Thursday 31 October 2013

போரின்றி அமையாது!


வீசும் புயற்காற்றில்
போரிட்டு
கொண்டிருக்கிறது
மரம்

சில கிளைகள்
முறிகின்றன
சில விதைகள்
புதைகின்றன
முன்னமே 

விடியலில் 
சில பனித்துளிகள்
இலைகளை
நனைக்கின்றன
வேரின் தாகத்தை
தணிக்காமல் 

புயல் தோற்றால்
அமைதித் திரும்பும்
மரம் தோற்றால்
கூடுகளும் குஞ்சுகளும்
சிதறிப் போகும்

சில வேர்களின் பிடியில்
நிலைக் கொண்டு
ஆடிக்கொண்டிருக்கிறது
மரம்

 

2 comments:

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!