Sunday 29 December 2013

நா காக்க

gossip

யாரோ வடித்த
சிலையை -
நீங்கள் செதுக்குவதும்
விந்தை!
சுயம்புவை செதுக்கி
சில்லுகளாக்க வேண்டாம்,
உங்கள் வார்த்தைகளின்
உளியில்!

மௌனம் என்பது
மரணத்திற்குச் சமம்
பல வேளைகளில்!
பிறிதொரு வார்த்தை
எழுப்பிடாது ஏற்கனவே
செத்துவிட்ட சிலையை!

யாகாவா ராயினும் நாகாக்க!

1 comment:

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!