Wednesday, 24 June 2026

கேட்கப்படாதவை


 ஏதோ ஓர்நாளில்

அந்த மரத்தில் 

மலர்கள் நிறைந்திருந்தன 

மலர்களை யாரும் தலையுயர்த்தி 

பார்க்கவில்லை 

பிறிதொரு நாளில் 

அந்த மரம் 

இலையுதிர்காலத்தை சந்தித்திருந்தது

காய்ந்த அதன் கிளைகளைப் பற்றி

யாரும் கவலையுறவில்லை 

இளைப்பாறிய பறவைகள் மட்டும் 

சிறிது வருத்தத்தை சுமந்திருந்தன 

முற்றுப்பெறாத ஒரு மாலை வேளையில் 

உபயோகமற்ற அரசாங்கப்  பணியாக 

எஞ்சியிருந்த அந்த மரத்தை வெட்ட ஆரம்பித்தார்கள் 

அப்போதும் அதன் கூக்குரலை 

யாரும் கேட்கவில்லை 

மனங்கள் மரித்துப்போன பூமியில் 

இனி மரங்களுக்கென்ன வேலை?


No comments:

Post a Comment

The Unheard

There was a day when that tree stood heavy with blossoms. No one looked up. There came another day when it entered the season of falling lea...