Monday 16 December 2013

பூக்கள் மென்மையானவை!


புதிதாய் ஒரு பக்கம்
தினம் திறக்கிறேன்
புன்னகையோடே - உனக்காக
இந்த வாழ்க்கைப் புத்தகத்தில்!

கடுமையும் இனிமையும்
மாறி மாறி கண்ணீர் நிரப்பும்
எழுதுகோலில் - ஏனோ
கசிகிறது சிவப்பு,
விரல்களின் வழியே
எப்போதும்!

கசிகின்ற குருதியிலும்
பூ மணம் ஒன்றே வீசும்
பூக்கள் மென்மையானவை
புரிந்துகொள்ளேன் ஒரு நாளில்?

1 comment:

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!