Wednesday, 21 November 2012
போர்க்களம்
ஒரு வலியில் பிறந்தோம்
ஒரு வலியில் எழுந்தோம்
ஒரு வலியில் விழுந்தோம்
வலி தாங்கினால் வழி ஒரு பாடம்
வலி தாக்கினால் நாம் ஒரு பாடம்
எப்படியோ ஒரு பாடம்
யாருக்கு வலித்தால் என்ன?
வழிமுழுதும் அந்த வலியோ,
வலிகடக்கவும் எந்த வழியோ?
உன் வலி கடந்து வழி அமைத்துத் தா
நாளை அவர்கள் நிம்மதியாய் கடக்கட்டும்
தானாய் ஒரு பூ உன் கல்லறையில் பூக்கட்டும்!
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்தலின் நொடிகள்
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!

-
அம்மாவிற்கு பின் அம்மாவைப் போல் மாறிவிடும் பல பெண்களுக்கு........... அப்பாவிற்கு பின் அப்பாவின் கரங்கள் கிடைப்பதேயில்லை எப்போதும்! ------...
No comments:
Post a Comment