Thursday 16 May 2019

விதைக்காமல்_வெற்றியில்லை

“ஏன் இதை சரியாக செய்யவில்லை?” என்று கடிந்துக்கொண்டாலும், பின் அதை எப்படி சீர்செய்வது என்பதை மட்டுமே யோசித்து பின் அந்தத் தவறு நிகழாமல் இருக்க வேண்டிய வழிமுறைகளை செய்யவேண்டியது, மலையென இருக்கும் அலுவலகப் பணியில் ஒரு சிறு கல்லளவு பணி, அற்புதமாய் செய்தப் பணிக்கு பாராட்டும் அதே வேகத்தில் செய்ய வேண்டும், வெற்றியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருத்துறையில் இதை நிச்சயம் செய்வார்கள், அப்படியே யு டர்ன் அடித்து தனிப்பட்ட வாழ்க்கையில் வந்தோமென்றால் இந்த அணுகுமுறை நிச்சயம் வளர்ந்தவர்களிடம் இல்லை, “ஏன்? ச்சை! “ என்ற கடிந்துக்கொள்ளலோடு இன்னும் பல வார்த்தைகளின் வீச்சோடு முடிந்துவிடுகிறது, மற்றப்படி ஏன் எதற்கு எப்படி, இனி எப்படி சீர்செய்வது என்பன போன்ற எதுவும் கேட்கப்படுவதோ உணரப்படுவதோ இல்லை, எந்தத் தவறும் நிகழ்வதற்கு தவறே காரணங்கள் இல்லை, காரணத்தை விட்டுவிட்டு காரியம் செய்தவரை வசைபாடுவதும் இயல்பு, சரியாய் நிகழும் ஒன்றையும் கூட நாம் பாராட்டுவதும் இல்லை, அம்மா செய்யும் சமையல் நன்றாக இருந்தால் ஒன்றும் இல்லை, உப்பு அதிகமாகும் நாளில், ஏன் இப்படி என்று புருவம் உயர்த்துவது போன்றதே இது!
உரியவரிடம், கோபத்தை வரைமுறையோடு காட்டுங்கள், அன்பை வரையறையில்லாமல் காட்டுங்கள், குறைகளைச் சுட்டுங்கள், நிறைகளை கைத்தட்டி பாராட்டுங்கள், இவையெல்லாம் ஆக்கப்பூர்வமானவை, இதற்கு சம்பளம் தேவையில்லை, நல்ல மனமும் சிந்தனையும் மட்டுமே போதும்; இதை எதுவும் நீங்கள் செய்யாமல் எந்த மாற்றத்தையும் எவ்விடத்திலும் எவரிடத்திலும் எதிர்நோக்குதல் கால விரையமே!
,
#விதைக்காமல்_வெற்றியில்லை

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!