Thursday 16 May 2019

இறுதி_நொடிகள்


மதில் மேல் நிற்கிறது
ஓடிக் களைத்த
பூனையொன்று

ஒரு பக்கம் நரகத்தின்
நிலமும்
மறுபக்கம் சொர்க்கத்தின்
நிலமும்
தெரிகிறது
சற்றே உடலைக் குறுக்கி
மதில் மேல் சாய்கிறது

சொர்க்கத்தின் நிலத்தில்
அதற்கு யாருமில்லை
நரகத்தின் நிலத்திலும்
எந்த உறவுமில்லை
திருட்டேதும் செய்ததில்லை
பெரிதாய் ஆசைகளில்லை

விழித்துப் பார்க்கிறது
பூனை
சொர்க்கத்தின் நிலத்தில்
யாரும் அழைக்கவில்லை
யாரின் மனதையும்
யாரரறியும் பொறுமையும்
அங்கில்லை

மாறி மாறி விழிக்கும்
பூனை
இரண்டு நிலங்களும்
ஒன்றென
ஏதோவொன்று மேலென
ஏதோ ஒன்றில் பாயும்
அதனாலென்னவென்று
வழக்கம்போல்
இந்த வாழ்க்கை நகர
பூனைகளால் நிறையும்
மதில்கள்!

#இறுதி_நொடிகள்!



Image may contain: cat and outdoor

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!