Friday 11 July 2014

இலையுதிர் காலம்!

தந்துத் தீர்த்த முத்தங்களின்,
நினைவின் சேமிப்பிலும்,

சேமித்த வார்த்தைகளினூடே
கோர்த்து நின்ற ஏக்கத்திலும்,

ஏங்கி நின்ற விழிகளின்
தேங்கி நின்ற நீரிலும்,

நீராய் நெகிழ்ந்த விரல்களின்
நடுங்கும் பிணைப்பிலும்,

பிணையாய்ச் சிக்குண்ட
இதயத்தின் ஓயாதத் துடிப்பிலும்,

துடியாய்த் துடிக்கும்
உயிரின் ஓசையிலும்,
 
ஓசையின்றிக் கசிந்துருகும்
மௌனத்தின் அழுத்தத்திலும்,

அறிந்திடாத அன்பை - இனி
எதைக் கொண்டு உணர்த்திட?
தீர்ந்துப் கொண்டிருக்கும்
இச்சிறு மெழுகின் ஆயுளுக்குள்?!

No comments:

Post a Comment

வாழ்தலின் நொடிகள்

  மனிதர்கள் வருகிறார்கள் மறைகிறார்கள் புத்தாண்டும் வருகிறது மறைகிறது வாழ்தலின் நொடிகள் மட்டுமே நம் கைகளில்!