Thursday 16 May 2019

புனைவுகள்

கொலைகாரனையோ, கொலைகாரியையோ காவல்துறை கண்டுபிடிக்கும் முன்பு, சம்பந்தபட்டவர்களின் வாக்குமூலங்கள் கிடைக்கும்முன்பு இந்தப் பத்திரிக்கைகள் மட்டும் கொலை நடந்தது எப்படி, யார் செய்தது, அவர்கள் எப்படிபட்டவர்கள், அந்த வீட்டு நாய்க்குட்டி முதல் கன்றுகுட்டிவரை என்று எல்லாவற்றையும் எல்லோரையும் பற்றி எழுதிவிடுகிறார்கள், நியாயமாய் காவல்துறை இவர்களை பிடித்துதான், குற்றத்திற்கு உடந்தையாய் இருந்ததாய் சொல்லி விசாரிக்க வேண்டும், புலனாய்வு என்பதை பெரும்பாலான பத்திரிக்கைகள் கற்பனை புனைவு என்றே புரிந்துக்கொண்டிருக்கின்றன, அதிலும் கொலையாளி பெண் என்று காவல்துறை ஒரு கோடு போட்டால் இவர்கள் கற்பனை குதிரையில் ரோடே போட்டுவிடுகிறார்கள், இதையெல்லாம் படிக்கும் போது எத்தனை வக்கிரமானவர்கள் நிருபர்களாய் இருக்கிறார்கள் என்பதும், எழுத்தாளர்களாய் இங்கே உலாவுகிறார்கள் என்பதும் புரிகிறது! 🙄🤨

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!