Thursday, 16 May 2019

பதவி

#அணுக்கதை
செந்தில், கவுண்டமணியிடம்: அண்ணே அண்ணே
கவுண்டமணி; சொல்டா நாயே
“ஏன்னே எப்படிண்ணே தேர்தல்ல நிக்காம படீர்ன்னு கால்ல விழுந்து முதல்வராயிட்டங்க?”
“டேய் கோமுட்டி தலையா, காரியம் ஆவனும்னா காலை பிடி இல்லைன்னா கழுத்த பிடின்னு சொல்லியிருக்காங்கடா!”
“அண்ணே இப்ப நான் உங்க கால்ல விழுந்தா என்னை முதல்வர் ஆக்கிடுவீங்களாண்ணே?”
செந்திலை ஏற இறங்க பார்த்துவிட்டு, “டேய் யார்ரா அங்கே இந்த மண்டையன தூக்கி உள்ள போடுங்கடா..”
“”அண்ணே அண்ணே என்னண்ணே இப்படி கேட்டதுக்கெல்லாம் திடுதிடுப்புன்னு உள்ள போடச் சொல்றீங்க? நீங்க ரொம்ப மோசம்ண்ணே”
கவுண்டமணி அழுதுக்கொண்டே, “ஏன்டா நானே அவனவன் கால்ல கையில் விழுந்து (மனசுக்குள், “தவழ்ந்தெல்லாம் போய்!”) இந்தப் பதவியை பிடிச்சிருக்கேன், நீ கூட இருந்துட்டே அத பிடுங்கப்பாக்குறீயா? எவனாவது ஆட்சிய பத்தி பதவிய பத்தி பேசினா எவனா இருந்தாலும் வெட்டுவேன், யாரா இருந்தாலும் உள்ளே தூக்கிப்போட்டு மிதிப்பேன்!” கோபமாக கத்துகிறார்
செந்தில், கோபத்துடன், “அண்ணே இதுக்கெல்லாம் நீங்க ரொம்ப வருத்தப்படுவீங்க, என்கிட்டதான் வந்தாகணும்!”
அசால்ட்டாக, “சரி போ நாயே அப்படியே ஒரு பொறைய போட்டா சரியாகிட மாட்டே, நீ வாங்குற நாலு பத்துக்கு இந்தப் புரட்சி எல்லாம் உனக்கெதுக்கு, இதெல்லாம் அரசியல்ல சகஜம்ப்பா..”
#பதவி

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...