Saturday 24 November 2012

கானல் வரி


ஒன்றின் இயக்கத்தில்
இன்னொன்று ஊமையாகுது!

பதுமை ஒன்று தனை மறந்து
பொம்மையானது!

பொதுவுடைமை என்பது
பொய்யானது
தனிவுடமை என்பதே
மெய்யானது!

ஒன்றின் விருப்பம்
இன்னொன்றின் துயரமானது
கொன்றபின் வருவதே
ஞானம் என்றானது! 

இந்த வேடிக்கை விளையாட்டில்
மனம் ஒன்று சிக்கி சிதையுது!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!