Monday 16 December 2013

ஓடை


மலர் எறிந்தால்
கரைச் சேர்க்கும்
கல் எறிந்தால்
ஆழம் கொள்ளும்

வீசும்
வேகத்தின் கண் 
நீர் தெளிக்கும் - 

தாகத்தையோ
மீறும் உன் 
கோபத்தையோ
அது தணிக்கும்

வேறேதும்
தெரியாது ஓடைக்கு
போய் வா பகையே!
கோடைக்கு முன்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!