Tuesday 18 September 2012

வழக்கு

நீயும் நானும்
மானிடப் பிறப்பு
உனக்கும் எனக்கும்
உணர்வுகள் ஒன்று, - எனில்
வார்த்தைகள் கொண்டு
என்னை கொன்றது ஏன்?

குத்தியது உன் குற்றம்
என்றால் - தண்டனை
மட்டும் எனக்கா? - இது

சாட்சிகள் இல்ல வழக்கா?

நீதி வரும் நேரம்
வழக்குதரார் இருப்பதில்லை
வழக்கு மட்டும் நிலுவையில்
வழக்கில் மாற்றமில்லை
வழக்குதரார்கள் மட்டும்
மாறிக் கொண்டேயிருகின்றனர்!

1 comment:

  1. உங்களின் வேதனையின் வெளிப்பாடு புரிகிறது
    இப்போதெல்லாம் மனசாட்டசி என்பது பலர் மனதில் இருப்பதில்லை
    காரணம் மனிதன் என்பவன் மிருகமானவன் என்ற கண்ணதாசனின் வரிகள் நினைவு படுத்துகிறது

    ReplyDelete

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!