Tuesday 22 July 2014

அன்பெனும் கூற்று


நீ கடந்த காலங்களில்
நான் எங்கோ சுற்றித்திரிந்த
மேகம்!

நீ கடக்கும் இப்பொழுதில்
நான் உன் பாதையின்
வழித்தடம்!

நீ கனவுக் காணும்
நாளையில்
நான் உன் விடியலின்
நிதர்சனம்

அன்பெனும் கூற்று
அள்ளித்தரும்
நம்பிக்கை,
சிறகடிக்க,
எவ்வலியிலும்,
எவ்வெளியிலும்!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!