Monday 7 October 2013

நாம்



நான் என்ற நானில் இருந்து
என்னை மாறச் சொல்கிறாய்
நீ என்றும் நீயாகவே
இருந்து கொண்டு

என்னை மாற்றிக் கொண்டால்
மட்டுமே உனக்குப் பிடிக்கும்
என்றால் - மாறிய நான்
உண்மையில் யார்?

அன்பை கேட்டால்
அலுப்பாய் உணர்கிறாய்  -
அன்பை கேட்டல்
அன்பின் இயல்பு
நீ அலுப்பாய்
உணர்ந்தால், - அதற்கு
நானா பொறுப்பு?

பேசினால் திமிர் என்கிறாய்
பேசாவிட்டால் தினவு என்கிறாய்
மாறும் உன் இயல்பில்
நீ நீயெனத் தெரிவது
எனக்கு நீதானா?

நானும் நீயும்
நாமில்லை -
நானெனும் நானும்
நீயெனும் நீயும்
விலகும்வரை!

1 comment:

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!