Monday 18 August 2014

அருளற்றக் கடவுளின்கண்!

யோனிக்குளம் சிதையும்,
பனிக்குடம் உடையும்,
கண்ணீர்க் கடல் தளும்பும்,
இமைக்குடைக் கவிழும்,
மனக்கதவுத் தாழிடும்,
உணர்வுக் குவியல் காயப்படும்,
உயிரையும் தந்துவிடும்,

பிறர் வாழ வேண்டி
நிதம் சாகும்
இப்பெண்ணெனும்,
பொருள் என்பவள்,
பொருள் நிறைந்த
பொருலற்றவள் -
அருளற்றக் கடவுளின்கண்!



 

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!