Tuesday 1 October 2013

கீச்சுக்கள்

சாதி, மத, இன உணர்வு ஜெயிக்கும் இடத்தில், அன்பு தோற்கிறது, அன்பு தோற்கும் இடத்தில் குழப்பம் விளைகிறது, குழம்பிய குட்டையில், மனித நேயம் மடிகிறது!
-------------------
வாழும் போது ஒருவரிடம் காட்டாத பரிவை, அவர் போனபின் அழுது புரண்டு ஊர் மெச்ச ஒப்பாரி வைக்கிறோம்!
------------------------------
 Photo: ஆசை, அன்பு, காதல் இவற்றை உணர்த்துவதை விட,கோபம், வெறுப்பு மற்றும் பிரிவினையை  உணர்த்துவதற்குத்தான் நமக்கு அதிக வார்த்தைகளும், நேரமும் தேவைப்படுகிறது! 
ஆசை, அன்பு, காதல் இவற்றை உணர்த்துவதை விட,கோபம், வெறுப்பு மற்றும் பிரிவினையை உணர்த்துவதற்குத்தான் நமக்கு அதிக வார்த்தைகளும், நேரமும் தேவைப்படுகிறது!
----------------------------------------------------
 
Photo: ஒரு தவறுக்காக 
குழந்தையை கடிந்து கொண்டு - பின் 
கடிந்து கொண்டதை பெரும் தவறென 
தன்னையே கடிந்து கொள்ளும் 
தாயின் மனம்!
ஒரு தவறுக்காக
குழந்தையை கடிந்து கொண்டு - பின்
கடிந்து கொண்டதை பெரும் தவறென
தன்னையே கடிந்து கொள்ளும்
தாயின் மனம்!

------------------------------------
ஆபத்துக்கு உதவியவனிடமும், அவசர தேவைக்கு உடன் இருந்தவனிடமும், தடைகளைத் தாண்டி அன்பு காட்டியவனிடமும் வராத பாசம் எல்லாம், ஒருவன் தன் இனம், தன் மதம், தன் சாதி என்று தெரிந்தவுடன் ஊற்றாய் பொத்துக் கொண்டு வருகிறது!

# எதார்த்தத்தில் வாழ்ந்து கொண்டே புரட்சி பேசுகிறோம்!
— feeling tired.
------------------------------------------------
 
நாம் காயப்படுவதை பற்றி கவலைப்படாதவர்களிடம்,
நம் காயங்களை காட்டி ஆகப்போவது ஒன்றுமில்லை,
அது ஆறிவிட போவதும் இல்லை!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
----------------------------------------------------------------------
இருப்பின் வெற்றிடத்தை இழப்பொன்றெ உணர்த்தும்
நிழலின் குளிர்ச்சியை வெம்மையில் உணர்வது போல்!

Photo: இருப்பின் வெற்றிடத்தை இழப்பொன்றெ உணர்த்தும் 
நிழலின் குளிர்ச்சியை வெம்மையில் உணர்வது போல்! 
 ------------------------------------------------------------------------------
நலமாய் இல்லை என்ற பதிலை யாரும் விரும்புவதில்லை, அப்பதிலின் தொடர்ச்சியாய் உங்களுக்கு உதவும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள யாருக்கும் நேரமுமில்லை, மனமுமில்லை!

எப்போதும் நலமாய் இருக்கிறேன் என்ற பதிலையே பகருங்கள், ஒரே ஒரு ஆத்மார்த்தமான உறவோ, நட்போ உண்மையை உணர்ந்து கொள்ளும்!
# நலமாய் வாழுங்கள்!
 
 Photo: நலமாய் இல்லை என்ற பதிலை யாரும் விரும்புவதில்லை, அப்பதிலின் தொடர்ச்சியாய் உங்களுக்கு உதவும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள யாருக்கும் நேரமுமில்லை, மனமுமில்லை!

எப்போதும் நலமாய் இருக்கிறேன் என்ற பதிலையே பகருங்கள், ஒரே ஒரு ஆத்மார்த்தமான உறவோ, நட்போ உண்மையை உணர்ந்து கொள்ளும்! 
# நலமாய் வாழுங்கள்!

--------------------------------------------------------------------------------
இடப் பற்றாக்குறை என்று தூக்கி எறியப்படுபவை (படுபவர்கள்) இரண்டு, முதலில் முதியவர்கள், இரண்டாவது புத்தங்கங்கள்.

# பெற்றதும், கற்றதும், பெரும்பாலும் அந்தந்த தலைமுறையோடு தொலைந்து போகிறது.


-----------------------------------------------------------------------
ஒரு முறை தந்தால் மீண்டும் தர வேண்டுமோ என்ற ஐயமோ, ஒன்று பெற்றால் இன்னொன்று தர வேண்டுமோ என்ற பதட்டமோ இந்த இயற்கைக்கு மட்டும் இல்லவே இல்லை.....
# பொய்க்காமல் பெய்யென பெய்யும் மழை!

  Photo: ஒரு முறை தந்தால் மீண்டும் தர வேண்டுமோ என்ற ஐயமோ, ஒன்று பெற்றால் இன்னொன்று தர வேண்டுமோ என்ற பதட்டமோ இந்த இயற்கைக்கு மட்டும் இல்லவே இல்லை.....
# பொய்க்காமல் பெய்யென பெய்யும் மழை!
-----------------------------------------
களர் நிலத்தில் விழும் நீர், நிலத்திற்கு மாற்றம் தருவதில்லை, செம்மண் பூமியில் பொழியும் மழை, வளமையாக மாற்றம் பெறுகிறது.
# நிலம் பொருத்து வளமை, மனம் கொண்ட ஈரம் பொருத்து வாழ்க்கை.
மழை!

--------------------------------------------------------
பெய்யும் மழை பாலையில் பெய்கையில் அதை பாலைப் பிடித்து வைத்துக் கொள்வதில்லை, அது சோலையாய் ஆவதும் இல்லை.....பாலை உணராத மழை, மேகமாய் மட்டுமே வாழ்ந்தால் என்ன? எங்கோ ஒரு நிலத்திற்கு அது நீரை தந்தால் போதாதா?
# பாலையில் பொழியும் மழைப் போலான்றோ உணராதா அன்பும்!
இடி, மின்னல், மழை!

-------------------------------------------  

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!