Tuesday 1 October 2013

நாடு - கீச்சுக்கள்

மாத்தணும், அடிக்கணும், நொறுக்கணும், நல்லது செய்யணும்.........என்று டீ கடை பெஞ்சுகளில் "பேசி", இப்போது சமுக வலைதளங்களிலும் பேசும் அளவு முன்னேற்றம் கண்ட #நாடு!
-------------------------------
யார் வேண்டுமானாலும் வந்து தமிழர்களை கொல்லலாம், சுரங்கம் தோண்டலாம், கனிமம் திருடலாம், புதைகுழி அமைக்கலாம், அணுக்கழிவை கொட்டலாம்.....நாங்கள் தமிழர்கள், எதிர்க்கும் தமிழர்களை தண்டிப்போம் என்று பாரபட்சமின்றி நடந்து கொள்ளும் பெருமைமிக்க #நாடு!
---------------------------
Generally any Government runs by tax money and other returns on investment, first breakthrough in generating income by selling liquor (most important and basic need and right of citizens) and next in water and the list may follow.....this is called true democracy 'by the people, for the people and of the people'
OMG!

--------------------------------
வீதிக்கு வீதி சோமபானம் விற்று, மக்களுக்கு சாலை விபத்தில் மோட்சம் அளித்தது போக, நடைபாதை முழுக்க தட்டிகள் அமைத்தது போக, இப்போது
அண்ணா மேம்பாலத்தின் கீழ் உள்ள முக்கியமான சாலை சந்திப்பில், போக்குவரத்து சிக்னலை மறைத்து கட்டப்பட்டிருக்கிறது அரசின் மிக பெரிய விளம்பரப்பலகை......

# இங்கே வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டால் அதற்க்கு யார் பொறுப்பு?

# இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு! 

--------------------------------
   

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!