Tuesday 18 September 2012

சிந்தும் ரத்தம் எதுவானாலும் அது இந்திய ரத்தம்!


பிரச்னை எதுவானால் என்ன?
தந்திரங்கள், மந்திரங்கள் பல செய்து
மக்களை ஆக்குவோம் மந்தை கூட்டமாய்!

எண்ணிக்கை எதுவானால் என்ன?
மொழியால், இனத்தால், நிறத்தால்
மக்களை ஆக்குவோம் முட்டாள்களாய்!

ஒற்றுமையாய் இருந்தால் என்ன
அல்லா முருகர் பெருமாள் சிவன் கர்த்தர்
இன்னும் பல பெயர்கள் கொண்டு
மக்களை ஆக்குவோம் வெறியர்களாய்!

புரட்சி ஓங்கினால் என்ன
கூடங்குளமோ, முல்லை பெரியாரோ, எல்லை தகராறோ
உள்நாட்டு வன்முறையோ, வெளிநாட்டு பொருளாதார குற்றமோ
சிறியதோ பெரியதோ, எதுவானாலும்
இன்று பேசுவோம், நாளை துன்பப்படுவோம், பிறகு தூங்கி விடுவோம்
ஆமை ஒட்டினில் ஒடுங்கி கொள்வோம், காடு பற்றி எரியட்டும்!

சிந்தும் ரத்தம் எதுவானாலும் அது இந்திய ரத்தம்

கூடங்குளம்


கண்ணை விற்று ஓவியமா?
உயிரை கொடுத்து மின்சாரமா?
இது வாழ்வதற்கா இல்லை தகனத்திற்கா?

முரண்

கடலலை கொன்றது
என்று மனிதன் அழுது
கொண்டிருக்கையில்
இயற்கை அழுது கழுவியது
வெட்டிய ஆடுகளின் ரத்தத்தை
அன்று மழை!
------------------------------------------------
விடியலைத் தேடி வெளிச்சங்கள்
மாணவர்கள்!

முடிவு

கிடைத்ததை பற்றி படர்ந்ததெல்லாம்
முல்லை என்றாகி இல்லாமல் போவதில்லை
படர இடம் கொடுத்ததெல்லாம்
பாரி கொடுத்த தேரும் இல்லை
பெண்ணுக்கு தேவை பொறுமையும்
நிதானமும்....
கொடுமைகளை சகிப்பதில் இல்லை - அது
வாழ்க்கையை தெரிந்தெடுப்பதில்!

காதல்

மனதில் படியும் நினைவுகள்
பாரமாய் அழுத்தும் கனவுகள்

சிதறிப் போகும் மேகங்கள்
சீக்கிரம் போயின பொழுதுகள்

சொர்க்கமும் நரகமுமாய் நாட்கள்
மலரும் முள்ளுமாய் வார்த்தைகள்

பரவசமாய் தோன்றிய தீண்டல்கள்

வேதனையாய் மாற்றிய தருணங்கள்

கைப்பிடித்து சொன்ன வார்த்தைகள்
கைகழுவிய பின் சொன்னவை அமிலங்கள்

மூளைச் சலவை செய்யும் உணர்வுகள்
முடங்கிபோகும் வாழ்க்கைகள்

ஆதலால், கண்ணே
கண்களால் காதல் செய்
அறிவினால் மட்டுமே அதை உறுதி செய்!

பசித்த வயிற்றுக்கு சோறிடுங்கள்


விளைச்சல் இல்லாமல் விளைநிலம்
காய்கிறது!
வற்றிய மார்பு சூப்பி
பிள்ளை வயிறு தோய்கிறது!
உலை கொதித்து நாளாகியது
தாய் மனம் சோர்கிறது!
இருந்தும் இது புண்ணிய பூமி

என்றுமே நீரோட்டம்
பஞ்சமில்லை, பசியில்லை
இதற்க்கு மட்டும் வறுமையில்லை
அரவணைக்கும் அரசாங்கம்
மதுகடைகளில் - எந்நாளும்!!!

இயலாமை

டாஸ்மாக் கடையருகில்
பள்ளி வளாகம், குழந்தைகள்
இன்று படிக்கத்தான் செல்கிறார்கள்!

புதிய வணிக வளாகம்
புதிய மேம்பாலம், அடிக்கல் நாட்டினர்
அகற்றப்பட்டன குடிசைகளும், மனிதர்களும்!

நடைபாதையில் கடைகள்
சாலையோரம் வாகனங்கள்
தெருவினை வளைத்து கட்டிய வீடுகள்
நடுவில் நாங்களும் நாய்களும்!

கைநீட்டி காசு - கேட்பது
பிச்சை, கேட்பவர் எல்லோரும்;
இங்கே வாழ்கிறது சம தர்ம சமுதாயம்!

மரம் வெட்டி சாய்த்து,
சாலை விரிவுபடுத்தி - நடுவில்
வைத்தனர் தோட்டம் - அழகான
கருமை புகையாக எங்கும் - இதோ
எழில் மிகு நகரம்!

பட்டபகல் கொள்ளைகள்,
பழியுணர்ச்சி கொலைகள்
சுரண்டி தின்னும் முதலைகள்
மிரட்டியெடுக்கும் வன்முறை,
பாதுகாப்பு தரப்பட்டது மந்திரிகளுக்கு

நித்தம் நித்தம் இத்தனை காட்சிகள்
மனதினை அழுத்த, நாடினேன் மருத்துவரை
ரத்த அழுத்தம் குறைத்திட,
உப்பு குறைத்து உண்டிட - "எல்லாம்"
சரியாகும் என்றார் மருத்துவர்
அதுவே சரியென்று நினைக்கின்றேன் நானும்!

அறியாமை

சாக்கடையா, சந்தனமா?
மழைக்கு தெரியாது

விளை நிலமா, கட்டிடம் கட்ட
விற்ற நிலமா?
விழும் விதைக்கு தெரியாது

செடி கொடியா, மின்சார கம்பியா?
கடக்கும் பறவைக்கு தெரியாது

மாண்புமிகு பொது மக்களா
இல்லை ஈனமிகு அடிமைகளா?
தேர்தல் முடியும் வரை
எங்களுக்கும் தெரியாது!

நட்பு


எப்போதும் கைப்பிடித்து
கதைப்பேசி திரிந்தோம்
பின்பு சிலகாலம்
கடிதம் மூலம் கதைத்தோம்
அடுத்து பல சமயம்
கைப்பேசியில் வார்த்தைகளை வடித்தோம்
இன்று பல நேரம்
சமூக வலைத்தளத்தில் நம்

ஆன்மாவை தொலைத்தோம்

இப்படியே நட்பு
பல தளங்களை அடைந்தாலும்

ஏன் ஒற்றை விரல் நீ பிடித்து
நான் உன் தோள் அணைத்து,
நடந்த நேரம்......
நம் உள்ளத்தில் எழுந்த
உணர்வதனை - உணர்வினால்
உண்டான நம்பிக்கைதனை
இந்த
கைப்பேசியும் கணினியும்
வடிக்கும் வார்த்தைகள் மீட்டேடுக்குமோ தோழி?

பிறப்புக்கும் இறப்புக்கும்
வருகை தருவது
ஒன்றிரண்டு வார்த்தைகளில்
கணினியிலும் அலைபேசியிலும்
உணர்வுகளை பகிர்வது மட்டுமே
இன்று நட்பாகி போனது
நெஞ்சம் சுடுகடானது!

காகிதத்தின் உலகம்

ஓடி கொண்டே இருக்கிறோம்
ஓய்வில்லாமல்
உழைத்து கொண்டே இருக்கிறோம்
உண்மை உணராமல்!
வன்முறையின் தாக்கம் எங்கும்
விஸ்வரூபமாய் - நம்
வீட்டில் கல் விழும் வரை நாம் காத்திருப்போம்!

கருவறையில் நம்மை காத்து
நம் வாழ்க்கைவுயரும் வரை தாழ்ந்து

தன் கல்லறை வரை நம் நினைவுகளை
சுமக்கும் தாய் - இன்று இருப்பது
தனியறையில் அல்லது தனிமை சிறையில்
நம் காலம் வரும் வரை நாம் காத்திருப்போம்!

காக்காய் கடி கடித்து
இருப்பதை பகிர்ந்து
தோள் தட்டி அரவணைத்த நட்பு
நாள் பொழுதில் நிலைமை தாழ்ந்து போனால்
நமக்கென்ன வந்தது - அது அவன்/அவள் தலைஎழுத்து
நம் நிலை தாழும் வரை நாம் காத்திருப்போம்!

யாதும் வூரே யாவரும் கேளிர்
என்று சொல்லி வளர்த்தனர் பெரியோர்
இருந்தாலும் தமிழ் பேசும் மாநிலத்தின்
தண்ணீர் தேவை பற்றி கவலையில்லை
வெள்ளம் பெருக்கெடுத்து என் கடவுளின்
நாடு வெள்ளக் காடாய் மாறும் வரை நாம் காத்திருப்போம்

தண்ணீர் தந்தார், காற்றை தந்தார்
சூரிய ஒளியை தந்தார் - அதற்கு
மேலும் அறிவியல் அறிவை தந்தார்
ஆராயாமல் அணு உலை - காற்றோ நிலமோ
நீரோ மாசுபட்டால் என்ன, மக்கள் மாய்ந்து
மடிந்தால் என்ன?
அணு உலை வெடிக்கும் வரை நாம் காத்திருப்போம்!

நமக்கென்ன எனக்கேன்ன உனக்கென்ன
இந்த நிலையை கொண்டு வந்த காகிதத்தின் பலமென்ன?

நாளை உலகம் காகிதத்தின் உலகம்,
நம்பிக்கை கொண்டு நம் வாழ்வை மீட்டேடுப்போம் இனியாவது!

நீர் வழிப் பயணமும், நினைவுகளின் சாரலும்

பத்து வருடங்களுக்கு முன் ஒரு நீர் மகள், நில மகளுக்கு சொன்ன சற்றே பெரிய க(வி)தை
----------------------------------------------------------------------------------------------
நீர் வழிப் பயணமும், நினைவுகளின் சாரலும்
----------------------------------------------------------------------------------------

சுவரில்லாத என் வீட்டில்
நான் தனியே தவமிருந்தேன்!

வெட்டியாய் இருப்பதால்
வெட்டி விடலாம் - இன

்னும்
இரண்டு கைகள் கொண்டு,
குப்பனும் சுப்பனும் பேசிச் சென்றனர்...

அவர்களின் கைகளுக்கு
கைகள் கிடைக்கும்வரை
சுவரில்லாத என் வீட்டில்
நான் தனியே தவமிருந்தேன்!

சின்ன நடை நடந்து
என் அருகினில் அமர்ந்து - நீ
என்ன மொழி கூறினாய்?
யான் அறியேன் - ஆனால்
நீ எறிந்த கல் என்
நெஞ்சில் தைத்ததை
நீ அறிவாயோ? - நான்
சொன்ன மொழியின் பொருள்
நீ உணர்ந்தயோ?

என் வேதனையின்
வெளிப்பாடுகள் நொடிப்பொழுதில் - உன்
பிள்ளை சிரிப்பொலியை
கேட்டு மறைந்தபோது
நீ அதை ரசித்தாயே - நான்
சொன்ன மொழியின் பொருள்
நீ உணர்ந்தயோ?

ஒரு தென்றலை போல்
நீ வந்து சென்றாய்
சுவரில்லாத என் வீட்டில்
நான் தனியே தவமிருந்தேன்!

இரண்டு கைகளை எதிர்பார்த்து
சென்ற தோழர்கள்
திரும்பி வந்தனர்
தத்தமக்கே இரு கைகள்
இருப்பதை உணர்ந்து!

என் வீடு விசாலமானது!
இருந்தும்,
சுவரில்லாத என் வீட்டில்
நான் தனியே தவமிருந்தேன்!

அழகிய நடையுடன்
நீ ஓடோடி வந்தாய் - இப்போது
என் மீது பூக்களை எறிந்தாய்

உன்னை வாரி அணைத்திட
நினைத்தேன் - என்
பாச வெள்ளம் உன்னை
முழ்கடித்திடும் என்றெண்ணி
ஒதுங்கினேன்!

ஆயிரம் கதைகள் பேசினாய்
உன் மகிழ்ச்சியை நானறிந்தேன்
நான் சொன்னதை
நீ உணர்ந்தயோ?

கால சக்கரம் சுழன்றோடிட
சுவரில்லாத என் வீட்டில்
நான் தனியே தவமிருந்தேன்!

பட்டங்கள் பல பெற்று
நீ பறந்து சென்றாய்
உன்னை காண விரும்பி
நான் தவித்து நின்றேன்
சுவரில்லாத என் வீட்டில்
நான் தனியே தவமிருந்தேன்!

குப்பனுக்கும் சுப்பனுக்கும்
இரண்டு கைகள் கிடைத்தன
வகுப்புவாத கைகளால்
என் தவத்தை கலைத்தனர்
என்னை துண்டாட நினைத்து
என் அழகிய வீட்டை (கரையை) உடைத்தனர்!

என் பெண்மையை காப்பாற்றி
உன்னைத் தேடி ஊரை விட்டு வந்தேன்
பல வழிகளை கடந்து சென்றேன்
காணாமல் பொங்கி எழுந்தேன்
மலையின் உச்சியில் வந்து நின்றேன்
உன்னை கண்டேன் - மகிழ்ந்து வீழ்ந்தேன்!
உன் காலடி தழுவி நின்றேன்

துள்ளல் நடையுடன் இப்போதும்
நீ ஆயிரம் கதைகள் சொன்னாய்
உன் காதல் உலகைப் பற்றி...

என்னுள் எதுவோ உடைந்தது
நீர்க்குமிழி என நகைத்தாய்
ஐயகோ! பதைத்தேன்
உன் உள்ளம் புரிந்தது
நான் சொல்ல நினைத்தது புரிந்ததா?

என் பாதையை நான் தொடர்ந்தேன்
உன் மகிழ்ச்சிக்காக வேண்டினேன்!
சுவரில்லாத என் வீட்டில்
நான் தனியே தவமிருந்தேன்!

ஓய்ந்த நடையுடன் நீ
ஒருநாள் என் எதிர் வந்தமார்ந்தாய்
அப்போதும் நீ ஆயிரம் பேசினாய்
வார்த்தைகளால் அல்ல - உன்
கண்ணீரால்!

உன் வாடிய முகம் கண்டு
நான் கண்ணீர் சிந்தினேன்
அணையிட்டு தடுத்தாலும்
கற்கள் கொண்டு பாதையை மறித்தாலும்
என் பரந்த கைகளால்
மறுபடி மறுபடி உன்னை வருடிச் சென்றேன்!

உன் சோகம் நான் உணர்ந்தேன்
நான் உணர்த்தியதை நீ உணர்ந்தயோ?

உன் கண்ணீரை என்னில்
கலந்து விட்டு விலகிச் சென்றாய்
தன்னம்பிக்கை நடையோடு வருவாய்
என்றே.....
சுவரில்லாத இந்த மாளிகையில்
நான் தனியே காத்திருந்தேன்!

என் வாசலில் காலத்தின்
கால் சுவடுகள்
உன் தன்னம்பிக்கை சுவடுகள் எங்கே?

சின்ன நடைகள்
அழகிய நடைகள்
துள்ளல் நடைகள்
தளர்ந்த நடைகள்....
உன் தன்னம்பிக்கை நடையை
எதிர்பார்த்து,
என் மாளிகையில் நான்
காத்திருந்த வேளை......

நினைவுகள் சிதறின
என் மீது ஏதோ பாரம்
ஒரு மனிதனின் உடல் - ஐயோ
என் நண்பனே!?

இந்த கிணற்றில் முதலில் நீ
கல்லேறிந்தாய் - என்
உடலில் கண நேர மாற்றங்கள்
வாழ்வில் துன்பமும் இன்பமும்
கண நேரம்தான்...
அறிந்தே மகிழ்ந்தாய் என நான் நினைத்திருந்தேன்

நல்லவர்களின் பார்வை பதிந்து
என் வீடு விசாலமானது
புல்லுக்கும் நெல்லுக்கும் நான் நண்பனானேன்
சுப்பனின் வயலுக்கும்
சுப்ரமணியின் தென்னைகளுக்கும்
பேதமின்றி பாய்ந்தேன்
உயர்ந்தோர் தாழ்ந்தோர் பேதமில்லை
நல்லவரின் செய்கையில் சூதுமில்லை
புரிந்தே படித்தாய்
என நான் நினைத்திருந்தேன்!

கற்புடன் கரை தாண்டி
ஓடையாகி, நதியாகி
ஓடோடி வந்தேன்
தடைகளை தாண்டி!
சிந்தனையில் ஒழுக்கமும்
முயற்சியில் நேர்மையும்
வார்த்தைகளில் சத்தியமும்
பழக்கத்தின் கண்ணியமும்
நிறைந்தே நின்றாய்
என நான் நினைத்திருந்தேன்!

அருவியாகி ஆனந்தத்தில் எழுந்தேன்
பின்பு வீழ்ந்தேன்
ஏற்றமும் தாழ்வும் உண்டு
மறுபடி மறுபடி உன் கால்களை வருடி
சென்றேன் அலைகளாக
விடா முயற்சி கொண்டு

அறிந்தே நகைத்தாய்
என நான் நினைத்திருந்தேன்!

உனக்காக எனக்குள் அழுது
உப்பாக நான்!
அழிவிலும் ஆக்கம் வேண்டும்
புரிந்தே விலகினாய்
என நான் நினைத்திருந்தேன்!

நினைத்திருந்து நினைத்திருந்து
சுவரில்லாத என் மாளிகையில்
நான் தனியே காத்திருக்கையில்,..
நண்பனே,
நட்பை எதிர்பார்த்த என்னிடம்
ஏன் உரமில்லாத உன் இதயத்தை
நம்பிக்கை இல்லா உன் வாழ்க்கையை
சுமந்த இந்த உடலை தருகிறாய்?

தோல்விகள் வாழ்க்கையை
முடித்து விடுமோ?
தோல்விகள் முன்பு நீ தோற்று போனாயோ?

ஏன் வயிற்றினில்
நத்தைகள் உண்டு
நத்தைகளில் முத்துக்கள் உண்டு
பவள மலைகள் உண்டு
உன் போன்ற மானுடர்கள்
உருவாக்கி விட்டு சென்ற
அறிவியல் அதிசயங்கள் உண்டு
அணுகுண்டுகளும் உண்டு

இத்தனையும் நான் சுமக்கையில்
நீ தோல்வியை மட்டும் ஏன் சுமந்தாய்
என் பாடங்களை ஏன் மறந்தாய்?

என்னை சுட்டெரிக்கும் சூரியன்
என் போராட்ட மேகங்களை
என்னிடமே தருகிறது மழையாக!

உன்னை சுட்டெரித்தது யார்?

உன் வெற்றியின் விருட்ச விதைகளை
அந்த தோல்வியே உன் போரட்ட குணமறிந்து
தூவி விட்டுச் செல்லும்!

உன்னுள் விதை உண்டு
விதைக்குள் விருட்சம் உண்டு
விருட்ச மொட்டில் விவேகம் உண்டு
உணர்த்தினேன் நீ உணரவில்லையோ?

உன் கண்ணீர் நாளைய
விருட்சத்திற்கு உரமாகட்டும்!

துயரங்கள் உனக்கு
சொந்தமானாலும்
துணிவுகளை மட்டும் விதைத்து விடு
நட்பே இதனை நினைவில் நிறுத்திவிடு!

அதுவரை...

உன்னை கொடுத்து
என்னை சிறுமைப்படுத்தாதே!

போ..
ஒரு முத்தையேனும் விதைத்து விட்டு வா!

என் சுதந்திர காற்றை
நான் சுவாசிக்க வேண்டும்!
சுவரில்லாத என் மாளிகையில்
நான் தனியே தவமிருக்கவேண்டும்!

Gist

How much ever u pour the vessel should be receptive enough to accept it. The same way people should be worth enough to cherish ur love and friendship, if not then it means they don't deserve and u need not bother about vessels that are cheap and damaged!

Death

Everyone is sleeping here
Gone suddenly high in the air!

Not everyone will live
But it is sure that everyone will die

I remember you Dad
I love you Mom
I adore you Brother
I miss you my Angel
Kith or Kin, Myth or Fact
We need to digest
And wait for our day on God's behest!

Stay alone in the heart
Take that few minutes of breath
A friendly father guiding us the way
An affectionate mom sacrificing her life
An adorable brother holding our hands
The warmth of the younger ones
The moment which made you feel the reality of
your life
All those are gone and now the heart is a
Vacuum!

Those moments are passed
Those people may have missed
Lament for the past
Live in the Present

Adore and Love
Recognize and Respect
Cherish the feelings and emotions
Make life a reality - Now
You live and let live!

பெண்



நித்தம் நித்தம் எத்தனை சோதனைகள்,
அரிதாரம் கொண்ட அவதாரங்கள்,
வேடம் பூண்ட பாசங்கள்.....

அவளுக்கு கனவுகள் ஆயிரம்
கற்பனைகள் கோடி, - ஆனால்
அவள் இருப்பதோ
ஒரு சிறிய வட்டதிற்குள்!

அவள் அதில் வாழ்க்கையை
முடித்து கொண்டால், அவளே
பத்தினி தெய்வம்!

சட்டம் விதித்த
சமுதாயத்திற்கு வட்டமில்லை
ஒரு எல்லையில்லை!

அவள் அடங்க வேண்டியவள்,
பருவ வயது வரை பெற்றோருக்கு,
இளமை வரை கணவனுக்கு
துடிப்பு வரை குழந்தைகளுக்கு!

அவள் அடங்க வேண்டியவள்தான்
உண்மைக்கு மட்டும்!

அவள்,
தான் ஒரு பறவை என்றாள்
பறவைக்கு ஒரு துணை வேண்டும்,
சொன்னது ஒரு விலங்கு!

அவள்,
தன் மனம் விரிந்த வானம் என்றாள்
அதை
நிர்மூலப்படுத்திய பின்
தெளிவாக உள்ளது என்றது
ஒரு சூரியச் சிறுமை!

அவள்,
தன் இதயம் ஒரு கோவில் என்றாள்
கோவிலில் உள்ளவர்களின்
பசியாற்று முதலில்
கொக்கரித்தது ஒரு கூட்டம்!

அவள்,
இப்பூமியை ஒப்ப
பொறுமை கொண்டவள்தான்
ஆனால் - மனித
மனக்கழிவுகளை
இனியும் சுமக்க
அவளிடம் இடமில்லை!

அவள்,
கண்ணகிதான்,
ஆனால் - தினம்
ஒரும் பரத்தையுடன்
கூடிவிட்டு வரும்
கணவனை ஏற்று கொள்ள
அவள் இயந்திரம் இல்லை!

அவள்,
சீதைதான் - அதற்காக
சந்தேகத் தீயில் வெந்துசாக
அவள் தயாரில்லை!

அவள்,
கருணை உள்ளம் கொண்டவள்தான்
ஆனால் - துரோகிகளை
ஏற்று கொள்ளும்
சரணாலயமாக அவள் விரும்பவில்லை!

அவள்
தாய்மை கொள்பவள்தான்
ஆனால் - பேய்களை
படைக்க அவள் ஒருபோதும் விரும்பியதில்லை!

அவள்,
பெண்தான்
நீங்கள் தரும் சுதந்திரத்தை
ஏற்று கொள்ள அவள் அடிமையில்லை!

அவள்,
திறமை நிறைந்தவள்தான்
உங்கள் அழிவுகளுக்கு
துணை போக
அவள் முடிவெடுக்கவில்லை!

அவள்
கலையுள்ளம் கொண்டவள்தான்
உங்கள் முன்னேற்றத்திற்கு
துணை வர - என்றுமே
தயங்கியதில்லை!

அந்த தாய்புறா
பருந்தாக மாறும்முன்
அவளை நீங்கள்
சாந்தப்படுத்துங்கள்.....

அந்த சகோதரத் தென்றல்
புயலாக மாறும்முன்
உங்கள் சுவாசத்தை
சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்!

அந்த காதல் பூமி
எரிமலையாக குமுறும்முன்
அவள் மேல் சுமத்திய
வீண்பழிகளை
அகற்றி விடுங்கள்.....

அந்த தோழமை வானம்
சுருங்கும் முன் - உங்கள்
மாசுகளை அகற்றிவிடுங்கள்..

அந்த குடும்ப கண்ணகி
மாதவியாகும் முன் - நீங்கள்
ராமனாகி விடுங்கள்!

அந்த குழந்தையுள்ள சீதை
உங்களை தீயில் இறக்கும் முன்
உங்கள் மனதின்
குளிர்ச்சியில் அவளை
அமர்த்திவிடுங்கள்...

அந்த பெண் பேயாகும் முன்
நீங்கள் அவளின்
தாயாகுங்கள்!

அந்த பெண் ஆயுதம்
தாங்கும் முன் - நீங்கள்
அவளை அன்பால் தாங்குங்கள்!

உங்களின் அன்பு
அந்த சூரியனை
சந்திரனாக மாற்றட்டும்
உங்களின் உண்மை
அந்த நெருப்பு மலரை
குறிஞ்சி மலராக மாற்றட்டும்!

அவள்,
அந்த பெண்
அந்த பெண்ணின் பெண்மையை
அந்த பெண்மையின் மேன்மையை
நீங்கள் உணர்ந்தால்

உலகம் அவளுடையதாகும்
அவள்
உங்களுடையவள் ஆவாள்!

நட்புக்கு அஞ்சலி

அழகாய் இருக்கும் சிலர்
அன்பாய் இருப்பதில்லை!

அன்பாய் இருக்கும் சிலர்
அழகாய் இருப்பதில்லை!

அழகும் அன்பும் நிறைந்த பலர்
நெடுநாள் வாழ்வதில்லை

அழகென்பது மன அழகாக
அன்பென்பது மன ஒழுக்கமாக
வாழ்பவரது வாழ்க்கை நெடுநாள்
நிலைத்திடும் அழியா ஓவியமாக
அன்பு கொண்டோர் நெஞ்சில்!

நம் கை நம்பிக்கை மட்டும்


பூக்கள் உதிர்கின்றன
வாசம் மட்டும் காற்றில்

மரங்கள் சாய்கின்றன
வேர்கள் மட்டும் மண்ணில்

உறவுகள் பிரிகின்றன

உதிரம் மட்டும் உடம்பில்

மனங்கள் விலகுகின்றன
நினைவுகள் மட்டும் நெஞ்சினில்

தோல்விகள் தொடர்கின்றன
நம்பிக்கை மட்டும் வாழ்க்கையில்

காய்ந்த சருகாக விழுந்தாலும்
மண்ணில் உரமாவோம்
விதையாக விழுந்தாலும்
மரமாக எழுந்து நிற்போம்

கைப்பிடித்து கழுத்தறுக்கும்
மனிதர்களை தவிர்த்து
துன்பத்திற்கும் இன்பம் செய்து
பயண வழி தூரம் - நல்ல
பாதை மாறாமல் நடப்போம்
நம்பிக்கை மட்டுமே மனதில்!

வழக்கு

நீயும் நானும்
மானிடப் பிறப்பு
உனக்கும் எனக்கும்
உணர்வுகள் ஒன்று, - எனில்
வார்த்தைகள் கொண்டு
என்னை கொன்றது ஏன்?

குத்தியது உன் குற்றம்
என்றால் - தண்டனை
மட்டும் எனக்கா? - இது

சாட்சிகள் இல்ல வழக்கா?

நீதி வரும் நேரம்
வழக்குதரார் இருப்பதில்லை
வழக்கு மட்டும் நிலுவையில்
வழக்கில் மாற்றமில்லை
வழக்குதரார்கள் மட்டும்
மாறிக் கொண்டேயிருகின்றனர்!

பிரிவினை

நான் குஜராத்தி, நீ மராத்தியா?
நான் ஆந்திரா, நீ தமிழ் நாடா?
நான் சைவம், நீ வைணவமா?
நான் முதலியார், நீ நாடாரா?
பிரிவினை கேள்விகள் பலவிதம்
கேட்பதில் நமக்கு வெட்கமில்லை!

மாற்றமில்லாத ஒரே கேள்வி
ச்சே நீயும் ஒரு மனுஷனா / மனுஷியா?
சில சமயங்களில் கேட்கிறோம்
பல சமயங்களில் புதைக்கிறோம்
காயங்களை மனதின் ஆழத்தில்!!!

குழந்தைகள்

தீபத்தை போல குழந்தைகள்
சற்றே கூட்டியோ குறைத்தோ எண்ணெய் விடுங்கள்
திரி என்னும் ஆற்றலை முன்னே பின்னே இழுத்து விடுங்கள்
ஒருபோதும் அந்த விளக்குகளை வீதியில் வீசி
உங்கள் மனதினை இருளாக்காதீர்கள்
ஆசிரிய பெருமக்களே!

தோழமை

தாயின் கரம் பற்றி
சில காலம்
தந்தையின் தோள் பற்றி
பல நேரம்
நட்பின் நிழலில்
சிறிது நேரம்
நம்பிக்கை தோழமை
மட்டுமே என்றென்றும்!

சுதந்திரம்

ஆண்கள் தவறு
செய்வதற்கு பல காரணம்
பெண்கள் தவறு
செய்வதற்கு ஒரே காரணம்
அது
திமிர், - அப்படித்தான்
சொல்கிறார்கள் பெண்களும்!

ஆண்களின் சுதந்திரம்
அவர்களின் உரிமை

பெண்களின் சுதந்திரம்
ஆண்களின் பெருந்தன்மை
அப்படித்தான்
நினைக்கிறார்கள் ஆண்களும்!

Gist

Men always think high about themselves, let them be high and up in the air, but always don't forget to see that the women, your mother, girl friend/wife, daughter, sister, and many more are all down in(to) earth and looking upon gracefully after making you to fly!

வெற்றி வெகு தூரத்தில் இல்லை!!


கலங்காதிரு மனமே
ஏன் இந்த விரக்தி?
எண்ணங்களை - தீய
மனங்களை திருத்த
வேண்டும் உன் புத்தி!
உன் சிந்தனை சக்தி
இருக்கையில் ...
எதற்கு இந்த ஆயுத யுக்தி?

கலங்காதிரு மனமே

கடலைத் தேடி- தோழி
இந்த நதியோடி
சேரும் நேரமடி
வழியை அடைத்தவைகள்
அர்த்தமற்று போகுமடி..!
கலங்காதிரு மனமே

உச்சிக்கு செல்லும் சூரியனை
துன்ப மேகங்கள்
மறைத்திடும்..
மழை வரும் நேரம்!
பொறுத்திரு தோழா...
துன்பங்கள் விலகிடும்!
கலங்காதிரு மனமே

சுற்றும் பூமி
பாதை மாறுவதில்லை!
பொங்கும் கடல்
சற்றும் ஓய்வதில்லை!
உழைத்திடு நட்பே - ஒருநாளும்
சத்தியம் தோற்பதில்லை!
கலங்காதிரு உயிரே...!

உண்மை உறங்கவும்
உறவுகள் உதறவும்
வீதியில் விதி இறக்கவும்
சுற்றி நின்று இரக்கமற்றவர்கள்
கை கொட்டிச் சிரிக்கவும்
கலங்காதிரு காதலே..
உண்மை விழித்தெழும்
பொய்மை பொசுங்கிவிழும்
அன்பு மனம் தேடி வரும்!
கலங்காதிரு உறவே..!

சூல் கொண்ட மேகம்
மழை நீராக பிரசவிக்க
பூமி மகிழ்ந்திடும்!
நீ கொண்ட துன்பம்
கண்ணீராக பிரவாகிக்க
மன பாரம் குறைந்திடும்!
கலங்காதிரு கண்ணே!

அழுவதற்கு இனி கண்ணீரில்லை
சாய்ந்து கொள்ள ஒரு தூணுமில்லை
ஓய்ந்திருக்க இனி நேரமில்லை
துன்பங்களை கண்டு பயமில்லை
சாதிமத பேதமில்லை
இன மொழி பிரச்சனையில்லை
மனதில் கள்ளமில்லை
சிந்தனையில் துரோகமில்லை
வாழ்க்கையில் வஞ்சனையில்லை
கலங்காதிரு நட்பே....
வெற்றி வெகு தூரத்தில் இல்லை!!

Gist

Those who call themselves as intelligent are easily fooled by others in simple ways, as the intelligents always thinking high and floating on air and forgets the basics most of the times!
-------------------------------------------------------------------------------------------------------
When somebody keeps nagging you at your back, simply ignore them as you know very well they are losing their peace and sleep and you sleep peacefully with a clear heart!

அனுபவம்

கரும்புகை சூழும்வரை
மாசு கட்டுப்பாடு புரிவதில்லை!

மரங்களை வெட்டிச் சாய்க்கும்வரை
நிழலின் அருமை உணர்வதில்லை

மழைநீர் பொய்க்கும்வரை
குடிநீர் சிக்கனம் தெரிவதில்லை


துயரம் வந்து சேரும்வரை
உண்மை நட்பை அறிவதில்லை

மின்சாரத் தடை வரும்வரை
மெழுகுவர்த்தியின் அருமை புரிவதில்லை

காமம் தொலைந்து போகும்வரை
கற்பின் பெருமை உணர்வதில்லை

சிறகு முளைத்து வரும்வரை
தாயின் தாய்மை தெரிவதில்லை

வாழ்வில் நெறி தவறும்வரை
ஆசிரியரின் அறிவுரை புரிவதில்லை

யுத்தங்கள் இங்கே முடியும்வரை
இரத்தத்தின் மதிப்பு உணர்வதில்லை

சுவாசிக்கும் காற்று தடைபடும்வரை
சுதந்திரத்தின் வலிமை புரிவதில்லை

அந்நிய நாட்டில் தன்மானம் விற்கப்படும்வரை
சொந்த நாட்டின் சேற்று வயல் சுதந்திரம் நினைப்பதில்லை

தோல்விகளை சந்திக்க நேரும்வரை
வெற்றியின் கனி கிட்டுவதில்லை

இருப்பவற்றை எல்லாம் இழக்கும்வரை
இல்லாதவரின் வலி புரிவதில்லை

மவுனம் இங்கே கலையும்வரை
காதலின் மொழி புரிவதில்லை

நோய் வந்து தாக்கும்வரை
ஆரோக்கியத்தின் தேவை அறிவதில்லை

சொந்தங்கள் எல்லாம் கைவிடும்வரை
கடவுளின் கருணை உணர்வதில்லை

கரித்துண்டு வைரமாவதும்
சிப்பிக்குள் முத்து பிறப்பதும்
காலங்கள் பல கடந்துதான்!

அறிந்து அறிந்து சொன்னவற்றை
அனுபவத்தில் சந்திக்கும்வரை
அறிவுரையின் அர்த்தம் புரிவதில்லை!

ஹைக்கூ

செருப்பு தைப்பவனுக்கும்
துணிகள் தைப்பவனுக்கும்
ஒரு வேலை வாய்ப்பு அலுவலகம்
சட்டமன்றம்!

--------------------------------------------------
வாழ்க்கை வளர்ச்சி
பாதையில்,
செடி கொடிகளுக்கு தண்ணீர்!
புழுக்களுக்கு செடி கொடிகள்!
விலங்குகளுக்கு பறவைகள்! - ஆனால்,
மனிதர்களுக்கு மட்டும்
ஏனோ மனிதர்களே!

--------------------------------------------------
கொளுத்திய பிறகு
எறியப்பட்ட
தீக்குச்சிகள்
தொண்டர்கள்
 

Dreams of suppressed everywhere

கரு, உரு கொண்டு
வரும் போது கனவு!

உரு கொண்ட கரு
மலர்ந்து சிரிக்கும் போது
கனவு!

மலர்ந்து சிரிக்கும்
மொட்டு, மழலை
பேசும் போது கனவு!

மழலை பேசிய
மலர், கனியாகி
நிற்கும் போது கனவு!

கனி மணம் வீசும் போது,
கனியின் கனவு மலர்கிறது!
மலர்ந்த கனவு
ஆதிக்கத்தின் கையில்
கசக்கப்படும் போது கனவு!

கசங்கிய கனியின்
கனவு, அழிவின்
கையில் அகப்படும் போதும்
கனவு!

இந்த கனியின் அழிவில்
வரும் விதை உலகை
வெல்லும் என்றக் கனவு!

கனவில் பிறந்து,
கனவில் வளர்ந்து
கனவோடு கலந்து,
கனவின் பாதிப்பைப் பதித்து,
கனவோடு கரையும்,
அந்த கனியின் கனவு...???
கனவுகள் தொடர்கதை..

Gist

Three things that rules a man
and naturally the world, they are NEED, DESIRE and EGO...all else follows
--------------------------------------------------------------------------------
Life is short, make it sweet by your words and deeds! An illusionary world!
-------------------------------------------------------------------------------
Where you don't need to wear a mascot and be yourself to somebody at least 90% of your time and to the extent you can breath free and the same reciprocates...that's the person and that's the relationship whom/what you should rely on, and stand forever in the relationship, be it your parent, relative or friend!
 ---------------------------------------------------------------------------------------------------------
Between LIFE and DEATH, let ur miseries, failures and botheration deteriorate deep in ur heart and let the lessons learnt instigate and instill confidence in you and in others! Life is all about living and death is all about accepting! Keep smiling and shower the blessings of God! 
---------------------------------------------------------------------------------------------------------- 
Face this life with determination, all that it can give you is either failure or success, when you fail, you have a better option next and when you succeed you will know that's not the end!
-------------------------------------------------------------------------------------------------------------
When you lose your parents, you are an orphan, when you lose your friends, you are a loner, when you lose your love, you are a vacuum, when you lose money you are a beggar, if you lose your confidence you are a dead person!
----------------------------------------------------------------------------------------------------------   
only if tested it is known as Gold, only if moulded and burnt, clay become a vessel, only on the birth pangs, a new life starts...a seed has to emerge out of the soil to become a plant and then to become a tree...and it goes on and on..Focus and wither away troubles like dust as you are born as a tornado and here to only WIN and nothing else!
------------------------------------------------------------------------------------------------------------ 
When there is dusk there is dawn….all that you need to do is “keep trying” if not think “is it worth trying?” and move by asking
“what’s next”

----------------------------------------------------------------------------------------------------------   

பணம்

பணம் என்கிற தாள்
மனிதன் படும் பாடு
வெட்டப்பட்ட மரங்களின் சாபமோ?

சட்டம்

சட்டம்
ஏழைகளுக்கு மட்டும்
கருணை காட்டும்
விரைந்து தண்டனை தருவதில்!

காதல்

இதுதான் காதல் என்று
கனவில் திளைக்கிறோம்
கடந்து போன நாட்களை
நினைத்து அழுகிறோம்

முடிந்து போன நாட்கள்
முறிந்து போன உறவுகள்
கலைந்து போன கனவுகள்
எதில் வாழ்கிறது எண்ணங்கள்?

முன்னம் ஒரு காதல்
விடலைக் காதல், பின்னர்
ஒரு காதல் வசீகரக் காதல்
எல்லாம் தாண்டி வந்தது
பருவக் காதல் - கடைசியில்
நின்றது முதுமைக் காதல்!

கண்டு மகிழ்வதும் காதல்
பேசிப் பிரிவதும் காதல்
மனதில் பூட்டி மறைப்பதும் காதல்
போட்டியிட வைக்கும் காதல்
சாதிக்க வைக்கும் காதல்

இதுதான் காதல் என்று
பிதற்றி திரிகிறோம்
உண்மைக் காதலை
தேடி அலைகிறோம்

அரக்கனை புத்தனாக்கும் காதல்
அரசனை ஆண்டியாக்கும் காதல்
முள்ளில் தேனாய் வரும் காதல்
மலரில் மரணமாய் மாறும் காதல்

இவைதான் காதல் என்று
வரையறுத்து வாழ்கிறோம்
இவை எனது என்று
எல்லையிட்டு மடிகிறோம்!

எது காதல் என்று செய்தாலும்
பெறுவதும், தருவதும் குறிக்கோளாய் ஆனது!

குறிக்கோள் இல்லா காதல் பித்தனாக்கி போவதும்
இறை வேண்டும் காதல் சித்தனாக்கி போவதும்
இயல்பு என்று ஆனது, வாழ்க்கை மாறிப் போனது!

எதுதான் காதல் என்று
திரும்பி பார்க்கையில்..
அழுத குழந்தை - அடித்தவளிடேமே
வந்தது "அம்மா" என்று!

நோக்கம்

சுழன்றோடும் சுழல்கள்
எதுவாயினும்,
'அக்கா, உங்கள் வீட்டில்
எங்கள் அனைவர்க்கும்
இடமிருக்குமா?' என
முந்நூறு குழந்தைகளின் பிரதிநிதியாய்
என் கைபிடித்து கேட்ட ஒரு மழலையின்
வார்த்தைக்காகவே நான்
ஓடி கொண்டேயிருக்கிறேன் ஓய்வில்லாமல்
இறக்கும் முன் இயன்றதை செய்து விடும்

வேகத்தில்!
நோக்கத்தில் மாற்றமில்லை
வேக தடைகள் எதுவாயினும்!

ஒரு வார்த்தை கொல்லும்
ஒரு வார்த்தை வெல்லும்
நம் வாழ்க்கை வீழ்வதற்கோ - அல்லது
வாழ்வதற்கோ? - அது நம் கையில் தான்
என்பதை காலம் ஒருநாள் சொல்லும்!

உயிர்

தனக்காய் தன்
குழந்தைக்காய்,
ஒரு சிறிய தெருவில்
உணவு சேகரித்து
கொண்டிருந்த
ஒரு குருவி - அந்த
அதிகாலை நேரத்தில்
கண்மூடித்தனமான வேகத்தில்
வந்த ஒருவனது இரு
சக்கர வாகனத்தில் அடிபட்டு

உயிர் துறந்தது!

தனக்கான வழித்தடத்தை
மனிதன் அழித்துவிட்டதால்
தடம் மாறி வந்த
யானை ஒன்று
மனிதன் அமைத்த மின்சார வேலியில்
கால் வைத்து உயிர் துடித்து அடங்கியது!

பாலாய் தோலாய் என்ன
தந்தாலும், தனக்கு
போதிய உணவு அளிக்காத
மனிதனை நொந்தபடி
சுவரொட்டியை உண்ண
விழைந்த மாடு, சாலை
கடக்கையில் கனரக
வாகனம் மோதி கூழானது!

தோல் வற்றி
எலும்பு துருத்தி
வாடிய நாய் ஒன்று
எதற்கோ வேகமாய்
ஓடி இரக்கமில்லாமல்
நசுக்கப்பட்டது!

பஞ்சு பொதி போல்
ஒரு அழகான பூனை
யாரோ ஒருவர் விரட்ட
கன நேரத்தில், சாலையில் ஓடி,
காற்றில் கலந்த பஞ்சனாது!

அழகாய் அணிவகுத்து
செல்லும் எறும்பு கூட்டம்
எங்கோ ஒருவரின் பதட்டத்தால்
தேடி வந்து நம்மை கடித்துவிடுமோ
என்ற பயத்தினால்,
தினம் தினம் தரையோடு
மொத்தமாய் செத்து வீழ்கிறது!

இத்தனை கொலைகளை
நாம் செய்தாலும் - மெத்தனமாய்
தினம் அதை கடந்து செல்கிறோம்!

ஒரு அடி ஆனாலும்
ஆறடி ஆனாலும்
ஒரு மனித உயிர் வாகனத்தில்
அடிபட்டு இறக்கும் போது
மொத்தமாய் கடவுளை
சபிக்கிறோம் - அவரோ
சத்தமில்லாமல்
சிரிக்கிறார்
அன்றாவது இந்த சின்னஞ் சிறு
உயிர்களின் உயிர் வலி
உணர்ந்தீர்களா முட்டாள்களே
என்று!

நம்மை சார்ந்த உயிர்களின்
கொன்றொழிப்பு..நம்மையும்
கொல்லும் நாளடைவில்
வெவ்வேறு வடிவில்
வெவ்வேறு நேரங்களில்
விழித்து கொள்ளுங்கள் இன்றாவது!

இது மட்டும் பெண்கள் உலகம்



பாலியல் பலாத்காரம்
குழந்தைக்கோ, குமரிக்கோ
வரிக்கு வரி
வார்த்தைக்கு வார்த்தை
விவாதிக்கப்பட்டு, அலசப்படுகிறது
அந்த பெண்களின் ஒழுக்கமும்
குடும்பமும்....


குற்றம் செய்தவர்கள்
உத்தமர்களா என்ன?

பாலியல் தொழிலாளியின்
முகம், மொத்தமாய் ஒரு
இரவில் பிடிபட்ட நாளில்
ஒரு பெரும் குற்றவாளியின்
முகமாக சித்தரிக்கபடுகிறது!

படுத்து எழுந்தவன் சாமியின்
தூதனா என்ன?

கன்னியோ கணவனை
பிரிந்தவளோ, ஓடி போனவள்
மனங்கெட்டவளாகவே
வாழ்த்தப்படுகிறாள்!

நெருக்கித் தள்ளியவன்
நல்லவனா என்ன?

நாடு வீதியோ நடுக் கூடமோ
பெண்ணின் உடல் மீதான
வன்கொடுமைக்கு காரணம்
அவள் நடத்தையும் உடையுமே

கொடுமை செய்த கனவான்கள்
தேவ தூதர்களா என்ன?

ஒரு தலை பட்சமாய் காதலித்து
எங்கோ ஒருவன்
அதிசயமாய் உயிர்
துறந்தால் - அது
ஏதோ ஒரு திமிர் பிடித்த
பெண்ணினால் மட்டுமே

காதல் வன்முறை செய்தவன்
தியாக தீபமா என்ன?

ஆணுக்கு நிகராய் அவனை
விட அதிகமாய் உழைத்தாலும்
பெண்ணின் முன்னேற்றம்
அவள் அழகை கொண்டே
அமைந்தது என்கிற அவதூறு

சொல்கின்ற முட்டாள்கள்
விளக்கு பிடித்தார்களா என்ன?

உடல் கிளர்ச்சியினால்
பலாத்காரம் செய்யப்பட்ட
பெண்ணின் வாழ்க்கைக்கு
தீர்வு, கெடுக்கபட்டவனால்
கொடுக்கும் வாழ்க்கை...

வாழ்க்கை கொடுக்கும் வள்ளல்
நவீன ராமனா என்ன?

ஏதோ ஒரு சூழலில்
நிகழும் எந்த பெண்ணின்
மரணமும் - அவள்
கற்பின் மீதான சந்தேகத்தில்
மட்டுமே தன் முதல்
விசாரணையை துவங்குகிறது!
ஒரு முறை இறந்தவள்
பல முறை கொல்லப்படுகிறாள்
இவர்களால்...

எல்லா குற்றங்களும்
இங்கே பெண்களால்
மட்டுமே!

ஆண்கள் அனைவரும்
அவ்வளவு அப்பாவிகளா என்ன?????????????

ஜன(பண)நாயகம்

நான் ஆஸ்திரேலியாவில் melbourne நகரில் தூங்கி கொண்டிருக்கையில் எனக்கு இந்த கனவு வந்தது...சத்தியமாய் இது எங்கே நடக்கிறது என்றே எனக்கு தெரியாது...இது முழுக்க முழுக்க என் கனவும் கற்பனையுமே......உங்களுக்கு தெரிந்தால் உங்களோடையே வைத்து கொள்ளுங்கள்................
----------------------------------------------------------------------------

அரசே, இந்திய மக்கள் குடிப்பதற்கு கஞ்சி கூட இல்லாமல்
கஷ்டப்படுகி

றார்கள்....
அப்படியா? கஞ்சி இல்லை என்றால் என்ன, அவர்களை பிரட் பட்டர் சாப்பிட சொல்லு....

இது நடந்தது இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் ராஜ்யத்தில்...
------------------------------------------------------------------------------------------
இது நடப்பது சத்தியமாய் எங்கே என்று எனக்கு தெரியாது

மக்கள்: ஐயா போக்குவரத்து நெரிசல் அதிகம் ஆகிவிட்டது....
யாரோ: சரி, மரத்தை எல்லாம் வெட்டி சாலை போடு...அப்படியே நம்ம ஆளா பாத்து கான்றக்ட் போடு....

மக்கள்: ஐயா விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை.....
யாரோ: அப்படியா? பிளாட் போட்டு வித்துபோடு...அதுலே நல்ல எடமா பாத்து நம்ம பசங்க பேர்ல வளைச்சு போடு....

மக்கள்: ஐயா எங்களுக்கு குடிக்க கஞ்சிக்கே வழியில்லை...
யாரோ: அதுதான் அங்கே அங்கே டாஸ்மாக் கடை திறந்து வச்சிருகோமே...சரக்கு அடிச்சுட்டு சந்தோசமா இருங்க.....எங்க கல்லவா கட்டனும் இல்ல?

மக்கள்: ஐயா தமிழர்களை வதைக்கிறார்கள்...நாம் போராட்டம் நடத்த வேண்டும்...
யாரோ: சரி நாளைக்கு ஆப்டர் டிபன் பெபூர் லஞ்ச் ஒரு போராட்டம் நடத்துவோம்...பிறகு கடிதம் எழுதுவோம்...அப்புறம் ஒரு தீர்மானம் போடுவோம்...பிறகு கடிதம் எழுதுவோம்....பிறகு கருப்பு கோடி காட்டுவோம்...பிறகு அவர்கள் வந்தால் கூண்டில் அடைப்போம்..பிறகு ஒரு கடிதம் எழுதுவோம்...பிறகு ஒரு அறிக்கை விடுவோம்....பிறகு ஒரு புத்தகம் எழுதுவோம்...ஆவ்வ்...அட போங்கையா வேலைய பாத்துகிட்டு.....

மக்கள்: ஐயா கூடங்குளம் வேண்டவே வேண்டாம்...
யாரோ: எலேய்...நம்ம நாராயணசுவாமி ஐயா சொல்லுறாக அது சிவகாசி மாதிரி கிடையாதுன்னு (அமாங்க கரி கூட மிஞ்சாது)..நம்ம விஞ்ஞானி ஐயா சொல்லுறாக எதுவுமே நடக்காதுன்னு.....(அமாங்க எதுனா நடந்த நாம மொகத்தில் ஈர துணிய கட்டிக்கிட்டு உள்ளிய இருக்கணுமாம் இல்ல ஊர விட்டு ஒடனுமாம்...)....கரண்ட் வேணுமா....உசுரு வேணுமா...அட போங்கையா இன்னும் இருபது நாளில் உங்க எல்லாருக்கும் கரண்ட் கிடைச்சிடும்.....போத்திக்கிட்டு மொத்தமா தூங்குங்க ங்க ங்க ங்க....

மக்கள்: ஐயா, குழந்தை தொழிலாளர்களை தடுத்து கட்டாய கல்வி கொடுக்க வேண்டும்....
யாரோ: கவலை படாதேலே....எனக்கு ஓட்டு போடு..கொஞ்ச நாள்ள நாம பெரிய ஸ்கூல கட்டுவோம், அப்புறம் காலேஜ் கட்டுவோம்....உன் புள்ளைய கொஞ்ச பணத்தை கட்டி அங்கே சேத்து விடு.....நாமதன்லே எல்லாருக்கும் கல்வி கண்ணே திறந்துவிடுவோம்....(எலேய் நம்ம புள்ளைகளே ஊட்டி கோன்வேன்டுலே சேத்தாச்சா???)

மக்கள்: ஐயா நாட்டுலே உணவு பொருள் எல்லாம் சேமிப்பு கிடங்கு இல்லாமல் வீணாகிறது...
யாரோ: அட பாவிகளா...அதுக்குதானே வால் மார்ட் கூப்பிடுறேன்..அவன் அழகா எல்லாம் பேக் பண்ணி தருவான்லே...கொஞ்சம் அதிகமா காசு போட்டு நம்ம பொருள தரமான பொருள மாத்தி தருவான்லே??? (எலேய் நமக்கு கமிஷன் எவ்வளவு தருவான் நு கேட்டு சொல்லு)

மக்கள்: ஐயா நாட்டுலே வறுமை தாண்டவமாடுகிறது....
யாரோ: அப்படியா எல்லாருக்கும் இலவசமாய் செல்போன் தரலாம் இதை பற்றி பேசி முடிவெடுக்க வசதியாய் இருக்கும்...(எந்த செல்போன், காண்ட்ராக்ட் போட்டாச்சா???)

நான்: ஐயோ ஐயோ இவ்வளவு நேரம் படிச்சிங்களா? சும்மா ஒரு கதை எழுதி பார்த்தேன் இதுக்கு கிளைமாக்ஸ் சே கிடையாதுங்க.....போய் வேலைய பாருங்க.....

எதார்த்தம்

காகத்தை விரட்ட சொன்னார்
அத்தை...காய வைத்த தானியத்திற்காக

காகத்தை அழைக்க சொன்னார்
அத்தை அமாவாசை உணவிற்காக

சூழ்நிலை

ஒவ்வொரு பூவும்
அழகாய் தான்
பூக்கிறது - அது
பூஜைக்கோ?
புழுதிக்கோ- இல்லை
பூகம்பதிற்கோ?
சேரும் கைகளை பொருத்தது!

ஒவ்வொரு விதையும்
அழகாய்தான் எழுகிறது

அது
விதையாகுமோ
விழுதாகுமோ இல்லை
வீணாகுமோ
நேர்ந்திடும் சூழ்நிலையை பொருத்தது!

நிதர்சனம்

தொடும் வரை
சுடும் என்று தெரிவதில்லை

விழும் வரை
வலி என்று புரிவதில்லை

அழும் வரை
தெளிவு என்று உணர்வதில்லை

படும் வரை

வாழ்க்கை என்று அறிவதில்லை

சாகும் வரை
நிதர்சனம் என்று காண்பதில்லை

போகும் வரை
காதல் / நட்பு புரிவதில்லை!

அம்மா

ஏன் இவ்வளவு நேரம்?
கணவன் கேட்பான்

எங்கே சுத்திட்டு வரே?
சகோதரன் கேட்பான்

வேலை முடிந்ததா?
அப்பா கேட்பார்

இதையெல்லாம் செய்வது

எப்போ? - அத்தை கேட்பார்

நான் கேட்டது எங்கே?
பிள்ளை கேட்கும்.........

வந்து சாப்பிடுமா...
அம்மா மட்டுமே சொல்லுவாள்!

Me!

Sensitive in mind
To a friend
Strong in Soul
To a foe
Friend stay in heart
Foe stay in Sight
Friend to enlighten
Foe to envision
Friend or Foe
You are my beacon flare
-AMS

இயற்கையின் குமுறல்

மரம் வெட்டி
மனை அமைத்தனர்
நீர் தடுத்து
நெருப்பு மூட்டினர்
மண்ணை விஷமாக்கி
மனிதனை மலடாக்கினர்

பூகம்பமாய் கதறினேன்
ஆழி வெள்ளமாய் அழுதேன்
ஆற்றுவார் சிலரே!


நீர் கொண்டு பகை வளர்த்தார்
நிலம் பகுத்து நலம் தொலைத்தார்
மரம் வெட்டி மழை குறைத்தார்
பொன் கண்டு கண் இழந்தார்
பணம் பெருக்க மனம் தொலைத்தார்
இறுதியில்
அணுவை பிளந்து அழிவை தேடினார்

நீர் தந்தேன்,
நிலம் தந்தேன்
வளம் தந்தேன்
ப்ரான வாயு தந்தேன்
மடி தந்த என்னிடம்
பல வழி கண்டு கொத்து கொத்தாய்
செத்து மடிவதென்ன?
இயற்கை வழி மறந்தே போனதென்ன?

இழந்ததை மறந்து, இருப்பதை
தொலைக்க இத்தனை வழிகளா?
அறிவியல் கண்டது அழிக்கும் சிந்தனைகளா?

வளம் அழித்து
நலம் தொலைத்தீர்
இனி வளம் காக்க
நானே வருவேன் நாளை
ஆழி வெள்ளமாக, பூகம்பமாக,
பெரு மழையாக....புரட்டி போடும்
வறட்சியாக....
என்றாவது ஒருநாள்
மானுடம் துளிர்க்கும்!

மனசு

உணர்வுகளில் உள்ள உயிர் ஒன்று
உணர்வறியாமல் உறங்க சென்றது

உயிர் கொடுத்த உணர்வொன்று
ஊமையாய் உறைந்து நின்றது!

ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை!

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!