Friday 20 December 2019

பயம்

காட்டின்
விடியாத இருளில்
கவிழ்ந்துக்கிடந்தன
இலைகள்
தனியே சலம்பிக்கிடந்தன
மலர்கள்
பயமேயில்லையோ
உங்களுக்கென்றேன்
யானைகள் மிதித்தாலும்
ஏற்றுக்கொள்வோம்
மீண்டும் தழைப்போம்
மனிதர்கள் முகாமிடும் போதே
தலைமுறை சாய்ந்துவிடும்
அச்சம் கொள்வோம்
பாரேன் இப்போது
நீயும் கூட
இக்காட்டில் தனியே
நின்று கண்ணீர் உகுப்பதும்
மனிதராலன்றோ
என்று சலசலத்துச் சிரித்தன
மரங்கள்!

#பயம்

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!