Friday 20 December 2019

காதலின்_குறுங்கதை



#காதலின்_குறுங்கதை!

தன் வேரை பூமியில்
பரப்பியிருந்த மரத்தின்
கிளையோன்று
வானமே வாழ்க்கையென்று
லயித்திருந்தது

ஒரு பருவத்தில் பூக்களையும்
மறு பருவத்தில் காய்ந்த
இலைச்சருகுகளையும்
பூமியில் உதிர்க்கும் மரம்
சில வேளைகளில்
பூக்களும் இலைகளும் இல்லா
மொட்டைக்கிளைகளுடனும்
காட்சிதரும்!!

நிழலிலும்
பூக்களின் மணத்திலும்
திளைத்திருக்கும் பூமி
இலையுதிர் காலத்திலும்
மரத்தின் வேரினை
இன்னும் பலமாய் பற்றியிருக்கும்

நெடுநேரம் இம்மரத்தினடியில்
நாம் கதைத்திருக்கிறோம்
நீ இல்லா இப்பொழுதுகளில்
இந்த பூமி நானாகவும்
வெறும் நெடுமரம்தான் நீயெனவும்
தோன்றுகிறது
இனியென்ன
நீ வானம் நோக்கி வாழ்ந்திரு
நான் அன்பெனும் பூமியில்
நேசத்தை ஆழப்புதைக்கிறேன்
அது
உன் நலத்திற்கு உரமாகட்டும்!!

Image may contain: plant, tree and outdoor

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!