அலட்சியமான அதிகாரிகளையோ, அரசையோ குறித்தல்ல இப்பதிவு, அவ்வப்போது இதுபோல் வரும் செய்திகளின் பின்னே உள்ள பெற்றவர்களின் அஜாக்கிரதைப்பற்றியதே, எத்தனை பாதுகாத்தாலும் நம்மை மீறி நடந்துவிடும் விபத்துகளையும் கொடுமைகளையும் விட்டுவிடுவோம், ஆனால் இவைகளை தவிர்க்கலாமே;

1. வீட்டில் தவழும் நடக்கும் குழந்தைகள் இருந்தால் தண்ணீர் தொட்டிகளை இறுக்கமாக மூடி வைக்கவும், குளியலறைக்கதவுகளை தாழ்போட்டு எட்டாத உயரத்தில் வைக்கவும் ஏன் மறக்கிறோம்?

2. குழந்தைகள் கைக்கு எட்டும் தூரத்தில் மருந்துகளையும், கேரோசின், தீப்பெட்டி போன்ற பொருட்கள் வைப்பதை தவிர்க்கலாமே?
3. குழந்தையை டிவி ஸ்டாண்டின் அருகில் விட்டு, அது தலையில் விழும்வரை என்ன செய்கிறோம்?

4. குட் டச் பேட் டச் பற்றி இன்னமும் பெற்றவர்களே பேசாத நிலையை எப்போது மாற்றுவோம்?

5. குழந்தைகளை வெளியே விளையாட விடுவது ஆரோக்கியமானதே, ஆனால் வீட்டுக்குள் சீரியல்கள் முன்போ அல்லது வேறு வேலையிலோ மூழ்கி பிள்ளைகளை கண்காணிக்க ஏன் மறக்கிறோம்? அதுதான் இங்கே இந்த மின்விபத்து!

6. எங்காவது வெளியில் செல்லும்போது, பிள்ளைகளை தனியே விட்டு ஏன் செல்கிறோம்? விளைவு ஏழு வயது ஹாசினியின் மரணம்

7. ஆழ்துளைக்கிணறுகளில் விழுவதற்கும் பலரின் தவறுகளைத்தாண்டி நம்முடைய கவனக்குறைவும் காரணமாகிறது

8. வீட்டில் சமைக்காமல் ஏன் எப்போதும் உணவுகளை வெளியே வாங்கிக்கொடுக்கிறோம்?

9. கெடுதல் என்று தெரிந்தும் எதற்கு விதவிதமான வண்ணங்களில் தின்பண்டங்களையும், மைதாவில் செய்த கேக்குகளையும், பரோட்டக்களையும், பிஸ்கட்டுக்களையும் குளிர்பானங்களையும் வாங்கி திணிக்கிறோம்?

10. கைபேசிகள் பிள்ளைகளுக்கு எதற்கு, அதில் விளையாட்டுகள் எதற்கு? கைபேசி வீடியோ கேம்களுக்கு உங்களுக்கு நேரம் இருப்பின் அந்த நேரத்தை உங்கள் குழந்தைகளிடம் செலவழித்தால் என்ன?

11. கிட்டதட்ட குழந்தை முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சதிகாரர்கள், கொலையாளிகள் என்று சித்தரிக்கும் தொலைக்காட்சி சீரியல்களை சினிமாக்களை ஏன் பிள்ளைகளுடன் அமர்ந்து பார்க்கிறோம்?

12. இரவு நேரம் கண்விழித்து இவைகளை பார்க்கும் பழக்கத்தை ஏன் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தி ஆரோக்கியத்தை சிதைக்கிறோம்?

13. சாலையில் தாறுமாறாய் கடந்துச்செல்வது, தலைக்கவசம், சீட்பெல்ட் இல்லாமல் பயணிப்பது போன்ற செயல்களை எப்போது திருத்திக்கொண்டு பிள்ளைகளை வாழ வைக்கப்போகிறோம்?

14. சாலையை கடக்கும்போது, மின்தூக்கிகளில், நகரும் படிக்கட்டுகளில் என்று எல்லா இடங்களிலும் பிள்ளைகளின் கையைவிட்டுவிட்டு கைபேசியில் கவனம் செலுத்தும் பழக்கத்தை எப்போது மாற்றுவோம்?

15. சாதியைச்சொல்லி, மதத்தைச் சொல்லி, கடன்காரர்களுக்கு பொய்யைச்சொல்லி என்று எப்போது இந்தப்பாடங்களை பிள்ளைகளுக்கு கற்றுத்தருவதை கைவிடுவோம்?

16. குடிக்கும், புகைக்கும், பெண்களை போகப்பொருளாகக் கருதும் நடைமுறை வழக்கங்களை எப்போது மாற்றி ஆரோக்கியத்தையும் அன்பையும் சகமனிதரை, மனுஷியை நேசிக்கும் மனப்பான்மையையும் கற்றுத்தரப்போகிறோம்?
இந்தச்சமூகம் என்பது நாம்தான், விபத்துகள் குறைய, #மாற்றம்_நம்மிடம்_இருந்தே_உருவாகவேண்டும்!

காதல்

நேற்று அழவைத்ததோ
இன்று உயிரெடுத்ததோ
யாருக்கும்
நினைவிலிருப்பதில்லை
எனினும்
ஏதோ ஒரு கண்ணீரையோ
யாரோ ஒருவரின் உயிரையோ
மீட்டி
கொடுமைகளை நினைவூட்ட
காலம் காத்திருக்கும்
அப்போதும் காலத்தோடு
மன்றாடி பிறர்
நலம் வேண்டும்
உள்ளங்களில் உயிர்பித்திருக்கிறது
#காதல்!

நிலையற்றது_மனம்

ஏதோ ஒரு புள்ளியில்
விரிசல் விட்ட கண்ணாடியில்
பார்க்கும் பிம்பமெல்லாம்
பல வடிவில்தான்
அன்பு குறைந்துவிட்ட மனதில்
கிடைக்கும் வாய்ப்புகளெல்லாம்
பெருங்குற்றங்களாவதும்
விலகும் முடிவுகளில்தான்
#நிலையற்றது_மனம்!


Image may contain: 1 person, text

அன்பெனும்_அம்புலிமாமா_கதை!

#அன்பெனும்_அம்புலிமாமா_கதை!

அவனுக்கு புற்றுநோய்
அவளுக்கு என்றால் நீங்கள்
எனக்கா(?!)என்பீர்கள் என்பதால்
அவனுக்கு என்கிறேன்

தேடி உழைத்தச் செல்வங்கள்
பலகோடி என்றாலும்
அதைப்பங்கீட உறவுகள்
பல இருந்தது
எதார்த்தமாய் சிந்திப்போம்
சொத்துகளை மாற்றி எழுதென்றாள்
மனைவி
நீ இருக்கும்போதே மரியாதையில்லை
எங்களையும் கொஞ்சம் யோசியென்றார்
தந்தை
எஞ்சியிருக்கும் மகளுக்கான
சீர்வரிசைகளை நினைத்து அம்மா
கண்ணீர்விட
வீடியோ கேம்களில் மூழ்கியிருந்தார்கள்
பிள்ளைகள்
அவரவர் விரும்பியதை தந்துவிட்டு
நிமிர
மருத்துவம் தொடரலாமென்று
வெற்று ஆறுதல் தந்தக்குடும்பம்
கரிய இரவின்
பொருளாதார வெளிச்சத்தில்
நிம்மதியாய் உறங்க
முன்தேதியிட்ட உறக்கத்தின் சுமையில்
விழித்திருந்தான் அவன்

எல்லாம் இருக்கிறது எதுமில்லையென்ற
உண்மையில்
நவீன சித்தார்த்தானாய்
இரவில் பயணம் தொடங்க
“ஐயா தம்பி நானும் வரேன் ராசா”
என்று வந்து நின்றாள் முதிய தாதி
வெறும் தாதியென்றால்
உங்கள் மனதில் ஆஹாவென்று
காமம் கிளுகிளுப்பு கள்ளக்காதல் என்றே
அன்பு அடையாளப்படுத்தப்படுமென்பதால்
முதிய தாதியாக அவள் உடன்செல்ல
வந்து நின்றாள்

மௌனமாய் தலையசைத்து
அவள் கைப்பிடித்து கண்ணொற்றி
அவன் உடைந்தழ
பின்னேயே வாலாட்டிக்கொண்டு வந்தது
அவ்வப்போது
அவன் பரிவுக்காட்டி வளர்த்த
நாயொன்று

தொலைதூரம் சென்ற அவன்
நேசமிக்க எளிய மனிதர்களின்
உதவியாலும்
பிரியாது பரிவுக்காட்டிய நாயினாலும்
புற்று நீங்கி
உயிர்பிழைத்தான் என்றால்
நீங்கள் நம்பவா போகிறீர்கள்?
அன்பும் கருணையும்
உயிர் காக்கும் மந்திரமென்றால்
அதெல்லாம் அம்புலிமாமா கதைதான்
என்பீர்கள்
எங்கோ அம்புலிமாமா கதைகள்
நிகழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன
நீங்கள் எப்போதாவது நாய்க்கு
காட்டும் பரிவைப்போலவேனும்
நேசிக்கும் உயிர்களுக்கு
நேரமெடுத்து பரிவுக்காட்டுங்கள்
அன்பெனும் மந்திரம்
அம்புலிமாமாக்களை மீட்டெடுக்கும்!


No photo description available.

காதலின்_குறுங்கதை



#காதலின்_குறுங்கதை!

தன் வேரை பூமியில்
பரப்பியிருந்த மரத்தின்
கிளையோன்று
வானமே வாழ்க்கையென்று
லயித்திருந்தது

ஒரு பருவத்தில் பூக்களையும்
மறு பருவத்தில் காய்ந்த
இலைச்சருகுகளையும்
பூமியில் உதிர்க்கும் மரம்
சில வேளைகளில்
பூக்களும் இலைகளும் இல்லா
மொட்டைக்கிளைகளுடனும்
காட்சிதரும்!!

நிழலிலும்
பூக்களின் மணத்திலும்
திளைத்திருக்கும் பூமி
இலையுதிர் காலத்திலும்
மரத்தின் வேரினை
இன்னும் பலமாய் பற்றியிருக்கும்

நெடுநேரம் இம்மரத்தினடியில்
நாம் கதைத்திருக்கிறோம்
நீ இல்லா இப்பொழுதுகளில்
இந்த பூமி நானாகவும்
வெறும் நெடுமரம்தான் நீயெனவும்
தோன்றுகிறது
இனியென்ன
நீ வானம் நோக்கி வாழ்ந்திரு
நான் அன்பெனும் பூமியில்
நேசத்தை ஆழப்புதைக்கிறேன்
அது
உன் நலத்திற்கு உரமாகட்டும்!!

Image may contain: plant, tree and outdoor

கொலைக்களமாகும்_குடும்பங்களும்_நலிவுறும்_சமூகமும்!

பிடிக்கவில்லையென்றால் “விலகிக்கொள்ளுதலை” விட, ஒரேடியாக “விலக்கிக்கொல்வது” இந்திய ஆண்களுக்கு எளிதாக இருக்கிறது, குடிப்பது, புகைப்பது, வேறு மணம் செய்துக்கொள்வது எல்லாம் ஆண்களுக்கே உரித்தான “உரிமை” என்ற மனப்பான்மை இருக்கும் சமூகத்துக்கு, தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் மனைவிக்கு பிடிக்கவில்லை என்றாலும் எப்போதும் “நடத்தை” என்ற ஒழுக்கவிதியை பெண்ணுக்கு மட்டும் வகுத்துவிட்டு, கொன்றுபோடும் எல்லா காரணங்களையும் “பெண்ணின் நடத்தை” என்ற ஒன்றில் ஒளித்துவிடும் திறமையும், பத்திரிக்கைகள் தொடங்கி, சாமான்ய மனிதர்கள் வரை எல்லா மட்டத்திலும் இருக்கிறது, அபிராமியை கழுவி ஊற்றிய பத்திரிக்கைகள், இப்போது சந்தியாவின் சைக்கோ கணவனுக்கும் சந்தியாவையே குற்றவாளியாக்குகிறது! ஆண்களின் “குடிப்பழக்கத்தை” எவ்வளவு எளிதாக இந்தச்சமூகம் புறந்தள்ளுமோ அப்படித்தான் “நடத்தையின்” பேரில் நடக்கும் கொலைகளும் என்பதைத்தான் கொலையும் செய்துவிட்டு சிரிக்கும் பாலகிருஷ்ணனின் “நடத்தை” காட்டுகிறது!

தவறு பெண் செய்தாலும் ஆண் செய்தாலும், கொல்லப்படுவது ஆண் என்றாலும் பெண் என்றாலும், எப்போதும் “பெண்ணே” குற்றவாளி, இந்தக்கொடூர மனநிலை சமூகத்தில் எப்போதும் தனித்துவிடப்படும் குழந்தைகளின் நிலைதான் பரிதாபம்!

பெண்ணுக்கு கல்வி எதற்கென்று 15 வயது தொடங்கி 20 க்குள் திருமணம், அதற்குள் குழந்தை, குடி, மனச்சிதைவு, கல்வியறிவின்மை, குழந்தை வளர்ப்பு பற்றிய அறிவின்மை, பொருளாதாரச்சிக்கல், புரிதல் இன்மை, என்று எத்தனையோ சிக்கல்களை எல்லாம் “பொறுத்து” “கடந்துதான்” பல பெண்களும், சில ஆண்களும், குழந்தைகளுக்காகவோ, தனித்து நிற்க முடியா இயலாமையினாலோ, குடும்ப நிர்பந்தத்தினாலோ குடும்பங்கள் உடையாமல் காத்து நிற்கின்றனர், அல்லது பிரிகின்றனர், இந்த இரண்டை விடவும் ஆபத்தானது இந்தக்கொலைகள்; இரண்டுக்கும் வழியில்லாமல் கொலையை தேர்ந்தெடுப்பது வளர்ப்பின், சூழ்நிலையின் சிக்கலே!
என்று இந்தச்சமூகம் ஆண் பெண் பேதமில்லாமல், மக்களின் கல்வியையும், மனநிலையும், பாதுகாப்பையும், சமத்துவத்தையும் பற்றிக்கவலைப்படுமோ அப்போதுதான் சிறிதளவேனும் மாற்றம் வரும்!

கொலைக்களமாகும்_குடும்பங்களும்_நலிவுறும்_சமூகமும்!

வெறுமை

கோபத்தையும்
வெறுப்பையும்
வார்த்தைகளில்
கொட்டிவிட்டு
அன்பை
மௌனத்தில்
புரிந்துக்கொள்ளச்சொல்லும்
மனிதர்கள்
ஒருநாளும்
வார்த்தைகள் ஏற்படுத்திய
காயத்தையும்
மௌனம் ஏற்படுத்தும்
வெறுமையையும்
உணர்ந்துகொள்வதேயில்லை!

குணம்

எந்தக் கல்லுக்கும்
மரங்கள் காயங்களை
தருவதில்லை
கனிகளையே தருகிறது
மரம் போல் நான்
கடுஞ்சொற்களுக்கும்
ஏமாற்றுதலுக்கும்
மௌனமாய் அன்பை
விதைத்து
நகர்கிறேன்!
மரம்தானே என்று
கற்கள் என்னவோ
விழுந்துக்கொண்டேதான்
இருக்கிறது!

கீச்சுக்கள்

தன்னிடம்
எதையும் எதிர்ப்பார்க்கக்கூடாதென்று
அம்மா மட்டும்
நினைத்திருந்தால்
இந்த உலகில்
உயிர்களே இருந்திருக்காது!

---------------------

உடல் இயக்கம்
தேயும் நேரத்தில்தான்
அன்பின் உண்மைமுகம்
தெரியவரும்!

------------------------

எப்போது புகழ் போதையில்
மூழ்குகிறோமோ அப்போது
நல்லவைகள் நம்மைவிட்டு
விலகிச்செல்கின்றன!

-----------------------

தேனீ தொடங்கி யானை வரை, இந்த விலங்கினங்களும், மற்ற பல்லுயிர்களுமே இந்தப்பூமி வாழக்காரணம், மனிதர்களுக்கோ இந்தப்பூமியை ஏதோ ஒரு விதத்தில் சுரண்டுவதே வாழ்தல் என்றாகிவிட்ட நிலையில், இந்தப்பூமியில் மனிதர்கள் அனைவரும் #அகதிகள்தான்!

ஜீன் மாற்ற சதி

குடிசையில் தொடங்கி மாளிகை
சைக்கிளில் இருந்து விமானம்
மாருதி தாண்டி லம்போர்கினி
எஸ்பிஐ யில் தொடங்கி சுவிஸ்
பாம்பே ஸ்டாக் கடந்து பனாமா பேப்பர்
வயக்காடு விரிந்து பண்ணை எஸ்டேட்டுகள்
மரணப்புள்ளி வரை ஆசை தீர்வதில்லை
அரசியல்வாதிகளுக்கு!

நிச்சயம் அந்நிய நாட்டின்
ஜீன் மாற்ற சதிதான் - இந்த
இந்திய அரசியல் ஏலியன்களும்
இலவசத்துக்காக மட்டும்
ஒன்றுகூடும் மக்களும்!

இன்னமும் அடிமைப்பட்டே

பாதி உலகம் அடிமைப்படுத்தி
பிரிட்டன் பெருமிதம் கொண்டது
இரண்டு அணுகுண்டுகள் தாங்கி
ஜப்பான் நிமிர்ந்து நின்றது
செர்னோபில் வெடித்து
ரஷ்யா விழித்துக்கொண்டது
ஆப்கானிஸ்தான் வளர்த்து
அமெரிக்கா பாடம் கற்றது
இனப்பகையில் மூழ்கி
இஸ்ரேல் படைபெருக்கியது
உரிமைக்காக பாலஸ்தீனம்
போராடிக் களைக்கிறது
மாபெரும் வர்த்தகம் வளர்த்து
சீனா உலகளாத் துடிக்கிறது
அடிமைப்பட்ட நாடுகளும்
அடிமைப்படுத்திய நாடுகளும்
மக்கள் உரிமையை நிலைநாட்ட
சுதந்திரம் பெற்று
எழுபத்தியிரண்டு ஆண்டுகளாகியும்
இந்திய_ஜனநாயகம் மட்டும்
இன்னமும் அடிமைப்பட்டே கிடக்கிறது!


No photo description available.

சிஸ்டம்_சரியில்ல!

#அணுக்கதை
குழாயடியில், ஒருவரை பார்த்து இன்னொருவர்
“என்ன இங்கே நிக்கிறீங்க? தண்ணி வரலையா?”

“ம்ம்ம் எங்கம்மா தண்ணி வருது? எல்லா பம்பிலும் சாக்கடைதானே வருது, இந்தக்கோவில் பம்ப்லதானே ஏதோ தண்ணி வருது?”

“ஏங்க்கா ஆயிரத்தை வாங்கீட்டாங்களா? குடுக்கக்கூடாதுன்னு கோர்ட்ல சொல்லிட்டாங்களாமே?”

“ம்க்கும், பாடையில போறவனுங்க, குடிக்க தண்ணியில்ல, சாக்கடத்தண்ணி வருது, தெருவுக்கு தெரு சாராயக்கடைய தொறந்துவுட்டுட்டு, எல்லாத்தண்ணியையும் அங்கே இறைக்குறானுங்க போல, அததது குடிச்சிட்டு மூத்திரத்தை அடிச்சிட்டு மல்லாந்து கிடக்குதுங்க, இதுல ஒரு கொடந் தண்ணிக்காக ரோடு ரோடா நாயா அலையணும், குடுக்குறானுங்களா ஆயிர ரூவா, #%^**++$”

இன்னொரு இளைஞர்
“இன்னா ஆயா பாயிண்ட்டா பேசுறே, அப்போ ஆயிர ரூவா வேணா உனக்கு?”

“ஆமாண்டா அந்த ஆயிர ரூவாய கூட உங்கப்பன் வரிசையில நின்னு வாங்கினா நீ போய் கண்ட கருமாந்திரவனுக்கு தியேட்டராண்டா போய் அழுவே, எல்லாத்துக்கும் நாங்கதாண்டா போகணும், நீங்க ஆக்டருங்க பின்னாடி போங்க, இவனுங்க எல்லாம் ஆயிரந்தரேன் இரண்டாயிரந்தரேன் நாய்க்கு எலும்புத்துண்டு தர்றா மாரி தந்துட்டு புள்ள குட்டிங்களுக்கு சொத்து சேர்த்துட்டு ஓட்டு கேக்கசொல்லோ ஈஈன்னு பல்ல இளிச்சிகிட்டு வருவானுங்க, நாங்க எப்பவும் போல எப்படியாச்சும் தண்ணிக் கொண்டாந்து உங்களுக்கு வடிச்சுக்கொட்டணும், நகரு அந்தாண்டே”

பைக்கில் வந்த இன்னொருவர்
“ஆமாம் பாட்டி சொல்றது சரிதான், என்ன பண்றது? நாட்டுல சிஸ்டம் சரியில்ல”
இளைஞன், “இன்னா சார் தலைவர் ஃபேனா?” சிரிக்கிறார்
ஆயா, “தோ சொன்னா மாரி நடக்குது பாரு, வயசானவங்க புலம்பறோம், வயசு இருக்கறதுங்களும் புலம்புதுங்க, சுருட்றவன் சுருட்டிக்கிட்டு போறான், இந்த ஆத்தாதான் காப்பாத்தனும் போல!”

#சிஸ்டம்_சரியில்ல!

வழக்கம்

யாருக்காவது உதவி செய்யும்போது
அதை நீரிலும்
யாரையாவது காயப்படுத்தும்போது அதைக்கல்லிலும்
எழுதி வையுங்கள்
விந்தையென்னவென்றால்
இரண்டையும் மாற்றி எழுதி வைப்பதையே 

வழக்கமாக்கி
கொண்டிருக்கிறோம்!

அனுபவம்

#அணுக்கதை
துணிக்கடையில் இருவர்:
“ஷப்பாஆஆஆ அண்ணே, கல்யாணத்துக்கு அம்மா பொண்ணு பாத்தபோது கூட ஒன்னும் சொல்லாம கட்டிக்கிட்ட, இப்ப ஒரு சட்டை எடுக்கறதுக்கு இத்தனை கட நடந்து, இத்தனை துணிய எடுத்துப்போட்டு ரொம்ப அக்கப்போர் பண்றே?”
“டேய், அப்ப பட்ட அடியில்தான் அன்னையிலிருந்து இப்படி அலசி ஆராய ஆரம்பிச்சிட்டேன்!? நீயாவது அண்ணணே பார்த்து கத்துக்க!”
கேட்டுக்கொண்டிருந்த துணிக்கடைக்காரர்: “சார் எவ்வளவு அடிச்சாலும் கிழியாத துணியிருக்கு காட்டவா?”
“??!!” 😳😥😥😥
#அனுபவம்

ஜனநாயகத்தின்_வீழ்ச்சி!

#அணுக்கதை
“இப்படியாக சிந்திய நாட்டின் 74 ஆண்டுகால சுதந்திரம் கஜராத் மன்னர்களிடம் கைநழுவி போய் முடிவுக்கு வந்தது, அவர்கள் பண்டைய அமிழகத்தில் வளம் நிறைந்த பகுதிகளில் எண்ணெய் கிணறுகள் தோண்டி அவற்றை பாலைவனமாக்கினார்கள், தங்களின் எட்டப்பத்துரைகள் மூலம் எட்டுவழி பத்துவழி சாலைகள் போட்டு தங்கள் வணிகப்பொருட்கள் சாலைவழி விரைந்து செல்ல ஏற்பாடு செய்துக்கொண்டார்கள், கல்வி, ஆரோக்கியம், பல்வேறு சந்தைப்பொருட்கள், தொலைத்தொடர்பு, பெட்ரோலியம், ஆடைகள், காப்பர் என்று பல்வேறு வியாபாரங்களில் போட்டியே இல்லாமல் தனிப்பெரும் சர்வாதிகாரிகளாக திகழ்ந்தார்கள், பேருக்கு ஒருவரை அதிபராக பதவியில் அமர்த்திவிட்டு, தங்கள் மனம் போல வாழ்ந்தார்கள், ஒரு நகரத்தை எண்ணெய்க்காக, ஒரு நகரத்தை காப்பருக்காக, ஒரு நகரத்தை துறைமுக வணிகத்திற்காக, ஒரு நகரத்தை ஆயுதங்களுக்காக என்று ஒவ்வொன்றாய் அழித்தார்கள், மக்கள் சாராயக்கடைகளில் மதியிழந்து கிடக்க, போராடிய எஞ்சிய மக்கள் குண்டுகளுக்கு பலியானர்கள், பலர் நவீன மருந்து வியாபாரங்களுக்கு சோதனை எலிகளாயினர், நியாய மன்றங்கள்
எல்லாம் ஏதேதோ சொல்லி மக்களின் கோரிக்கைகளை, வழக்குகளை நிராகரித்தன, இறுதியில் ஒரு தேசமும் சில இனங்களும் அழிந்து எஞ்சியவர்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர்......”


என்று வேலைக்காரி பூர்ணாவின் பத்து வயது மகன் பாபு வரலாறை வாய்விட்டு படித்துக்கொண்டிருக்க “அரே சுப்!” என்று அவனை அதட்டி நகர்ந்தார் முதலாளி!
#ஜனநாயகத்தின்_வீழ்ச்சி!

நண்பன்

நேரமில்லை என்றதில்லை
மறந்துவிட்டேன் என்று சொன்னதில்லை
முக்கியமில்லையென்பதற்கு
முக்கியமானவைகளென காரணங்கள்
அடுக்கியதில்லை
தன்னலமென்று சுயநலமாய் இருந்ததில்லை
தேவை மட்டும் கருதி வந்ததில்லை
சுள்ளென்று வார்த்தை வாட்கள் சுழற்றியதில்லை
தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றதில்லை
எப்போதும் எனக்காக உடனிருப்பாய்
#நல்ல_புத்தகமே!

உத்தமம்!

யாரோ ஒருவரின்
வெற்றிடத்தை நிரப்புகிறோம்
யாரோ ஒருவருக்கு
வெற்றிடத்தை தருகிறோம்
நிரப்புவதும் தருவதுமான
இந்த வாழ்க்கையில்
விலக வேண்டிய நேரத்தில்
விலகி விடுதலே
உத்தமம்!

Preference

Image may contain: sky and text

Love


Image may contain: text

கீச்சுக்கள்

எத்தனை அழகாய் இருக்கிறார்கள் மனிதர்கள்
நாம் எதையும் கேட்காதவரை!
---------------------------
பலரின் கனவுகளுக்காக
உழைப்பவர்களுக்கு
எப்போதும்
கனவுகள் சொந்தமில்லை!
----------------------

Thursday 16 May 2019

கண்ணாடி_பிம்பங்கள்


அவளுக்கு என்னிடம்
ஆழ்ந்த நட்பு, நம்பிக்கை, காதல்
இதில் எது வேண்டுமோ
நிரப்பிக்கொள்ளலாம்

எப்போதும் எனக்காக
காதுகளைக்கொடுப்பாள்
நான் எப்போதாவதுதான்
அழைப்பேன்
எப்போதும் காண நினைப்பாள்
ஏதேதோ கதைகளைச் சொல்லி
பயணப்பட்டு வருவாள்
நான் வெட்டியாய் ஊர்ச்சுற்றினாலும்
அவளைக்காண தலைப்படுவதில்லை

பிறந்தநாள் என்றும்
வெற்றிகளுக்கு பாராட்டு என்றும்
அன்பாய் பரிசுகள் தருவாள்
அவள் கேட்டும்கூட எதையும்
நான் கிள்ளியும் தந்ததில்லை
என் குடும்பத்தோடு உறவாடுவாள்
எல்லோரின் நலத்தையும் நாடுவாள்
அவளை நலமா என்று
ஒருநாளும் நான் கேட்டதில்லை

எந்நேரமும் பிரியத்தோடு பேசுவாள்
ம்ம் என்ற என் ஒலியில்
ஒருவேளையில் கூட
பரிவே இருந்ததில்லை
எனக்காக வேலைகளை
தள்ளிவைப்பாள்
வேலை இருந்தாலும்
இல்லையென்றாலும்
நான் அவளை அரவணைத்ததில்லை

எப்போதும் சிறுதுளி அன்பையே
வேண்டுவாள்
காயங்களைத் தவிர வேறு எதையும்
நான் தந்ததில்லை
எப்படி என் நடத்தை இருந்தாலும்
எதையும் எளிதில் மறந்துவிடுவாள்
அவளின் சிறு சுணக்கத்தைக்கூட
பெரும் வன்மமென்று
நான் பெயரிடாத நாளில்லை

நிறைந்தக் கல்வியில்
நிறைக்குடமாய் அமைதியாய் இருப்பாள்
என் அனுபவ அறிவின் பெருமிதத்தில்
எதையும் கேட்க மறுத்து
நான் அவளை அவமதிக்காத நாளேயில்லை
ஆசையோடு ஒருநாள்
பார்க்கவேண்டும் என்றாள்
உலகப்பயணமென்று கதைச்சொல்லி
உள்ளூர் சந்தையின் உலா போதையில்
வழக்கம் போல் அழைப்பை ஏற்கவில்லை

எது எப்படி இருந்தாலும்
எனக்கு அவள் மீது அன்புண்டென்று
என் பயணங்களின் வழியில்
போனால் போகிறதென்று
அவளிடம் உரைப்பேன்
அந்தச்சிறுத்துளி பொய்யை
அவள் மெய்யென நினைத்து
மெய்சிலிர்த்துப்போவாள்
அதனால் என்ன
எந்தப்பொய்களும் இந்தச் சுயநல
வாழ்க்கையில் என்னை சுட்டதில்லை

வாழ்தல் ஒருமுறையென்று
எல்லோருக்குமாய் வாழ்ந்தவள்
“நான் இல்லாமல் போகும்போது
நீ கொஞ்சமேனும் மாறுவாயா?”
என்றாள்
“இரங்கற்பா எழுதி அதையும்
கரைத்துவிடுவேன்,
விபத்தோ இயற்கை மரணமாகவோ
அது இருக்கட்டும்,
எழுதுவது எளிதாக இருக்குமென்று”
நகர்ந்தேன் மனதில் கருணையில்லை!

நீங்கள் முகஞ்சுளிப்பது தெரிகிறது
கொஞ்சம் கண்ணாடியின் முன்
நின்றுப்பாருங்கள் நான் தெரிவேன்
உங்களுக்குள்!!!

#கண்ணாடி_பிம்பங்கள்


No photo description available.

Nothing worth

At the end, there is nothing worth to worry in the marathon life!

Image may contain: text

நிவாரணம் எனும் விலை

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் எது நடந்தாலும், அரசுக்கு தெரிந்தது எல்லாம் “நிவாரணம்” மற்றும் “விசாரணைக்கமிஷன்” (இது நடக்கும் வேகத்துக்கு, இதெல்லாம் “உலகிலேயே மெதுவான விசாரணை” என்று கின்னஸ் புத்தகத்தில் வந்திருக்க வேண்டும்). “எங்கப்பா எனக்கு நிறைய சொத்து சேத்து வச்சிட்டு போயிருக்கார், அதனால நான் இஷ்டத்துக்கு செலவு செய்வேன்” என்பது போல, “இந்த ஜனங்ககிட்ட நிறைய வரிப்பிடுங்குறோம், சாராயத்தாலும் நிறைய வருது, எவன் செத்தா என்ன, நிவாரணம் கொடுத்தா போச்சு” என்ற ரீதியில் இயங்குகிறார்கள்! 

சென்னையில் எல்லா வகையிலும் லஞ்சம் வாங்கிய அதிகாரிகளின் அலட்சியத்தால் கட்டிடம் இடிந்து பல உயிர்கள் போனது, பலரின் வீடு என்ற கனவு சிதைந்து, கடனாளியானார்கள், நீர் மேலாண்மையின் அலட்சியத்தில் எப்போதும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர், அலட்சியான நிர்வாகத்தால் பல்வேறு விபத்துகள் சாலையில், கட்டிடங்களின் வரைமுறை கோளாறுகளில் ஏரிகளும் குளங்களும் மாயமாய் மறைந்துக்கொண்டிருக்கிறது, தீ விபத்துகள், பள்ளிச்சார்ந்த விபத்துகள் என்று எதிலும் ஏதோ முதலாளிகளின் மெத்தனமும் அதற்கு அரசு அதிகாரிகளின் ஆதரவும் நிச்சயம் இருக்கும், “சாலையில் விளம்பரப்பலகைகளை வைக்கக்கூடாது என்று உங்களுக்கு நாங்கள் எத்தனை முறை சொல்வது?” என்று உயர்நீதிமன்றம் கண்டிக்கும் அளவுக்கு அரசின் இயக்கம் இருக்கிறது!

சமீபத்தில் அரசுத்துறையில் இருக்கும் நண்பர், மனிதர்களுக்கே இந்த நிலை என்றால், விலங்குகளைப்பற்றி யோசித்துப்பார் என்று அதில் நடக்கும் ஊழல்களை சுட்டிக்காட்டினார், இப்போது நடந்திருக்கும் எச்ஐவி இரத்தம் ஏற்றியக்கொடுமை இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது, வராதது இன்னும் எத்தனை என்பதை பாதிக்கப்பட்டவர்களைத் தவிர யார் அறிவார்?
“தவறுக்கு அடிப்படைக் காரணிகளான லஞ்சத்தையும், தகுதியற்ற அதிகாரிகளையும், அலுவலர்களையும், நேர்மையற்ற நிர்வாகத்தையும் சீர்செய்யாதவரை இதற்கெல்லாம் தீர்வில்லை!” அதுவரை இதுபோன்ற அதிர்ச்சிகளை தாங்கிக்கொள்ள பழகவேண்டும்!

மதியாத வரம்

கிடைக்கும்வரை
காத்திருக்கும் தவம்
கிடைத்தபின் மதியாத வரம்
அன்பு

வளர்ப்பையும் தரத்தையும்

உரசுகிற தீக்குச்சிகளை
எதற்கு உபயோகிக்கிறோம்
என்பதில் இருக்கும் தெளிவு
வாயைத் திறந்து கொட்டும்
வார்த்தைகளிலும் இருக்கவேண்டும்!
இரண்டுமே வெளிச்சம் தரலாம்
அல்லது மொத்தமாய் எரித்துச்
சாம்பலுமாக்கலாம்
உடன் அந்தச்செயல்
நம் வளர்ப்பையும் தரத்தையும் கூட
வெளிச்சம் காட்டலாம்!


Image may contain: text

வேகச் சாரலில்

"கடவுளே, நிறைய டிராபிக் ஜாம் ஆகணும்!"
"ஹலோ பல்லவன் அங்கிள் பிரிட்ஜ்ல இன்னும் மெதுவா போங்க!"
"ஹலோ ஆட்டோ சைடு கொடுக்காதீங்க!"
"கடவுளே கடவுளே எங்க வீட்டு வாசல்ல கேட் மூடியிருக்கணுமா!"
இதெல்லாம் நடன வகுப்பில் இருந்து என் சின்ன சில்வண்டை பைக்கில் அழைத்து வரும் போது, மழைச்சாரல் துவங்கியிருந்த மாலைவேளையில் நனைய அவள் பலமாய் வேண்டியது, அம்மாவுக்கு மழை பரவசம், மழைக்கு மகள் மீது பரவசம், வேகச் சாரலில் நனைத்துச்சென்றது❤️

மரமாக உனக்காக நான்

“எல்லாம் தருகிறது
எதையும் கேட்கவில்லை
அல்லது
எதையோ கேட்டு
இலைகள் ஓயாமல்
சலசலத்தும்
ஒன்றும் புரியவில்லை”
இந்த மரம் போலவே
நானிருக்க பணிக்கிறாய்
உன்னுடன் பயணிக்கிறேன்
ஓயாமல் சலசலக்கிறேன்
உணர்ந்துக்கொள்ளும்
கருணையில்லா
அந்தச் சுயநலப்படகுக்கு
மரமாகி மரித்தாலும்
துடுப்புத்தந்துவிடும்
அவசியத்தில்
ஒவ்வொரு வெட்டிலும்
துளிர்த்து கிளர்ந்தெழும்
மரமாக
சில கிளைகளுடன்
வாழ்ந்திருக்கிறேன்
உனக்காக நான்!


No photo description available.

பொதுநல_வழக்குகள்

தமிழ்நாடு முழுக்க பேனர்கள் வைக்கத்தடை, டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு! நேற்று இந்த வழக்குத்தொடர்பான செய்தியில், எத்தனை உத்தரவுகள் பிறப்பித்தாலும் அதிகாரிகள் மெத்தனமாய் செயல்படுவதற்கும் கண்டனம் தெரிவித்து இருந்தனர், இன்னொரு வழக்கில் கிட்டதட்ட 86 வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருந்தே ஒரே காரணத்துக்காக முடித்துவைக்கப்பட்டதையும் நீதிமன்றம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறது, இப்படி நாட்டில் குப்பைகள் தேங்குவதில் இருந்து, சாலைகளின் கட்டமைப்புத் தொடங்கி குழந்தைகள் கடத்தல் வரை, வழக்குகள் வழக்குகள் அத்தனை #பொதுநல_வழக்குகள்!

இத்தனை முக்கிய வழக்குகளில் இரண்டை மட்டும் எடுத்துக்கொள்வோம், சாலை ஆக்கிரமிப்பு சம்பந்தப்பட்ட பொதுநல வழக்குகள், மற்றும் குழந்தைகள் கடத்தல்!
டிராபிக் ராமசாமி என்ற ஒற்றை மனிதரின் பங்களிப்பும் எஞ்சியிருக்கும் நேர்மையான அதிகாரிகளாலும், நீதிமன்றங்களாலுமே இன்றைக்கு சில சாலைகள் சாலைகளாக இருக்கிறது, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, லெட்டர் பேட் கட்சி, என்று எத்தக்கட்சியாய் இருந்தாலும் நடைபாதைகள், மரங்கள், குடியிருப்புகள், பொது வாகனங்கள் என்று எதையும் விட்டு வைக்காமல் அத்தனை பேனர்கள் - விளம்பரப்பதாகைகள், அத்தனையையும் வைத்துவிட்டு, போக்குவரத்தை நிறுத்திவிட்டு, இந்தக் கட்சிகளின் வாகனங்கள் பறந்துவிடும், ஆனால் அதன் பின், போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் சிக்கிக்கொள்வார்கள், விபத்துகள் நேரிடும், விபத்தின் வழக்குகள் விபத்தாக முடித்துவைக்கப்படுமேயன்றி, ஒருநாளும் மோசமான சாலைகளுக்காக, நேர்மையற்ற கட்டமைப்புகளுக்காக இந்த அரசையோ அதிகாரிகளையோ தண்டித்ததேயில்லை!

ஒரு சாதரண இளைஞன் தலையில் தலைக்கவசம் அணியாமல் சாலையில் பறப்பதற்கும், பல வாகனங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி, சாலையில் சட்டத்தைப்பற்றிய பயமும் விழிப்புணர்வும், பொதுநலச்சிந்தனையும் இல்லாமல் நாள்தோறும் விபத்துகளை ஏற்படுத்துவதற்கு எது காரணம், நடைபாதைகள் முழுக்க பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் தங்கள் கடைகளை விரிவுபடுத்தியும், நடைபாதைகளை, சாலையோரங்களை நிரந்தர கடைகளாகவும், ஒழுங்கற்ற வாகன நிறுத்தங்களாகவும் மாற்றியதற்கு யார் காரணம்? தீ விபத்துகள் நேர்ந்தால் தப்பிக்க வசதியின்றி இயங்கும் பள்ளிகளும், கல்வி நிலையங்களும், அலுவலகங்களும் இன்று ஏராளம், அனுமதியின்றி முறையான தரச்சான்றுகள் இன்றி சாலையில் விரையும் வாகனங்கள் ஏராளம், அதனால் உயிர்பலிகளும் ஏராளம்!

ஒரு டிராபிக் ராமசாமியும் ஒரு உயர்நீதிமன்றமும் இதற்கெல்லாம் தீர்வு காண முடியாது, மக்கள் சுயநலம் மிகுந்து பெருத்துவிட்டார்கள், தங்கள் உயிரையோ பிற உயிர்களைப்பற்றியோ அவர்களுக்கு கவலையில்லை, வதவதவென இருக்கும் ஆக்கிரமிப்புகள் பற்றியும் தங்களால் ஏற்படும் சிரமங்களை அதைத்தொடர்ந்து ஏற்படும் விபத்துகளைப்பற்றியோ வியாபாரிகளுக்கு கவலையில்லை, பேருந்தில் உயிரோடு வைத்து எரித்தாலும் சில பல வருடங்களில் வெளியே வந்துவிடலாம், பணமோ கட்சியோ இருக்கிறது காப்பாற்ற!

இதற்கென தற்காலிக தீர்வுகள் என்பது, நீதிமன்றங்களும் டிராபிக் ராமசாமிகளும் மட்டும்தான், நிரந்தர தீர்வு வேண்டுமென்றால், அமைச்சர்களுக்கும், கட்சிகளுக்கும் கட்டுப்படாத அதிகாரம் மிக்க அமைப்பு ஒன்று வேண்டும், இனி எந்த வாகனங்களிலும் கட்சிக்கொடிகளே இருக்கக்கூடாது என்றும், ஆம்புலன்ஸை தவிர்த்து யாருடைய வாகனங்களுக்காகவும், அது ஆள்பவரே என்றாலும் போக்குவரத்து நிறுத்தப்படக்கூடாது என்றும் சட்டம் இயற்றி அதை அமல்படுத்த வேண்டும், நாடு முழுக்க கண்காணிப்பு கருவிகள் நிறுவ வேண்டும், போக்குவரத்து நிறுத்தப்படாது என்றால் மட்டுமே இந்த கட்சிகளுக்கு கண்மூடித்தனமாக அனுமதித்த ஆக்கிரமிப்புகள் புரியும், சாலையில் சிக்கி, விபத்துகள் நேரிடும் போதே கட்டமைப்பின் கோளாறுகள் புரியும், சுங்கக்கட்டணங்கள் இவர்களும் செலுத்தவேண்டும் என்ற விதிமுறைகள் இருந்தால் மட்டுமே அதன் கொள்ளைகள் புரியும் (ஒரு பகுதி வருமானம் இங்கேயும் போகும் என்பதால் இதை எளிதாக கடந்துவிடலாம்) இவர்கள் பெருத்த சுயநலவாதிகள் என்பதால் அவர்களுக்காக சாலைகளையும் கட்டமைப்புகளையும் சீரமைப்பார்கள்!

இது போலவே குழந்தைகள் கடத்தலும், இந்தச் சாலை விதிமுறைகளையும், வாகன கண்காணிப்பையும், நேர்மையான அமைப்பையும், தலையீடற்ற அதிகாரத்தையும் செயல்படுத்தினால், கடத்தல்களை கண்காணிக்கவும் தடுக்கவும் முடியும், நாள்தோறும் வடக்கில் இருந்து தெற்கிற்கு நகர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் மனிதர்களை கண்காணித்து கட்டுப்படுத்தி, சாலையில் குழந்தைகளை வைத்து பிச்சையெடுப்பவர்களை மீட்டெடுத்து குழந்தைகளை பாதுகாக்கும் ஒரு வலுவான சட்டத்தையும் அமல்படுத்தும் வரை இதுவும் தொடரும், எத்தனையோ சிக்னல்களில் குழந்தைகள் பிச்சையெடுக்கும், சாலைகளை மட்டும்தான் பார்க்கும் போக்குவரத்துத்துறை, மாற்றப்படி அவர்களுக்கு, அவர்களை அப்புறப்படுத்தும், குழந்தைகளை மீட்டெடுக்கும் அதிகாரம் இல்லை, இல்லாமல் இருக்கலாம் அல்லது குற்றத்தில் மறைமுக பங்கும் இருக்கலாம், கண்முன்னே நிகழும் குற்றங்களுக்கு நாமும் ஒரு மறைமுக சாட்சிதானே?

ஓட்டுப்போட்டு ஆட்சி அதிகாரத்தை ஒரு சாராரிடம் கொடுத்துவிட்டு, நாட்டில் குப்பையை அகற்றுவதில் இருந்து, காற்று மாசை ஏற்படுத்தும் ஆலைகள் முடக்குவது வரை நீதிமன்றங்களையே நாட வேண்டியிருக்கிறது, வழக்குகள் மூலமே நாட்டில் மாற்றம் நடக்குமென்றால், தகுதியற்ற ஆட்சியாளர்களை, இந்த வழக்குகளின் எண்ணிக்கையையும், தாக்கத்தையும் கொண்டு மக்களே கலைக்கும் அதிகாரத்தை கொடுக்கும் ஒரு சட்டம் வேண்டும், அதுவரை பொதுநல வழக்குகளும் நீதிமன்றங்களுமே துணை! 😓
#Public_Litigation #Judiciary #Traffic_Ramasamy #டிராபிக்_ராமசாமி

மெல்லிய மனங்கள்!


இறைந்துக்கிடந்த
பூக்களை மிதித்துவிடாதபடி
தோளில் சுமைக்கொண்ட
ஒருவன்
தள்ளி நடக்கின்றான்
அழுத்தும் சுமையில்
முதுகு வளைந்தாலும்
இயன்ற அளவில்
பாதையோர பூக்களை
ஓரம் குவித்து
மெதுவே நகர்கிறான்
கைவீசி கொழுப்பைக்
கரைக்க
எதிரே நடந்துவந்தவன்
வானம் நோக்கிய
கர்வப் பார்வையில்
காலில் மிதிப்பட்ட
பூக்களின் வலியை
உணரவில்லை
“சார் ஓரம் வாங்க!”
என்ற சுமைத்தாங்கியின்
பரிதவிப்பின் குரலுக்கு
“நான்சென்ஸ்
இந்தக் குப்பைக்காக
நான் ஓரம் வரணுமா?”
என்று பூக்களை
ஓங்கி உதைத்துச்
சிதைக்கிறான்
இருவேறு துருவங்களை
கண்டு சலித்தப் பூக்கள்
“எப்போதும் அவரவர்களுக்கு
அவரவர் நியாயம்
சிதைவதென்னவோ
பூக்களை போல
மெல்லிய மனங்கள்தானேயென்று”
சிரித்துக்கொண்டே
பூமியில் சிதைந்து மடிந்தன!❤️

#மெல்லிய_மனங்கள்!



Image may contain: plant, tree, flower, outdoor and nature

Positivity

Being positive is not a thought but an act!

https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-9/48383592_2615341298481308_6564050517645852672_n.jpg?_nc_cat=105&_nc_ht=scontent.fmaa2-1.fna&oh=ee39d9e1a21f10962bc4fa407da11602&oe=5D731ADD

சாரல்_மழை

கொஞ்சம் கரைக்கிறது
இறுக்கத்தை
சிறிது ஆற்றுகிறது
புழுக்கத்தை
மெதுவாய் வீசி
சட்டென்று சோவென
பெய்யும் வேளையில்
மனம் முழுக்க
ஏகாந்தத்தை
நிரப்புகிறது
#சாரல்_மழை! ❤️



Image may contain: outdoor and nature

கார்ப்பரேட்டுகள் ராஜ்ஜியம்

முதலில் கிழக்கிந்திய கம்பெனி
பின் பிரிட்டிஷ் ராஜ்ஜியம்
சமீபத்தில் மோடி அரசாங்கம்
இப்போதும் எப்போதும் குஜராத்
கார்ப்பரேட்டுகள் ராஜ்ஜியம்
1947 ஆகஸ்ட் 15 இல் கிடைத்தது
2014 மே 26 இல் தொலைந்து போனது
மதியாத சுதந்திரம்!


No photo description available.

வாழ்ந்திரு

மரணத்திற்கும்
வாழ்க்கைக்குமான
இடைவெளி
சில மணித்துளிகள்தான்
இந்த இரவின்
நீள்பொழுதில்
அந்த சில மணித்துளிகளின்
பல பக்கங்களை
நீயேன் என் குருதிக்கொண்டு
வரைகிறாய்
என்று யோசிக்கிறேன்
அலையலையாய்
எழும் நேசத்தையும்
பகிரத்தலைப்படும்
உணர்வுகளையும்
அங்குசம் கொண்டு
அடக்கி சிறைப்படுத்துகிறேன்
கட்டுண்ட படகாய்
எண்ணங்கள் தளும்ப
ஓர் ஆழ்ந்த தனிமைக்குள்
புதைந்துப்போகிறேன்
மௌனத்தின் வேர் அறிந்தவன்
என்று நீ ஆனந்தமாய்
பிரசங்கம் செய்ய
ஒரு வெற்றுப்பார்வையில்
உன்னை நிரப்பிக்கொண்டு
நீ எப்போதும் மதியாத
அந்த அன்புடன்
தொலைந்துப்போகிறேன்
அன்பே இனியாவது
முகமூடிகள் அகற்றி
நீ நீயாக #வாழ்ந்திரு!



Image may contain: 1 person

நாட்டிய அரங்கேற்ற நிகழ்வு

இந்த வருடத்தில் ஒருநாள் பழைய அலுவலகத்தில் ஒன்றாக பணிபுரிந்த சகோதரி உஷா, தன் மகளுக்கு நாட்டிய அரங்கேற்றம், மே மாதம் வைத்திருக்கிறேன், அந்த நாளில் சிறிது நேரம் ஒதுக்க முடியுமா என்று கேட்டார், நாடகம், நாட்டியம், பாடல்கள் என்று எல்லாவற்றிலும் இயல்பிலேயே இருக்கும் ஆர்வத்தாலும், உஷாவுக்காகவும், அரைநாள் விடுமுறை எடுத்தால் என்ன தோன்றியதாலும் சரி என்றேன், திடுதிடுப்பென்று “இல்லை, நீங்கள்தான் முக்கிய விருந்தினர், அதுதான் நிச்சயம் வரமேண்டுமென்று கேட்கிறேன்” என்று ஒரு ஆனந்த அதிர்ச்சியைத் தந்து, விடாப்பிடியாய் என் பட்டங்களை பெயருக்கு பின்னே வரிசைக்கட்டி அழகான இந்த அழைப்பிதழை அச்சிட்டு குடும்பச் சகிதமாய் வீட்டிற்கு வந்து அழைத்தார், முறையாய் நாட்டியம் பயின்றவர்கள், ஆசிரியர்கள் என்று அந்தக் கலைத்துறைச் சார்ந்த மேதைகளுடன், நான் எப்படி மேடையில் என்று தயங்கிய போது, “அமுதா உங்க மனசு எனக்குத்தெரியும், நீங்க வந்து மனசார செய்யும் வாழ்த்து எனக்கு வேணும், அதுக்குத்தான் கூப்பிடறேன், என் மகளுக்கு உங்க ஆசிர்வாதம் வேண்டும்” என்ற போது, மனதைப்படித்து, நேசிக்கும் மனிதர்கள் போகும் இடமெல்லாம் கிடைப்பதொரு வரமென்று உணர்ந்தேன்!

உஷாவின் கனவும், அயராத உழைப்பின், அவர் மகள் “ரம்யாவின்” நடனத்தில் தெரிந்தது, அம்மாவைப்போலவே அழகான பெண் குழந்தை, அம்மாவைப்போலவே தன்மையும் மென்மையான அணுகுமுறையும், அந்த மாலை வேளையில் ரம்யாவின் பெயருக்கேற்ப அந்த மாலைப்பொழுது ரம்யமாய் ஆனது, நாட்டிய மேதைகள் நிறைந்திருந்த சபையில், அற்புதமாய் ஆடிய அந்தக்குழந்தையின் நடனத்திற்கு பாராட்டுக்களையும், திறமை மேன்மேலும் வளர்ந்து ஒளிவிட வாழ்த்துகளையும் சொல்லி விடைப்பெற்றேன்!

இத்தனை மாதங்கள் கடந்து இத்தனை தாமதமாய் எழுதுவதற்கு காரணம், வழக்கமான வேலைப்பளூ என்பதை விட, மனம் நிறைய அன்பிருந்தாலும், நடன ஆளுமைகளின் மேடையில், வெறும் ரசிகையாய் அமர்ந்திருந்த தயக்கமே காரணம், இந்த வருடம் முடியப்போகும் இந்தக்கடைசி மாதத்தில், பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், நன்றியையும் வெளிப்படுத்தாமல் வைத்திருக்காதே என்று மனம் இடித்துரைத்ததின் வெளிப்பாடே இது!
உஷா, உன்னுடைய உழைப்பும் கனவும், இந்த வாழ்க்கைப்பாதையை உனக்கு வரமாக மாற்றட்டும், ரம்யாவிற்கு எப்போதும் சிறந்தவைகளே கிட்டட்டும்! God bless!

Image may contain: 2 people, text

பூமி

ஆழப் புதைந்தவைகளை
தோண்டியெடுத்து
விலைமதிப்பற்ற உலோகங்கள்
என்று கொண்டாடி
கண்ணெதிரே நிறைந்திருந்த
பசுமையையும்
உயிர்களையும்
நாளை பற்றிய சிந்நனையின்றி
கொன்று தீர்த்த
மனிதர்களையெண்ணி
அவ்வப்போது
புலம்பி வெடிக்கிறது
பூமி!

மீண்டும் மீண்டும்
வருகிறது கடலலைகள்
பற்றிக்கொள்ளாமல்
தாங்கி நிற்கிறது
பூமி

காயங்களை
தாங்கி நிற்கும்
மனிதர்களை போல
தன்னைக் குடையும்
மரக்கைகளை
வெட்டிச்சாய்க்கும்
மனிதர்களை
தாங்கி நிற்கிறது
பூமி

எத்தனை வேண்டுமெனாலும்
ஆடிக்கொள்
இறுதியில் என்னிடம்தான்
என்கிறது
பூமி

காதலோடு
மொழியும் மழையை
மரங்களில் வேர்களில்
பதுக்கிக்கொள்கிறது
பூமி

சாய்ந்த மரங்களும்
உதிர்ந்த வன உயிர்களும்
மண்ணில் உரமாக,
சிதையில் விழும்
மனிதர்களை
என்ன செய்வதென்று
திகைக்கிறது
பூமி

வருகிறார்கள்
போகிறார்கள்
முளைக்கிறார்கள்
மடிகிறார்கள்
எல்லாவற்றையும்
தின்று விடுகிறது
#பூமி

பொறுமையாய்
இருக்கிறது
என்கிறார்கள்
உண்மையில்
இயங்கிக்கொண்டேயிருக்கிறது
தனியாக
இந்தப் பூமி!



Image may contain: sky

காயத்தின் வடுக்கள்

சில வார்த்தைகள் மனதின் ஆழம் வரை தைத்துவிடுகிறது, என்ன முயன்றாலும் அதிலிருந்து வெளியேற முடிவதில்லை, அப்போதெல்லாம் நிற்க நேரமின்றி உழைக்கவும், காயத்தை உறவாகக் கருதவும் கற்றுக்கொண்டால் காயத்தின் வடுக்கள் எல்லாம் அனுபவத்தின் விழுப்புண்களாகிவிடும்! ❤️

முதுமையடைகிறார்கள்

எப்போதும் பிறர் வயதுக்குறித்து
கேள்விக்கேட்டு ஆராய்பவர்களும்,
தம் வயதை
யோசித்துக்கொண்டே இருப்பவர்களும்,
விரைவில் முதுமையடைகிறார்கள்!

No photo description available.

புற்றுநோய்

ஒரு சேனலில் நடிகை ஒருவர் “பல வண்ண நிறங்களிலான இந்த உணவுப்பண்டங்கள் புற்றுநோய்களுக்கான காரணிகள்” என்று உணர்ச்சிவசமாய் நடிக்கிறார், பின் மற்றொரு சேனலில் விளம்பர படத்தில் இதைக்குடித்தால்தான் ஆரோக்கியம் நிலைக்கும் என்று வேறு ஒரு வேடம் பூணுகிறார், “தமிழர்களின் நலம்” பேசி ஜல்லிக்கட்டு அரசியல் பேசிய நடிகர், கோக்கையோ பெப்ஸியையோ குடிக்க கோக்குமாக்காக பறக்கிறார், இப்படியே இன்னொரு தளபதி நடிகரும் ஒரு படத்தில் மூச்சிரைக்க கார்ப்பரேட் அரசியல் பேசி, இன்னொரு கார்ப்பரேட் விளம்பரத்தில் தண்ணீர் உறிஞ்சும் முதலைகளுக்கு சாதகமாக சாகசம் செய்கிறார்!
இந்த நடிப்புக்கு சற்றும் சளைத்ததில்லை நம் அரசியல்வாதிகளின் நாடகங்கள், எல்லோரின் வங்கிக்கணக்கிலும் பதினைந்து லட்சம் என்ற பொய் அரசியல், 2020 க்குள் இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் வீடு என்று ஆட்சித்தொடர பொய்களை அணிவகுக்கிறது!

எப்படி இருந்தாலும், மரபணு வழியால், புகையிலையால், சுற்றுப்புறச்சூழ்நிலையால், மாறுப்பட்ட உணவு பழக்கத்தால், குப்பைகளை வயிற்றுக்கு திணிக்கும் கலாச்சாரத்தால், சாராயத்தால், போதை மருந்துகளால், உடல் உழைப்ப இல்லாமையால், சுகாதாரமின்மையால், அணுக்கதிர்களால் என்று நாள்தோறும் புற்றுநோய் நோயாளிகள் பெருகிக்கொண்டே போகிறார்கள், இந்திய புற்றுநோய் ஆராய்ச்சிக்கழகத்தின் கூற்றுப்படி, நாள்தோறும் 1300 பேர் இந்தியாவில் புற்றுநோயால் இறக்கிறார்கள், இந்த நிலையில்தான் தாமிர ஆலைகளையும், அணுவுலைகளையும், கப்பல் கழிவுகளையும் மருத்துவக்கழிவுகளையும் தமிழகத்தில் கொட்டுகிறார்கள், மக்களுக்காக போராட வேண்டியவர்கள், இதற்கெல்லாம் கையெழுத்து போட்டுவிட்டு மாற்றி மாற்றி கல்லா கட்டுவதையே வாழ்க்கையாக மாற்றிக்கொண்டு விட்டார்கள்!

மக்களும்கூட வாழ்க்கைமுறையை புற்றுநோய் நோக்கியே நகர்த்திக்கொண்டு போகிறார்கள், மாறிவரும் சூழ்நிலையில் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் புற்றுநோய் குணப்படுத்தக்கூடிய ஒன்றுதான் என்ற உண்மையை எடுத்துச்சொல்லத்தான் யாருமில்லை, புற்றுநோய் பாதித்தப்பிறகே சில விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பிரபலமானவர்களிடம் இருந்து வருகிறது!

எது எப்படியோ, எந்த விளம்பரங்களிலும், யாருடைய நடிப்பிலும் மோசம் போகாமல் மூளையை ஆரோக்கியமாய் உபயோகித்து நலமுடன் வாழ வாழ்த்துகள்!

நீங்கள் தற்கொலைச் செய்துக்கொள்ளலாம்!

போன வாரத்தில் ஒருநாள் ஓஎம்ஆர் சாலையில் போய்க்கொண்டிருந்தபோது, சாலையின் ஓரத்தில் பைக் விழுந்துக்கிடந்தது, போக்குவரத்துத்துறையும், கும்பலும் கூடியிருக்க, வெள்ளைச்சட்டையில் ஒருவர் தரையில் கிடந்தார், விழுந்த நிலையைப்பார்த்தப்போது அனேகமாய் இறந்திருப்பார் என்றே தோன்றியது, நேற்றும் அதே சாலையின் ஓரத்தில் நின்றிருந்த நாயை வேகமாய் வந்த பைக் மோத, நாயும் அந்த இடத்திலேயே மரணம்!
ஓஎம்ஆர் வழியே வரும் போது டைடல் பார்க்கின் முந்தைய சிக்னலில் சரியான சிக்னலில் முன்னே சென்ற பேருந்தையும் பைக்கையும், சாலையின் இடதுபுறத்திசையில் இருந்தே குறுக்கே பாய்ந்த பைக் மோத, மோதிய வேகத்தில் இரண்டு பைக்குகளும் பேருந்தில் சாய, நல்லவேளையாக ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட, ஒரு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது!

விபத்துகள் தாண்டி சாலைவிதிகளின் மீதான மெத்தனத்தை காண நீங்கள் சென்னையில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். மயிலாப்பூரில் இருந்து மந்தைவெளி செல்லும் பாதை ஒருவழிப்பாதையாக மாற்றி பல வருடங்கள் ஆகிறது, எனினும் நேர் எதிரே வரும் வாகனங்கள் அதிகம், அதே போல் இசபெல்லா மருத்துவமனையின் சாலையும் ஒருவழிப்பாதையில், தவறான பாதையில் நேர் எதிரே வருபவர்கள் கொஞ்சம் கூட சளைக்காமல் ஹாரன் அடிப்பார்கள், உங்களை முறைப்பார்கள், இது என் அப்பன் வீட்டுச்சாலை என்றே பறப்பார்கள்!

அப்படியே அடையார் தொட்டு, மத்திய கைலாஷ் திரும்பினால், திரும்பும் போது, வேகமாக நேர் எதிரே வாகனங்கள் திரும்பும், அந்தச் சாலையைத் தடுத்து, மத்திய கைலாஷின் மறுபுறம் இருந்து வரும் வாகனங்கள் யு டர்ன் எடுத்து மீண்டும் மத்தியக்கைலாஷ் செல்ல இரும்பு தடுப்பு அமைத்திருப்பார்கள், அதில் வலது, இடது திரும்பாதீர்கள் என்று போக்குவரத்து எச்சரிக்கை இருக்கும், மக்கள் அதை வலது இடது திரும்பவே உபயோகிப்பார்கள்!

இதற்கிடையில் “மெத்தப்படித்த” ஐடி ஊழியர்கள் 90 சதவீதம் பேர் பாமரர்களோடு அந்தச்சாலைகளில் நடைமேம்பாலத்தைத் தவிர்த்து, ஸீப்ரா க்ராஸிங்கை தவிர்த்து நினைத்த இடத்தில் எகிறிக்குதித்து வாகன ஓட்டிகளுக்கு பீதியைக் கிளப்புவார்கள்!

சமீபத்தில் இந்திய இரயில்வேயின் மெட்ரோ திட்டத்துக்காக தரமணி சாலைத்தொடங்கி சோழிங்கநல்லூர் நோக்கி, சாலையில் மண்பரிசோதனை செய்கிறார்கள், ஒவ்வொரு இடமாய் பள்ளம் தோண்டி பின்பு அரைகுறையுமாய் மூடிவிட்டுச்சென்று விட, அதுவே பல இருசக்கர வாகனங்களுக்கு மரணப்பள்ளமாய் மாறிவிடுகிறது! சுங்கக்கொள்ளை மட்டும் ஓட்டைச் சாலைகளுக்குத் தொடர்கிறது!

இவையெல்லாம் சில உதாரணங்களே, சென்னை முழுக்க சில இடங்களில் போக்குவரத்து காவல்துறை “இருக்கிறது” மற்றபடி இல்லை, பல இடங்களில் இல்லவே இல்லை! இந்த டிசம்பரின் ஞாயிற்றுக்கிழமையில் கட்சி அலுவலகத்துக்கு இன்றைய முதல்வர் வர, சென்னையில் இருக்கும் மொத்த காவல்துறையும், போக்குவரத்து காவல்துறை உட்பட களத்தில், இத்தனை பேர்கள் ஒரு இடத்தில் குவிந்திருக்க, விஜபிகளின் பாதுகாப்புக்கே எல்லாம் சென்று விட்டால், மக்களுக்காக இவர்களை எப்படி எதிர்ப்பார்க்க முடியும்?
ஆள்பவர்களுக்கு சாலையைப்பற்றி கவலையில்லை, அவர்களுக்காக சாலை ஸ்தம்பிக்கும், அப்படியும் இல்லையென்றால் அவர்கள் சொந்த விமானத்தில் கூட பறக்கலாம், சாதாரண மக்களுக்கு இதெல்லாம் சாத்தியமில்லை, குறைந்தபட்சக் கட்டமைப்பை கூட எதிர்பார்க்காமல், நாம் சுங்கக்கட்டணம் கட்டிக்கொண்டிருக்கிறோம், தினந்தோறும் விபத்துகளை பார்த்தும் இன்னமும் தலைக்கவசம் அணியாமல் விதிகளை மதிக்காமல் பறக்கிறோம், நம்மால் பிற உயிர்கள் பறிக்கப்படும் என்று தெரிந்தும் திமிராய் இயங்குகிறோம், இந்த பெரும் அலட்சியமான போக்கு கொண்ட மக்களுக்கு, பொறுப்பான அதிகாரிகளும், அமைச்சர்களும் எப்படி வாய்ப்பார்கள்?

உதவாத அரசு எந்திரத்தை பழுதுபார்க்க முடியவில்லையென்றாலும், ஒவ்வொருவரும்
சாலை விதிகளை பின்பற்றி முன்னுதாரணமாய் மாறலாம் இல்லையா?
பிறருக்கு உதவிசெய்வது மட்டும் தானமல்ல, பிற உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்காமல் சாலையில் நிதானத்துடனும் விவேகத்துடனும் செல்வதும் பெரும் தானம்தான், ஒருவேளை விதிகளை மதிப்பதும், பிற உயிர்களின் மீதும் உங்கள் உயிரின் மீதும் அக்கறையில்லையென்றால், நீங்கள் தற்கொலைச் செய்துக்கொள்ளலாம்!
#Roadsafety #Traffic_Violation #Chennai

காயப்படுத்தலாம்

எப்படி வேண்டுமானாலும்
காயப்படுத்தலாம்
யோசிக்கவேண்டியதில்லை
அன்பைக்காட்டவே
அதிக மெனக்கெடல்
தேவை!


No photo description available.

நாட்குறிப்பின் கடைசிப்பக்கத்தில்

ஒவ்வொன்றாய்
விதி மறுக்க
கிடைத்ததை வரமாய்
மாற்றிக்கொண்டு
புன்னகைக்க
குழப்பமடைந்தான்
கடவுள்!
வேண்டுவது ஏதுமின்றி
நகர்ந்துச் செல்ல
கேளென்று வேதனைக்கூட்டி
துரத்தினான்
நெடுநேரம் முன் நின்று
வேதனைகளை சீர்தூக்கி
சலனமற்று நோக்கி
எண்ணியெண்ணி
ஒருநாள் வரமொன்று கேட்க
வெற்றியடைந்த களிப்பில்
ஈயேனென்று
இகழ்ந்துரைத்தான்!
பட்டென்று
விட்டுப்போன மனதில்
வெளிச்சம் சூழ
இனி வேண்டுவது
ஏதுமில்லை
தருவது உண்டென
தானுரைக்க
யோசித்து
அவன் நின்ற வேளையில்
“யாசித்தலின் இழிநிலைக்கு
எனை துரத்தி
பின்னரும் மறுத்து
இகழ்ந்துரைத்தலின் பாவங்கள்
உனை சூழாதிருக்க
வரமொன்று தருகிறேன்
நீ எப்போதும் கடவுளாய்
நிம்மதியாய் வீற்றிரு!”
என்று விலகி வந்தேன்
கடவுள்
திமிர்பிடித்தவளின்
வரத்தில்
வாழத்தொடங்கினான்!!

#நாட்குறிப்பின்_கடைசிப்பக்கத்தில்!



No photo description available.

சிலை அரசியல்

#சிலை _அரசியல்
முதலில் இந்திய மாநிலங்கள் கொடுக்கும் வரிகளில், திரும்பவும் மாநிலத்துக்கே பிரித்துக்கொடுக்கும் விகிதாச்சாரம் பற்றி கொஞ்சம் பார்ப்போம், மகாராஷ்டிரா தொடங்கி குஜராத் வரை முதல் ஏழு இடங்களில், பெரும்பாலான தென்னிந்திய மாநிலங்களும், வட இந்திய மாநிலங்களும் வரி ஈட்டுவதில் பெரும் பங்கு வகித்தாலும், மத்திய அரசிடம் இருந்து அம்மாநிலங்கள் திரும்பப்பெறும் அளவு அந்த மாநிலங்களின் மக்கள் தொகையை பொறுத்து இருக்கிறது, அதாவது, தமிழகத்தின் ஒரு ரூபாய்க்கு தமிழகம் திரும்ப பெறுவது 40 பைசா, கர்நாடகவுக்கு 47 பைசாவும், கேரளத்துக்கு 25 பைசாவும் மக்கள் தொகைக்கேற்ப கிடைக்கும் வேளையில், உபி பெறுவது 1.79 காசுகள், அதாவது மக்கள் தொகையை கட்டுப்படுத்தாமல், மக்கள் நலனைப்பற்றிக் கவலைகொள்ளாமல் இருக்கும் மாநிலத்துக்கு இந்த மத்திய அரசு அதிக சலுகைத்தருகிறது, அதிக வரியை உபி தந்தாலும், தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகம் மக்கள் தொகையை கட்டுப்படுத்த, கட்டிய வரிகளை விட அதிக வருவாய் உபி மற்றும் பீகார் மாநிலங்களுக்கு கிடைக்கிறது, இப்போது ஏன் பல கோடிகளில் ராமர் சிலையையும், பசுக்களுக்கு மந்திரம் ஓத பண்டிதர்களையும் இவர்கள் நியமிக்க மாட்டார்கள்?

சரியான நிர்வாகத்திறமை இல்லாமல் வரவையெல்லாம் மக்களின் மூடத்தனத்தை கொள்முதலாக்கி இப்படி வட இந்தியா மதத்தையும், மதக்கொள்ளையர்களையும் வளர்க்க, ஆக்ஸிஜன் இல்லாமல் குழந்தைகள் இறப்பதும், பாலியல் வன்முறைகளால் குழந்தைகள் இறப்பதும், ஆம்புலன்ஸ் கூட இல்லாமல் மக்கள் தவிப்பதும் நிர்வாகத்தின் குறையே இன்றி வருவாய் பற்றாக்குறை அல்லவே!?

கல்வியில் இந்த நிதியை செலவிட்டால், மக்களின் ஆரோக்கியத்தில் செலவிட்டால் அவர்களுக்கு சிறந்த அறிவும் தெளிவும் வந்துவிடும், அப்படி வந்துவிட்டால் வெறும் ராம கோஷம் போட்டுக்கொண்டு, மேடைகளில் வாக்குறுதிகளை அள்ளித்தெளித்துக்கொண்டு இவர்கள் வட இந்தியாவில் அரசியல் செய்ய முடியாது, பெரும் வன்முறைகள் செய்ய இவர்களுக்கு ஆட்கள் இருக்க மாட்டார்கள்!

இப்படிப்பட்ட ஒரு நிலையில் வறுமையை மாற்ற நினைப்பவனும், அரசியல் காரணங்களால் புலம் பெயர்த்தப்படுபவனும், நம்முடைய பேராசை முதலாளிகளாலும் வழவழைக்கப்படுபவனும், வட இந்தியர்களாக வருமான கணக்குக்கு மக்கள் தொகையை உபியிலும் பீகாரிலும் கூட்டி விட்டு, தமிழகத்திலும் சில தென்னிந்திய மாவட்டங்களிலும் குடி பெயர்கிறார்கள்!
தமிழகத்தில் இப்படிக் குடிபெயர்ந்து அரசியலில் வியாபாரத்தில் பலம் மிக்கவர்களாய் மாறிப்போனவர்களும், குற்றவாளிகளாய் மாறியவர்களும் அதிகம், புலம் பெயர்ந்தாலும், சாதியாத்தாலும் மதத்தாலும் கட்டமைக்கப்பட்டவர்கள் சார்ப்பற்றவர்களாக மாறிவிட பலகாலம் ஆகும், அந்தக்காலம் வந்துவிடாமல் இருக்க, மதத்தை இங்கேயும் புகுத்துவார்கள், மொழியை திணிப்பார்கள், எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட ஆட்கள் உண்டு, தமிழ் மண்ணிலும் இந்தக்குடியேறிய மக்களை ஒருவிதமான மனநிலையில் வைத்திருக்க, பூர்வீகவாசிகளையும் குற்றங்கள் பெருக ஒருவித பதட்ட நிலையிலேயே வைத்திருப்பதுதான் அரசியல்!

இதற்கு நம்முடைய தெர்மாக்கோல் விஞ்ஞானிகளும், அணைக்கு ஜூரம் வந்ததை கண்டுப்பிடித்த மருத்துவர்களும், கஜா மக்களுக்கு கடவுளின் தண்டனை என்று சொன்ன மதிமந்திரிகளும் அதிக உதவி செய்வார்கள்!
இதில் மக்கள் போராட்டமெல்லாம் எளிதில் திசைமாற்றப்படுவதில் விந்தையென்ன? வேதாந்த குழுமத்தின் முதலாளி, ஆலையில் மாசு இல்லை என்பதை தூத்துக்குடியில் ஆலையின் அருகிலேயே தன் மொத்த குடும்பத்தையும் குடி வைத்து நிரூபிக்கலாம், நான் வரிகளை கட்டிவிட்டேன் என்பதை விஜய் மல்லையா இந்தியாவில் இருந்து நிரூபிக்கலாம், “நான் ஏழைத்தாயின் மகன்” என்பதை பிரதமர் முதலில் இந்தியாவில் இருந்துக்கொண்டு நிரூபிக்கலாம், வசதியாய் வெளிநாட்டில் தங்கிக்கொண்டு ஆலையில் நச்சு இல்லை என்றும், இந்தியாவின் சிஸ்டம் சரியில்லையென்றும், நான் ஓய்வில்லாமல் உழைக்கிறேன் என்றும் யார் வேண்டுமானாலும் சொல்லலாம், அமைதியாய் நடந்த ஜல்லிக்கட்டும் அரசியல்வாதிகளால் மட்டுமே கலவரமானது கண்கூடு, இவையெல்லாம் உதாரணங்களே, நீங்கள் எந்தப்போராட்டத்தை கையில் எடுத்தாலும் அதை மாற்ற ஒரு அரசியல்வாதி கோமாளியாக்கப்படுவார், கேளிக்கை நாயகர்கள் பரபர பட்டாசு வெடிப்பார்கள், ஏதோ ஒரு மூலையில் ஒரு பெண் மீதோ, குழந்தை மீதோ மோசமான வன்முறை ஏவப்படும், எங்கோ ஒரு மதக்கலவரம் உண்டாகும், திடீரென புதிய ரூபாய் வரும் அதில் நம்மை கண்காணிக்கும் சிப் வரும் கதைகள் வரும், இப்படி எது வேண்டுமானாலும் நிகழும், நம்முடைய ஞாபகமறதியும், கேளிக்கை மனநிலையும், சாராய போதையும், இவர்களுக்கு நல்ல முதலீடு!

இந்தியா ஏழை நாடு அல்ல, பல கோடி மக்களின் மந்தை புத்தியாலும், எளிதில் பற்ற வைக்கும் சாதி மதத்தாலும், சில நூறு பேராசை அரசியல்வாதிகளாலும், பல லட்சம் அதிகாரிகளாலும், பெண்ணடிமைத்தனத்தாலும் ஏழைகளை பரம ஏழைகளாக மாற்றி உள்ளூரில் புதைத்தும், சில பணக்கார கொள்ளையர்களை பல கோடிகளுடன் வெளிநாட்டில் வாழ வைத்தும் கொண்டிருக்கிறது, இங்கே மனிதர்களை வறுமையால், எட்டாத கல்வியால், சாதியால், மதத்தால், நோய்களால், சாராயத்தால், சோதனை மருந்துகளால், முதலாளிகளின் பேராசையால், பாலியல் வன்முறைகளால் கொன்று சிலைகளை மட்டும் எழுப்புவார்கள், ஸ்டேட்டுக்கே ஓப்பி யூனிட்டிகளில் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல், நாம் குனிந்து பரிசுகளையும் இலவசங்களையும் வாங்கிக்கொள்வோம்!

தெளிவு

#அணுக்கதை
செந்தில் கவுண்டமணியிடம்;
“அண்ணே, எங்க பாட்டி ஒரு கதை சொல்லுச்சுண்ணே!”
“சரி சொல்லு”
“அது வந்துண்ணே, இந்த மாடுங்க எல்லாம் மனுஷங்க எங்கள ரொம்ப கொடுமைப்படுத்துறாங்கன்னு கையாலத்துக்கு போய் சிவன்கிட்ட முறையிட்டாங்களாம், அப்போ சிவன் சரி போங்க, நான் வந்து பாக்கிறேன்னு சொல்லிட்டு, ஆடி அசைஞ்சு ஒருநாள் நம்ம பூலோகத்துக்கு வந்தாராம், வந்தவரு பாத்தப்போ அன்னைக்கு மாட்டுப்பொங்கல், மாடுங்கள எல்லாம் அலங்கரிச்சு மனுஷங்க நல்லா கவனிச்சிட்டு இருக்கறத பார்த்துட்டு, அடடே நல்லாத்தானே கவனிக்கிறாங்கன்னு போயிட்டாராம்”

“சரி, இதயேண்டா இப்போ என்கிட்ட சொல்றே?”
“அது வந்துண்ணே இந்த மழை, புயல் எல்லாம் வந்து பாதி ஜனங்க செத்தப்பிறகு, ஊரு அழிஞ்சப்பிறகு, இந்த டெல்லியில் இருக்கற ஆளுங்க எல்லாம் ஐஞ்சு பத்துநாள் கழிச்சு எல்லாம் முடிஞ்சப்பிறகு அரைகுறையா பார்த்துட்டுப் போறாங்களே, அதைப்பார்த்து ஆயா இந்தக் கதை சொல்லுச்சுண்ணே!”
“டேய் தீச்சட்டி மண்டையா, கருத்தா பேசிட்டு ஏன்டா அரசியல்வாதிங்க முன்னாடி அன்னைக்குக் கூழைக்கும்பிடு போட்டே?”
“அடப்போங்கண்ணே, கதைசொன்னா கேக்காம நோண்டி நோண்டி கேள்விக்கேட்டுட்டு, நான் வர்ரேண்ணே”
“இரு நாயே, எங்க ஓடுறே?”
“நம்ம செல்லத்தாயி தோட்டத்திலே நயன்தாரா சூட்டிங்காம்ண்ணே!”
#தெளிவு

புரிந்துகொள்கிறாய் கனவில்

ஆறாய்
பெருகியது அன்பின்
வார்த்தைகள்
விரலிடுக்கில்
வழிந்தது நேசம்
விழிகளில் மோதியது
காதல்
தென்றலாய் அரவணைத்தது
தோள்கள்
விரைந்தோடி வந்தது
தவிப்பில் கால்கள்
அடடாவென
நெஞ்சம் நெகிழ்ந்து
காற்றில் வெறுமையாய்
கைகள் தூழவியபோதே
உணர்ந்துக்கொண்டேன்
நீதான்
எத்தனை அழகாய்
உணர்வுகளை
புரிந்துகொள்கிறாய்
#கனவில்!!!



Image may contain: 1 person

வெறுமை

“எல்லாவற்றுக்கும்
நீயே காரணம்”
இந்தத் தூற்றுதல்தான்
எவ்வளவு எளிதாய்
இருக்கிறது
நீ ஒளிந்துக்கொள்ள?!
காரணங்களை கூட்டும்
இந்த
ஏமாற்று வித்தையில்
மனம் புழுங்கி
நானும்
ஒடுங்கிக்கொள்கிறேன்
இப்போது
உன் மகிழ்ச்சிக்கும்
நானே காரணமென்று
மனதுக்குள்
வெறுமையாய்
சிரித்துக்கொள்ள
நீ இன்னமும்
தூற்றிக்கொல்லலாம்!!

#வெறுமை



Image may contain: one or more people, people standing, ocean, sky, cloud, nature and outdoor

அம்மாவின்_நேரம்


விடியலில் சமைத்து
வேண்டியன செய்து
பிள்ளைகளைப் பள்ளிக்கும்
கணவனை பணிக்கும்
நேரத்திற்கு அனுப்பிய
அம்மா
உண்பதற்கு நேரமின்றி
அலுவலகத்துக்கு
தாமதமாகிவிட்டதென்று
பறந்தோடுகிறாள்!

#அம்மாவின்_நேரம்!


No photo description available.

செய்திகள்_வாசிப்பது

#அணுக்கதை
“சென்னைக்கு வந்தது ஆட்டுக்கறிதானாம்!”
“யார் சொன்னா?”
“அட அந்த ஆடே சொல்லுச்சாம்ப்பா!”
“அப்போ அந்த மீன்கறின்னு எழுதியும், சுகாதரமற்ற முறையில் கொண்டுவந்ததெல்லாம்?”
“யோவ் இப்படி வேகமா கேட்டா எப்படி? யோசிக்க வேணாமா? ஆமா இன்னுமா நீ அதை மறக்கல, ரொம்ப விவகாரமான ஆளா இருப்பே போல?”
“சாப்பிடும்போது மீனா, ஆடா, நாயான்னு தெரிய வேணாமா?”
“அதானே பார்த்தேன், என்னடா நம்மாளுக்கு நிறைய அறிவு வந்துடுச்சோன்னு?!”

#செய்திகள்_வாசிப்பது!

உறிஞ்சிக்கொ(ல்)ள்கிறார்கள்

கொசுக்கள் இரத்தத்தையும்
சில மனிதர்கள் நிம்மதியையும்
உறிஞ்சிக்கொ(ல்)ள்கிறார்கள்
அகப்பட்டவர்களிடம்!


Image may contain: text

நகைமுரண்



சாமியார்களுக்கு
காடழிக்க உரிமைத்தந்து
கார்ப்பரேட்டுகளுக்கு
உயிரழிக்க மானியம் தந்து
சுங்கக்கொள்ளைகளுக்கு
மரங்கள் அழிக்க பாதுகாப்பு தந்து
மணல் கொள்ளைகளுக்கு
நீர்நிலைகள் அழிக்க
ஆவணம் செய்து
ஊழல்வாதிகள்
காடழித்து
நாடழித்து
நீர்நிலைகள் அழித்து
வளங்களை கொள்ளையடித்து
விளையாடிய பின்னர்
சட்டென்று இயற்கைச்
செய்த
கோரதண்டவத்திற்கு
நிவாரணம்
வழங்கி
ஒரே இரவில்
நீதியரசர்கள்
ஆனார்கள்
அதே அரசியல்வாதிகள்!
விடிவேயில்லை
இந்த
அறியாமைகளுக்கு!

#நகைமுரண்


No photo description available.

சாதிய புகழொலிகள்

ஒருவன் தீமைகள் செய்யும்போது ஊமையாய் இருந்துவிட்டு, அதே அவன் நல்லது செய்தால் ஆஹா ஒஹோவென்று ஒருவரோ ஒரு கும்பலோ அளவுக்கதிகமாக புகழ்கிறது என்றால் தெரிந்துக்கொள்ளுங்கள், அவர்கள் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும், இது அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும்!
இங்கே சாதி கல்வியால், பொருளாதாரத்தால், பதவியால், பட்டத்தால், உலக அறிவால் அழியவில்லை, படித்தவர்களுக்கும் அது உள்ளூர ஒரு மகிழ்ச்சியை தந்துக்கொண்டிருக்கிறது, தாம் இந்தச்சாதி என்று பெருமிதம் கொள்ள வைக்கிறது, தன் சாதியைச் சேர்ந்த ஆட்களை காணும்போது உவகைக்கொள்கிறது, பணத்தைத் தவிர்த்து பரஸ்பரம் லாபம் பார்த்துக்கொள்கிறது, இத்தோடு நின்றுவிட்டால் பரவாயில்லை, அது அப்படியே வெறியாக மாறும்போது, பள்ளியில் மாணவர்களிடையே உப்புக்கு உதவாத விஷயத்தில் தொடங்கி, பிற்பாடு காதல் கல்யாணம், கொடுக்கல் வாங்கல் என்று எல்லாவற்றிலும் “உயிர்ப்பலி” கேட்கும் அளவிற்கு உருவெடுக்கிறது!
சுற்றிலும் பாருங்கள், உண்மை புரியும்! இல்லையென்றால் 120 கோடி மக்கள் தொகையில் இந்தக் குற்றங்கள் சிறிய விழுக்காடு என்று மனதை தேற்றிக்கொண்டு அமைதிக்கொள்ளுங்கள், மிகப்பெரிய அரசியல்வாதிகளாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது!

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!