Saturday 10 November 2012

நிமிட நேர வாழ்க்கை


ஆசையுடன் வரும் பிள்ளைகளுக்கு
நாளைக்கென எதுவும் சேர்க்கவில்லை
இன்று வேண்டிய அன்பைத்
தவறாமால் தந்துவிடுகிறேன்!

தேடி வந்த காகங்களை
போவேனச் சொல்லவில்லை 
இன்று வேண்டிய உணவைத் 
தயங்காமல் தந்துவிடுகிறேன்!

காசுக்காக கை நீட்டியவர்களிடம்
நியாய தர்மம் பேசவில்லை
அவருக்கு வேண்டிய ஒரு ஒற்றைத்தாள் 
மறைக்காமல் தந்துவிடுகிறேன்!

துயரம் கொட்டியத் தோழமைகளிடம் 
தோளில் வலி என்று சொல்லவில்லை
அவருக்கு வேண்டிய நட்பை 
நட்போடு தந்துவிடுகிறேன்!

நாளைக்கென என்னிடம் எதுவுமில்லை
நாளை வரும் என்ற நம்பிக்கையை தவிர!

இன்று மட்டும் காண்கிறேன்
இயன்றவரை வாழ்கிறேன்!


No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!