Monday 30 December 2013

தற்காப்பு

Photo: ஒரு வெறிபிடித்த நாய் மனிதரை கடித்து விட்டால், உடனே அதைக் கொல்கிறோம். 
காட்டை அழித்தால், தடம் மாறி வரும் விலங்குகளையும் ஆபத்தெனப் பிடித்துக் கூண்டில் அடைக்கிறோம்! ஆனால், பெண்களை வேட்டையாடும் மனித விலங்குகளை மட்டும் சாதி என்றும், அரசியல் என்றும் இல்லாத காரணக்காரியங்களை முன்னிருத்தி சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று, எல்லோரும் சாகும் வரை வேடிக்கை பார்க்கிறோம்! 

அடக்க முடியாமல் திரியும் ஆண்களுக்கு அறுவை சிகிச்சை செய்துவிடுங்கள், பெண்ணைப் போகப்பொருளாய் இழிவு படுத்திக் காட்டும் பத்திரிக்கைகளை, தொலைக்காட்சித் தொடர்களை, விளம்பரங்களை, திரைப்படங்களை எல்லாம் தடைச் செய்யுங்கள்.....

#அடிப்படையில் மாற்றம் காணாத வரை, தம்மை வேட்டையாட வரும் மிருகங்களைப் பெண்களே வேட்டையாட வேண்டும்! தற்காப்பு!
ஒரு வெறிபிடித்த நாய் மனிதரை கடித்து விட்டால், உடனே அதைக் கொல்கிறோம்.
காட்டை அழித்தால், தடம் மாறி வரும் விலங்குகளையும் ஆபத்தெனப் பிடித்துக் கூண்டில் அடைக்கிறோம்! ஆனால், பெண்களை வேட்டையாடும் மனித விலங்குகளை மட்டும் சாதி என்றும், அரசியல் என்றும் இல்லாத காரணக்காரியங்களை முன்னிருத்தி சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று, எல்லோரும் சாகும் வரை வேடிக்கை பார்க்கிறோம்!

அடக்க முடியாமல் திரியும் ஆண்களுக்கு அறுவை சிகிச்சை செய்துவிடுங்கள், பெண்ணைப் போகப்பொருளாய் இழிவு படுத்திக் காட்டும் பத்திரிக்கைகளை, தொலைக்காட்சித் தொடர்களை, விளம்பரங்களை, திரைப்படங்களை எல்லாம் தடைச் செய்யுங்கள்.....

#அடிப்படையில் மாற்றம் காணாத வரை, தம்மை வேட்டையாட வரும் மிருகங்களைப் பெண்களே வேட்டையாட வேண்டும்! தற்காப்பு!

தொலைக்காட்சித் தொடர்கள்

Photo: தொடர்ந்து தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நாளடைவில் பெரும் மனச்சிதைவு வந்துவிடுமோ என்று அச்சப்படும் அளவுக்கு இருக்கிறது கதையும் அதன் போக்கும்.....குழந்தைகளையும் கூட்டுச் சேர்த்துப் பார்ப்பது பெரும் கொடுமை! 

உறவுகள் அனைத்தும் பகைக் கொண்டவர்கள், ஒவ்வொருவரும், ஒவ்வொருவர் வீழக் காத்திருக்கிறார்கள், உண்ணும் உணவில் விஷம் இருக்கலாம், எச்சரிக்கை! 

# சாராயம், கஞ்சா, புகை, மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள்!


தொடர்ந்து தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நாளடைவில் பெரும் மனச்சிதைவு வந்துவிடுமோ என்று அச்சப்படும் அளவுக்கு இருக்கிறது கதையும் அதன் போக்கும்.....குழந்தைகளையும் கூட்டுச் சேர்த்துப் பார்ப்பது பெரும் கொடுமை!

உறவுகள் அனைத்தும் பகைக் கொண்டவர்கள், ஒவ்வொருவரும், ஒவ்வொருவர் வீழக் காத்திருக்கிறார்கள், உண்ணும் உணவில் விஷம் இருக்கலாம், எச்சரிக்கை!

# சாராயம், கஞ்சா, புகை, மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள்!

Sunday 29 December 2013

கீச்சுக்கள்!











Photo: சோம்பலில் சுகம் கண்டோரை மாற்றுவதற்குப் பதில், தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்துவிட்டு போய் விடலாம்! 
# ரொம்பக் கஷ்டமப்பா!
சோம்பலில் சுகம் கண்டோரை மாற்றுவதற்குப் பதில், தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்துவிட்டு போய் விடலாம்!
# ரொம்பக் கஷ்டமப்பா!

------------------------------------------------------------
முன்பு போட்ட நிலைத்தகவலுக்கு எதிர்வினைப் போல, இருபுறம் என்பது போய், இன்று மொத்த சாலையும் முடக்கப்பட்டுவிட்டது, வெறும் கார்களை நிறுத்த வேண்டி!

இன்று ஒருவேளை எல்லோரும் வெளியில் வரக்கூடாது என்று அறிவுறுத்தபட்டிருக்கலாம், அல்லது முன்பே வேறு எங்கேனும் சென்றிருக்கலாம், ஏதேனும் ஓர் அவசரத்திற்கு, ஓர் ஆம்புலன்ஸ் அந்த இடத்தைக் கடக்க முடியாது, நேரே சொர்க்கத்திற்குத் தான் செல்ல வேண்டும்!

#ஆள்பவருக்கும் ஆளப்படுபவர்களுக்கும் இருவேறு சட்டங்கள் இருக்கும்வரை நீதி என்பது குதிரைக் கொம்பே!

 
------------------------------------------------------------------------
அன்பிற்காகவும், கடமை ஆற்ற வேண்டியும் பல நேரம் நாம் இதை இழக்க வேண்டி இருக்கிறது, அப்போதெல்லாம் ஒன்றுதான் தோன்றுகிறது, இந்த உப்பு கம்பெனி விளம்பரங்கள் எல்லாம் பொய் சொல்லுகிறது யுவர் ஆனர்!
# இந்த சூடு கம் சுரணை மிஸ்ஸிங்!
feeling meh. 
-----------------------------------------
தவறு செய்வது என்பது இயல்பாகவும், தவறு செய்யவில்லை என்பது பெருத்த ஆச்சரியமாகவும் பார்க்கப்படுகிறது!
# சட்டத்தையும் மாற்ற வேண்டியதுதானே?!
feeling excited. 
-------------------------------------------------------------
ஒரு விஷயமாய் அலைந்து திரிந்த போது, ஏம்மா நீ நம்ம முருகேச..............பொண்ணுதானே? என்று சாதி பெயரையும் சேர்த்து ஒரு பெரியவர் கேட்க, ஆமாங்க முதல் பாதிப் பெயர் எங்கப்பாவோடதுதான், இரண்டாவது பாதி யாருன்னு தெரியலையே என்று, சிரித்துக் கொண்டே சொன்னவுடன்...பார்த்தாரே ஒரு பார்வை! அவருக்கு ஒரு நெற்றிக் கண் இருந்திருந்தால் எரித்திருப்பார் என்றே தோன்றியது! — feeling குறும்பு மற்றும் குசும்பு! சிக்கிடாண்டா கைப்புள்ள! :-).
--------------------------------------------------------------------------------
பெரிய ஷாப்பிங் மால்களில், அல்லது சிறிய கடைகளில், அல்லது நெடும் பயணம் மேற்கொள்ளும் தொடர்வண்டிகளில், வழியில் வரும் நிறுத்தங்களில்....என்று எங்கும் கழிவறை என்பது தேவை இல்லாத ஓர் இடமாகவே கருதப்பட்டு மிக மிகக் கேவலமாய்ப் பராமரிப்பில்லாமல் (கட்டண வசூலிப்புத் தவிர) இருக்கிறது...

கழிவை அகற்றும் இடம் சுத்தமாய் இல்லை என்றால், உண்மையில் பல்வேறு நோய்க் கிருமிகளை அல்லவா மனிதர்கள் சுமக்க நேரும்?

எத்தனை வனப்பென்றாலும், மனித உடலில் கழிவென்பது போகவில்லை என்றால், எல்லாம் குலைந்துப் போகும், கழிவறைகள் சுத்தமில்லாமல் இருந்தாலும், பிணிகள் உடலில் நிரந்தரமாய்க் குடிகொள்ளும்!

# வெளியிலும், வீட்டிலும் மற்ற அறைகளின் சுத்தம் போலவே கழிவறை சுத்தத்தையும் பேண வேண்டும்! பிற அறைகளை அலங்கரித்து, கழிவறையை விட்டுவிடுவது என்பது,குளித்துவிட்டு, அழுக்கான உள்ளாடையை அணிந்து கொண்டு மேலுக்குப் பகட்டான பட்டாடையை அணிந்துக் கொள்வதைப் போன்றது!
Photo: பெரிய ஷாப்பிங் மால்களில், அல்லது சிறிய கடைகளில், அல்லது நெடும் பயணம் மேற்கொள்ளும் தொடர்வண்டிகளில், வழியில் வரும் நிறுத்தங்களில்....என்று எங்கும் கழிவறை என்பது தேவை இல்லாத ஓர்  இடமாகவே கருதப்பட்டு மிக மிகக் கேவலமாய்ப் பராமரிப்பில்லாமல் (கட்டண வசூலிப்புத் தவிர) இருக்கிறது...

கழிவை அகற்றும் இடம் சுத்தமாய் இல்லை என்றால், உண்மையில் பல்வேறு நோய்க் கிருமிகளை அல்லவா மனிதர்கள் சுமக்க நேரும்? 

எத்தனை வனப்பென்றாலும், மனித உடலில் கழிவென்பது போகவில்லை என்றால், எல்லாம் குலைந்துப் போகும், கழிவறைகள் சுத்தமில்லாமல் இருந்தாலும், பிணிகள் உடலில் நிரந்தரமாய்க் குடிகொள்ளும்! 

# வெளியிலும், வீட்டிலும் மற்ற அறைகளின் சுத்தம் போலவே கழிவறை சுத்தத்தையும் பேண வேண்டும்! பிற அறைகளை அலங்கரித்து, கழிவறையை விட்டுவிடுவது என்பது,குளித்துவிட்டு, அழுக்கான உள்ளாடையை அணிந்து கொண்டு மேலுக்குப் பகட்டான பட்டாடையை அணிந்துக் கொள்வதைப் போன்றது! 
-----------------------------------------------------------------------------------
ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என்ற அறிவிப்பு/சலுகைத் தாங்கி வரும் பெரும்பாலான பொருட்கள் யாவும், இரண்டின் விலையை ஒன்றில் தாங்கியே வருகிறது!
# வியாபாரத் தந்திரம்!
---------------------------------------------------------------------------------------------------
எப்போதும்
அந்திப்பொழுதில்
என்னையே சுற்றுவாய் - பின்
பொழுதுகளில் பேதமில்லாமல்
நானே உன்
உலகமாகிப் போனேன்
எனக்காக
நீ பாடும் இசை
யாருக்கும் கேட்காது,
எப்போதும் இரத்த தானம்
உன்னால் -
சிறகுகள் இருந்தும்
என்னையே சுற்றுவதேன்
கொசுவே?!
— feeling sad கொசுத்தொல்லை தாங்க முடியலை!
Photo: எப்போதும் 
அந்திப்பொழுதில் 
என்னையே சுற்றுவாய் - பின் 
பொழுதுகளில் பேதமில்லாமல் 
நானே உன் 
உலகமாகிப் போனேன் 
எனக்காக
நீ பாடும் இசை 
யாருக்கும் கேட்காது, 
எப்போதும் இரத்த தானம் 
உன்னால் - 
சிறகுகள் இருந்தும் 
என்னையே சுற்றுவதேன் 
கொசுவே?!
--------------------------------------------------------------------
சுட்டுவிடுவான் என்று தெரிந்தும் வெள்ளையனை வீரத்துடன் எதிர்த்தவர்களின் வாரிசுகளா (நாம்) இந்தியர்கள்?
#பணம், பதவி என்று சொன்னவுடன் நிறையப் பேரைக் காணோம், யார் காலில் யாரோ!
— feeling amused அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!
-----------------------------------------------------------------------
ஓர் அரசு அலுவலகம், வரிசையில் மக்கள், கௌண்டரின் அருகே இரண்டு கண்காணிப்புக் காமெராக்கள்....ஒருவர் வருகிறார், "சார் நான் கிளம்பறேன்" என்று நகர, ஒரு கௌண்டரில் இருந்தவர் அவசரமாக இன்னொரு ஊழியரை அழைத்து, சென்றவர் பின்னே அனுப்புகிறார். விடைப்பெற்றுச் சென்றவர் மீண்டும் வருகிறார், ஒரு புத்தகத்தைக் கௌண்டரில் இருப்பவரிடம் கொடுத்து, "அப்புறம் படிங்க சார், நான் வரேன்!" என்கிறார்! மேட்டர் ஓவர்!

#2G, 3G எல்லாம் கடந்தாச்சு, யார்கிட்ட?! 
--------------------------------------------------------------------------------------------
எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் ஒருவருக்குக் கடைசியில் கிடைப்பதென்னவோ தனிமையும், ஏமாளி பட்டமும் தான்!
-------------------------------------------------------------------------------------
ஒருவரின் சோம்பலை இன்னொருவரின் உழைப்பு ஈடு செய்யும்!
------------------------------------------------------------------------------------
ஊக்கபடுத்தும் வார்த்தைகள் குழந்தைகளின் முகத்தையும், உலகத்தையும் இன்னும் சற்று அதிகமாகப் பிரகாசிக்கச் செய்கிறது!
Photo: ஊக்கபடுத்தும் வார்த்தைகள் குழந்தைகளின் முகத்தையும், உலகத்தையும் இன்னும் சற்று அதிகமாகப் பிரகாசிக்கச் செய்கிறது!   
----------------------------------------------------------------------------------------
"சரி, முதலில் நான்தானே அந்த ஐடியா சொன்னேன்....... "

"அடக் கேளேன்..... "

"சரி, நீ பேசினதை நான் கேட்டேன், இப்போ நான் சொல்றதை நீ கொஞ்சம் கேளு ....ஒரே ஒரு நிமிஷம் பா...."

"ஐயோ, சரி, இன்னைக்குப் பேசினா சரியா இருக்காது, நீ கேட்க மாட்டே, நீ நாளைக்கு வா, நான் பேசுறேன்!"

நான்கரை வயது மகள் ஓர் எட்டு வயது தோழியுடன் யார் முதலில் விளையாடுவது என்ற விவாத்தில் கூறியதுதான் மேற்கூறியே வாக்கியங்கள்.....
அம்மாவிடத்தில் விட்டுகொடுக்காமல் குறும்பு செய்யும் குழந்தை, தோழியுடன் ஒரு பெரிய மனுஷத் தோரணையில் பேசும்போது புரிகிறது, இந்தக் காலக் குழந்தைகள் ரொம்பத் தெளிவாய் இருக்கிறார்கள்!
— feeling blessed. 
Photo: "சரி, முதலில் நான்தானே அந்த ஐடியா சொன்னேன்....... "

"அடக் கேளேன்..... "

"சரி, நீ பேசினதை நான் கேட்டேன், இப்போ நான் சொல்றதை நீ கொஞ்சம் கேளு ....ஒரே ஒரு நிமிஷம் பா...." 

"ஐயோ, சரி, இன்னைக்குப் பேசினா சரியா இருக்காது, நீ கேட்க மாட்டே, நீ நாளைக்கு வா, நான் பேசுறேன்!" 

நான்கரை வயது மகள் ஓர் எட்டு வயது தோழியுடன் யார் முதலில் விளையாடுவது என்ற விவாத்தில் கூறியதுதான் மேற்கூறியே வாக்கியங்கள்.....
அம்மாவிடத்தில் விட்டுகொடுக்காமல் குறும்பு செய்யும் குழந்தை, தோழியுடன் ஒரு பெரிய மனுஷத் தோரணையில் பேசும்போது புரிகிறது, இந்தக் காலக் குழந்தைகள் ரொம்பத் தெளிவாய் இருக்கிறார்கள்!
 
 
 
 
 


நா காக்க

gossip

யாரோ வடித்த
சிலையை -
நீங்கள் செதுக்குவதும்
விந்தை!
சுயம்புவை செதுக்கி
சில்லுகளாக்க வேண்டாம்,
உங்கள் வார்த்தைகளின்
உளியில்!

மௌனம் என்பது
மரணத்திற்குச் சமம்
பல வேளைகளில்!
பிறிதொரு வார்த்தை
எழுப்பிடாது ஏற்கனவே
செத்துவிட்ட சிலையை!

யாகாவா ராயினும் நாகாக்க!

Thursday 26 December 2013

சாதகப் பறவை






ஊடல் கொண்ட
மனங்களின் பின்னே,
எழும்
மௌனத்தின்
பேரிரைச்சலை,
அன்பு நிரம்பிய
மனம் ஒன்று
சங்கீதமாய் மாற்றிடும்
இயைந்த உள்ளம் கருதி!

 

Wednesday 25 December 2013

கானல் நீரே

ஆற்றல் காணாத கோபமும்
கருணை மறந்த புன்னகையும்
அன்பில்லாமல் படைக்கும் உணவும்
கடமை ஆற்றாத உறவும்
ஈரம் இல்லாத பகையும்
காதலில்லாத காமமும்
நேர்மை இல்லாத அரசாங்கமும்
சோம்பிக் கிடக்கும் உடலும்
வானம் பொய்த்த பூமியும்
அரவணைக்காத தாய்மையும்
காத்து நிற்காத ஆண்மையும்
தோள் கொடுக்காத நட்பும்
வறண்ட பாலையில் தோன்றும்
கானல் நீரே, - இருந்தும்
இல்லாதது போலவே!
வாழ்வதற்காக வாழ்கிறது
மானுடம்!

பகை

தள்ளி விட்டுச் சென்றபின்
வருவதென்ன மாயமோ?
கொடுத்த பின் பெறுவது
பரம்பரைக்கு இழுக்கு
மன்னித்துத் தந்த உயிரை
மாய்த்துக் கொள்ளாதே உயிரே
சற்றே விலகி நில்!

Monday 23 December 2013

அனாதை


வலிக்கிறது
அழுகிறேன் - வலி
உணராது நகைக்கிறாய்
இது வலிக்குமா என
வியக்கிறாய்

ஒவ்வொன்றையும்
இழந்து - இன்று
கண்ணீரையும்
இழக்கிறேன்!

ஆற்றுவார் இல்லாத
சுயம்புவின் வலி
ஆற்றலாய் மாறும்,
அதுவரை என்னை
அழவிடு!


 

பூக்களைப் பறிக்காதீர்!


பிஞ்சை பறித்து
நஞ்சை வார்த்து
கொன்றுப் போட்டீர்!

இளமையில்
வறுமைத் தந்து -
தோல் கருக்கி
கந்தலில்
கலங்க விட்டீர்!

தாயிடமிருந்து பிரித்து
கண்களைக் குருடாக்கி
பிச்சையினைப் புசித்தீர்!

மலரை முகர்ந்து
பலருக்குத் தாரை வார்த்து
காமத்தை வளர்த்தீர்!

மதங்களை மதித்து
சாதியினைப் போற்றி
இளங்குருத்துக்களை
எரித்தீர்!

இனி,
காட்டில் வாழும்
புலிகள் கூடத் தோழனாகும்,
வெவ்வேறு பசிகளில்
பிள்ளைகள் தின்று
நாட்டில் திரியும் 
உங்களை என்ன செய்ய?

அப்படியே

 
கண்ணாடி
மனங்களில்,
நம்பிக்கை
நிலைப்பெற்றால்,
அதன்
பிம்பங்களும்
புன்னகைக்கும்!








வருத்தம்!


வெளிப்படுத்தி
இருந்திருக்கலாம்
அவ்வன்பினை
என்னிறுதி என்றே
தெரிந்திருந்தால்

உணர்த்தாது
இருந்திருக்கலாம்
அத்தவறினை
அவனிருதி என்றே 
நான் அறிந்திருந்தால்

இருப்பின் வேண்டுதல்
இல்லாததிலும்
வாழ்வின் தேடல்
முற்றுப்புள்ளியிலும்
என - பெரும் 
காட்சிப் பிழைகளிலும் 
மன மயக்கங்களிலும்
உழன்று நோகுமன்றோ
இவ்வாழ்வு!

சங்கமம்

 
தேங்கி நின்றால்
குட்டை
ஓடிச் சென்றால்
நதி
கலந்து விட்டால்
கடல்,
பேதங்கள்
உடைந்து,
எல்லைகள்
விரிந்து,

நேசிப்பின்
ஆழம் காணும்
ஒரு பேரன்புச்
சங்கமம்!

Wednesday 18 December 2013

தொலைந்தவை
























அப்பாவும் அடிப்பார்
அம்மாவும் அடிப்பார்
எல்லோரும் அடிப்பார்கள்

கல்லெனக் கருதி
உணர்வினைக் கேளாமல்
சிற்பம் செதுக்குவார்கள்

நிற்பது சிலையல்ல
சில்லு சில்லாய் போன
உணர்வென்று அறியாமல்
இறுதியில் வேண்டி நிற்பார்
ஈரம் - உடைந்துபோன
ஒரு குழந்தையிடம்!

இயலாமை


அறைந்து
மூடப்பட்டது 
இறைவனின் 
கருவறை

இன்னமும்
கையேந்தியபடி பக்தன்
பிச்சைக்காரனாய்
இயலாமை!
 

Tuesday 17 December 2013

உறங்கும் கவிதை


என் காதல் கவிதைகள்
உறங்குகின்றன என்னுளேயே
யாரது என்று, அபத்தமாய்
நீ ஏதும்
கேட்டுவிடக் கூடாதென்று! 

Monday 16 December 2013

ஓடை


மலர் எறிந்தால்
கரைச் சேர்க்கும்
கல் எறிந்தால்
ஆழம் கொள்ளும்

வீசும்
வேகத்தின் கண் 
நீர் தெளிக்கும் - 

தாகத்தையோ
மீறும் உன் 
கோபத்தையோ
அது தணிக்கும்

வேறேதும்
தெரியாது ஓடைக்கு
போய் வா பகையே!
கோடைக்கு முன்!

நானும் ஓர் ஆடு!


அதிகாலை வெளிச்சம்
அந்திவேளையின் இருள்
சிறகடிக்கும் பறவை
சட்டென்று விழும்
ஒரு பனித்துளி

சுழன்றடிக்கும் காற்று
மழை ரசிக்கும் குழந்தை
முறைத்துப் பார்க்கும் காகம்
அசைபோடும் மாடு

பிச்சைக் கேட்கும்
கரங்கள்
கந்தலில் கலங்கடிக்கும்
வறுமை

பார்வையில்
தகித்திடும் வெற்றுக் காமம்
சாலையில்
சாய்ந்திடும் போதை
காகிதத்தில்
விலைப்போகும் நேர்மை 

அழகையும்
அவலத்தையும்
ரசித்தும் சகித்தும்,
வலி விழுங்கி
கடந்து செல்லும்
உயிருள்ள மந்தையில்
நானும் ஓர் ஆடு!

பூக்கள் மென்மையானவை!


புதிதாய் ஒரு பக்கம்
தினம் திறக்கிறேன்
புன்னகையோடே - உனக்காக
இந்த வாழ்க்கைப் புத்தகத்தில்!

கடுமையும் இனிமையும்
மாறி மாறி கண்ணீர் நிரப்பும்
எழுதுகோலில் - ஏனோ
கசிகிறது சிவப்பு,
விரல்களின் வழியே
எப்போதும்!

கசிகின்ற குருதியிலும்
பூ மணம் ஒன்றே வீசும்
பூக்கள் மென்மையானவை
புரிந்துகொள்ளேன் ஒரு நாளில்?

Friday 13 December 2013

நினைவலைகள் - தோழி



நினைவலைகள் - தோழி
-------------------------------------
எங்கிருக்கிறாய் நீ
சூழும் பொய்களின்
கைகளில் எனை விட்டு
நீ எங்குச் சென்றாய்?

எங்கிருக்கிறாய் நீ
வட்டத்திற்குள் இருந்து
சாரல் பொழிந்திடும் சில
மரங்கள் உண்டு -
மழைப் பெய்திட உன்னை
எதிர்நோக்குகிறது மனம்

எங்கிருக்கிறாய் நீ?
தேங்கி நின்ற
கண்ணீரில் இருப்பது
தூசியா, துயரமா
உனையன்றி யாரறிந்தார்
மற்றுமொரு தாய்மை
கண்டிட விழையுது தினம்

எங்கிருக்கிறாய் நீ?
பலநாள் கண் திறவாமல்
கிடக்க, கரம் பற்றி மீட்டாய்
உயிர் கொடுத்த உன் ஸ்பரிசம்
வேண்டி தவிக்கிறது இக்கரம்

எங்கிருக்கிறாய் நீ?
ஒவ்வொரு முறையும்
பிழைத்து விழிக்கையில்
உனக்காகவே இந்த விழிப்பென்று
நினைவில் நிற்கிறாய் நிதம்!

எங்கிருக்கிறாய் நீ?
பேதங்கள் சாய்த்திடவில்லை
கடிகாரத் தேவையுமில்லை
ஒரு பணக் கணக்கும் இல்லை
நிரந்தர மனப்பிணக்கும் இல்லை
கண்கள் மறைத்த பொய்களில்லை
கரம்பற்றி உணராதா உண்மைகளில்லை
யாருக்கும் வாய்த்திடா வரம்

எங்கிருக்கிறாய் நீ?
எப்போதும் நாமும்
மழையும்
இப்போது நானும்
மழையும் மட்டும்

எங்கிருக்கிறாய் நீ?
தொலைவில் உன் மூச்சுக் காற்று
இதோ இன்றும் நான் சுவாசிக்கிறேன்
காற்றில் தேடுகிறது என் உயிர் நாளும்! 

Thursday 5 December 2013

குற்ற மூட்டையை இறக்கி வையுங்கள்!

நன்றி - தி ஹிந்து

குற்ற மூட்டையை இறக்கி வையுங்கள்!
------------------------------------------------------
ஒரு துறவியும், அவர் சீடர் ஒருவரும் காட்டு வழி நடந்து சென்றனர். இருவரும் ஓர் ஆற்றைக் கடக்க நேர்ந்தது. அப்போது, ஒரு பெண் ஆற்றைக் கடக்கத் தயங்கி நின்றுகொண்டிருந்தாள். தனக்கு உதவி செய்யுமாறு அவள், அவர்கள் இருவரையும் கேட்க, துறவறம் கொண்டபின் பெண்ணைத் தொட்டுத் தூக்குவதா என்று சீடன் யோசிக்க, துறவி சட்டென்று அந்தப் பெண்ணைத் தூக்கிக்கொண்டு ஆற்றைக் கடந்து, அந்தப் பக்கம் இறக்கி விட்டு விட்டார்.

சீடனுக்குப் பெரும் குழப்பம், துறவி எப்படி அந்தப் பெண்ணைத் தொட்டுத் தூக்கலாம் என்று. துறவியும் சீடனும் நெடுநேரம் நடந்து, நெடுந்தூரம் கடந்தபின்னும் சீடனுக்கு குழப்பம் தீரவில்லை. சரி கேட்டு விடுவோம் என்று, "குருவே அந்தப் பெண்ணை நீங்கள் தூக்கியது துறவறத்துக்கு இழுக்கல்லவா?" என்று கேட்க, குரு சொன்னாராம், "சீடனே நான் அந்தப் பெண்ணை அப்போதே இறக்கி விட்டு விட்டேனே, நீ இன்னுமா சுமந்து கொண்டிருக்கிறாய்?" என்று!

இப்படித்தான் நம்மில் பலரும் பிறர் மீதான கோபத்தை, நாமாக உருவாக்கிக் கொண்ட அபிப்ராயத்தைச் சுமந்து கொண்டு இருக்கிறோம். நீ என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய், அது இப்படியில்லை, இது இப்படிதான் நடந்தது, அப்படி புரிந்துக் கொள்ளப்பட்டது என்று பேசினாலே பல விஷயங்களுக்கு விளக்கம் கிடைத்துவிடும். மன்னிப்பிலும், விளக்கத்திலும் சில விஷயங்கள் தெளிந்து விடும், காலபோக்கில் சிலது நீர்த்து விடும். ஆனால் நாம் பேச விரும்புவதில்லை, கேள்விக் கேட்க விரும்புவதில்லை, நாமே நமக்கு அறிவாளி, பிறர் எல்லாம் கோமாளி என்ற ரீதியிலேயே நமது நினைப்பும், செயலும் அமைந்து விடுகிறது.

ஒருவரைப் பற்றிய கருத்துக் கொண்டவுடன், அவன்/அவள் அப்படிச் சொன்னான்(ள்), இப்படி எழுதினாள்(ன்) என்று நமக்கு நெருங்கிய ஒரு வட்டத்திற்குள் கதைக்கத் தொடங்குகிறோம், ஒரு புள்ளிக்குக் கொஞ்சம் கொஞ்சமாக உருவம் கொடுத்து நிறைவு செய்கிறோம். இப்படியே உண்மை விளம்பிகளாக நாம் கிசுகிசுப்பில் லயித்து, ஏதோ ஒருவனை அல்லது ஏதோ ஓர் அமைப்பை பற்றிய ஓர் உருவகம் அல்லது மனபிம்பம் கொள்கிறோம்.

இந்த முறையில் ஏதோ ஒரு மனம் புண்படலாம், ஏதோ ஓர் அமைப்புச் சிதைந்திடலாம், ஏதோ ஒரு தற்கொலை நிகழ்ந்திடலாம், எங்கோ ஓர் உறவு பிரிந்திடலாம். அத்தனையும் செய்தவர்கள், இந்தப் பிரிவையோ, பிளவையோ சரி செய்திட முடியாது, போன உயிரையும் திருப்பித் தர இயலாது!

தனி மனிதர்களாக நம்முடைய தெளிவுப்படுத்திக் கொள்ளாத சிந்தனையும் செயல்களும் பல்வேறு தாக்கங்களை நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு உடனடியாகவே ஏற்படுத்தும். தேவையில்லா ஒரு கிசுகிசுப்பு ஏதோ ஓர் அண்டை வீட்டாரைப் பாதித்திடலாம், ஏதோ ஒரு தற்கொலைக்கு தூண்டலாம். உதாரணத்திற்குப் பக்கத்துக்கு வீட்டில் ஒரு பெண் யாரையோ ஓடிப் போய்த் திருமணம் செய்தால், அண்டை வீட்டார் அந்தப் பெற்றவருக்கு ஒரு தைரியத்தையோ, துணிவையோ, தெளிவையோ தருகிறார்களோ இல்லையோ, அதற்குள் ஒரு மிகப்பெரிய திரைக்கதையை இயற்றி, அதை விநியோகித்தும் இருப்பார்கள்.

தவறான தகவல்களால் உருவான வதந்தி, அவர்களைப் பொருத்தவரை தொலைக்காட்சித் தொடரை விட ருசிகரமானது. கொஞ்ச காலம் அந்தப் பெண்ணும் குடும்பமும் தான் எல்லோர் வீட்டுக்கும் விளம்பர இடைவேளை இல்லாத ஒரு தொலைக்காட்சித் தொடர். அத்தனை சுவாரசியம் அந்தத் தலைப்பு! வதந்தி காட்டு தீ போல் மெல்ல மெல்ல பரவி, சொல்பவரின் நாக்கை நெருப்பாக்கி, கேட்பவரின் புத்தியை கருப்பாக்கி விடுகிறது.

சரி தனி நபர் இப்படி என்றால், மக்கள் சாதனக் கருவிகள், அமைப்புகள் என்ன செய்கின்றன? பத்திரிக்கை / தொலைக்காட்சி செய்யும் புரளிகள், ஒரு பெரும் தாக்குதலையே ஏற்படுத்தி விடும்..

ஏதோ ஓர் 56 வயது பெண்ணையும், அவருடைய மகனையும் ஒருவன் கொலை செய்திட, உடனே அந்தப் பெண்ணுடைய கள்ளக்காதலன் சுமார் இத்தனை மணிக்கு வந்தான், இருவரும் உல்லாசமாய் இருந்தார்கள், அப்புறம் அவர்களுக்குள் தகராறு, பெண்ணைக் கள்ளக்காதலன் கொலை செய்ய, மகன் குறுக்கே பாய அவனும் கொல்லப்பட்டான். இப்படியாகப் போகும் அந்தக் கதை.

காவல் துறையினருக்குக் கூடத் தெரியாத விஷயமெல்லாம், கொலை நடந்த உடனே இவர்களுக்குத் தெரிந்து விடுகிறது, பிறகு மொத்தக் குடும்பத்தையும் அலசி ஆராய்ந்து, அவர்கள் வீட்டுக் கொள்ளுப் பாட்டியில் இருந்து, அந்த வீட்டில் பழைய சோறு தின்ற நாய்க்குட்டி வரை அத்தனை பேரின் வரலாறும், புகைப்படங்களும் பிரசுரித்து ஒரு மிகப் பெரிய சாதனை படைப்பார்கள். எதிர் வீடு, பக்கத்து வீடு, பக்கத்து வீட்டுக்கு எதிர் வீடு, எதிர் வீட்டுக்கு பக்கத்து வீடு என எல்லாருடைய கருத்துகளையும் வாங்கிப் போடுவார்கள்.

காவல் துறை புலனாய்வு செய்து, அந்தப் பெண்ணின் கணவருக்கும், கொலைகாரனுக்கும் ஏற்பட்ட பகையில் நடந்த கொலை இது என்று வழக்கை முடிக்க, ஒரு சிறு மன்னிப்பு கூட இல்லாமல், அந்தச் செய்தியையும் போடும், ஒளிபரப்பும் இந்த ஊடகங்கள். நிற்க. இது ஓர் உதாரணமே. மிகப்பெரிய ஊடகங்களிலும் மனிதர்கள் தாங்களாக தெரிந்து கொண்ட செய்திகளை, தெளிவுப்படுத்திக் கொள்ளாமல் ஏதோ ஒரு பரபரப்பிற்காக, பணம் பெருக்கும் காரணத்திற்காக பரப்புரை செய்து விட்டு, மன்னிப்பு கேட்கும் ஒரு அறம் கூட இல்லாமல் போவதுதான் வேதனையான விஷயம்.

உண்மையில் இந்த நிகழ்ச்சிகளுக்கு/ நிகழ்வுகளுக்குப் பின்னே இருப்பது என்ன? ஒரு விதமான மனச்சிதைவு! ஏதோ ஒரு வடிகால், ஒரு குறுகுறுப்பு.

கேள்வி கேட்க வேண்டிய இடத்தில் நமக்குக் கேள்விக் கேட்க முடியவில்லை என்றாலும் அதை நெருக்கமானவர்களிடம் பேசி தொலைத்து, மறந்து விடலாம், ஆனால் கேட்க உரிமை உள்ள இடத்தில், அல்லது வாய்ப்பு உள்ள இடத்தில் கேட்காமல் விடுவது, உண்மையில் கேள்வி கேட்க நாம் விரும்பாததையும், அந்தக் கேள்விக்கு வரும் பதில் சுவாரசியம் இல்லாமல் போய்விடுமோ என்ற சில நிலைப்படும் காரணமாய் இருக்கலாம், அல்லது ஓட்டுப் போட்டு விட்டு எப்போதும் அல்லாடும் ஒரு சாதாரணக் குடிமகனாய் இருக்கலாம் அல்லது ஏதோ ஒரு பகையைத் தீர்த்துக்கொள்ள, ஒரு வளர்ச்சியைத் தடுக்க அல்லது ஓர் உறவை முறிக்கப் பயன்படுத்தும் ஓர் ஆயுதமாகக் கருதியும் கேட்காமல் இருக்கலாம்!

வாழ்க்கைக்கு, சுதந்திரத்திற்கு ஆதாரமான எதையும் கேட்கவும், தெளிவுப்படுத்தி கொள்ளவும் நமக்கு நேரமில்லை. மாறாக இந்தச் சமுதாயம், நடிகையின் தொப்புளைப் பற்றிய கிசுகிசுப்பில் லயித்துக் கிடக்கும், திரைப்படம் வெளி வரவில்லை என்றால் பெரும் போராட்டம் நிகழ்த்தும், காந்தி ஜெயந்திக்குச் சாராயக் கடை திறந்தால் என்ன என்று விவாதிக்கும், வாங்கிய வரியில் மக்களுக்கு என்ன நன்மை நடந்தது என்று கேட்கத் தவறும், கேட்டாலும் சட்டங்கள் பாயும், சட்டம் படித்த வல்லுனர்களும் வாய்தா வாங்கிப் போராடிக் கொண்டிருப்பார்கள், சாதி மதம் எனப் பிளவுபட்டு, ஒற்றுமை இழக்கும், வளர்ச்சியை இழக்கும், நிலத் தரகர்களின் பிடியில் விவசாயியைக் கொல்லும், உள்ளூர் வியாபாரிகளைக் கொன்று விட்டு, சீனத்து வணிகம் வளர்க்கும், பிறகு சீனா, அருணாச்சலத்தை அளக்க பதற்ற நாடகம் செய்யும், தமிழர்களின் ஓட்டு கேட்கும், மறுபக்கம் ஆயுதம் தந்து அவர்களைக் கொல்லும், சாலை விதிகளைப் பற்றிய சட்டம் இயற்றும், சாராயக் கடைகளும் அதுவே நடத்தும், படித்தவனைக் கடினமாகப் பிழியும், அதிகாரி ஆக்கும், பதவி பெற்ற ஏதோ ஒரு ரௌடிக்கோ, ஊழல் செய்யும் ஒரு பெருசாளிக்கோ அவனைச் சேவகம் செய்யச் சொல்லும், மரம் வளர்க்கச் சொல்லும், மறுபக்கம் சுரங்கம் தோண்டி காடு அழிக்கும், வளங்கள் திருடும்.

எத்தனை எத்தனையோ இந்தச் சமுகத்தில் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கும். சில கேள்விகள், சிலரின் போராட்டங்கள் எங்கோ சிலருக்கு நீதியை பெற்று தந்துக் கொண்டும் இருக்கும்.

பேசமுடியாத இந்த சமூகத்தில் உள்ள சட்ட அமைப்பும், தவறு செய்பவனை விட, பாதிக்கப்படுவனைத் தான் இங்கே அதிகம் போராட வைக்கிறது என்பதே பொதுஜனம் புரிந்து கொண்ட நிதர்சனம்.

குறைந்தபட்சம் நம்மை நாம் திருத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது, வளரும் தலைமுறைக்கு ஒரு வழிக்காட்டுதல் தேவை இருக்கிறது. அந்த வழிகாட்டுதல் இல்லாத வரை, நீதி இரத்தம் சிந்திக் கொண்டுதான் இருக்கும் இந்த ஊமையான சமூகத்தில்.

புரையோடிப் போனவற்றைப் போராட்டமும், மக்களுக்கான சட்டமும் சரி செய்யட்டும், வளரும் இளந்தலைமுறைக்கேனும் வழிகாட்டுதலை வீட்டில் இருந்தே துவங்குங்கள், குழந்தை வளர்க்கும் போதே, இன்று என்ன நடந்தது என்று தினம் கேட்க வேண்டும், குற்றம் குறைகளைக் குழந்தைச் சொல்லும் போது, அந்தக் குழந்தையைச் சரியானபடி வழி நடத்த வேண்டும், அதனுடைய சந்தேகங்களைத் தீர்க்க வேண்டும், நண்பர்களுடன் அந்தக் குழந்தைக் கொண்ட ஊடலை, தானே பேசித் தெளிவுப்படுத்திக் கொள்ளச் சொல்ல வேண்டும், இல்லை சம்பந்தப்பட்ட எல்லாக் குழந்தைகளையும் அழைத்து, அவர்களுக்குப் பேசித் தெளிவுப்படக் கற்றுக் கொடுக்க வேண்டும். அதை விடுத்து, அந்தக் குழந்தையைத் திருப்பி அடி, அந்தக் குழந்தையுடன் சேராதே, ஆம்பிளைப் பசங்க அப்படிதான், பெண் பிள்ளைக்கு அடக்கம் வேண்டும், இந்தச் சாதி, அந்த மதம் எல்லாம் அப்படிதான் என்று தப்பும் தவறுமாகச் சொல்லிக் கொடுக்கும் அடிப்படையில் உருவாகிறது தீவிரவாதம், தீவிரவாதிக்கு பொறுமையில்லை, கேட்டு தெளியும் அறிவும் இல்லை. பொறுமையும் அறிவும் இல்லாதவருக்கு வன்முறை ஒன்றே ஆயுதம்!

பின்னாளில் இவர்களில் ஒருவர் குற்றவாளியாகலாம், ஒரு பெண்ணைச் சிதைக்கலாம், அல்லது வாழும் வீட்டை நரகமாக்கலாம். இவர்கள் அதிகாரிகளானால், அரசியலில் ஈடுபட்டால், கொள்ளைகளும் கொலைகளும் தொடரலாம். அதனால் ஒரு பாதுகாப்பற்றச் சமுதாயம் உருவாகும், போராட்டங்கள் தொடரும்.

கேள்விக் கேட்க வேண்டிய இடத்தில் கேள்விக் கேட்க வேண்டும், தெளிவு பெற வேண்டும். கேட்கும் தன்மையையும் தெரிந்து கொள்ள வேண்டும், இல்லையென்றால் நம் நாட்டில் இனிவரும் காலங்களில் அதிகமான காவலர்களும், மருத்துவர்களும் மட்டுமே தேவைப்படுவர்.

ஒவ்வொரு அரசியல்வாதியும், அதிகாரியும், சாதி மதத் தலைவர்களும், ரௌடியும், கொலைகாரனும், கொள்ளைக்காரனும், வாய்முடிக் கிடக்கும் ஊடகங்களும், குடிமகனும் தங்களுக்கும் சாவு வரும், தன் தலைமுறை தன்னால் சேதப்படுத்தப்பட்ட இந்தப் பூமியில் தான் வாழ வேண்டும் என்ற நினைப்புக் கொண்டு, இனியேனும் திருந்தினால் தான் அடுத்த தலைமுறை வாழ்ந்திடும், கேட்டு, அறிந்து, ஆய்ந்து தெளிந்திடும்.

விதை பழுது ஆனால், விருட்சம் எப்படி வளரும்? வருங்காலம் வளமாக இருக்க, உங்கள் வீட்டில் குழந்தைகள் மனதில் நல்லதை விதையுங்கள். அன்பையும் அறிவையும் உரமாக்குங்கள்.

அடுத்த தலைமுறை கையில் பூக்களோடும், புத்தகங்களோடும் இருக்க வேண்டுமா அல்லது கத்தியோடும், கறையோடும் இருக்க வேண்டுமா?

முடிவு உங்கள் கையில்.

மு. அமுதாவின் வலைப்பதிவுத் தளம் http://amudhamanna.blogspot.in/

http://tamil.thehindu.com/opinion/blogs/குற்ற-மூட்டையை-இறக்கி-வையுங்கள்/article5421072.ece

குடி

பெயரில் பாதியை பெண்ணைப் போற்றும் பெயராகக் கொண்ட ஒரு புகழ் பெற்ற எழுத்தாளரின் ஒரு சமீபத்திய புதினத்தைப் படிக்க நேர்கையில், ஒரு பெரும் அதிர்ச்சியே கிடைத்தது!

குடிக்க விரும்பும் ஆண் மீது எந்தத் தவறும் இல்லை, இன்றைய காலக்கட்டத்தில் அது தவிர்க்க முடியாத ஒன்று, அவன் குடித்தால் என்ன? யாருடைய கையையும் பிடித்து இழுத்து வன்முறை செய்யவில்லையே, ஆணின் தவறுகளைச் சகித்துக் கொள்ள முடியாத பெண்களுக்கு வாழ்வில் எந்த மதிப்பும் கிடையாது, ஆகா ஓஹோ என்று, குடித்து விட்டு வாந்தி எடுத்து, தன்னிலை மறக்கும் கதாநாயகனை உத்தமனாகவும்........

குடிப்பது ஒரு பெரும் குற்றம், சமூகத்தில் நடக்கும் பல அவலங்களுக்கு, ஒரு குடும்பம் சிதைந்து போவதற்கு அதுவே காரணம், குடிப்பவனைச் சகித்துக் கொண்டால், எல்லாத் தவறுகளையும் சகிக்க வேண்டி வரும், அதனால் தனக்கு வரப்போகும் கணவன் குடிக்கக் கூடாது என்று ஆசைப்படும் கதாநாயகியை அடங்காப்பிடாரியாகவும், மனதில் பட்டதை வெளிப்படையாய் ஒரு பெண் பேசுவது தவறு என்றும், குடித்தால் என்ன, நன்றாகப் படித்திருக்கிறான், சம்பாதிக்கிறான், அவனை நானே திருமணம் செய்து கொள்கிறேன் என்று கதாநாயகி மறுக்கும் ஒரு குடிகாரனை அவளுடைய தங்கையே மணந்து கொள்வது போலவும், குடும்பமே குடித்தால் என்ன, அதுதான் சரி என்று போற்றுவது போலவும், குடிகாரனை மறுத்த பெண் பெரும் திமிர் பிடித்தவள் என்றும், அவள் தனியாய் நிராகரிக்கப்பட்டு நிற்பது போலவும் கதையைக் கொண்டு சென்று முடித்து இருக்கிறார்.....

இவரின் கதைகள் தொலைகாட்சியில் நெடுந்தொடராகவும் வந்ததாகக் கேள்வி.....இவரை டாஸ்மாக் வியாபாரம் இன்னும் பெருக, மொத்த தமிழ்நாட்டு மக்களையும் குடிகாரர்களாக்க, ஒரு கொள்கைப் பரப்பு செயலராக நியமித்தால் நன்றாய் இருக்கும் என்று தோன்றியது!

# ஆகவே ஆண்களே, நீங்கள் குடித்து, வாந்தி எடுத்து, தெருவில் அலங்கோலமாக விழுந்து கிடந்தால் அதில் தவறேதும் இல்லை, உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு அவர்களும் குடிகரார்கள் ஆனால் தவறேதும் இல்லை, குடித்துவிட்டு வாகனம் ஒட்டி யாரேனும் இறந்தால் தவறேதும் இல்லை, ஒரு குடிகாரன் காமுகனாகி ஒரு பெண்ணைச் சீரழித்தாலும் தவறேதும் இல்லை, அவள் உங்கள் பெண்ணாய் இருந்தாலும்......

ஆகவே.......குடியுங்கள், நாட்டின் வருமானத்தைப் பெருக்குங்கள்!
feeling annoyed.

Gist

மாற்றமில்லாத முடிவு என்று எதுவும் இல்லை, மாறும் வேளையில் அது முடிவும் இல்லை!

When a man perceives or believes his “Intelligence” to be superior to others, then slowly another man conquers him easily in the name of “Arrogance”


You may be a skilled driver, but your safety mostly depends on the driving skills of another driver and on the courtesy of public trying their circus tricks on the roads in Chennai!

Somebody's self realisation, behind every maxim!

Seashore is always noisy and calmness resides in the centre as you move on

There is always somebody behind you on what you have achieved, may be as an enlightened/loveable soul or as a brutal killer!

Life is a maze and it is interesting as long as you are trying to find the way out!
# Explore


ரசித்துச் சுவைக்கும் நபர்கள் இருக்கையில், விதவிதமாய்ச் சமைப்பதிலும் ஓர் ஆர்வம் வருகிறது!
#வயிற்றில் அடங்கிவிடும் வாழ்க்கை!
 
 
 
 
 
 

சூன்யம்

வெறித்துப் பார்த்தாலும்
முறைத்துப் பார்த்தாலும்
புலம்பித் தீர்த்தாலும்
மாறப்போவது
ஒன்றுமில்லை
அட....
இந்த வாழ்க்கைதான்
எத்தனை அழகானது
எதிர்பார்ப்புக்கள்
நொறுங்கி போய்
விலகிப்போகும்
ஒரு தருணத்தில்!
# சூன்யம்

கைப்பிடி உணவு


கடனை மறந்தவர்
அன்பை மறந்தவர்
துரோகம் செய்தவர்
பாவம் செய்தவர்
இல்லை என்று சொன்னவர்
முடியாது என்று தள்ளியவர்
உழைப்பை உறிஞ்சியவர்
பொய் வேடம் பூண்டவர்
எல்லோரும் குழுமி இருந்தனர்
அவனுடைய சவ ஊர்வலத்தில்,
"நல்ல மனுஷன்யா,
இப்படியா போகணும்?"
சலசலத்துத் துடைத்துக் கொண்டனர்
கண்களில் வராத கண்ணீரை
தூரத்தில் ஒரு காகம்
மட்டும் கரைந்து கொண்டிருந்தது
என்றோ அவன் வைத்த
ஒரு கைப்பிடி உணவுக்காக!





Friday 29 November 2013

கருணை

















அந்தக் குருவிக்கும்
எனக்குமான மொழி
உனக்குப் புரிந்திடாது
எனக்கான ஒரு மொழி
உன்னிடம் இல்லாதபோது!
# கருணை

கீச்சுக்கள்

யாராவது வந்து, "வாடா ஒரு தம் போடலாம்" என்று புகைப்பதற்கு அழைக்கும் போது, "டேய் வாடா, கொஞ்சம் புற்றுநோய் அணுக்களை ஏற்றிக்கலாம்" என்றும், "வாடா சரக்கடிக்கலாம்" என்று அழைக்கும் போது, "வாடா மச்சான், கொஞ்சம் விஷம் சாப்பிடலாம்" என்று காதில் அசரிரி விழுந்தால், மறுப்பவருக்கு நலம்!
 -----------------------------------------
யாரும் யாரையும் சந்திப்போமோ இல்லையோ, ஒரு "குடிமகன்" இன்னொரு "குடிமகனை" நிச்சயம் சந்திப்பான், கிளைகள் பரப்பி நிற்கும் ஏதோ ஒரு தெருவில், ஏதோ ஒரு முக்கில்!
#இந்த ஃபார் இல்லைனா இன்னொரு ஃபார்
  

 --------------------------------------------------
பெரும்பாலும் சுயமரியாதையின் சமாதியின் மேல்தான் பதவி, புகழ் போன்ற மாடங்களின் கட்டுமானம் தொடங்குகின்றது!
-----------------------------------------------------------
தள்ளி நின்று பார்த்தால் ஒன்றுமேயில்லை
# வாழ்க்கை

--------------------------------------------
படுத்துவிட்டால் அரித்துவிடும் இல்லை எரித்துவிடும்,
மண்ணும், நெருப்பும்!

இவைகளுக்கு மட்டும் நீங்கள் யாரென்பது பற்றியோ, உங்கள் கடந்தகாலம் பற்றியோ எந்தக் கவலையும் இல்லை!
# உணர்தல் அவசியம்!

----------------------------------------------------
Behind every smile, resides a pain and behind each endurance there is enlightenment!
--------------------------------------------
எத்தனை தெளிவாய்ச் சிந்தித்தாலும், நமக்கென்று வரும்போது அனிச்சம் மலராய் துவண்டு விடுகிறது மனசு!
--------------------------------------------
பகிரப் பெருகும் அட்சயம் தானே அன்பும், காதலும்!
----------------------------------------
நாம் முட்டாள்கள் என்று அவர்கள் பேசிக்கொண்டே இருக்கிறார்கள், கொள்ளை அடித்துக்கொண்டே இருக்கிறார்கள்......அவர்களைக் கோமாளிகளாக்கி நாமும் வேடிக்கைப் பேச்சு பேசிக் கொண்டே இருக்கிறோம், பாதுகாப்பில்லாத ஓர் உலகம் நம் தலைமுறைக்காக உருவாகிக் கொண்டே இருக்கிறது...நாம் உறங்கிக் கொண்டே இருக்கிறோம்!
------------------------------------------------
பணம் அசைப்பதை
மனம் அசைப்பதில்லை!

-------------------------------------------------------------
Photo: Everyman who deceives or disparages a woman will taste the bitter fruit and will know how the pang would be one day through his beloved and that happens to be his daughter mostly.
# Untold pain is more dreadful! 
A 

Everyman who deceives or disparages a woman will taste the bitter fruit and will know how the pang would be one day through his beloved and that happens to be his daughter mostly.
# Untold pain is more dreadful! 

-----------------------------------------------------------
இளையவரோ, முதியவரோ, ஆணோ, பெண்ணோ, இவர்களில் சிலருக்குத் தெரிகிறது எதை எதைச் சொல்லி, எப்படி எப்படிக் காய் நகர்த்தி, எதை எதை அடைய வேண்டும், எதை எதை விலக்க வேண்டும் என்பது...வயது வித்தியாசப் பாகுபாடு இல்லாத இந்தச் சூறாவளிகளின் போட்டியில், சில புற்களின் பாடுகள்தான் பரிதாபமாய் ஆகி விடுகிறது!
# எங்கெங்கு காணினும் அரசியலாட!

--------------------------------------------------------------
Photo: நமக்காக ஒன்று காத்திருப்பதன் மதிப்பு நமக்கு என்றுமே தெரிவதில்லை 
# நேரம் நேரம் நேரம்!        
நமக்காக ஒன்று காத்திருப்பதன் மதிப்பு நமக்கு என்றுமே தெரிவதில்லை
# நேரம் நேரம் நேரம்!

----------------------------------------------------------------
Photo: நாமே நமக்கு அறிவாளி, பிறர் எல்லாம் கோமாளி! 
நாமே நமக்கு அறிவாளி, பிறர் எல்லாம் கோமாளி!
------------------------------------------

Photo: தவறு செய்பவனை விட, பாதிக்கப்படுபவன் தான் இங்கே அதிகம் போராட வேண்டி இருக்கிறது. 
தவறு செய்பவனை விட, பாதிக்கப்படுபவன் தான் இங்கே அதிகம் போராட வேண்டி இருக்கிறது.
-----------------------------------------------------------
Photo: தாய்மை கொள்ளும் வரை தாயின் அன்பு புரியாது, 
சேயாய் உணரும் வரை, தாயின் அவசியமும் தெரியாது! 
 தாய்மை கொள்ளும் வரை தாயின் அன்பு புரியாது,
சேயாய் உணரும் வரை, தாயின் அவசியமும் தெரியாது!

-----------------------------------------------------
சுவற்றில் ஆரம்பித்து, அப்புறம் மெதுவாய் நடைபாதையை ஆக்கிரமித்து, இன்னும் கொஞ்சம் இறங்கி, சாலைகளையும் ஆக்கிரமித்து, தலையை நிமிர்த்திப் பார்த்தால், அட மேம்பாலத்திலும் ஆக்கிரமித்து....ஸ்ஸ்ஷப்பா.........................

இப்படி எல்லா இடத்திலும் விடாம அரசவைக் கவிஞர்கள் ரேஞ்சுக்கு வாழ்த்துப் பாடி விளம்பரப் பலகைகள் கட்டுறீங்களே, வாகனங்கள் புடை சூழ, வேகமாய் விரையும் வாகனத்தில் இருந்து இத்தனையையும் படித்து விட முடியுமா, அட யார் யார் என்று குறிப்பெடுத்து விட முடியுமா?
# நிற்க நமக்கு அரசியல் தெரியாது!

---------------------------------------------------------
வருகையில் மழையைச் சபிக்கும்,
பின் பொட்டல் வெளியில் நின்று
ஒரு சொட்டு நீருக்காகத் தவிக்கும்
#விந்தை உள்ளமும் உலகமும்

---------------------------------------------------
வாழும்போது உதிர்த்த ஒரு வார்த்தைக்கோ, கோரிக்கைக்கோ ஆன ஓர் அர்த்தமும், தெளிவும், அல்லது ஒரு குற்ற உணர்வும் பெரும்பாலும் நமக்கு ஒரு மரணத்தில்தான் கிடைக்கிறது
-------------------------------------------------     
   
  

Thursday 28 November 2013

தோழமை























ஏதோ ஒரு தனிமைக்குள்
அகப்பட்டவளுக்கு - ஒரு
சன்னல் கண்ணாடியின் மறைவில்,
சிறிய உடைபட்ட
விளிம்பின் இடைவெளியில்,
உற்று நோக்கிய ஒரு புறாவின்,
ஒற்றைக் கண்ணின் அருகாமை
போதுமானதாயிருந்தது -
பரவிக் கிடந்த
வெறுமையை வெறிக்கவும்
உடைக்கவும்!

Tuesday 26 November 2013

வார்த்தைகள்

















கோபத்தில்
குதிரையாய்
நேசத்தில்
ஆமையாய்
உருபெறும்!

ஆத்திரத்தில்  
ஊற்றாய்
ஆசையில்
தேங்கிடும்
குட்டையாய்
வெளிப்படும்!

கடுப்பில்
சுனாமியாய் 
காதலில்
மௌனத் துறவியாய்
ஆட்கொள்ளும்

#வார்த்தைகள்!

Wednesday 13 November 2013

மனமிருப்பின்

இதுவே கடைசிப் பயணம்
என ஆகும் போது
தராத எதையும்
தந்துவிட
எண்ணாதீர்கள்

நான் என நின்ற
நானிலிருந்து
விழுந்து
விடாதீர்கள்

சாதி மதக்
கொள்கைகளை
மாற்றிக்
கொள்ளாதீர்கள்

நீயுமா என்று
அவன்(ள்) துடித்ததை
நினைவில்
கொள்ளாதீர்கள்

ஊசிபோல்
உள்ளிருந்து துளைக்கும்
மனதிற்காகவோ
ஊருக்காகவோ
உருகி ஒழுகி ,
துயரம்,
செதுக்காதீர்கள்

மனமிருப்பின்
பிறிதொரு
வாழ்கையைச்
செதுக்குங்கள்
வாழும்போதே!

மரணம்
















யாருமற்ற யாரோ ஒன்றிற்கு
தானுமற்றுப் போகச் செய்த
ஏதோ ஒன்று, நீதான் எல்லாமென
யாரோ யாரோவாகி விட்ட வேளையில்
தானே வந்து கதறி நிற்கிறது
ஏதோவாகிவிட்டதன்
கல்லறையில்!

ஒன்றிருந்தால் ஒன்றில்லை

கேட்பதற்குச் செவிகள்
மட்டும் போதாது,
உள்ளார்ந்த ஆர்வம் வேண்டும்

தானம் செய்யச் செல்வம்
மட்டும் போதாது,
விரும்பித் தரும் கருணை வேண்டும்

காதல் செய்யத் தனிமை
மட்டும் போதாது,
இசைந்து உருகும் அன்பு வேண்டும்!

வாழ்வதற்கு வலிமை
மட்டும் போதாது,
இயைந்து வாழும் சமூகம் வேண்டும்!

முடிவு


 ஒன்று, தோல்வியை விதைத்து
முடிவிற்குத் தூண்டுகையில்,
ஏதோ ஓர் அன்பு
வாழவும் சொல்கிறது!

ஒவ்வொன்றும் கடக்கையில்
மனம் கனத்து,
பற்று விலகி, பார்வை தெளிகிறது,
பாதையும், வலிகளும் ஒருநாள் 
முடிவுக்கு வருகிறது!

Thursday 31 October 2013

போரின்றி அமையாது!


வீசும் புயற்காற்றில்
போரிட்டு
கொண்டிருக்கிறது
மரம்

சில கிளைகள்
முறிகின்றன
சில விதைகள்
புதைகின்றன
முன்னமே 

விடியலில் 
சில பனித்துளிகள்
இலைகளை
நனைக்கின்றன
வேரின் தாகத்தை
தணிக்காமல் 

புயல் தோற்றால்
அமைதித் திரும்பும்
மரம் தோற்றால்
கூடுகளும் குஞ்சுகளும்
சிதறிப் போகும்

சில வேர்களின் பிடியில்
நிலைக் கொண்டு
ஆடிக்கொண்டிருக்கிறது
மரம்

 

கசடுகள்!



மறைக்கப்படும்
வன்மத்தை விட
தெறித்து விழும்
கோபம் மேல்!

சுனாமி


பெரும் அழுத்தம் தாங்காமல்
வெடித்துக் கிளம்பி, வாரிச் சுருட்டி
வடிகால் தேடிக் கொண்டது கடல்
சுனாமி!

மூளைச்சலவையும் அன்றாட வாழ்க்கையும்


பல்வேறு தளங்களில் சமூக அக்கறை அற்ற ஒரு பெருங்கூட்டம், சாதி சொல்லி, மதம் சொல்லி, விளையாட்டு திறன் காட்டி, காட்சி மாயை காட்டி அரசியல் தலைவர்கள் ஆகிறார்கள், ஏதோ ஒரு பொதுசேவகன் தப்பித் தவறி அரசியலுக்கு வந்துவிட்டால், இருக்கவே இருக்கிறார்கள் குண்டர்களும் தொண்டர்களும் முற்று புள்ளி வைக்க!

சமூகத்திற்கு நல்ல ஒரு வழிகாட்டி கிடைக்கும் வரை, நீதி என்பது கொஞ்சம் கொஞ்சமாய் இரத்தம் சிந்திக் கொண்டுதான் இருக்கும்! இங்கே நமக்கு இருக்கும் வழிகாட்டிகள் எப்படிப் பட்டவர்கள்?

இவர்களை எடுத்துக் கொள்வோம;

 1. நடிகர்கள் நடிக்க வேண்டும், விளையாட்டு வீரர்கள் மைதானத்தில் திறமையைக் காட்ட வேண்டும், ஒரு பொருளின் தரத்தைப் படித்து, உணர்ந்து தெரிந்து கொள்ள முடியாத கல்வித்தரத்தில், குறைகளை எதிர்த்து எளிதில் குரல் கொடுக்க முடியாத சமூகத்தில், உருவாக்கிய விஞ்ஞானியோ, உபயோகிக்கும் பாமரனோ கொடுக்க முடியாத உத்தரவாதத்தை எந்தப் பொருளுக்கும் இவர்கள் எப்படிக் கொடுக்கிறார்கள்?

2. பட்டா இல்லாத நிலங்களை வாங்கச் சொல்லுகிறார்கள், கரியமில வாயு நிறைந்த பானத்தைக் குடிக்கச் சொல்லுகிறார்கள், வாசனைத் திரவியத்தைப் பூசிக் கொண்டால் பெண்கள் எல்லாம் ஆடை அவிழ்த்துப் பின்னே வருவார்கள் என்கிறார்கள்..............

3. கூவி கூவி விற்கும் நிலத்தில், ஏதோ ஒரு விவசாயியின் மறைந்திருக்கும் கண்ணீர் தெரிவதில்லை, நம் நீரை உறிஞ்சி, அதில் சந்ததி கொல்லும் விடம் கலந்து விற்பது தெரியவில்லை, நம் பெண்கள் எல்லாம் ஆடை அவிழ்த்து ஆண்கள் பின்னே செல்பவர்களா என்ற சூடு உணர்ச்சிக் கூட இல்லை, பணத்துக்காக ஒரு கூட்டமும், அறியாமையில், ஏதோ ஓர் இயலாமையில் மற்றொரு கூட்டமும் இங்கே மூளைச்சலவை செய்யப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறது.

4. அடுத்துத் தொண்டர்கள் எனப்படும் குண்டர்கள்;

ஒரு கல்லை எறிந்து கூட்டத்தில் எளிதில் கலகம் உண்டாக்கி கட்சி மோதல் செய்கின்றனர்,

ஓர்  ஊர்வலத்தில் ஒரு சிலையின் மேல் செருப்பை வீசி எறிந்து, மதக் கலவரம் உண்டாக்குகின்றனர்,

தனிப்பட்ட ஒரு விரோதத்தை, ஏதோ ஒரு வன்மத்தை தீர்க்க, ஏதோ ஓர் ஆதாயம் பெற, சாதிக் கலவரமாக மாற்றம் செய்கின்றனர், யாரோ ஒருவரை கொலை செய்கின்றனர், ஏதோ ஒரு காதலை கொலைக்களமாக மாற்றுகின்றனர், ஏதோ ஒரு கூட்டத்தில் அப்பாவிகளைக் கொல்ல வெடி வைக்கின்றனர், அந்தப் பற்றி எறியும் நெருப்பில் அரசியல் செய்கின்றனர், ஆட்சி நெருக்கடி செய்கின்றனர்.....

5. இப்படியான நெருக்கடியில் சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தமும், இன்னொரு பலி கேட்கும் வன்மத்தை உருவாக்குகிறது, சாதிய அமைப்பு வலுப்பெறுகிறது, வாய்ச்சொல் வீரர்கள் போலி சாமியார்களாகவும், உடல் பலம், அமைப்புப் பலம் கொண்டவர்கள் ரௌடிகளாகவும் உருவாகின்றனர்....

6.ஒவ்வொரு நிகழ்வும் வாக்குச் சாவடியில் விழும் வாக்குகளை மாற்றி அமைக்கிறது!

7. மக்கள் எல்லோரும் தெளிவுப் பெற நல்ல கல்வி அவசியம்! ஆனால் கல்வியின் திசை இங்கே மாற்றி அமைக்கப்படுகிறது, அடித்தட்டு மக்களுக்கு அதுவும் மறுக்கப்படுகிறது, படித்தவன் சுயநலவாதியாகவும், படிக்காதவன் உணர்ச்சியின் குவியலாகவும் மாறிப்போகின்றனர், இரண்டுமே ஒரு சமுதாயத்திற்கு நல்லதில்லை!

8. இப்படிப்பட்ட கல்வித்தரம் அமைந்த சமுதாயத்தில் குற்றங்கள் உணர்ச்சி வேகத்தில் நடக்கின்றன, நீதி, பணம் ஆடும் ஆட்டத்தில் தள்ளாடி தள்ளாடி சில வேளைகளில் வெல்கிறது, பல நேரங்களில் குமுறிக் குமுறி சாகிறது!

9. பயப்படும் மக்களைத் திசை திருப்பி, கேள்வி கேட்க துணியாவண்ணம் ஒரு நெருப்பை அவ்வப்போது கொளுத்திபோட்டால் போதும், உணர்ச்சி வசப்படுபவனைச் சாதி கொண்டு மதம் கொண்டு, இனம் கொண்டு கட்டிபோட்டால் போதும், படித்தவனுக்கு மேலும் வசதி, ஆதாயம், இல்லை ஒரு மிரட்டல் போதும்....

10. திரைகாட்சியின் மாயையில் ஒரு பக்கமும், அச்சம் தரும் சமூக அமைப்பில் மறுபுறமும் இந்தத் தலைமுறைகள் தள்ளாடி கொண்டிருக்கிறது, சாதி மத, கட்சி அமைப்புகளில் பழைய தலைமுறைகள் ஊசலாடிக்கொண்டிருக்கிறது, கேள்விக் கேட்கும் திறன் இன்றி வருங்காலத் தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது.....

11. யாரோ ஒரு சாமியார் கனவில், புதையல் இருக்கும் சேதி தெரிந்தது என்பதற்காக, விண்வெளியில் ஏவுகணை செலுத்தி சாதனை செய்யும் ஓர்  அரசு, பொருட் செலவு செய்து புதையல் தேடுகிறது! நல்ல வாழ்க்கைச் செய்திகளை மட்டும் விட்டு விட்டு, மதங்களைக் கூட மூளைச்சலவைக்குதான் பயன்படுத்துகின்றனர்

12. இலவசம் என்று வருவதெல்லாம் மக்கள் பணமே, யாரும் அவர் பணத்தைத் தந்து எதையும் இலவசமாய்த் தரவில்லை என்ற உணர்வும் இல்லை, மக்கள் பணத்தை மக்களுக்காக என்று செலவு செய்து தரும் பொருட்களும் தரமானதாய் இல்லை!

13. 2G, 3G என்று ஊழல் பட்டியல் படிப்பதோடு சில  பத்திரிக்கைகளின் கடமை முடிந்து விடுகிறது.

14. வேலை வெட்டி இல்லாமல் லுங்கியை மடித்துக் கொண்டு, காதல் செய்பவன், சாராயம் குடித்துக் கொண்டு, பெண்ணை இழிவு படுத்திக் கானாப் பாடல் பாடிக்கொண்டு திரிபவன், ஒற்றை விரலில் பத்துப் பேரை சுழற்றி அடித்துத் துவசம் செய்து கொண்டு இருப்பவன் எல்லாம் பெரும் வீரன் என்றும், பொழுது போக்கு என்ற பெயரில் வன்முறையையும், விடலைபருவக் காதலை புனிதமெனவும் காட்டி பள்ளிக்கூடக் குழந்தைகளை, இளைஞர்களை வழி மாற்றி, திரைப்படமும் தன் சமூகக் கடமையை முடித்துக் கொண்டு விடுகிறது.

15. பகுத்தறிவு கொண்ட மனிதன் உண்மையில், சாதிக்காக, தன் முன்னேற்றத்தை சாய்த்துக் கொள்வதில்லை, மதத்துக்காகத் தன் மரணத்தை நிர்ணயிப்பதில்லை, எந்த ஓர்  அரசியல் தலைவனும் ஒரு தொண்டனுக்காகத் தீக்குளித்ததில்லை.....

16. அன்றாட வாழ்க்கைக்காகப் போராடும் ஒவ்வொரு மனிதனும் சக மனிதனிடம் அன்பு காட்டியே வருகிறான், சாதி மதங்களைக் கடந்த ஒரு பிணைப்பில் இயைந்து வாழ்கிறான், இருந்தும் ஆய்ந்து அறியும் திறன் இல்லாமல், சக உயிரிடத்தில் அன்பு பாராட்ட வேண்டிய அவசியம் இல்லாமல் வாழ்க்கை என்பது வெறும் பொருட்களில் நிரம்பி விடும் ஒரு கலாச்சரமாக, காட்சி மாயையில் மனம் நிரம்பி விடும் ஒரு சூதாக, வெறும் உணர்ச்சிக் கூப்பாட்டில் தணிந்து விடும் விடுதலையாக நீர்த்துப் போகிறது....

17. இப்போதும், அந்த ஆப்பிள் மரம், அவனுடைய பொம்மைகளுக்காக அதன் கனிகளைத் தந்தது, பின் அவனுடைய வீட்டிற்காக, தன் கிளைகளைத் தந்தது, பின் அவன் சுற்றுலா செல்லும் கனவை நிறைவேற்ற, படகு செய்யத் தன் உடலினை தந்தது, கடைசியில் அவன் சாயத் தன் வேரினால் அவனைத் தாங்கியது என்ற பாடம் தான் பிள்ளைகளுக்குப் பாடத்திட்டத்தில் இருக்கிறது, ஒருநாளும் மரங்கள் இருக்க வேண்டிய அவசியத்தை, அவைகளில் வாழும் உயிர்களைப் பற்றி , அவைகளின் உணர்வுகளைப் பற்றி, எதையும் கேள்விக்  கேட்டுத் தெளிய வேண்டும் என்ற அடிப்படையையும் நம் கல்விமுறை போதிப்பதேயில்லை,....

18. பெரும் பாடத்திட்ட சூழ்ச்சியில் நாம் பணம் செய்யும் எந்திரங்களாக, எல்லாவற்றையும் உணராமல் அசைப் போடும் மாடுகளாக, ஓட்டிற்குப் பின்னே, பிரியாணி ஆகும் ஆடுகளாகவே வாழ்கிறோம்!

காத்திருப்போம், நம் வீட்டில் கல் விழும் நாளுக்காக!

http://tamil.thehindu.com/opinion/blogs/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article5355234.ece



Friday 25 October 2013

வெளிப்பாடு






கோபத்தை, வார்த்தைகளிலும்
வன்முறைகளிலும் வடிக்கிறோம்,
அன்பை மட்டும்
மனதில் பூட்டி வைத்து
மௌனத்தில்
உணர்த்திவிட விழைகிறோம்!

Wednesday 23 October 2013

புதிதாய் ஒரு பூமி


ஒரு காலைப்பொழுதில்,மதிற்சுவற்றில்
காகங்கள் கரைந்திட -

தலை சாய்த்து, பொட்டலை,
மைனாக்கள் வெறித்திட

அணில்கள் பதட்டத்துடன்
இங்கும் அங்கும், தாவிக் குதித்திட

சுள்ளென்று, முகத்தில் அறைந்த
வெயிலில்  தெரிந்தது,
வெட்டப்பட்ட மரத்தின் தழும்பு!

தேவையில் சுழன்றிடும் மனிதகுலத்தில்
அதன் ஆசையில் அடங்கா வாழ்வியலில்,

சக மனிதனின் குரல்வளையை நசுக்கும்
பேய்க்குணம் கொண்ட மனநிலையில்,

உங்களின் தழும்புகளையோ,
கண்டன ஆர்பாட்டங்களையோ,
இல்லை இல்லை, நாங்கள் காண்பதில்லை
உணர்தலுக்கு நெஞ்சில் ஈரமும் இல்லை!

போங்கள் போங்கள்
நீங்களேனும் புதிதாய்
ஒரு பூமி தேடுங்கள்!



 

Monday 21 October 2013

மழை



வெட்கம் போர்த்தி இருக்கும்
பசுமையின் அழகில்  -
மேகக் காதலன் - மோகம்
கொண்டு நிலைத்திடுவான்
காற்றும் வெப்பமும் சுழற்றிட - ஒரு
காதல் கண்ணாமூச்சி நிகழ்த்திடுவான்
# மழை

மரம்


மரக் காதலியை வெட்டி
வீழ்த்தியப்பின் - அவள்
மேகக் காதலனிடம் 
உயிர் பிச்சைக் கேட்கிறது
உலகம்!



மரம்



அவள் மட்டுமே
எல்லாம் கொடுக்கிறாள்,
இலையிலிருந்து
கனிகள் வரை,
வேண்டினால் - நிழலாய்
இறுதி வரை ,
உன் சுயநலத்தில்
கதவிலிருந்து
கட்டில் வரை - பின்
அடுப்பெரிக்க அல்லது
சிதை எரிக்க
ஆகும் கட்டை வரை!

மரம்







சூழ்ந்து விட்ட சூனியத்தை
வெட்டி அகற்ற மட்டும்
முடியவில்லை
மரங்கள் வீழ்த்தப்பட்ட
அந்த நிலத்தில்!

--------------

வீழும் மரங்களின் நிலம் 
அதன் கல்லறை ஆகிறது
கல்லறை சூழ்ந்த நிலம்
பெரும் சுடுகாடாகிறது !

Thursday 10 October 2013

மரமே நீயும் கேளாய்

















காய்ந்த மரமாய் நிற்கும்
மனிதரிடம் கதைத்து -
செவிவழிக் கரைத்திடும்
சுமைதனை விட

கனி ஈன்று
கனிவுடன் நிற்கும்
மரமே மரமே - என்
மனவழிக் கசிந்திடும்
வலியினை உரைப்பேன்
உன்னிடமே, நீயும் கேளாய்

மரமாய் நீ நில்
மருந்தும் வேண்டாம்
உனையே வருத்தி
கிளை முறிக்க வேண்டாம்
பூவோ காயோ
இலையோ கனியோ
எதுவும் வேண்டாம்

உன் இலைகளில் சொட்டும்
ஒரு பனித்துளிப் போதும் - என் 
இமைகளைக் கழுவி  
விழிகளைத் திறந்து
அது வெளிச்சம் காட்டும்

உன் கிளைகள் தாலாட்டும் 
மெல்லிய சாமரம் போதும் - என்
சுவாசத்தில் நுழைந்து, 
திணறும் மூச்சுக்குழலை
அது திறந்திட உதவும்

கல்லாய், மண்ணாய்
மரமாய் நிற்கும்
மனிதர்களிடையே நாளையும்
நான் வாழ்ந்திடல் வேண்டும்,
மரமே மரமே நீயும் கேளாய்!

Wednesday 9 October 2013

அதற்குப் பிறகு ஒன்றுமில்லை!

 
 பணத்தைப் பற்றிப்
பேசிய பிறகு
(திரு)மணத்தைப்
பற்றிப் பேசவில்லை

இனத்தைப் பற்றிக்
கொந்தளித்த பிறகு
ஒரு மனத்தைப்
பற்றிச் சிந்திக்கவில்லை 

அவள்(ன்)தான் என்று
லயித்த பிறகு
இவளை(னை)ப்
பற்றி யோசிக்கவேயில்லை 

கடுமை கொண்டு
கொன்றப் பிறகு
இனிய வார்த்தைகளில்
உயிர்பிக்கவில்லை

சொத்துப் பிரித்துத்
தொலைந்த பிறகு
உறவுத் தேடி
வரவேயில்லை

நெடுவானத்தில் ஒன்று
மறைந்த பிறகு
விடியல் ஒன்று
தோன்றவேயில்லை

மறுதலித்து மருகி
நிற்கும் மனம்,
இதுவே கடைசி
என்று நினைத்திருக்கவில்லை,
ஓர் இறுதி ஊர்வலத்தில்
கலந்து கொள்ளும் வரை! 

மழையின் சாரல்

வெப்பம் குறைந்து
குளிர்ச்சியில் நெகிழ்ந்து
இருண்ட மேகங்களை
பரவசத்துடன் பார்த்து
மழை வரும்
என்ற ஆவலில் -
மலர் வான் பார்த்து நிற்க
மழைக்கு மௌனம்
கலைக்க மனதில்லை

 black and white Flower and rain Stock Photo - 14870283
 அழுத்தம் கூடி, அது
பொழியும் வேளை -
ஒரு காற்று வந்து
அதைக் கடத்திச்
செல்லலாம்

திசை மாறி
பொழிந்து - மழை,
அதன் வேகம்
தணியலாம்
பார்த்து நின்ற மலர்
மகரந்தம் தூவி
மண்ணில் மடியலாம்

எங்கோ
ஒரு மூலையில்
விதையாய் முளைத்து
மண்ணைப் பிளந்து
மறுபடி மலர்ந்து,
அம்மழை வேண்டி
மலர் மீண்டும்
வான் நோக்கி 
நிற்கலாம் - காற்று
மனமிரங்கி - இம்முறை
மழையின் சாரல்
தூவலாம்! 

கைப்பாவை மனசு!



கோபம் வருகையில் 
துள்ளியெழும்
வார்த்தைகள்....
பிரிவே ஆயுதமாகும் !

அன்பு எழுகையில்
வார்த்தை வற்றி
பஞ்சமாகும் ....
மௌனமே காதலாகும்!

Tuesday 8 October 2013

நட்பு



 
லாபம் கருதிச் சேர்ந்தால்
வியாபாரம்

பதவிக் கருதி மோதினால் 
அரசியல்

இச்சைக் கருதிக் கலந்தால் 
காமம்

வாழ்க்கைக் கருதி மலர்ந்தால்
காதல்

சாதிக் கருதிக் கூடினால் 
கலவரம்

மதம் கருதித் திரண்டால் 
பதற்றம்

ஏதும் கருதாமல் -
ஆதரவாய் நின்றால்
அதுவே நட்பு !

Monday 7 October 2013

நாம்



நான் என்ற நானில் இருந்து
என்னை மாறச் சொல்கிறாய்
நீ என்றும் நீயாகவே
இருந்து கொண்டு

என்னை மாற்றிக் கொண்டால்
மட்டுமே உனக்குப் பிடிக்கும்
என்றால் - மாறிய நான்
உண்மையில் யார்?

அன்பை கேட்டால்
அலுப்பாய் உணர்கிறாய்  -
அன்பை கேட்டல்
அன்பின் இயல்பு
நீ அலுப்பாய்
உணர்ந்தால், - அதற்கு
நானா பொறுப்பு?

பேசினால் திமிர் என்கிறாய்
பேசாவிட்டால் தினவு என்கிறாய்
மாறும் உன் இயல்பில்
நீ நீயெனத் தெரிவது
எனக்கு நீதானா?

நானும் நீயும்
நாமில்லை -
நானெனும் நானும்
நீயெனும் நீயும்
விலகும்வரை!

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!