Monday, 3 December 2012

பணம்

எல்லாம் தாழ்ந்துவிடுகிறது
எல்லாம் தொலைந்துவிடுகிறது
எல்லா மனமும் காயப்படுகிறது
நீ இருக்குமிடம் மாறி இருந்தால்!

இருப்பவன் புலிவால் பிடித்தவன்
இல்லாதவன் கழுகாய் மாறியவன்
இருவருக்குமே இரை நீதான் -
இரையே புசிப்பவரை கொல்வதும்
ஒரு மாய வித்தைதான்!

அடிப்படை வேண்டி நின்றாலும்
அன்பு வேண்டி சென்றாலும் - யாசித்து
நிற்பவருக்கு வாய்க்கருசியேனும் போட
இரத்தல் வேண்டும் இறத்தலாயினும்!

அன்பு இடம் மாறிச் செல்லும் 
நட்பு வலம் இடம் மாறிக் கொல்லும்  
தீர்ப்பு மாறி நீதி சாகக் கூடும்
எழுவதும் விழுவதும் யாராயினும்
வெல்வது என்றுமே நீதான்!

எல்லாம் போனபின் உன் பயனென்ன?
நிரப்பவே முடியாத மனக்கிணறுகளை
கட்டிக் காக்கும் வேதாளமாய் வாழுவதென்ன?
தனியே நீ விசித்து அழுவது மரங்களுக்கு
மட்டும் கேட்கும் - எப்போதும்
மனிதர்களுக்கு அல்ல!
பணமே!
 






No comments:

Post a Comment

My Mission: Supporting 100 Children Through Education – My Interview in Snegidhi Magazine

My Goal: To Support the Education of 100 Children!” – The Inspiring Amudha Murugesan Amudha Murugesan from Chennai has over 27 years of ex...