Monday 20 February 2023

வாழ்தலின் நொடிகள்

 

மனிதர்கள் வருகிறார்கள்
மறைகிறார்கள்
புத்தாண்டும் வருகிறது
மறைகிறது
வாழ்தலின் நொடிகள்
மட்டுமே
நம் கைகளில்!
❤️

No photo description available.

தட்_பிரதமர்

 

க.மணி: “டேய் நாம எடுக்கிற அடுத்தப்படத்திலே நீதான் பிரதமர், சீன் சொல்றேன் கேட்டுக்க”
செ: “அட இருங்கண்ணே நானே சொல்றேன், வேளைக்கு ஒரு ட்ரஸ்ஸூ, ஊரெல்லாம் சுத்திப்பார்க்குறேன், மேடையில மட்டும் இருபதடி தூரத்திலேயே நின்னு பேசுறேன், யாரு கழுவி ஊத்தினாலும் நம்ம தாத்தாவுக்கு தாத்தாத்தான் காரணம்ன்னு சொல்றேன், பெரிய்யாஆஆ பணக்காரங்க கூட மட்டும் டின்னர் சாப்பிடுறேன், நம்ம ஊர்ல அரசாங்கத்தால யார் செத்தாலும் கண்டுக்காம வெளிநாட்டுல யாராவது செத்த இரங்கல் செய்தி சொல்றேன், அப்புறம் ரொம்ப முக்கியமான விஷயம்ண்ணே எப்பவும் புல் மேக்கப்புல தான் வெளியே வருவேன் நம்ம சுத்தி இந்த போட்டோ மட்டும் புடுக்கிறவங்க நிறைய இருக்கணும், கரெக்டாண்ணே?!
க.மணி: “ஆளாளுக்கு டைரக்டர் ஆனா எப்படிடா நான் படமே எடுக்கல போங்கடா!”

Respond

 No photo description available.

மாறும்

 No photo description available.

வேண்டும்

 No photo description available.

ஆன்ட்டி_இந்தியன்

 

நிருபர்: கருப்புபணத்தை உங்கள் கட்சி ஒழித்துவிட்டதா?
அதிபர்: ஆம் ஒழித்துவிட்டது, மெல்லிய பச்சை, நீல நிறத்தில் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளை தவறுதலாக கருப்பு என்று சொல்லிவிட்டோம், ஆனால் ஊதா, இளஞ்சிவப்பு, ப்ளூ, ப்ரவுன் என்று பல வண்ணங்களில் ரூபாய் நோட்டுகளை அச்சடித்திருக்கிறோம்!
நி: 😩வாராக்கடன்கள் அதிகரித்துவிட்டதே?
அ: உண்மை, கடனை திருப்பிக்கொடுக்காமல் இருந்தவர்களை இனி “வராதே” என்று நாட்டை விட்டு துரத்திவிட்டோம், அதனால் வாராக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, இனி வரவே வராதே என்று சொல்லிவிட்டபடியால் சீர் செய்யப்பட்டுவிட்டது!
நி: 😓 எல்லோரையும் வங்கிக்கணக்கு தொடங்கச்செய்து, பின்பு அவர்களின் குறைந்த சேமிப்பையும், வங்கி கணக்கில் “மினிமம் பேலன்ஸ்” இல்லை என்று வங்கிகள் சுருட்டியது பற்றி?
அ: 60 ஆண்டுகால ஆட்சியில் நாடு மோசமாகிவிட்டது, ஏழைகளின் பணம் போய்விட்டதன் வலி ஒரு ஏழைத்தாயின் மகனுக்குத்தான் தெரியும்!
நி: யார் அது? 🤔
அ: நான்தான்
நி: 😱 ஏழைகளின் நாட்டின் அதிபராகிய ஏழைத்தாயின் மகனான நீங்கள் 4000 கோடியை பயணத்துக்காக செலவழித்தது பற்றி?
அ: அது நாடுகளின் நட்புறவுக்காக
நி: 😰அப்போது ரீனா நாடு ஏன் கருணாச்சலத்தில் ரோடு போட்டது?
அ: எல்லையில் பயங்கரவாதம் நீங்க எங்கள் ஆட்சியில் எல்லாம் சரிசெய்யப்படும்
நி: 🤭நீங்கள்தானே இப்போது ஆட்சியில்?
அ: நான் நாட்டின் சோக்கிதார்...
நி: 🙄ஆனால் நான் கேட்டது?
அதிபர் புகைப்பட கருவி நோக்கி புன்னகைக்க, இரண்டு பேர் நிருபரை குண்டுகட்டாய் தூக்கி வெளியே எறிகிறார்கள்!
#ஆன்ட்டி_இந்தியன் என்று நிருபரை சூழ்ந்துக்கொண்டு மங்கீஸ் முழங்க, நிருபர் ராஜினாமா செய்கிறார்! 😐
சுபம்!

கீச்சுக்கள்

 

 

சுயநலவாதிகளை கடந்து மனம் கடினப்பட்டு விடும்போது கண்ணீரும் வருவதில்லை, எதிர்ப்பார்ப்புகளும் இல்லை, காலப்போக்கில் வார்த்தைகள் குறைந்து ஓர் ஆழ்ந்த அமைதிக்குள் மூழ்கிவிடுகிறது இந்த வாழ்க்கை!

 ---------

அன்பு, கருணை, அரவணைப்பை யாருக்கும் கொடுக்கலாம் ஆனால் அதை எல்லாம் யாரிடமும் எதிர்ப்பார்க்காமல் நமக்கு நாமே நேசித்தலே வாழ்க்கையை எப்படியோ சமன் செய்து நகர்த்த உதவும், அதுவே தற்கால எதார்த்தம்!

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!