Thursday, 16 May 2019

முற்பகல் செய்யின்

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை கார்டு மூலம் செலுத்தலாம் என்ற பிறகு தமிழக தலைநகரம் வெறிச்சோடி போயிருக்கிறது, இருசக்கர வாகனங்கள் 200 சதவீதம் விதிமீறல்கள் செய்ய, அவர்கள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டு, டெம்போக்களும் லாரிக்களும் மட்டும் ஓரங்கட்டப்படுகின்றன, அட இன்னுமா டெபிட் கார்ட் வாங்கல?
****
அமெரிக்கா என்றொரு நாடு இருக்கிறது, ஆப்கானிஸ்தான் என்றொரு அடியாளை வளர்த்துவிட்டு பின்னாளில் ஆப்பசைத்த குரங்காக அவதிப்பட்டது, அதுபோல விதிமீறல்களை கண்டுக்கொள்ளாமல் சாலையில் ஒரு ரவுடிக்கூட்டத்தை வளர்த்துவிட்டுக்கொண்டிருக்கிறது அரசு, நாளை இதே சாலையில் தான் அதிகாரிகளும் அமைச்சர்களும் பயணிக்க வேண்டும், எல்லா நேரமும் எல்லா உறவுகளுக்கும் சைரன் வைத்த வாகனம் வருமா இல்லை “G” என்ற எழுத்து சாலையில் சீறும் வாகனங்களை கட்டுப்படுத்தி விபத்தை தவிர்த்துவிடுமா? முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!

No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...