ஒரு வரியில் முடிந்து விட்டது
ஒரு வாழ்க்கை
ஒரு வார்த்தையில் முடிந்துவிட்டது
ஒரு நட்பு
ஒரு கேலி பேச்சில் சுருங்கி விட்டது
ஒரு மனம்
ஒரு அலைக் கழிப்பில் விழுந்து விட்டது
ஒரு கனவு
ஒரு கோபத்தில் தொலைந்து விட்டது
ஒரு உயிர்
ஒரு வன்கொடுமையில் கரைந்து விட்டது
ஒரு கற்பு
இருவர் ஒருவராகி - பிறப்பெடுக்கும்
ஒரு உயிர்....
ஒருவரின் சிறுமைப்பட்ட
ஒரு செயலால்
ஒடுங்கி விடுகிறது...
....
வீழ்வதற்குப் பல சொற்கள்
வாழ்வதற்கு இல்லையோ,
ஒரு சொல்????
வீழ்த்துவற்குப் பல காரணம்
வாழ வைப்பதற்கு இல்லையோ,
ஒரு காரணம்????
No comments:
Post a Comment