Monday 7 October 2013

பழங்கதை



பூனைகளின்
பசிக்கிருந்த ஆப்பம் - அதை
குரங்கொன்று விட்டது ஏப்பம்

பாட்டி சொன்னக் கதையிது
மாறிக் கொண்டே வருகுது

பூனைகள் என்றும் பூனைகளாய் 
மந்தையில் சிக்கிய மாடுகளாய் 
குரங்குகள் பெருகினத் தலைவர்களாய்
நாடொன்று ஆனது இங்கே ஆப்பமாய்

ஆப்பமும் ஆகும் துண்டுகளாய்,
குரங்குத் தலைவர்களின் கைகளிலே
நாளை வரும் தேர்தலிலே!

பாட்டி சொன்னக் கதையிது
பாங்காய் இன்றும் பொருந்துது!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!