எல்லாம் தாழ்ந்துவிடுகிறது
எல்லாம் தொலைந்துவிடுகிறது
எல்லா மனமும் காயப்படுகிறது
நீ இருக்குமிடம் மாறி இருந்தால்!
இருப்பவன் புலிவால் பிடித்தவன்
இல்லாதவன் கழுகாய் மாறியவன்
இருவருக்குமே இரை நீதான் -
இரையே புசிப்பவரை கொல்வதும்
ஒரு மாய வித்தைதான்!
அடிப்படை வேண்டி நின்றாலும்
அன்பு வேண்டி சென்றாலும் - யாசித்து
நிற்பவருக்கு வாய்க்கருசியேனும் போட
இரத்தல் வேண்டும் இறத்தலாயினும்!
அன்பு இடம் மாறிச் செல்லும்
நட்பு வலம் இடம் மாறிக் கொல்லும்
தீர்ப்பு மாறி நீதி சாகக் கூடும்
எழுவதும் விழுவதும் யாராயினும்
வெல்வது என்றுமே நீதான்!
எல்லாம் போனபின் உன் பயனென்ன?
நிரப்பவே முடியாத மனக்கிணறுகளை
கட்டிக் காக்கும் வேதாளமாய் வாழுவதென்ன?
தனியே நீ விசித்து அழுவது மரங்களுக்கு
மட்டும் கேட்கும் - எப்போதும்
மனிதர்களுக்கு அல்ல!
பணமே!
Monday 3 December 2012
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்தலின் நொடிகள்
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
-
அம்மாவிற்கு பின் அம்மாவைப் போல் மாறிவிடும் பல பெண்களுக்கு........... அப்பாவிற்கு பின் அப்பாவின் கரங்கள் கிடைப்பதேயில்லை எப்போதும்! ------...
-
மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!
-
மே 16 வரை மக்களே மக்களே என்று எங்குத் திரும்பினும் குரல்கள், அடடா என்று மகிழ்வீர்கள் என்றால், மே 16 க்கு பிறகான இந்தக் காட்சிகளுக்கும் இப...
No comments:
Post a Comment