Thursday 16 May 2019

மனிதம் விழிக்கும் நேரம்



மரணத்தில்
ஒப்பாரி வைக்கும்
மனிதர்கள்
வாழும் காலத்தில்
தமது கருணையை
கொஞ்சம் ஈந்திருந்தால்
இங்கே உறங்கும்
பல அகால மரணங்களை
தவிர்த்தியிருக்கலாமென
இறந்தவன் ஒருவன்
கல்லறையில்
எழுதி வைத்தான்!
#மனிதம் நிரந்தர
உறக்கத்தில்தானே
விழிக்கிறது!?
 
 Image may contain: text

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!