Thursday 16 May 2019

தெளிவு

#அணுக்கதை
செந்தில் கவுண்டமணியிடம்;
“அண்ணே, எங்க பாட்டி ஒரு கதை சொல்லுச்சுண்ணே!”
“சரி சொல்லு”
“அது வந்துண்ணே, இந்த மாடுங்க எல்லாம் மனுஷங்க எங்கள ரொம்ப கொடுமைப்படுத்துறாங்கன்னு கையாலத்துக்கு போய் சிவன்கிட்ட முறையிட்டாங்களாம், அப்போ சிவன் சரி போங்க, நான் வந்து பாக்கிறேன்னு சொல்லிட்டு, ஆடி அசைஞ்சு ஒருநாள் நம்ம பூலோகத்துக்கு வந்தாராம், வந்தவரு பாத்தப்போ அன்னைக்கு மாட்டுப்பொங்கல், மாடுங்கள எல்லாம் அலங்கரிச்சு மனுஷங்க நல்லா கவனிச்சிட்டு இருக்கறத பார்த்துட்டு, அடடே நல்லாத்தானே கவனிக்கிறாங்கன்னு போயிட்டாராம்”

“சரி, இதயேண்டா இப்போ என்கிட்ட சொல்றே?”
“அது வந்துண்ணே இந்த மழை, புயல் எல்லாம் வந்து பாதி ஜனங்க செத்தப்பிறகு, ஊரு அழிஞ்சப்பிறகு, இந்த டெல்லியில் இருக்கற ஆளுங்க எல்லாம் ஐஞ்சு பத்துநாள் கழிச்சு எல்லாம் முடிஞ்சப்பிறகு அரைகுறையா பார்த்துட்டுப் போறாங்களே, அதைப்பார்த்து ஆயா இந்தக் கதை சொல்லுச்சுண்ணே!”
“டேய் தீச்சட்டி மண்டையா, கருத்தா பேசிட்டு ஏன்டா அரசியல்வாதிங்க முன்னாடி அன்னைக்குக் கூழைக்கும்பிடு போட்டே?”
“அடப்போங்கண்ணே, கதைசொன்னா கேக்காம நோண்டி நோண்டி கேள்விக்கேட்டுட்டு, நான் வர்ரேண்ணே”
“இரு நாயே, எங்க ஓடுறே?”
“நம்ம செல்லத்தாயி தோட்டத்திலே நயன்தாரா சூட்டிங்காம்ண்ணே!”
#தெளிவு

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!