Thursday, 16 May 2019

கொலைகார_தேசம்

#கொலைகார_தேசம்
பெண்களை ஏமாற்றுபவர்கள், கொலை செய்பவர்கள், தங்கள் பாலியல் வறட்சியை தீர்த்து கொள்பவர்கள் பின் சிசுவாய் இருந்தாலும் தீர்த்துக்கொல்பவர்கள் எல்லாம் உடனடியாக மனநிலைப்பிறழ்ந்த நோயாளிவிடுகிறார்கள், இல்லையென்றால் ஒன்றும் தெரியாத உத்தமன்களாகிவிடுகிறார்கள்! 😠
ஊழல் செய்து பின் அதை மறைக்க வன்முறைகளைத் தூண்டிவிடுவதில் தொடங்கி, போராட்டக்காரர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து, சுட்டு சுட்டு விளையாடி, உதவித் தேடி வரும் பெண்களை ஏமாற்றி, பிள்ளைப்பெற்றுக்கொள்ளுவது வரை செய்யும்
அரசியல்வாதிகள், “ஐ பிம்பிளிக்கி பிளாப்பி” என்று இந்த மனநோயாளி வேடத்தைப் போட முடிவதில்லை, ஏனேனில் இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மனநிலை சரியில்லாதவர்கள், தேர்தலில் வேட்பாளர்களாகும் தகுதியை இழக்கிறார்கள், அதனால் பெரும்பாலும் அவர்கள் வழக்கு விசாரணை என்று வந்துவிட்டால் “வலதுபக்க” மார்பை அழுத்திக்கொண்டு உடனடி இதய நோயாளிகளாய் மருத்துவமனையில் படுத்துக்கொள்கிறார்கள்😉

குற்றம் செய்துவிட்டு மனநிலை பாதித்த கொலைகாரர்களையும், ஊழல் செய்து, வழக்கை தவிர்க்க இதயநோயாளிகளாய் ஆகும் அரசியல்வாதிகளையும் பார்த்துப் பார்த்து மக்கள் ஜென் துறவிகளாய் மாறிக்கொண்டு வருகிறார்கள்!😇 😎

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...