Wednesday 13 November 2013

ஒன்றிருந்தால் ஒன்றில்லை

கேட்பதற்குச் செவிகள்
மட்டும் போதாது,
உள்ளார்ந்த ஆர்வம் வேண்டும்

தானம் செய்யச் செல்வம்
மட்டும் போதாது,
விரும்பித் தரும் கருணை வேண்டும்

காதல் செய்யத் தனிமை
மட்டும் போதாது,
இசைந்து உருகும் அன்பு வேண்டும்!

வாழ்வதற்கு வலிமை
மட்டும் போதாது,
இயைந்து வாழும் சமூகம் வேண்டும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!