Thursday 16 May 2019

வாழ்ந்திரு

மரணத்திற்கும்
வாழ்க்கைக்குமான
இடைவெளி
சில மணித்துளிகள்தான்
இந்த இரவின்
நீள்பொழுதில்
அந்த சில மணித்துளிகளின்
பல பக்கங்களை
நீயேன் என் குருதிக்கொண்டு
வரைகிறாய்
என்று யோசிக்கிறேன்
அலையலையாய்
எழும் நேசத்தையும்
பகிரத்தலைப்படும்
உணர்வுகளையும்
அங்குசம் கொண்டு
அடக்கி சிறைப்படுத்துகிறேன்
கட்டுண்ட படகாய்
எண்ணங்கள் தளும்ப
ஓர் ஆழ்ந்த தனிமைக்குள்
புதைந்துப்போகிறேன்
மௌனத்தின் வேர் அறிந்தவன்
என்று நீ ஆனந்தமாய்
பிரசங்கம் செய்ய
ஒரு வெற்றுப்பார்வையில்
உன்னை நிரப்பிக்கொண்டு
நீ எப்போதும் மதியாத
அந்த அன்புடன்
தொலைந்துப்போகிறேன்
அன்பே இனியாவது
முகமூடிகள் அகற்றி
நீ நீயாக #வாழ்ந்திரு!



Image may contain: 1 person

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!