Friday 20 December 2019

கீச்சுக்கள்

தன்னிடம்
எதையும் எதிர்ப்பார்க்கக்கூடாதென்று
அம்மா மட்டும்
நினைத்திருந்தால்
இந்த உலகில்
உயிர்களே இருந்திருக்காது!

---------------------

உடல் இயக்கம்
தேயும் நேரத்தில்தான்
அன்பின் உண்மைமுகம்
தெரியவரும்!

------------------------

எப்போது புகழ் போதையில்
மூழ்குகிறோமோ அப்போது
நல்லவைகள் நம்மைவிட்டு
விலகிச்செல்கின்றன!

-----------------------

தேனீ தொடங்கி யானை வரை, இந்த விலங்கினங்களும், மற்ற பல்லுயிர்களுமே இந்தப்பூமி வாழக்காரணம், மனிதர்களுக்கோ இந்தப்பூமியை ஏதோ ஒரு விதத்தில் சுரண்டுவதே வாழ்தல் என்றாகிவிட்ட நிலையில், இந்தப்பூமியில் மனிதர்கள் அனைவரும் #அகதிகள்தான்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!