Monday 20 February 2023

ஆணிவேர்_ஆட்டம்

 

இராவணனிடமிருந்து மீண்டபின்
சந்தேகித்த ராமனை விட்டு
ஒரு சோமனை மணந்தாள்
 
ஆடலரசியின் பின்னே
கோவலன் செல்ல
உதவாதவனுக்காக ஊரையெரிப்பது
வெட்டிவேலையென்று
மேலே படிக்க
அப்பன் வீடு சென்றாள்
 
நடுஇரவில் ஞானம் வேண்டி
விட்டுச்சென்ற சித்தார்த்தனை
தேடிப்பிடித்து மகன் ரகுலனை அவனிடம் ஒப்படைத்து
தேசாந்தரம் சென்றாள்
 
குடித்துவிட்டு கும்மாளமிட்ட
கணவனை வெட்டிவிட்டு
சிறைசென்றாள்
 
ஒருதலைக்காதலால்
தொல்லைக்கொடுத்தவன் மீது
ஆசிட் ஊற்றினாள்
கல்லூரி சென்ற
 
இப்படி பகீரென்று வந்த
காட்சிகளில் “ஒழுக்கம்” கெட்டுவிட்டதாக புலம்பி,
நாடு நாசமானதாக துடித்தது
இந்திய ஆண்சமூகம்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!