Saturday 15 December 2012

பெண்கள்


 நிலவென்று ஒப்பிட்டு
தேய்ந்து போகிறோம்
நீரென்று ஒப்பிட்டு
கரைந்து போகிறோம்
நிலமென்று ஒப்பிட்டு
பகுக்கப் படுகிறோம்
மலரென்று ஒப்பிட்டு
கசக்கப் படுகிறோம்
எப்போதும்
சக உயிராய்
மறுக்கப்படுகிறோம்
ஆகையால்
எளிதாய் பலியாடாகிறோம்!

போதும் இது போதும்
தேவதையாய் தேய்ந்தது போதும்
அன்பால் கரைந்தது போதும்
நெருப்பிற்கு இரையானது போதும்

பொய் முகம் புறந்தள்ளி
நிஜ முகம் அறிவோம்!
மென்மை எரித்திட்டு
வன்மை பழகுவோம்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!