Friday 20 December 2019

காலம்

Image may contain: text

புறக்கணித்தல்

Image may contain: text

வாழ்த்துதலை விட

Image may contain: text

எனக்கென்று உள்ளது
என்னைச்சேரும்
விலகியதும்
சேராததும்
அவர் விதியென்றால்
இச்சிறிய வாழ்க்கையில்
நானென்ன செய்துவிட முடியும்
வாழ்த்துதலை விட !
 

காலம்

Image may contain: text

ஆண்ட்டி_இந்தியன்

#அணுக்கதை

“இங்கே பாரு 300, 350, 40 க்கு 400, 1000 எத்தனை விதமான செய்திகள், அதிலும் ஒருவர் 300 ல் 275 பேர் தீவிரவாதிகள், 25 பேர் பயிற்சியாளர்கள்ன்னு சொல்லியிருக்கார், வீடியோ கேமை வேற வார் வீடியோன்னு பரப்பி, அதுக்குள்ள இன்னொருத்தர் எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை, டாடிதான் மீண்டும் பிரதமரா வரணும்ன்னு சொல்லியிருக்கார், இதுக்கும் போருக்கும் என்னடா சம்பந்தம்? பாரு இப்பக்கூட விமானிய பிடிச்சதக்கூட முதல்ல இல்லன்னு சொல்லிட்டு அப்புறம் அவங்க ஆதாரம் காட்டியதும் ஒத்துக்கிட்டாங்க, என்ன மாதிரி அரசியல்வாதிங்க, ச்சை!”
“ஹா ஹா, இதை விட கிந்தியாவை யாரும் கேவலப்படுத்த முடியாது!”
“டேய் நான் உங்க ஆளுங்க சொன்னதைத்தான் சொன்னேன், எப்போ கிந்தியாவை கேவலப்படுத்தினேன்?!”
“இல்லை யூ ஆர் ஆண்ட்டி இந்தியன்!”
“டேய் அவனா நீ?!” 😥

#ஆண்ட்டி_இந்தியன்

மந்தையாட்டு_வரலாறும்_தேர்தலும்

#மந்தையாட்டு_வரலாறும்_தேர்தலும்

வரலாற்றில் இறந்த இராணுவ வீரர்களின் படங்களை வைத்துக்கொண்டு, “எனக்கு ஓட்டுப்போடுங்கள்” என்று தேசத்தின் மீதான பற்றை வாக்குகளாக எந்தப்பிரதமரும் சேகரித்துக்கொண்டிருந்திருக்க மாட்டார்கள், அத்தனைப் பாதுகாப்பு நிறைந்தப்பகுதியில் மொத்தமாய் இராணுவ வாகனங்கள் வர, சர்வ சாதரணமாய் ஒரு தாக்குதலும், தாக்குதல் நடந்த அன்றே தமிழகத்தின் 40 இடங்களும் 40 வீரர்களின் “தியாகத்துக்கு” என்று கட்சிப்பிரச்சாரம் செய்வதும், போர் வரும் பதட்டம் இருப்பதால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று குஜராத் முதல்வர் சொல்வதும், பதில் தாக்குதல் நடத்தியதையும் உடனே பிரதமரின் தேர்தல் பிராச்சார உத்தியாய் பயன்படுத்துவதும், அதை பாகிஸ்தான், “இந்தியாவில் தேர்தல் காலம் என்று தெரிகிறது!” என்று சொல்வதும் வரலாற்றில் நிகழ்ந்தக் கறைகள்!

அவசர பணமதிப்பிழப்பையும் அதைத்தொடர்ந்த உயிர்ப்பலிகளையும், ஜிஎஸ்டி அழித்தது, 49000 தொழில்கள் நலிவடைந்ததும், 5 லட்சம் பேர் வேலை இழந்ததும், அடுத்து தூத்துக்குடியால் மறக்கடிக்கப்பட்டது, 12 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது அடுத்து கேரள மழையால் மறக்கக்கடிக்கப்பட்டது, கேரள மழையின் மீட்புப்பணிக்கு பில் அனுப்பியதும் அடுத்து சபரிமலை விவகாரத்தால் அமுக்கப்பட்டது, சபரிமலையின் சங்கிகளின் போராட்ட வேடிக்கையெல்லாம், அடுத்து வந்த அம்பானிகளின் செய்தியில் மக்கிப்போனது, நடுநடுவே மானே தேனே என்று சீனா எல்லைக்கு ரோடு போட்டு அருணாசலத்தில் அத்து மீறி வேடிக்கைக்காட்டியது, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பெட்ரோல் டீசல் விலையேற்றம் தொடர்ந்தது, பலப்பல முற்போக்குவாதிகள், எழுத்தாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர், அதெல்லாம் காலத்தின் மறதி வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது,

நாடெங்கும் பெண்களும் குழந்தைகளும் பாலியல் வன்புணர்ச்சியில் உயிரிழந்தனர், பெண்கள் கெடுக்கப்படும்போது எதிரப்புக்காட்டமல் இருந்தால் உயிருடன் இருக்கும் வாய்ப்புக்கிடைக்கும் என்றும் ஒரு சாதாரண வன்புணர்ச்சிக்கொலையை ஊதிப்பெரிதாக்கியதில் டெல்லியின் சுற்றுலா வருமானம் பாதிக்கப்பட்டது என்ற அரிய கருத்துக்கள் அமைச்சர்களால் மொழியப்பட்டது, தேர்தல் மேடைகளைத்தவிர வேறு எதிலும் பிரதமர் வாய் திறக்கவில்லை!

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் 75 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எந்தத்தகவலும் மக்களுக்குத்தெரியாமல் இரகசியாமாய் மறைந்துப்போனார், அவசர அவசரமாய் எம்எல்ஏக்கள் மக்களை மறந்து கூவத்தூரில் ஒளிந்துக்கொண்டார்கள், இவரா அவரா என்று தவழ்ந்து உருண்ட நாடகங்கள் ஒருவழியாய் நிறைவுற, உதய் மின்திட்டம் தொடங்கி, நீட் வரை எதையெல்லாம் முன்னாள் முதல்வர் எதிர்த்தாரோ அதையெல்லாம் மத்திய அரசு தங்குத்தடையின்றி புது அரசின் மூலம் நிறைவேற்றிக்கொண்டதும், எட்டுவழிச்சாலை என்ற அத்துமீறல்களும், தெர்மாக்கோல் விட்டு அதற்கும் பல லட்சம் கணக்குக்காட்டிய கொடுமைகளும், ஜல்லிக்கட்டு வன்முறைகளும் , கடவுள் தேவையில்லை எங்கள் சாமிதான் முருகர் என்ற சுயவிளம்பர தம்பட்டங்களும், பொதுநல வழக்கின் வழி வந்த ப்ளாஸ்டிக் தடையால் மக்கள் மனதில் இருந்து மழுங்கடிக்கப்பட்டது!

எப்போதும் நாட்டிலேயே தங்காதவரும், வரலாற்றில் சிலமணிநேரமே பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் என்ற பெருமையும் ராபேலின் கூச்சலில் அடிப்பட்டுப்போனது, விதர்பாவின் வழக்கில் சாட்சிகள் தொடர்ந்து மர்மமாய் சாகடிக்கப்பட்டதும் பெட்டிச்செய்தியாய் சுருங்கிப்போனது, இதற்கு நடுவே அமைச்சர் முன்னிலையில் இல்லாத கைபேசி தொழிற்சாலையில் இருந்து மலிவுவிலையில் கைபேசி கிடைக்கும் என்று அறிவித்துச் சுருட்டிய கொள்ளைக் கிடப்பில் போடப்பட்டது!
அரசு தொலைத்தொடர்பு நிறுவனம் பாதளாத்துக்கு தள்ளப்பட்டு தனியார் நிறுவனத்துக்கு ஒரு நாட்டின் பிரதமர் விளம்பரத்தூதர் ஆனதும், குஜராத்தின் தனியார் நிறுவனத்திற்கு பசுமைத்தீர்ப்பாயம் விதித்த சில நூறு கோடிகளை தள்ளுபடி செய்ய வைத்ததும், அதே நிறுவனம் தன் சுய லாபத்துக்காக ஆஸ்திரேலியாவில் வியாபாரம் தொடங்க பொதுத்துறை வங்கியை நிர்பந்தித்துக் கொடுக்க வைத்த அபரிமிதமான கடன் தொகையும் இந்த ஆட்சி செய்த சாதனைத்துளிகள், அத்தனை சாதனைத்துளிகளுக்கும் சிகரம், பொருளாதாரம் சாராத ஒருவரை ரிசர்வ் வங்கியின் கவர்னராக நியமித்து, வைப்புத்தொகையில் கைவைத்து தள்ளாட்டத்திற்கு வழிச்செய்த நடைமுறை!

இதெல்லாம் மழுங்கடிக்க, கால் கழுவும் நாடகம், ராபேலின் கூச்சல் எல்லைத்தாக்குதலில் அமைதியானது, எல்லைத்தாக்குதல் பதில் தாக்குதல் என்ற பரபரப்பில் சத்தமின்றி விமான நிலையங்களின் பரமாரிப்பின் வியாபார உரிமை அதானிக்கு தாரை வார்க்கப்பட்டிருக்கிறது, பழங்குடிகளை காட்டை விட்டு வெளியேற்றும் தீர்ப்பு வந்திருக்கிறது, படிப்புப் பற்றிய கேள்வி எழுந்ததும் மாயமாய் எரிந்தக்கோப்புகளைப் போல, எதுவும் அடுத்தடுத்த நிகழ்வுகளால் மறக்கடிக்கப்பட்டுவிடும், மொத்த அழிவுத்திட்டங்களின் கொள்கலனாய் தமிழகத்தை மாற்றி விட்டு பல உயிர்களைப்பறித்துவிட்டு, துணிச்சலாய் இந்த மண்ணில் ஓட்டுக்கேட்டு நிற்பதற்கு மக்களின் இந்த மறதியும், பணம் என்ற ஆயுதத்தின் பலமும், சாதிமதத்தின் பேரில் தேசப்பக்தியின் போர்வைகளின் பெயரில் எளிதில் தூண்டப்படும் உணர்ச்சியும் தானே காரணம்?

எது எப்படி இருந்தால் என்ன, செத்தது யாராய் இருந்தாலும், சாகடித்தது அரசியல், இராணுவ நடவடிக்கையை தேர்தல் பிரச்சாரமாக்கிய இந்த மோசமான அரசியல் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்துக்கொண்டிருக்கிறது, அதனால் என்ன வாழ்க பாரதம்!!!
#Saynotowar

மானங்கெட்ட அரசியலா

ஏதேதோ எண்ணி வந்தேன்
சட்டென்று நீ துப்பிய
வார்த்தைகளின் வெம்மையில்
பொசுங்கிப்போனேன்
இனி உன் கடிகாரத்திற்கு
என் நேரச்சுமையில்லை
கொள்கை வேறு
கூட்டணி வேறென்று
வந்து நிற்க
இது என்ன மானங்கெட்ட
அரசியலா
காயப்பட்ட மனமன்றொ?!
😉😉😉

வாழ்க்கை

ஒருமுறை அன்புக்காட்டினாலே
தன் வாழ்நாள் முழுமைக்கும்
அன்புக்காட்டும் நாயைப்போல
சுமந்து பெற்று வளர்த்ததால்
எத்தனை இகழ்ந்தாலும்
பிள்ளைகளிடம்
பரிவுகாட்டும் தாயைப்போல
எந்த நேசம் இருந்தாலும்
அதை இழக்கும்வரை
மனிதர்கள்
அதன் மதிப்புணர்வதில்லை
மதிக்கப்படாத இடத்தில்
காட்டும் நேசமும்
கொஞ்சமும்
தன் நிலையுணர்வதில்லை
#வேடிக்கை_விநோதமே
இந்த வாழ்க்கை!

பயம்

காட்டின்
விடியாத இருளில்
கவிழ்ந்துக்கிடந்தன
இலைகள்
தனியே சலம்பிக்கிடந்தன
மலர்கள்
பயமேயில்லையோ
உங்களுக்கென்றேன்
யானைகள் மிதித்தாலும்
ஏற்றுக்கொள்வோம்
மீண்டும் தழைப்போம்
மனிதர்கள் முகாமிடும் போதே
தலைமுறை சாய்ந்துவிடும்
அச்சம் கொள்வோம்
பாரேன் இப்போது
நீயும் கூட
இக்காட்டில் தனியே
நின்று கண்ணீர் உகுப்பதும்
மனிதராலன்றோ
என்று சலசலத்துச் சிரித்தன
மரங்கள்!

#பயம்

அன்பு


Image may contain: one or more people and text

நவீன_மன்னராட்சி

மொத்த தமிழகத்திலும் சாராயம் ஓடும்
விவசாயம் அழித்து சாலைகள் போடும்
சாலைகள் முழுக்க சுங்கச்சாவடிகள் அமைக்கும்
குண்டும் குழியுமான சாலைகளுக்கும் காசு பறிக்கும்
பள்ளிகள் மூடி கல்விக்கனவு குலைத்துவிடும்
நீட் நுழைத்து ஏழைகளை ஏட்டுச்சுரைக்காயுடன்
தள்ளி வைக்கும்
மீத்தேன் உறிஞ்ச நீர் வற்றும்
காப்பர் உருவாக்கி உயிர் உறிஞ்சும்
நீயூட்ரினோ என்று மலைகள் சுரண்டும்
சாமியார்கள் வளத்தில் காடுகள் அழியும்
காடுகள் அழிந்து யானைகள் களவுப்போகும்
யானைகள் துரத்தி சிலைகள் எழும்
புகையிலையிலும் ஊழல் செய்யும்
தெர்மாக்கோலிலும் அணைகள் கட்டும்
ஆட்சியைப்பிடிக்க பேரம் பேசும்
பணமதிப்பிழப்பென்று சில்லறைகள் தேடும்
கேள்வியென்று வந்துவிட்டால் ஊரைச்சுற்றும்
தேர்தல் மேடைகளில் கண்ணீர் விடும்
ஊழல்வாதிகள் ஒன்றுசேர உளவுத்துறை உதவும்
அவ்வப்போது மிரட்டி வைக்க வருமானவரித்துறை வரும்
துறைகளுக்கொரு அமைச்சர்கள் பெயருக்கு மட்டும்
கரன்சி வரும் வழித்தவிர வேறில்லை நாட்டம்
வீதிக்கொரு சாதிக்கூட்டம் சமூகநீதி பேசும்
எதிர்ப்பவன் சாதியறிந்து அரிவாளில் வெட்டும்
சாமியார்கள் தயவில் கோடிகள் புழங்கும்
கேடிகளின் வன்முறையில் குரல்வளை நசுங்கும்
சில்லறைக்கடன்களுக்கு கோவணம் பறிபோகும்
வரைமுறையற்ற கடன் கொள்ளைகளுக்கு தள்ளுபடி கருணையாகும்
திரையில் நடித்தவர்கள் மேடையில் நடிப்பது எதார்த்தம்
ரசிகர்கள் தொண்டர்கள் என்று விழும் விட்டில்பூச்சிகளும் அதிகம்
போராளிகள் மாயமாவது மறந்துவிடும் நாடகம்
வாக்குறுதிகளை மறந்துவிடுவது அரசியலுக்கான நரித்தந்திரம்
திருடர்களின் வகைக்கொரு கூட்டணி கொண்டாட்டம்,
மக்கள் மட்டுமே எதிரிகள் என்பது வேடிக்கைவிநோதம்
வேடிக்கைப்பார்ப்பது மக்களின இயலாமைச்சோகம
இதில் தேர்தலெல்லாம் மீளமுடியா உரிமைகளின் ஏலம்!

#நவீன_மன்னராட்சி

கீச்சுக்கள்

பெரும்பாலான தமிழக கட்சிகளுக்கு கொள்கை என்பது வெங்காயம் போல, உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது, கேட்கும் நமக்குத்தான் கண்ணீர் வரும், அவர்கள் கரன்சியில் கண்ணை மறைத்துக்கொள்வார்கள்!
-------------------
இந்தியர்களின் கையாலாகாத இயலாமையில்
தமிழர்களின் கொஞ்சமும் சுரணையற்ற மறதியில்
கூட்டணி கேலிக்கூத்துக்கள்!
தேர்தலென்ற நடைமுறை தவிர்த்துவிட்டால்
இது மன்னர்கள் ஆட்சிக்காலமே!

நான்கைந்து_கட்சிகளும்_நலிந்துப்போன_நாடும்

#அணுக்கதை
பத்திரிக்கையாளர்களும் ஒரு பிரதமரும்!
“சார், நீங்கள் ஏற்கனவே போன ஆட்சியில் கொண்டுவந்த ஜிஎஸ்டி யையும், பெட்ரோல் விலையேற்றத்தையும் எதிர்த்துவிட்டு, அதையெல்லாம் மாற்றுவதாக கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு அதையே திரும்ப செய்வது பற்றி?”
பிரதமர் ஏதோ ஒரு கேமராவை பார்த்து கண்ணசைக்கிறார், பின்பு வாயசைக்கிறார்
“சார் என்ன சொல்கிறீர்கள், கேட்கவில்லை”
“நான் ஏழைத்தாயின் மகன்...”
“பணமதிப்பிழப்பில் நூற்றுக்கணக்கான பேர் இறந்தது பற்றி?”
“நான் ஏழைத்தாயின் மகன்...”
“இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளதைப்பற்றி?”
“அடுத்த மாதம் நான் டிரம்பை சந்திக்க அமெரிக்க பயணம் செல்கிறேன்....”
“தொடர்ந்து உங்கள் அமைச்சர்கள் சர்ச்சையான முறையில் கருத்துகள் கூறினாலும் நீங்கள் மௌனமாய் இருப்பதன் காரணம்”
“காங்கிரஸின் மோசமான ஆட்சியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பேன்”
“பட் சார் இப்ப ஆட்சியில் இருக்கிறது நீங்கள்தான்?”
“நான் ஒரு ஏழைத்தாயின் மகன்...”
“49000 தொழிற்சாலைகள் நலிவடைந்தும் மூடப்பட்டும், 5 லட்சத்துக்கு அதிகமான பேர்கள் வேலை இழந்திருக்கிறார்களே?”
“மன் கீ பாத்தில் பதில் சொல்கிறேன்”
“ஆட்சி முடியும் நேரத்தில் நீங்கள் இதுவரைக்கும்
இல்லாத அளவில் சலுகைகளை வாரியிரைத்திருப்பதும், சில மாதங்களுக்கு வேண்டிய பட்ஜெட்டை ஆண்டு முழுமைக்கும் போட்டிருப்பதை பற்றி...?”
செக்யூரிட்டி ஒருவர் வந்து அந்த நிருபரை தள்ளிக்கொண்டு போகிறார்
சுதாரித்துக்கொண்ட பத்திரிக்கையாளர்கள், ராபேலை ஒதுக்கி, ஏற்கனவே அரசு கொடுத்திருந்த கேள்வித்தாளை எடுத்து கேள்விகள் கேட்க,தொடர்ந்த எல்லா கேள்விகளுக்கும் “ஏழைத்தாயின் மகன், தான் ஒரு ஏழைத்தாயின் மகனென்று அழுத்தியும் அழுதும் சொல்கிறார்”, கலங்கிப்போன பத்திரிக்கையாளர்கள்,
இறுதியாக,
“சார் நீட் போன்ற தேர்வுக்கெல்லாம் கடுமையான சோதனைகளை செய்யும் போது, இராணுவ வீரர்கள் வாகனங்களை மோத எப்படி சர்வசாதரணமாய் 250-350 கிலோ வெடி மருந்துகள் நிரம்பிய வாகனத்தை எடுத்துக்கொண்டு வர முடிந்தது??”
“இது மோசமான தாக்குதல், இராணுவ வீரர்களின் “தியாகம்” வீண்போகாது..”
உடன் தமிழ்நாட்டு கட்சி பிரதிநிதி, “ஆமாம் 40 வீரர்கள் இறந்திருக்கிறார்கள், தமிழ்நாட்டில் 40 திலும் வெற்றிப்பெற செய்ய வேண்டும், இந்தக்கொடுமைகள் நிகழாமல் இருக்க பிரதமரே பிரதமராக இருக்க வேண்டும்!”
கூட்டம் முடிந்ததும் பல நிருபர்கள் தாங்கள் ராஜினாமா கடிதங்களை அனுப்பியும், சிலர்
ஏர்வாடியில் அனுமதிக்கப்பட்டதாகவும் கேள்வி! 😱

#நான்கைந்து_கட்சிகளும்_நலிந்துப்போன_நாடும்

நதியென்பது


No photo description available.

காலக்கெடு

Image may contain: one or more people and text

அரசியல்

Image may contain: text

அக்கறை

No photo description available.

காதல்

Image may contain: one or more people and text

மழை



No photo description available.

காற்றுக்கும் மரத்துக்குமான
புரிதலின் கூடலில்
காதல் கனியும் போது
மேகம் பிரசவிக்கிறது!

அதீத நேசம்

Image may contain: sky, cloud and text

இந்தச்சமூகம் என்பது நாம்தான்

அறுந்து விழுந்த மின்கம்பியை பிடித்த ஆறுவயது சிறுவன் மரணம், இதில் அறுந்த விழுந்த மின்கம்பியின் மின்வாரிய அலட்சியம் இந்தியாவுக்கே பொதுவானது, மழைக்காலங்களில் மட்டுமல்ல எல்லாக் காலங்களிலும் நீங்கள் சென்னை மாநகரில் பல்வேறு கம்பிகள் இப்படி சாலையை, நடைபாதையை அடைத்துக்கொண்டிருப்பதை பார்க்கலாம்!
அலட்சியமான அதிகாரிகளையோ, அரசையோ குறித்தல்ல இப்பதிவு, அவ்வப்போது இதுபோல் வரும் செய்திகளின் பின்னே உள்ள பெற்றவர்களின் அஜாக்கிரதைப்பற்றியதே, எத்தனை பாதுகாத்தாலும் நம்மை மீறி நடந்துவிடும் விபத்துகளையும் கொடுமைகளையும் விட்டுவிடுவோம், ஆனால் இவைகளை தவிர்க்கலாமே;

1. வீட்டில் தவழும் நடக்கும் குழந்தைகள் இருந்தால் தண்ணீர் தொட்டிகளை இறுக்கமாக மூடி வைக்கவும், குளியலறைக்கதவுகளை தாழ்போட்டு எட்டாத உயரத்தில் வைக்கவும் ஏன் மறக்கிறோம்?

2. குழந்தைகள் கைக்கு எட்டும் தூரத்தில் மருந்துகளையும், கேரோசின், தீப்பெட்டி போன்ற பொருட்கள் வைப்பதை தவிர்க்கலாமே?
3. குழந்தையை டிவி ஸ்டாண்டின் அருகில் விட்டு, அது தலையில் விழும்வரை என்ன செய்கிறோம்?

4. குட் டச் பேட் டச் பற்றி இன்னமும் பெற்றவர்களே பேசாத நிலையை எப்போது மாற்றுவோம்?

5. குழந்தைகளை வெளியே விளையாட விடுவது ஆரோக்கியமானதே, ஆனால் வீட்டுக்குள் சீரியல்கள் முன்போ அல்லது வேறு வேலையிலோ மூழ்கி பிள்ளைகளை கண்காணிக்க ஏன் மறக்கிறோம்? அதுதான் இங்கே இந்த மின்விபத்து!

6. எங்காவது வெளியில் செல்லும்போது, பிள்ளைகளை தனியே விட்டு ஏன் செல்கிறோம்? விளைவு ஏழு வயது ஹாசினியின் மரணம்

7. ஆழ்துளைக்கிணறுகளில் விழுவதற்கும் பலரின் தவறுகளைத்தாண்டி நம்முடைய கவனக்குறைவும் காரணமாகிறது

8. வீட்டில் சமைக்காமல் ஏன் எப்போதும் உணவுகளை வெளியே வாங்கிக்கொடுக்கிறோம்?

9. கெடுதல் என்று தெரிந்தும் எதற்கு விதவிதமான வண்ணங்களில் தின்பண்டங்களையும், மைதாவில் செய்த கேக்குகளையும், பரோட்டக்களையும், பிஸ்கட்டுக்களையும் குளிர்பானங்களையும் வாங்கி திணிக்கிறோம்?

10. கைபேசிகள் பிள்ளைகளுக்கு எதற்கு, அதில் விளையாட்டுகள் எதற்கு? கைபேசி வீடியோ கேம்களுக்கு உங்களுக்கு நேரம் இருப்பின் அந்த நேரத்தை உங்கள் குழந்தைகளிடம் செலவழித்தால் என்ன?

11. கிட்டதட்ட குழந்தை முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சதிகாரர்கள், கொலையாளிகள் என்று சித்தரிக்கும் தொலைக்காட்சி சீரியல்களை சினிமாக்களை ஏன் பிள்ளைகளுடன் அமர்ந்து பார்க்கிறோம்?

12. இரவு நேரம் கண்விழித்து இவைகளை பார்க்கும் பழக்கத்தை ஏன் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தி ஆரோக்கியத்தை சிதைக்கிறோம்?

13. சாலையில் தாறுமாறாய் கடந்துச்செல்வது, தலைக்கவசம், சீட்பெல்ட் இல்லாமல் பயணிப்பது போன்ற செயல்களை எப்போது திருத்திக்கொண்டு பிள்ளைகளை வாழ வைக்கப்போகிறோம்?

14. சாலையை கடக்கும்போது, மின்தூக்கிகளில், நகரும் படிக்கட்டுகளில் என்று எல்லா இடங்களிலும் பிள்ளைகளின் கையைவிட்டுவிட்டு கைபேசியில் கவனம் செலுத்தும் பழக்கத்தை எப்போது மாற்றுவோம்?

15. சாதியைச்சொல்லி, மதத்தைச் சொல்லி, கடன்காரர்களுக்கு பொய்யைச்சொல்லி என்று எப்போது இந்தப்பாடங்களை பிள்ளைகளுக்கு கற்றுத்தருவதை கைவிடுவோம்?

16. குடிக்கும், புகைக்கும், பெண்களை போகப்பொருளாகக் கருதும் நடைமுறை வழக்கங்களை எப்போது மாற்றி ஆரோக்கியத்தையும் அன்பையும் சகமனிதரை, மனுஷியை நேசிக்கும் மனப்பான்மையையும் கற்றுத்தரப்போகிறோம்?
இந்தச்சமூகம் என்பது நாம்தான், விபத்துகள் குறைய, #மாற்றம்_நம்மிடம்_இருந்தே_உருவாகவேண்டும்!

காதல்

நேற்று அழவைத்ததோ
இன்று உயிரெடுத்ததோ
யாருக்கும்
நினைவிலிருப்பதில்லை
எனினும்
ஏதோ ஒரு கண்ணீரையோ
யாரோ ஒருவரின் உயிரையோ
மீட்டி
கொடுமைகளை நினைவூட்ட
காலம் காத்திருக்கும்
அப்போதும் காலத்தோடு
மன்றாடி பிறர்
நலம் வேண்டும்
உள்ளங்களில் உயிர்பித்திருக்கிறது
#காதல்!

நிலையற்றது_மனம்

ஏதோ ஒரு புள்ளியில்
விரிசல் விட்ட கண்ணாடியில்
பார்க்கும் பிம்பமெல்லாம்
பல வடிவில்தான்
அன்பு குறைந்துவிட்ட மனதில்
கிடைக்கும் வாய்ப்புகளெல்லாம்
பெருங்குற்றங்களாவதும்
விலகும் முடிவுகளில்தான்
#நிலையற்றது_மனம்!


Image may contain: 1 person, text

அன்பெனும்_அம்புலிமாமா_கதை!

#அன்பெனும்_அம்புலிமாமா_கதை!

அவனுக்கு புற்றுநோய்
அவளுக்கு என்றால் நீங்கள்
எனக்கா(?!)என்பீர்கள் என்பதால்
அவனுக்கு என்கிறேன்

தேடி உழைத்தச் செல்வங்கள்
பலகோடி என்றாலும்
அதைப்பங்கீட உறவுகள்
பல இருந்தது
எதார்த்தமாய் சிந்திப்போம்
சொத்துகளை மாற்றி எழுதென்றாள்
மனைவி
நீ இருக்கும்போதே மரியாதையில்லை
எங்களையும் கொஞ்சம் யோசியென்றார்
தந்தை
எஞ்சியிருக்கும் மகளுக்கான
சீர்வரிசைகளை நினைத்து அம்மா
கண்ணீர்விட
வீடியோ கேம்களில் மூழ்கியிருந்தார்கள்
பிள்ளைகள்
அவரவர் விரும்பியதை தந்துவிட்டு
நிமிர
மருத்துவம் தொடரலாமென்று
வெற்று ஆறுதல் தந்தக்குடும்பம்
கரிய இரவின்
பொருளாதார வெளிச்சத்தில்
நிம்மதியாய் உறங்க
முன்தேதியிட்ட உறக்கத்தின் சுமையில்
விழித்திருந்தான் அவன்

எல்லாம் இருக்கிறது எதுமில்லையென்ற
உண்மையில்
நவீன சித்தார்த்தானாய்
இரவில் பயணம் தொடங்க
“ஐயா தம்பி நானும் வரேன் ராசா”
என்று வந்து நின்றாள் முதிய தாதி
வெறும் தாதியென்றால்
உங்கள் மனதில் ஆஹாவென்று
காமம் கிளுகிளுப்பு கள்ளக்காதல் என்றே
அன்பு அடையாளப்படுத்தப்படுமென்பதால்
முதிய தாதியாக அவள் உடன்செல்ல
வந்து நின்றாள்

மௌனமாய் தலையசைத்து
அவள் கைப்பிடித்து கண்ணொற்றி
அவன் உடைந்தழ
பின்னேயே வாலாட்டிக்கொண்டு வந்தது
அவ்வப்போது
அவன் பரிவுக்காட்டி வளர்த்த
நாயொன்று

தொலைதூரம் சென்ற அவன்
நேசமிக்க எளிய மனிதர்களின்
உதவியாலும்
பிரியாது பரிவுக்காட்டிய நாயினாலும்
புற்று நீங்கி
உயிர்பிழைத்தான் என்றால்
நீங்கள் நம்பவா போகிறீர்கள்?
அன்பும் கருணையும்
உயிர் காக்கும் மந்திரமென்றால்
அதெல்லாம் அம்புலிமாமா கதைதான்
என்பீர்கள்
எங்கோ அம்புலிமாமா கதைகள்
நிகழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன
நீங்கள் எப்போதாவது நாய்க்கு
காட்டும் பரிவைப்போலவேனும்
நேசிக்கும் உயிர்களுக்கு
நேரமெடுத்து பரிவுக்காட்டுங்கள்
அன்பெனும் மந்திரம்
அம்புலிமாமாக்களை மீட்டெடுக்கும்!


No photo description available.

காதலின்_குறுங்கதை



#காதலின்_குறுங்கதை!

தன் வேரை பூமியில்
பரப்பியிருந்த மரத்தின்
கிளையோன்று
வானமே வாழ்க்கையென்று
லயித்திருந்தது

ஒரு பருவத்தில் பூக்களையும்
மறு பருவத்தில் காய்ந்த
இலைச்சருகுகளையும்
பூமியில் உதிர்க்கும் மரம்
சில வேளைகளில்
பூக்களும் இலைகளும் இல்லா
மொட்டைக்கிளைகளுடனும்
காட்சிதரும்!!

நிழலிலும்
பூக்களின் மணத்திலும்
திளைத்திருக்கும் பூமி
இலையுதிர் காலத்திலும்
மரத்தின் வேரினை
இன்னும் பலமாய் பற்றியிருக்கும்

நெடுநேரம் இம்மரத்தினடியில்
நாம் கதைத்திருக்கிறோம்
நீ இல்லா இப்பொழுதுகளில்
இந்த பூமி நானாகவும்
வெறும் நெடுமரம்தான் நீயெனவும்
தோன்றுகிறது
இனியென்ன
நீ வானம் நோக்கி வாழ்ந்திரு
நான் அன்பெனும் பூமியில்
நேசத்தை ஆழப்புதைக்கிறேன்
அது
உன் நலத்திற்கு உரமாகட்டும்!!

Image may contain: plant, tree and outdoor

கொலைக்களமாகும்_குடும்பங்களும்_நலிவுறும்_சமூகமும்!

பிடிக்கவில்லையென்றால் “விலகிக்கொள்ளுதலை” விட, ஒரேடியாக “விலக்கிக்கொல்வது” இந்திய ஆண்களுக்கு எளிதாக இருக்கிறது, குடிப்பது, புகைப்பது, வேறு மணம் செய்துக்கொள்வது எல்லாம் ஆண்களுக்கே உரித்தான “உரிமை” என்ற மனப்பான்மை இருக்கும் சமூகத்துக்கு, தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் மனைவிக்கு பிடிக்கவில்லை என்றாலும் எப்போதும் “நடத்தை” என்ற ஒழுக்கவிதியை பெண்ணுக்கு மட்டும் வகுத்துவிட்டு, கொன்றுபோடும் எல்லா காரணங்களையும் “பெண்ணின் நடத்தை” என்ற ஒன்றில் ஒளித்துவிடும் திறமையும், பத்திரிக்கைகள் தொடங்கி, சாமான்ய மனிதர்கள் வரை எல்லா மட்டத்திலும் இருக்கிறது, அபிராமியை கழுவி ஊற்றிய பத்திரிக்கைகள், இப்போது சந்தியாவின் சைக்கோ கணவனுக்கும் சந்தியாவையே குற்றவாளியாக்குகிறது! ஆண்களின் “குடிப்பழக்கத்தை” எவ்வளவு எளிதாக இந்தச்சமூகம் புறந்தள்ளுமோ அப்படித்தான் “நடத்தையின்” பேரில் நடக்கும் கொலைகளும் என்பதைத்தான் கொலையும் செய்துவிட்டு சிரிக்கும் பாலகிருஷ்ணனின் “நடத்தை” காட்டுகிறது!

தவறு பெண் செய்தாலும் ஆண் செய்தாலும், கொல்லப்படுவது ஆண் என்றாலும் பெண் என்றாலும், எப்போதும் “பெண்ணே” குற்றவாளி, இந்தக்கொடூர மனநிலை சமூகத்தில் எப்போதும் தனித்துவிடப்படும் குழந்தைகளின் நிலைதான் பரிதாபம்!

பெண்ணுக்கு கல்வி எதற்கென்று 15 வயது தொடங்கி 20 க்குள் திருமணம், அதற்குள் குழந்தை, குடி, மனச்சிதைவு, கல்வியறிவின்மை, குழந்தை வளர்ப்பு பற்றிய அறிவின்மை, பொருளாதாரச்சிக்கல், புரிதல் இன்மை, என்று எத்தனையோ சிக்கல்களை எல்லாம் “பொறுத்து” “கடந்துதான்” பல பெண்களும், சில ஆண்களும், குழந்தைகளுக்காகவோ, தனித்து நிற்க முடியா இயலாமையினாலோ, குடும்ப நிர்பந்தத்தினாலோ குடும்பங்கள் உடையாமல் காத்து நிற்கின்றனர், அல்லது பிரிகின்றனர், இந்த இரண்டை விடவும் ஆபத்தானது இந்தக்கொலைகள்; இரண்டுக்கும் வழியில்லாமல் கொலையை தேர்ந்தெடுப்பது வளர்ப்பின், சூழ்நிலையின் சிக்கலே!
என்று இந்தச்சமூகம் ஆண் பெண் பேதமில்லாமல், மக்களின் கல்வியையும், மனநிலையும், பாதுகாப்பையும், சமத்துவத்தையும் பற்றிக்கவலைப்படுமோ அப்போதுதான் சிறிதளவேனும் மாற்றம் வரும்!

கொலைக்களமாகும்_குடும்பங்களும்_நலிவுறும்_சமூகமும்!

வெறுமை

கோபத்தையும்
வெறுப்பையும்
வார்த்தைகளில்
கொட்டிவிட்டு
அன்பை
மௌனத்தில்
புரிந்துக்கொள்ளச்சொல்லும்
மனிதர்கள்
ஒருநாளும்
வார்த்தைகள் ஏற்படுத்திய
காயத்தையும்
மௌனம் ஏற்படுத்தும்
வெறுமையையும்
உணர்ந்துகொள்வதேயில்லை!

குணம்

எந்தக் கல்லுக்கும்
மரங்கள் காயங்களை
தருவதில்லை
கனிகளையே தருகிறது
மரம் போல் நான்
கடுஞ்சொற்களுக்கும்
ஏமாற்றுதலுக்கும்
மௌனமாய் அன்பை
விதைத்து
நகர்கிறேன்!
மரம்தானே என்று
கற்கள் என்னவோ
விழுந்துக்கொண்டேதான்
இருக்கிறது!

கீச்சுக்கள்

தன்னிடம்
எதையும் எதிர்ப்பார்க்கக்கூடாதென்று
அம்மா மட்டும்
நினைத்திருந்தால்
இந்த உலகில்
உயிர்களே இருந்திருக்காது!

---------------------

உடல் இயக்கம்
தேயும் நேரத்தில்தான்
அன்பின் உண்மைமுகம்
தெரியவரும்!

------------------------

எப்போது புகழ் போதையில்
மூழ்குகிறோமோ அப்போது
நல்லவைகள் நம்மைவிட்டு
விலகிச்செல்கின்றன!

-----------------------

தேனீ தொடங்கி யானை வரை, இந்த விலங்கினங்களும், மற்ற பல்லுயிர்களுமே இந்தப்பூமி வாழக்காரணம், மனிதர்களுக்கோ இந்தப்பூமியை ஏதோ ஒரு விதத்தில் சுரண்டுவதே வாழ்தல் என்றாகிவிட்ட நிலையில், இந்தப்பூமியில் மனிதர்கள் அனைவரும் #அகதிகள்தான்!

ஜீன் மாற்ற சதி

குடிசையில் தொடங்கி மாளிகை
சைக்கிளில் இருந்து விமானம்
மாருதி தாண்டி லம்போர்கினி
எஸ்பிஐ யில் தொடங்கி சுவிஸ்
பாம்பே ஸ்டாக் கடந்து பனாமா பேப்பர்
வயக்காடு விரிந்து பண்ணை எஸ்டேட்டுகள்
மரணப்புள்ளி வரை ஆசை தீர்வதில்லை
அரசியல்வாதிகளுக்கு!

நிச்சயம் அந்நிய நாட்டின்
ஜீன் மாற்ற சதிதான் - இந்த
இந்திய அரசியல் ஏலியன்களும்
இலவசத்துக்காக மட்டும்
ஒன்றுகூடும் மக்களும்!

இன்னமும் அடிமைப்பட்டே

பாதி உலகம் அடிமைப்படுத்தி
பிரிட்டன் பெருமிதம் கொண்டது
இரண்டு அணுகுண்டுகள் தாங்கி
ஜப்பான் நிமிர்ந்து நின்றது
செர்னோபில் வெடித்து
ரஷ்யா விழித்துக்கொண்டது
ஆப்கானிஸ்தான் வளர்த்து
அமெரிக்கா பாடம் கற்றது
இனப்பகையில் மூழ்கி
இஸ்ரேல் படைபெருக்கியது
உரிமைக்காக பாலஸ்தீனம்
போராடிக் களைக்கிறது
மாபெரும் வர்த்தகம் வளர்த்து
சீனா உலகளாத் துடிக்கிறது
அடிமைப்பட்ட நாடுகளும்
அடிமைப்படுத்திய நாடுகளும்
மக்கள் உரிமையை நிலைநாட்ட
சுதந்திரம் பெற்று
எழுபத்தியிரண்டு ஆண்டுகளாகியும்
இந்திய_ஜனநாயகம் மட்டும்
இன்னமும் அடிமைப்பட்டே கிடக்கிறது!


No photo description available.

சிஸ்டம்_சரியில்ல!

#அணுக்கதை
குழாயடியில், ஒருவரை பார்த்து இன்னொருவர்
“என்ன இங்கே நிக்கிறீங்க? தண்ணி வரலையா?”

“ம்ம்ம் எங்கம்மா தண்ணி வருது? எல்லா பம்பிலும் சாக்கடைதானே வருது, இந்தக்கோவில் பம்ப்லதானே ஏதோ தண்ணி வருது?”

“ஏங்க்கா ஆயிரத்தை வாங்கீட்டாங்களா? குடுக்கக்கூடாதுன்னு கோர்ட்ல சொல்லிட்டாங்களாமே?”

“ம்க்கும், பாடையில போறவனுங்க, குடிக்க தண்ணியில்ல, சாக்கடத்தண்ணி வருது, தெருவுக்கு தெரு சாராயக்கடைய தொறந்துவுட்டுட்டு, எல்லாத்தண்ணியையும் அங்கே இறைக்குறானுங்க போல, அததது குடிச்சிட்டு மூத்திரத்தை அடிச்சிட்டு மல்லாந்து கிடக்குதுங்க, இதுல ஒரு கொடந் தண்ணிக்காக ரோடு ரோடா நாயா அலையணும், குடுக்குறானுங்களா ஆயிர ரூவா, #%^**++$”

இன்னொரு இளைஞர்
“இன்னா ஆயா பாயிண்ட்டா பேசுறே, அப்போ ஆயிர ரூவா வேணா உனக்கு?”

“ஆமாண்டா அந்த ஆயிர ரூவாய கூட உங்கப்பன் வரிசையில நின்னு வாங்கினா நீ போய் கண்ட கருமாந்திரவனுக்கு தியேட்டராண்டா போய் அழுவே, எல்லாத்துக்கும் நாங்கதாண்டா போகணும், நீங்க ஆக்டருங்க பின்னாடி போங்க, இவனுங்க எல்லாம் ஆயிரந்தரேன் இரண்டாயிரந்தரேன் நாய்க்கு எலும்புத்துண்டு தர்றா மாரி தந்துட்டு புள்ள குட்டிங்களுக்கு சொத்து சேர்த்துட்டு ஓட்டு கேக்கசொல்லோ ஈஈன்னு பல்ல இளிச்சிகிட்டு வருவானுங்க, நாங்க எப்பவும் போல எப்படியாச்சும் தண்ணிக் கொண்டாந்து உங்களுக்கு வடிச்சுக்கொட்டணும், நகரு அந்தாண்டே”

பைக்கில் வந்த இன்னொருவர்
“ஆமாம் பாட்டி சொல்றது சரிதான், என்ன பண்றது? நாட்டுல சிஸ்டம் சரியில்ல”
இளைஞன், “இன்னா சார் தலைவர் ஃபேனா?” சிரிக்கிறார்
ஆயா, “தோ சொன்னா மாரி நடக்குது பாரு, வயசானவங்க புலம்பறோம், வயசு இருக்கறதுங்களும் புலம்புதுங்க, சுருட்றவன் சுருட்டிக்கிட்டு போறான், இந்த ஆத்தாதான் காப்பாத்தனும் போல!”

#சிஸ்டம்_சரியில்ல!

வழக்கம்

யாருக்காவது உதவி செய்யும்போது
அதை நீரிலும்
யாரையாவது காயப்படுத்தும்போது அதைக்கல்லிலும்
எழுதி வையுங்கள்
விந்தையென்னவென்றால்
இரண்டையும் மாற்றி எழுதி வைப்பதையே 

வழக்கமாக்கி
கொண்டிருக்கிறோம்!

அனுபவம்

#அணுக்கதை
துணிக்கடையில் இருவர்:
“ஷப்பாஆஆஆ அண்ணே, கல்யாணத்துக்கு அம்மா பொண்ணு பாத்தபோது கூட ஒன்னும் சொல்லாம கட்டிக்கிட்ட, இப்ப ஒரு சட்டை எடுக்கறதுக்கு இத்தனை கட நடந்து, இத்தனை துணிய எடுத்துப்போட்டு ரொம்ப அக்கப்போர் பண்றே?”
“டேய், அப்ப பட்ட அடியில்தான் அன்னையிலிருந்து இப்படி அலசி ஆராய ஆரம்பிச்சிட்டேன்!? நீயாவது அண்ணணே பார்த்து கத்துக்க!”
கேட்டுக்கொண்டிருந்த துணிக்கடைக்காரர்: “சார் எவ்வளவு அடிச்சாலும் கிழியாத துணியிருக்கு காட்டவா?”
“??!!” 😳😥😥😥
#அனுபவம்

ஜனநாயகத்தின்_வீழ்ச்சி!

#அணுக்கதை
“இப்படியாக சிந்திய நாட்டின் 74 ஆண்டுகால சுதந்திரம் கஜராத் மன்னர்களிடம் கைநழுவி போய் முடிவுக்கு வந்தது, அவர்கள் பண்டைய அமிழகத்தில் வளம் நிறைந்த பகுதிகளில் எண்ணெய் கிணறுகள் தோண்டி அவற்றை பாலைவனமாக்கினார்கள், தங்களின் எட்டப்பத்துரைகள் மூலம் எட்டுவழி பத்துவழி சாலைகள் போட்டு தங்கள் வணிகப்பொருட்கள் சாலைவழி விரைந்து செல்ல ஏற்பாடு செய்துக்கொண்டார்கள், கல்வி, ஆரோக்கியம், பல்வேறு சந்தைப்பொருட்கள், தொலைத்தொடர்பு, பெட்ரோலியம், ஆடைகள், காப்பர் என்று பல்வேறு வியாபாரங்களில் போட்டியே இல்லாமல் தனிப்பெரும் சர்வாதிகாரிகளாக திகழ்ந்தார்கள், பேருக்கு ஒருவரை அதிபராக பதவியில் அமர்த்திவிட்டு, தங்கள் மனம் போல வாழ்ந்தார்கள், ஒரு நகரத்தை எண்ணெய்க்காக, ஒரு நகரத்தை காப்பருக்காக, ஒரு நகரத்தை துறைமுக வணிகத்திற்காக, ஒரு நகரத்தை ஆயுதங்களுக்காக என்று ஒவ்வொன்றாய் அழித்தார்கள், மக்கள் சாராயக்கடைகளில் மதியிழந்து கிடக்க, போராடிய எஞ்சிய மக்கள் குண்டுகளுக்கு பலியானர்கள், பலர் நவீன மருந்து வியாபாரங்களுக்கு சோதனை எலிகளாயினர், நியாய மன்றங்கள்
எல்லாம் ஏதேதோ சொல்லி மக்களின் கோரிக்கைகளை, வழக்குகளை நிராகரித்தன, இறுதியில் ஒரு தேசமும் சில இனங்களும் அழிந்து எஞ்சியவர்கள் அடிமைகளாக விற்கப்பட்டனர்......”


என்று வேலைக்காரி பூர்ணாவின் பத்து வயது மகன் பாபு வரலாறை வாய்விட்டு படித்துக்கொண்டிருக்க “அரே சுப்!” என்று அவனை அதட்டி நகர்ந்தார் முதலாளி!
#ஜனநாயகத்தின்_வீழ்ச்சி!

நண்பன்

நேரமில்லை என்றதில்லை
மறந்துவிட்டேன் என்று சொன்னதில்லை
முக்கியமில்லையென்பதற்கு
முக்கியமானவைகளென காரணங்கள்
அடுக்கியதில்லை
தன்னலமென்று சுயநலமாய் இருந்ததில்லை
தேவை மட்டும் கருதி வந்ததில்லை
சுள்ளென்று வார்த்தை வாட்கள் சுழற்றியதில்லை
தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றதில்லை
எப்போதும் எனக்காக உடனிருப்பாய்
#நல்ல_புத்தகமே!

உத்தமம்!

யாரோ ஒருவரின்
வெற்றிடத்தை நிரப்புகிறோம்
யாரோ ஒருவருக்கு
வெற்றிடத்தை தருகிறோம்
நிரப்புவதும் தருவதுமான
இந்த வாழ்க்கையில்
விலக வேண்டிய நேரத்தில்
விலகி விடுதலே
உத்தமம்!

Preference

Image may contain: sky and text

Love


Image may contain: text

கீச்சுக்கள்

எத்தனை அழகாய் இருக்கிறார்கள் மனிதர்கள்
நாம் எதையும் கேட்காதவரை!
---------------------------
பலரின் கனவுகளுக்காக
உழைப்பவர்களுக்கு
எப்போதும்
கனவுகள் சொந்தமில்லை!
----------------------

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!