மனித உறவுகள் தரும்
வலிகளையும் வேதனைகளையும் கொண்டு
ஒன்று முறிந்தும் போகலாம்
அல்லது எழுந்தும் நிற்கலாம்
பிறர் கருணைக்கும் முடிவுக்கும்
விட்டுவிட்டால்
அது மரணம்
நம்மையே நாம்
செதுக்கி நிமிர்ந்தால் மட்டுமே
அது நம் வாழ்க்கை!
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
No comments:
Post a Comment