Tuesday, 1 October 2013

கீச்சுக்கள்

உங்களை ஏமாற்றும், துன்பம் தரும்,
வதைக்கும் யாரும் உங்களுக்கு ஓர் ஆசான்,
ஆசான்கள் தங்குவதில்லை,
அவர்கள் தரும் அனுபவங்கள் தங்கிவிடும்!
வாழ்க்கை பாதையில் அவர்களையும்
வாழ்த்தியே கடந்து செல்லுங்கள்!

Photo: உங்களை ஏமாற்றும், துன்பம் தரும், 
வதைக்கும் யாரும் உங்களுக்கு ஓர் ஆசான், 
ஆசான்கள் தங்குவதில்லை, 
அவர்கள் தரும் அனுபவங்கள் தங்கிவிடும்! 
வாழ்க்கை பாதையில் அவர்களையும் 
வாழ்த்தியே கடந்து செல்லுங்கள்! 

----------------------------------------------------
துன்பங்களைக் கடக்கையில்
நீங்கள் மௌனம் கொண்டால்
அது விரக்தியின் நிலை!
துன்பங்களைக் கண்டு
நீங்கள் சிரிக்க ஆரம்பித்தால்
அது ஞானத்தின் நிலை!
#சுயநலமாய் இருங்கள், ஞானம் பெற்றால் போதும்!  

Photo: துன்பங்களைக் கடக்கையில் 
நீங்கள் மௌனம் கொண்டால்
அது விரக்தியின் நிலை! 
துன்பங்களைக் கண்டு
நீங்கள் சிரிக்க ஆரம்பித்தால் 
அது ஞானத்தின் நிலை! 
#சுயநலமாய் இருங்கள், ஞானம் பெற்றால் போதும்! :-) 
-------------------------------------------------------------
உணவுப் படைத்தல் பெரும் கருணை, பசிக்கு உணவிடுதலை விடப் பசியறிந்து உணவிடுதல், உள்ளன்போடு உணவிடுதல் என்பது ஒரு சிறந்த வரம்!

வேண்டாததை, பழையதைப் பிச்சையிட்டு, தானம் செய்தேன் என்று சொல்லிக்கொள்வதும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இடையூறு இல்லாமல் உணவுப் படைத்தலும் தான் இன்றைய காலக் கட்டத்தில் ஏற்பட்டு விட்ட ஓர் அறம்!

# அன்பிலா உணவு என்பிலே!



























Photo: உணவுப் படைத்தல் பெரும் கருணை, பசிக்கு உணவிடுதலை விடப் பசியறிந்து உணவிடுதல், உள்ளன்போடு உணவிடுதல் என்பது ஒரு சிறந்த வரம்!  

வேண்டாததை, பழையதைப் பிச்சையிட்டு, தானம் செய்தேன் என்று சொல்லிக்கொள்வதும்,  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இடையூறு இல்லாமல் உணவுப் படைத்தலும் தான் இன்றைய காலக் கட்டத்தில் ஏற்பட்டு விட்ட ஓர் அறம்!

# அன்பிலா உணவு என்பிலே!
----------------------------------------------------------------------------------------
காலையில், "இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு" என்று, எழுவதைத் தள்ளிப்போடுவதில் இருந்து அந்த நாளின் தோல்விக் கணக்குத் தொடங்குகிறது....
"அப்புறம்" "இன்னொரு நாள் செய்யலாம்/ பார்க்கலாம்" என்று சோம்பலுக்குத் தொடர்ந்து இடம் கொடுக்கையில், தோல்வி மெதுவே உங்கள் முதுகில் ஏறி, உங்கள் உச்சி மண்டையின் நடுவே ஏறிக் கொடி நாட்டப் பயணப்படுகிறது, அதன் இலக்கை அடையும்போது, எதிரே வரும் அதிர்ஷ்டத்தையும் அது எட்டி உதைக்கிறது!

# "இது பூட்ட கேஸ்....போடா அதிர்ஷ்டமே வேற வழியப் பார்த்துகிட்டு" என்று சொல்வது, எப்போதும் தூங்கிக் கொண்டிருக்கும் உங்கள் காதுகளில் விழாது!  

:-)
------------------------------------------------------------------------------------------------
பெய்யும் மழை எங்குப் பெய்தாலும், மழையாகவே பெய்கிறது அதன் தன்மை மாறாமல்!

மழைப் பெறும் நிலங்கள்தான் மாறிக்கொண்டே இருக்கிறது, முன்பு சதுப்புக் காடுகளாக, பின் செம்மண் பூமிகளாக, இப்போது கான்க்ரீட்/தார்ச் சாலைகளாக!
 


No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...