Tuesday 18 September 2012

காதல்

மனதில் படியும் நினைவுகள்
பாரமாய் அழுத்தும் கனவுகள்

சிதறிப் போகும் மேகங்கள்
சீக்கிரம் போயின பொழுதுகள்

சொர்க்கமும் நரகமுமாய் நாட்கள்
மலரும் முள்ளுமாய் வார்த்தைகள்

பரவசமாய் தோன்றிய தீண்டல்கள்

வேதனையாய் மாற்றிய தருணங்கள்

கைப்பிடித்து சொன்ன வார்த்தைகள்
கைகழுவிய பின் சொன்னவை அமிலங்கள்

மூளைச் சலவை செய்யும் உணர்வுகள்
முடங்கிபோகும் வாழ்க்கைகள்

ஆதலால், கண்ணே
கண்களால் காதல் செய்
அறிவினால் மட்டுமே அதை உறுதி செய்!

2 comments:

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!